செப்டம்பர் 11 சாதி எதிர்ப்பு போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நினைவு நாளையொட்டி, இராமநாதபுரம் பரமக்குடியில் காவல்துறை பலத்த பாதுகாப்பு போடுவது வழக்கம் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டது. இந்த ஆண்டு காவல் துறை சட்ட ஒழங்கு காரணம் காட்டி பல கெடுபிடிகளை விதித்தனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, ராஜபாளையம் பகுதியிலிருந்து அஞ்சலி செலுத்த வருவோர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனூர் வழியாக பரமக்குடி செல்ல வேண்டும். திறந்த வாகனத்தில் செல்லக் கூடாது.

பிறர் மனதை புண்படுத்தும் முழக்க எழுப்பக் கூடாது. டூவிலரில் மூன்று பேர் செல்லக்கூடாது. ஆயுதங்கள் வைத்திருக்கக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.

இதை காண்காணிக்க விருதுநகர் மாவட்டத்தில் 20 இடங்களில் (போலீஸ் செக் போஸ்ட்கள்) காவல் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன சோதனையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட்டனர். கடந்த 9.9.11 அன்று இமானுவேல் சேகரன் நினைவு நாள் சுவரொட்டி கமுதி அருகே உள்ள மண்டலமாணிக்கம் பச்சேரி கிராமத்தை சேர்ந்த தங்கவேலின் மகன் பழனிகுமார்(16). இவரும் இவருடைய நண்பர் முனியாண்டியின் மகன் பழனிக்குமாரும் இரவு ஒரு மணி அளவில் சம்பவம் நடந்த பகுதியில் வந்தபோது, கடந்த 9.9.11 அன்று இமானுவேல் சேகரன் நினைவு நாள் சுவரொட்டி ஒட்டி வந்தனர் இவர்களை ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. அதனைக் கண்டு மு.பழனிக்குமார் தலை தெறிக்க ஓடியுள்ளார். அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவைச் சேர்ந்த அந்தக் குழு, த.பழனிகுமாரை ஆயுதங்கள் மூலம் தாக்கி கொலை செய்துள்ளது.

19.9.11 அன்று காலை த.பழனிக்குமார் மீட்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். அவருடைய உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். இருப்பினும், அதிகாரிகள் அவர்களுடன் சமரசம் பேசி, கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை அடுத்து உடலைப் பெற்றுக் கொண்டு சென்றனர். இறுதி நிகழ்ச்சிக்கு திரு. ஜான் பாண்டியன் வருவதாகவும் செய்தி பரவியது.

இதனை காரணம் காட்டி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஜான் பாண்டியன் 11.9.11 அன்று காலை தூத்துக்குடியில் உள்ள தனது கட்சியின் தொண்டர் ஒருவர் வீட்டில் சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 11 மணி வாக்கில் பரமக்குடியில் நடக்கும் இமானுவேல் சேகரன் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக தனது தொண்டர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தார். வல்லநாடு அருகே ஜான் பாண்டியனும், அவரது வாகனங்களும் வந்தவரை தூத்துக்குடி மாவட்ட போலீசார் வழி மறித்தனர். அவர்களிடம் எதற்காக என்று ஜான் பாண்டியன் கேட்டபோது, நீங்கள் இன்று பரமக்குடியில் நடக்கும் இமானுவேல் சேகரன் குரு பூஜையில் செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று எடுத்துச்சொல்லி அவரையும் அவரது தொண்டர்களையும் மாவட்டத்தைவிட்டு வெளியேறாமல் வல்லநாட்டில் போலீஸ் தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில் ஜான்பாண்டியன் கைதை கண்டித்து ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் பரமக்குடி ஐந்து முக்கு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்கள் மீது தூப்பாக்கி சூடு நடத்தியபின் மக்கள் காவல் துறை திருப்பி தாக்க அரம்பித்தனர் அதன் பின் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் தொடர்ந்து தடியடி நடத்தினர். துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதனால் நகர் முழுவதும் பெரும் கலவரமாக மாறியது. இதில் 6 தாழ்த்தப்பட்ட மக்கள் பலியானார்கள் 50 க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமணையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

காவல் துறை அதிகாரி அளித்த பேட்டியில்...

 அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், காவல் துறையின் அறிவுரையை மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இருப்பினும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பெருமளவு வன்முறையில் ஈடுபட்டு, காவல் துறையின் வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வண்டிக்கு தீ வைத்தனர். இதனை யடுத்து, காவல் துறையினர் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வன்முறையாளர்கள் தொடர்ந்து வீசியதால், தற்காப்புக்காகவும், பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலும், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று காவல் துறை வழக்கம் போல் தன் பொய் செய்திகளை பரப்பினர்.

காவல் துறை நடத்திய வன்செயலைபல்வேறு கட்சித் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். தி.மு.க.வின் தலைவர் மு. கருணாநிதி அவர்கள் அரசும் காவல் துறையும் நினைத்து இருந்தால் இந்த துப்பாக்கிச் சூட்டை தடுத்து இருக்க முடியும். ஆனால், இதற்கு அரசும் காவல் துறையும் முன்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

பா.ம,க நிறுவனர் இராமதாசு அவர்கள் காவல்துறை திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு நீதி விசாரணை வேண்டும் உயிர் இழந்த குடும்பங்களுக்கு 10 இலட்சம் வழங்க வேண்டும் கோரிக்கை வைத்தார்.

 ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ அவர்கள், பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிர் இழந்தனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், கவலையும் தருகிறது. துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம் தெரிவிப் பதுடன் இது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் மதுரை துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றவர்கள் பூரண சுகம் அடையும் வகையில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றார். அதைப்போல், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இந்தப் படுகொலையைக் கண்டிக்காமல் இந்த வெறியாட்டம் நடத்தியவர்கள் மீது நீதிவிசாரணை அமைத்ததற்காகவும், ஒரு லட்சம் நிதி கொடுத்ததற்காகவும் "அம்மா'விற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறார். இதை என்னவென்று சொல்வது..?

மேலும், இ.பொ.க தலைவர் தா.பாண்டியன், இ.பொ.க(மா) ஜி.இராமகிருஷ்ணன், தே.மு.தி.க.வின் பண்ருட்டி ராமச்சந்திரன், தொல்.திருமாவளவன், க.கிருஷ்ணசாமி, மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வன்மையாக கண்டித் துள்ளனர்.

காவல் துறையும், தமிழக முதலமைச்சர் செயலலிதாவும் வன்முறைக்கு மக்களை குற்றம் சாட்டி பேசுவதும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

இதற்கு முன்னர் அம்மையார் ஆட்சியில் கொடியங்குளம் வன்முறையும், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தாமிரபரணி ஆற்றில் 17 பேரை கொலை செய்ததும் நம் நினைவுக்கு இப்போது வருகிறது. காவல் துறை திட்டமிட்டு நடத்தும் இந்த வன்முறையை, படுகொலையை சனநாயகத்தில் நம்பிக்கை யுள்ளவர்கள் ஒன்று சேர்ந்துகுரல் கொடுக்க வேண்டும்.

காவல் துறையின் அதிகாரப் போக்கையும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்! காவல் துறையின் வன் செயலை வன்மையாகக் கண்டிப்போம்!

Pin It