தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அதிமுக அரசு, ஈழத் தமிழர் சிக்கலில் (தீர்மானம்) நீலிக்கண்ணீர், கடலில் கரைக்கப்பட்ட கச்சத்தீவு தீர்மானம் போன்ற தமிழர் ஆதரவு நாடகத்தின் உச்சக்கட்டம் நடந்து முடிந்த பின், அதிமுக அரசின் அடுத்த நகர்வு சமச்சீர்க் கல்வி, சமச்சீர் கல்வியில் உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்புகளில், தமிழக அரசின் போக்கைக் கண்டித்த பின்னும் தமிழக அரசின் பார்ப்பனக் கருத்துச் சார்பும், கல்வி கொள்ளையர்கள் மீதான கரிசனமும் இப்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆட்சி யாளர்கள் முத்துக் குமரன் குழு அளித்த 109 திட்டங் களில் 3, 4 எடுத்துக் கொண்டு மற்றவை களை அடுத்த கல்வியாண்டில் நடைமுறைப் படுத்தப்படும் என்று கூறினார் கள். ஆனால் அதை யும் இந்த பார்ப்பனச் செயா அரசு இதை யும் எப்படியாவது மூடி விடலாம் என்று கங்கணம் கட்டி வேலை செய்தது. ஆனால் உச்ச, உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்து விட்டது. அதன்பின் தன் பார்ப்பனப் பரிவாரங்கள் களத்தில் குதித்து விட்டது.
தினமலர், துக்ளக் போன்ற இதழ்கள் நேரடியாக தாங்கள் பார்ப்பன சார்பு கருத்துகளையும், தமிழர் விரோதத்தையும் எழுதி வருபவை புதியது அல்ல. ஆனால் முற்போக்கு முகமூடியில் எழுதும் தினமணியின் பார்ப்பனப் போக்கையும், அதன் நரித்தனத்தையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். 18.7.2011 அன்று உயர்நீதிமன்றம் சமச்சீர்க் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்தபின் 19.07.11 அன்று தினமணி தன் தலையங்கத்தில்,
“இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வதாக இருந்தால் செய்யலாம்தான். ஆனால் அதனால் என்ன பயன் கிடைத்து விடும் என்பதை மறுபரிசீலனை செய்தாக வேண்டிய மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறது தமிழக அரசு.
தொடக்கம் முதலே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது என்பதை ஏன் தமிழக அரசு உணர்ந்து கொள்ளவில்லை என்பதும் நீதிமன்றத் தீர்ப்பை தனக்கு எதிரானதாக ஏன் கருதுகிறது என்பதும் விளங்காத புதிர். (அரசுக்கு புத்திமதி சொல்லியது தினமணி)
சமச்சீர் கல்வி கூடாது என்பது தமிழக அரசின் நோக்கமல்ல. சமச்சீர் கல்வித் திட்டத்தில் சில திருத்தங்கள் தேவை என்பதுதான் தமிழக அரசின் விருப்பம். சில பாடங்கள் அடுத்த பாடத்துடன் தொடர்பு இல்லாமல் இருப்பதாகவும், சில பாடங்கள் தரமானதாக இல்லை என்பதும்.
ஆகவே பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்பதும் தமிழக அரசின் நியாயமான வாதம். அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. பாடத் திட்டத்தில் சில பகுதிகளை நீக்குவதும், சேர்ப்பதும் தமிழக அரசின் கல்வித் துறையைப் பொறுத்த விவகாரம் என்று நீதிமன்றமே தெளிவாக சொல்லிவிட்டது.
தமிழக அரசின் அடிப்படை நோக்கத்தில் நீதிமன்றம் குறுக்கீடோ தடையோ செய்ய வில்லை. நீதிமன்றம் சொல்லும் ஒரே விஷயம் இந்தக் கல்வியாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பது தான். அந்த ஒரு விஷயம்தான் இப்போது தமிழக அரசைச் சங்கடப்படுத்துவதாக இருக்கிறது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதும் தமிழக அரசு எந்தப் பாடங்கள் எல்லாம் திணிப்பு என்று கருதுகிறதோ அவற்றையெல்லாம் நீக்கி தரமானதாக மாற்றுவதும் தமிழக அரசுக்கு மிக மிகச் சுலபம். இந்தப் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்.
நிச்சயமாக கடந்த அரசால் பரிந்துரைக்கப்பட்ட சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்பதையும், திமுக ஆட்சியாளர்கள் சிலவற்றை வேண்டுமென்றே திணித்திருக்கிறார்கள் என்பதையும் பாட நூல்களில் காண முடிகிறது.
ஒரு குழந்தைக்கான பாடப் புத்தகத்தில் சூரியன் உதிப்பது கிழக்கு என்று படம் போடுவதில் தவறில்லை. அதை உதயசூரியன் சின்னத்தைப் போல் போடுவது ஆட்சியாளர் களின் குறுகிய மனநிலையைத் தானே காட்டுகிறது.
மின்காந்த விசையைச் சித்திரமாக வரையும் போது அது உதயசூரியனின் கதிர்கள் போல் விரிய வேண்டிய தேவை இல்லைதான். சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தரப்படும் பள்ளிக் கூடப் பாடப் புத்தகம் என்ன கரை வேட்டியா? ஆங்கிலப் பாடப் பத்தகத்தில் எழுத்து களைக் கருப்பு சிவப்பு வண்ணங்களில் பிரசுரித்திருக் கிறார்களே என்று கேட்கலாம். இவை தப்புதான்.
இதையெல்லாம் நீக்கி விட்டு முறையாகப் பாட நூல்களை அச்சிடுவதும் பாடங்களை முறைப்படுத்து வதும் மிகவும் அவசியம்தான். அதை நீதிமன்றமும் அங்கீரிக்கும் போது ஏன் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தாமல் தள்ளிப் போட வேண்டும். (இந்த இடத்தில் திருவள்ளுவர் படம் அழிப்பு, பாரதிதாசன் ஆத்திச்சூடி, அப்துல் ரகுமான் கவிதை) இவை களைப் பற்றி தினமணி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இவர்கள் அனைவரும் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்பதால், அதனால் இவர்களை நேரடியாக எதிர்க்க முடியாது என்ற காரணங்களைச் சொல்லி தப்பித்துக் கொள்ள முயல்கின்றன.
சமச்சீர் கல்வித் திட்டத்தில் திமுக அரசு நியமித்த குழு தயாரித்த பாடத் திட்டம் தரமானதாக இல்லை என்பதும், இதில் திமுக சார்பான சில கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன என்பதும்தான் தமிழக அரசின் ஆட்சேபமாக இருக்கிறது. இந்த ஆட்சேபம் நியாமானதும் கூட. அதுதான் ஒரு மாதத்திற்கு முன்பே கருணாநிதி தான் கூறிவிட்டாரே, சமச்சீர் கல்வியில் அரசுக்கு ஏற்படும் பிரச்சினை என் கவிதை என்றால் நீக்கிவிட்டு, தாமதப்படுத்தாமல் தொடரலாம் என்று. மேலும் தினமணியின் கருத்துகள் (தினமணி, 26.6.11)
சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பொறுத்தவரை நமது கருத்தில் மாற்றமே இல்லை. அகில இந்திய தரத்திலான,சிறந்த தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தரத்திலான ஒரே கல்வித் திட்டம்தான் தமிழகத்தில் இருக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி என்ற பெயரில் தரம் குறைந்த கல்வித் திட்டமும் ஏற்புடையதல்ல. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் ஒரு கல்வி, தனியார் பள்ளிகளில் வேறொரு பாடத் திட்டம் என்பதும் ஏற்புடையதல்ல.
உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை, மெட்ரிகுலேசன் உள்ளிட்ட பாடத்திட்டங் களுடன் செயல்படும் தனியார் பள்ளி மாணவர்களின் தரத்துக்கு உயர்த்துவதாக இருக்க வேண்டும். தவிர (அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, தரம் குறைந்த கட்டடம், கழிப்பிடம் இல்லாத பள்ளிகள் பற்றி இவர்கள் இப்போது கவலைப்படுகிறார்கள்) தனியார் பள்ளிகளில் பாடத் திட்டத் தரத்தைக் குறைக்கும் விதத்தில் அமைந்து விடக் கூடாது.
மேலும் சமச்சீர் கல்வியின் பெயரால், பள்ளிகள் செயல்படாமல், மாணவர்களின் பொன்னான நேரம் வீணாக்கப்படுவதும் கூடாது. தமிழகத்தை எதிர் நோக்கும் மிகப் பெரிய பிரச்சனை இதுதான் என்பதை முதல்வரும் அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஐ.ஐ.டி.யில் பிற்பட்டோர் இடஒதுக்கீடு பேச்சு வரும்போது மறக்காமல் உயர் படிப்பில் சாதி பார்க்கக் கூடாது, கல்வி தகுதிதான் பார்க்க வேண்டும். சாதி வெறித்தனத்தை நேரடியாக பேசும் இவர்கள் இப்போதும் சமச்சீர் கல்விக்கு இவர்கள் கொடுக் கும் விளக்கம் எல் லாம் நன்றாகவே இருக்கிறது. ஆனா லும் இதில் எல்லாம் ஏமாந்து போக பழைய ஏகலைவனும் நந்தனும் இல்லையே என்ன செய்வது?
தினமணி இப்பொழுதுதான் உறங்கி விழித்துள் ளது. உங்களின் (பார்ப்பனக்) கரிசனம் உங்கள் சமூகத்திற்காக, நீங்கள் உங்கள் மூளையைக் கசக்கி வருந்துவதும் எழுதுவதும் எங்களுக்குப் புரிகிறது. இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் போராடிய போதும், உரிமை கேட்டபோதும் அப்போது நீங்கள் சமூகம் தனது திறமையான (ஏழை உயர் சாதி) மனிதரை இழப்பதாக வருந்தினீர். ஒருபோதும் நீங்கள் நேரடியாக எதிர்த்துப் பேசியது இல்லை. ஆனால் அப்போதும் ஒடுக்கப்பட்ட ஏழைகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக பேசினீர். சோசலிசம் பேசி இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பு என்ற காயை அழகாக நகர்த்தினர்.
“மாணவர்களின் எதிர்கால நலன், கல்வி அறிவு, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் போட்டி மிகுந்துள்ள நிலையில் திறமையான மாணவர்களாக அவர்கள் வரவேண்டும் என்பனவற்றைக் கருத்தில் கொண்டும், அரசியல் கலப்புள்ள, தரமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட சமச்சீர் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததை வரவேற்கிற (தினமணியும், அதிமுக) கவலைப்படும் நீங்கள் கடந்த ஆண்டு சமச்சீர் கல்வியை தமிழக அரசு கொண்டு வந்தபேது "தினமணியோ தற்போதைய தமிழக முதல்வரோ எங்கே போனார்கள்.
பல வருடங்களாக சமச்சீர் கல்வியைப் பற்றி பட்டி தொட்டிகளில் எல்லாம் பேசப்படும்போது, கொட நாட்டில் உறங்கிக் கொண்டு இருந்த அம்மையார் மக்களின் ஆதரவுடன் அதை எதிர்க்க வேண்டியது தானே! மக்களைக் கொண்டு போராட வேண்டியது தானே! கட்சிப் பணத்தைக் கொண்டு செலவு செய்து வழக்குகள் போட வேண்டியதுதானே! தங்கள் வழக்கறிஞர் அணியைக் கொண்டு வாதாட வேண்டியதுதானே! கடந்த ஆண்டில் சமச்சீர் கல்வியை அறிமுகப் படுத்திய பொழுது அவர் வேறு கிரகத்தில் இருந்தாரா? அதை விடுத்து மக்களுக்காக அன்று போராடாமல், இன்று போராடுவது மக்கள் விரோத செயல்தானே!
அதேபோல தினமணி செம்மொழி மாநாடு வரை கடந்த ஆட்சியாளர் களுக்கு குழைந்தும் நெளிந்தும் எழுதியதை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். செம்மொழி மாநாடு பின் கருணாநிதிக்கு தினமணிக்கு என்ன சிக்கல் என்பது புரியவில்லை.
அதன் பின் அதிமுக செம்மொழி மாநாடு முடிந்தவுடன் கோவையில் மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. அதன் பின் அதிமுக ஆதரவு பல்லவி பாட ஆரம்பித்தது.
தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால் வரும் ஐந்து ஆண்டுகள் நம்மை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்று தினமணியும், பார்ப்பன செயாவும் நினைக்கிறார்கள். இளித்தவாய் (தமிழ்) மக்களுக்கு ஈழத் தமிழர் ஆதரவு, கச்சத்தீவு மீட்பு தீர்மானம் போதுமானது என்று நினைத்து விட்டார்கள் போலும், கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு போராடிய அம்பேத்கர், பெரியார், கொள்கைகள் இப்போதும் இந்த பார்ப்பன சனதானவாதிக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக நினைக்கிறார்கள். அதனால்தான் பார்ப்பன சார்பு கருத்துகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அவர்கள் நினைப்பது சரிதான். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமநீதி கிடைக்கும் வரை அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகள் நீடித்து வாழும். அதுவரை இந்த பார்ப்பனச் சூழ்ச்சியாளர் நம்மை பின் தொடர்வார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டு, சம உரிமை, சம கல்விக்கு நாம் தொடர்ந்து போராடுவோம்.
தான் எதிர்க்கட்சி தலைவராக விளங்கிய காலத்தில் கருணாநிதியின் இலவச தொலைக்காட்சி முதல் திருமண உதவித் தொகை திட்டம் வரை உள்ள அனைத்தையும் இழிவு செய்து பேசியவர் மாமி என்கிற அம்மா என்கிற மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி முதல்வர் செயலலிதா அவர்கள். இலவசம் பிச்சை தமிழ் நாட்டு மக்களைப் பிச்சைக்காரர் ஆக்கிவிட்டார். தலைவன் குடும்பத்தின் தலைவனுக்கு சாராயம் குடும்பத்திற்கு இலவச தொலைக்காட்சி என்றெல்லாம் கேலி செய்தவர் அம்மையார். மற்ரும் அவரின் இனிய தோழர் விசயகாந்த் இப்பொழுது திடீர் மனமாற்றம் ஏற்பட்டு இலவசம் என்று சொல்லக்கூடாது. விலையில்லா பொருட்கள் என்று சொல்ல வேண்டும். மக்களை இழிவு படுத்தக்கூடாது. மக்களின் குறிப்பாக பெண்களின் வேலைப்பளுவைக் குறைப்பதற்காக கொடுக்கப்படும் உதவிகள் என்று எல்லாம் "தெளிவாகப்" பேச ஆரம்பித்துள்ளார ். அம்மையாரின் மனமாற்றத்திற்கு காரணம் அவருக்கு மக்கள் மீது வைக்கப்பட்டுள்ள கரிசனம் காரணமல்ல. இலவசத்தின் மூலம் கிடைக்கும் கமிசனும் கூட அவருக்குத் தூசு இலவயம் பற்றிப்பழித்துப ் பேசீனிதமிழ் நாட்டில் யாரும் வாக் கு வாங்கி விட இயலாது என்ற உண்மையே அவர் திடீரென்று கண்டு கொண்டார். அவ்வாறு கண்டு கொள்வதில் அவருக்கு ஆசானாக இருந்தவர் அப்துல் கலாம் என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் புதிய இசுலாமிய பார்ப்பனராகிய இவர் இலவசங்களின் அவசியத்தை எடுத்துக்கூற அம்மணியும் ஒப்புக் கொண்டு விட்டார். என்று சொல்லப்படுகிறது .
1. மணமாகும் பெண்கள் அனைவருக்கும் தாலிக்குத் தங்கம் தரப்படும் என்றார் பிறகு மெதுவாக ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்கு மட்டும் தரப்படும். அவளும் வறுமைக்கோட்டுக் குள் இருக்க வேண்டும். பட்டதாரியாக இருக்க வேண்டும். இப்படி விதிகளை........ .... அதிகரித்துக்கொண ்டே பயனாளிகளின் எண்ணிக்கையை சுருக்கிக் கொண்டே சென்றுள்ளார். எனவே பயன் பெறுவோர் எண்ணிக்கை மிகமிகக்குறையும ் என்பது தெளிவாகத் தெரிகிறது.
2. தாலிக்குத் தங்கம் புதிய திட்டம் அதனால் . அவர் விருப்படி செய்ய.. செய்ய அவருக்கு உரிமை உள்ளது. என்று வாதத்திற்காக வைத்துக்கொள்ளலா ம். ஆனால் ஏற்கனவே வழங்கிவந்த முதியோர் உதவித் தொகையை ருபாய் 500லிரு ந்து 1000 வரை இரட்டிப்பாக்கி மக்களின் கவனத்தையும் வாக்குகளையும் திருடிக்கொண்ட அம்மணி பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைப்பதற்கு பல மறைமுக வழிகளைக் கையாண்டு வருகிறார். ஏற்கனவே .... தகுதியற்ற பலரும் உதவித் தொகை பெற்று வந்தனர் என்பது உண்மையே. உதவித் தொகையை வழங்கும்போது தபால் துறை அலுவலர்கள் சிலர் கையூட்டு பெற்றனர் என்பதும் உண்மையாக இருக்கலாம். ஆனால் நிதி உதவி முதியோரின் வீடு தேடி சென்று கொண்டிருந்தது. எனவே பயனாளிகளுக்கு அதிக தொல்லையில்லாமல் உதவித் தொகை கிடைத்து வந்தது. அம்மணி அங்கேதான் ஆப்பை..... வைத்துள்ளார். அதில் உள்ள ஊழலைக் களைவதற்காக என்று சொல்லி இனி அஞ்சல் நிலையங்களில் வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலமாகத் தான் பணம் பெற இயலும் என்ற விதியை உண்டாக்கி உள்ளார். இது உதவியைப்பெறும் முதியோருக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. வீட்டைத்தேடி வரும் உதவித் தொகைக்கு பதிலாக முதியோர் 1000 ரூபாய் பெறுவதற்கு அஞ்சல் அலுவலகம் செல்ல வேண்டும்.!!! ஏற்கனவே நாடெங்கும் குறிப்பாக நாட்டுப்புறங்கள ில்அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டு வருகின்றனர். (கேட்டால் அது நடுவண் அரசின் செயல் என்பார்). குறைந்த அளவு 10கி.மீ. தூரம் சென்றால் தான் ஒரு அஞ்சல் அலுவலகம் இருக்கும் என்ற நிலையுள்ள பட்டிக்காடுக்கு ள் தமிழ் நாட்டில் அதிகம். .. ஒருமுறை தானே போய்விட்டு வரட்டுமே என்று சொல்லிவிட இயலாது. இவர் செல்லுகின்ற அன்றைக்கு உதவித் தொகை வந்திருக்குமா. அன்றைக்கு அஞ்சல் அலுவலர் தருவாரா?....... ............. அல்லது கூட்டம் அதிகம். இன்றுபோய் நாளை வா என்பாரா? என்று சொல்ல முடியாது. நகரங்களில் உள்ள வங்கிகளில் படித்த பெருமக்கள் தா தாங்கள் போட்ட பணத்தை எடுப்பதற்கே எவ்வளவு அவதி படுகிறார்கள் என்பதை ஒப்பிட்டு பார்க்கும் அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று வங்கிக் கணக்கு தொடங்கி பின் உதவித் தொகை பெற வேண்டும் என்றால் பயனாளிகளுக்கு பளு அதிகம் ஏற்படும்/. நடைமுறையில் இது பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும். அவர்களுக்கு மேலும் இழிவை ஏற்படுத்தும் சிலர் ஊழலை ஒழிப்பது என்றால் அப்படித்தான் இருக்கும். அதனால் ஒன்றும் தவறில்லை என்று வாதிடக்கூடும். இந்த புண்ணியவான்கள் அரசு கோடிக்கணக்கான பணத்தை (.பல லட்ச கோடிக்கணக்கான எல்லொரும் அறியும் படியாக சொன்னால் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகைக்கு பல மடங்கு நிகரான தொகையை பெரு முதலாளிகளுக்கு வரிவிலக்கு என்ற பெயரில் அளித்து வருகிறது. அந்த ஊழலைப் பற்றி எல்லாம் பேசாத இந்த ஊழல் எதிர்ப்பு வாதிகள் ஏழைகளுக்கு வழங்கும் 1000 ரூபாய் தொகையில் ஏற்படும் ஊழலைப் பற்றி பேசுவது உள் நோக்கம் கொண்டது. மேலும் இது எப்பொழுதும் எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ஏதோ இந்த அளவிற்காவது கிடைக்கிறதே என்றுதான் எல்லோரும் ஒப்பி இருந்தனர். ஊழலை ஒழிக்கின்றேன் முறைப்படுத்துகி ன்றேன் என்று ஆரம்பித்து எளியவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை கூட்டிக்கொடுப்ப து போல கொடுத்து பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் மாமியின் சாணக்கியத்தன்மை அவாளுக்கு மட்டுமே உரியது.
சரி முதியோர் உதவித் தொகைதான் அப்படி ஆயிற்று. ஆடு மாடு கதை என்ன வாயிற்று?
எல்லோருக்கும் இலவச ஆடு மாடுகள் வழங்கப்படும் என்பது முதல் அறிவிப்பு. தேர்தலுக்கு முந்தைய அறிவிப்பு பிறகு அது எப்படி ......... கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகி பிறகு அதுவும் கடுகு ஆகிப் போயிற்று என்பதைக் கண்போம்..சட்டமன ்றத்தில் ..... மாமி அறிவித்துள்ள படி.
1. ஆடு அல்லது மாடு மட்டும்தான் (இரண்டில் ஒன்று மட்டும்தான் வழங்கப்படும்).
2. ஏற்கனவே வீட்டில் ஆடு /மாடு இருக்கும் குடும்பத்தினருக ்கு வழங்கப்படாது.
3. நாட்டுப்புற, வறுமைக் கோட்டிற்குள் உள்ள மக்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும்.
4. இது முக்கியமானது. இது பெண்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும். இது பெண்களுக்கு செய்யப்படும் சலுகை என்று விடக்கூடாது. ரேஷன் கார்டுகளில் குடும்பத்தலைவரி ன் பெயராக பெண்ணின் பெயரும் புகைப்படமும் இடம் பெற்றிருக்கும் குடும்பத்திற்கு மட்டும் வழங்கப்படும். இந்த கடைசி விதியில்தான் இலவசத்திற்கு வைக்கப்படும் ஆப்பு இருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளில் எத்தனை விழுக்காட்டில் பெண்கள் குடும்பத் தலைவர்கள் என்று அடையாளம் இட்டு காணப்படும். 10% இருக்குமா? அய்யமே. கணவன் பெயர் /தந்தை பெயர் கன் பெயர் என்றுதான் அட்டைகளில் காணப்படும். பெண் குடும்பத்தலைவரா க இருந்தால்தான் ஆடு அல்லது மாடு அதற்கு உதவித் தொகை என்ற அறிவிப்பு. இந்த திட்டம் நடைமுறைக்கு வராது என்று அறிவிப்பதற்கு சமம்.ஆனால் யாரும் வாய் திறந்து கேட்பதில்லை. எல்லாம் ஒரு பயம் தான்.
5. மேலும் இ ந்த கோ. தானம் செய்தி ஒன்றும் புதியது அல்ல. ஏற்கனவே மராட்டிய மாநில விதர்ப்பா பகுதியில் நடைமுறைப் படுத்தப்பட்ட ஒன்றுதான் விவசாயிகள் தற்கொலை தொடர் கதை ஆரிப்போன இந்தப்பகுதியில் விவசாயிகளின் நலனுக்காக என்று மன்மோகன் சோனியா அரசு சில திட்டங்களை அறிவித்து கடனையும் ரத்து.......... .... செய்தது. அத்துடன் எல்லோரும் மாடு இலவசமாக வழங்கியது. உண்மையில் அது இலவசப் பொருள் அல்ல. பயனாளிகளும் சிறிது தொகை செலுத்த வேண்டும் அது செல்க. இனி மாடு என்பது உயிருள்ள....... விலங்கு என்பது சொல்லித்.. தெரிய வேண்டி இருக்கிறது. அதை பராமரிப்பதில் உள்ள சிரமமும் அதைவிட முக்கியமாக அதன் தீவனத்திற்கு என்று ஏற்படுகின்ற செலவும் அதனின்று கிடைக்கும் வருமானத்தைவிட பல மடங்கும் அதிகம். அது ஜெர்சி பசுவாக இருந்தாலும் சரி கங்கைக் கரை காராம்......... ... பசுவாக இருந்தாலும் சரி. பல குடும்பங்கள் இந்த பசுவளர்ப்பு திட்டத்தின் காரணமாக மேலும் வறுமையாகிவிட்டன ர். தங்களுடைய குடும்பத்திற்கா ன உணவு செலவுத்தொகையை விட மாட்டிற்கு தீவனச் செலவு அதிகம் என்று புலம்புகின்றனர் . சிலர் மாட்டினை கை கழுவியும் விட்டனர். இதையெல்லாம் திரு பி. சாய்நாத் அவர்கள் இந்து நாளிதழில் பல கட்டுரைகளில் தெளிவாகவும் விரிவாகவும் சுட்டியுள்ளார். இப்படி ஒரு வீணாய்ப் போன திட்டத்தைத்தான் மாமி புதுசு பண்ணி விலையில்லா திட்டத்தின்.... ............ ஒரு பகுதியாக வழங்க உள்ளார். இது அக்குடும்பங்களி ன் பெருமளவு நிலையை மேலும் மோசம் ஆக்குமே ஒழிய அதனால் பயன் ஒன்றும் விளையப் போவதில்லை.
இதையெல்லாம் மக்களிடம் எடுத்து சொன்னால் இலவசத்திற்கு எதிராக பேசுகிறான் என்று அவப்பெயர் ஏற்படும் என்று ..சிலர் வாய்மூடி கிடக்கின்றனர். கருணாநிதி கனிமொழியைப் பற்றிய கவலையில் மூழ்கிப் போய் உள்ளார். அஞ்சா நெஞ்சன் அழகிரி மதுரைக்கு வருவதே இல்லை. என்று கேள்வி தளபதி ஸ்டாலின் சட்ட மன்றத்தின் உள்ளே நுழைவதற்கே அஞ்சி உள்ளே/ வெளியே ஆடிக்கொண்டிருக் கிறார். வரவு செலவு கணக்கு பற்றிய உரைகளில் கூட பங்கு பெற நாட்டமில்லை. ஜெயக்குமார் போன்றவர்கள் அவைத்தலைவராக இருக்கும் பொழுது என்ன வசதியை எதிர்ப்பார்த்து சட்ட மன்றத்திற்கு செல்ல முடியும். எனவே சட்ட மன்றத்தில் உள்ளே சமச்சீர் கல்வி இலவசங்களில் உள்ள பித்தலாட்டங்கள் இவற்றையெல்லாம் எதிர்த்து சிறப்பாக வாதிட ஒரு எதிர்க்கட்சி இல்லியயா? . 23 உறுப்பினர்களைக் கொண்ட திமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படலாம். ஆனால் உள்ளே நுழைந்தால் உதைத்து விடுவார்கள் என்று அஞ்சி சட்டமன்றத்தினுள ் ..செல்லுவதில்லை ........ அப்படியே போனாலும் மாமியார் வீட்டீற்குப் போன புது மாப்பிள்ளை போல் முறுக்கிகொண்டு வெளியே வந்து விடுகிறார்கள். இவர்கள் என்ன எதிர்ப்பார்க்கி றார்கள். வளர்மதியும் செயக்குமாரும் வெற்றிலை பாக்கு கொடுத்து வரவேற்பார்கள் என்றா? சென்ற சட்ட மன்ற கூட்டங்களில் அவர்கள்...... எப்படி நடந்து கொண்டது என்பதைப் பார்த்தாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது அவ்வளவு அச்சமாக இருந்தால் பேசாமல் பதவி விலகிவிட செல்லுவதை தவிர்த்து விடுகிறார்கள். தனது அகவை 90 தாண்டிய பிறகும் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எல்லாம் பயணம் செய்து பரப்புரை செய்த பெரியாரின் வாரிசு வசதியான .... சட்டமன்றம் செல்ல தயங்குவதற்கு முதுமையைத் தவிர வேறு காரணம் இருக்க வேண்டும். வேறு என்ன அச்சம் தான். ....... என்ன தலைமை பாங்கோ? முன்னர் நட ந்த சட்ட அவைக்குழு கூட்டங்களுக்கு மாமி துணிவுடன் வந்தார். அ ந்தத் துணிவும் கூட அஞ்சா நெஞ்சர்களுக்கும ் தளபதி அவர்களுக்கும் இல்லாமல் போனது . ஒரு பெருங்குறையே!
அம்மவின் ஆப்புகளில் சில
தமிழ்ப்,புத்தாண ்டை மீண்டும் சித்திரைக்கு மாற்றி உள்ளது
அனைவரையும் அர்ச்சகராக்கும் நோக்கத்துடனமைக் கப்பட்ட குழுவினைக் கலைத்தது
RSS feed for comments to this post