இலங்கையின் வடக்குப் பிரதேசமான மன்னார் மாவட்டத்தின் நானாட் டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள நொச்சிக்குளம் கிரா மத்தில் குவைத் நிவாரண அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட 42 வீடுகள் அம்மக்களிடம் ஒப்படைக்கப்பட் டன.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதயுதீனின் அழைப் பின் பேரில் இலங்கைக் கான குவைத் நாட்டின் துதுவர் யாகூப் யூசுப் அல் அதிக்கீ விருந்தினராக கலந்து கொண்டு குடியி ருப்புகளை மக்களிடம் ஒப்படைத்தார்.

ஜமாத்தே இஸ்லாமியின் சமூக சேவை பிரிவு இந்த நிர்மாணப்பணிகளுக்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் குவைத் நாட்டின் பிரபல சமூக சேவை சேவை மற்றும் நிவாரண அமைப் பின் தகுதியுடைய அதிகாரி பத்ர் அல் சம்ரூக், ஜமாதே இஸ்லாமின் சமூக சேவை பிரிவின் பொறுப்பாளர் மௌலவி அப்துர் ரஹ்மான், நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ், பிரதேச சபை உறுப் பினர்களான சூசை மற்றும் சஹாபுத்தீன், ஒ.எச்.ஆர்.டி. நிறுவன செயலாளர் எஸ்.எப். எம். ரமீஸ் உட்பட பலரும் கலந்து கொண் டனர்.

தற்போது இக்கிராமத்தில் மீள்குடியேறி யுள்ள 108 குடும்பங்களில் முதல் கட்டமாக 42 குடும்பங்களுக்கு இந்த வீடுகள் நிர்மா னித்து கொடுக்கப்பட்டதுடன், அவர்களுக் கான உலர் உணவு பொதிகளும் வழங்கப் பட்டன.

இலங்கைக்கான குவைத் தூதுவர் யாகூப் யூசுப் அல் அதீக்கி, தமது விஜயத்தை நனைவு கூறும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு தமது நாட்டின் தேசிய சின்ன மொன்றையும் அன்பளிப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- ஷிப்லி

Pin It