காரல் மார்க்சை அறிவாயா?
கண்ணின் மணியே அறிவாயா?
நீரும் நிலனும் உள்ளவரை
நினைந்திட வேண்டிய மாமனிதர்!
படிப்பு படிப்பு படிப்புஎனப்
படிப்பில் தோய்ந்த அறிவாளி
வெடித்துச் சீறும் தோட்டாவின்
விசைபோல் இயங்கிய போராளி
மனைவி ஜென்னி மார்க்சோடு
மாளா வறுமையைச் சந்தித்தார்
மலைபோல் துயர்கள் வந்தாலும்
மக்களைப் பற்றியே சிந்தித்தார்
காலம் முழுதும் உழைப்போர்தம்
கண்ணீர்க் கதையை ஆராய்ந்தார்
மூலதனம் நூல் வழியாக
முழுவிடுதலைக்கும் விடைகண்டார்
முதலா ளியத்தின் முதுகொடித்துச்
சுரண்ட லுக்கு விடைகொடுத்தார்
தொழிலா ளர்தம் அரசமைக்கத்
துணையாம் கருத்தியல் படைத்தளித்தார்
உலகில் யார்க்கும் வாய்க்காத
உயிர்த்தோழர்தான் எங்கல்சாம்
உலகம் உள்ள மட்டுக்கும்
உயிர்வாழும் இவர் தத்துவமாம்!
சிந்தனையாளன் - மே 2012
மாமனிதர் மார்க்சு
- விவரங்கள்
- தமிழேந்தி
- பிரிவு: சிந்தனையாளன் - மே 2012
More articles by தமிழேந்தி
- அண்ணலின் அரும்புகழ் வாழ்க! (22 மே 2023)
- தமிழுக்கான இலக்கியம் (15 மே 2020)
- ‘அன்னவர்கள்’ வாழி! வாழி!! (06 ஜூன் 2019)
- தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? (2) (30 மே 2019)
- தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா? (30 மே 2019)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.