பார்க்கின்ற திரைப்படங்கள்
எல்லாம் காதல்.
கேட்கின்ற திரைப்பாடல்கள்
எல்லாம் காதல்.
குறள்மொழியும் குறுந்தொகையும்
கொண்டாடுவதெல்லாம் காதல்.
ஆனால்
உயிர் சுமக்கும்
உடல்கூடுகள் இரண்டு
மனங்கள் என்கின்ற
நாற்றங்காலில்
காதலைப் பயிர்செய்தால்
சாதிவெறி என்கின்ற
எருமை மாடுகள்
திமிரோடு மேய்ந்துவிடுகின்றன.
தமிழ் தமிழன் என்று
கூப்பாடு போட்டும்
தமிழ் தேசியமென்று
வாய்ப்பாடு படித்தும்
சாதிமறுப்புக் காதலென
வந்துவிட்டால்
வருணாசிரமக் கருநாகம்
படமெடுத்தாடுகின்றது.
கேட்பாரின்றிக் கீழ்சாதியானவர்களின்
சேரிகளைச் சூறையாடப்
பகுத்தறிவுச் சூத்திரர்களும்
படையெடுக்கத் தயங்குவதில்லை.
ஈழத் தமிழர்களுக்காய்
இரங்கற்பா படிப்போரே
சேரித்தமிழர்களை நேசித்தால்
சிரசா வெடித்துவிடும்?
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
சிந்தனையாளன் - ஜனவரி 2013
- விவரங்கள்
- வெற்றியூர் வேலு சதானந்தம்
- பிரிவு: சிந்தனையாளன் - ஜனவரி 2013
"சேரித்தமிழர்களை --"
பொருத்தம் அற்ற வார்த்தைகள் . சேரித்தமிழனும் இல்லை அவன் கீழ்சாதியும் இல்லை.
RSS feed for comments to this post