கனவின் பாதைவழி நீந்தி
பட்டாம்பூச்சிகள்
அற்புதங்கள் விதைந்தவுலகில்
பிரவேசித்திருக்கின்றன
நெரிசல்களுக்கப்பால் தெரிகிறான்
நீலநிற மேல்கோட்டும் தொப்பியுமணிந்த
மாயவித்தை காட்டுபவன்
அந்நிலம் கொண்டாட்டங்களின்
வாசனையில் மயங்கிக்கிடக்க
தன் கைத்தடியால்
எல்லோருக்குமான அக்கரியவெளியில்
சிருஷ்டிக்கிறான் முறையே
கேட்கும் அவரவர்க்கான சித்திரங்களை
அச்சின்னஞ்சிறு தேவதை
தனித்து நிற்கிறாள்
அவர்கள் தொடர்ந்து
பரவசத்தில் நிரம்பிவழிந்தபடி
அவனது கண்கள் கண்டுகொள்கிறது
மகிழ்ச்சியின் நிழல்படாத பிரதேசத்தில்
தேவதையலைவதை
மென்கரம்பற்றி அழைத்துச் செல்லுமவனைப்
பின் தொடர்கிறாள்
ஓவியப்பாதம் வரைந்த சித்திரம்
பதிய
தன்னன்பை பருகி மகிழ
தேவதைமுன் மண்டியிட்டு
இறைஞ்சுகிறான்
முகத்தில்
துக்கத்தின் நிறம் அடர்ந்திருக்கிறது
அவர்களைச் சூழ்ந்த யாவரும்
மௌனக்குளத்தில் மிதக்கின்றனர்
இப்போது
அவளுக்கு பிடித்தமானதென
யூகித்தவைகள் நிரம்பி அந்தரவெளியில்
சுழல்கிற கைத்தடி
அவன் கைகளிலிருந்து
மறைகிறது.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
உன்னதம் - நவம்பர் 2005
- விவரங்கள்
- ஸ்ரீஷங்கர்
- பிரிவு: உன்னதம் - நவம்பர் 2005