பாம்புருச் சாத்தானின்
பிரதான வைரி
கடவுள் தானெனில்
ஏன் ஆதாமும் ஏவாளும்
தண்டிக்கப்பட்டனர்

சூன்யங்களுக்கோ
கொடுங்கோன்மைக்கோ
சுவர்க்கத்தின் கதவுகள்
வழிவிடாதெனில்
அங்கெப்படிச் சாத்தான்?

கடவுளின் சுட்டுக்கு
எதிர் சுட்டும்
நெளிந்த சாத்தானின்
வியூகக் காய்களெனப்
படுகிறார்கள்
ஏவாளும்
சபிக்கப்பட்ட கனியும்

இப்படியும் இருக்கலாம்
ஏவாள் பேரழகியெனில்
ஆதாம் மீதான
பொறாமையிலும்
நிகழ்ந்திருக்கலாம் ஆப்பிள்சதி.
Pin It