உன் கருவறையில் இடம் கொடுத்து
உடலினுள்ளே உயிராய் வளர்த்து
செல்வமெனப் பெற்றெடுத்து
இரத்தத்தை உணவாக்கி
பாசமெனும் மலர்கோர்த்து
உன் புனித அன்பால்
என்னை வளர்த்த அன்னையே!

உன் ஆசைதான் என்ன?
இந்த பூத உடல் அழிந்து
இயற்கையோடு கலந்தாலும்
என் ஆத்மா மட்டும்
நன்றி சொல்லும்
என் தாயே உன் அன்புக் கடனுக்காக...

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.