உன் கருவறையில் இடம் கொடுத்து
உடலினுள்ளே உயிராய் வளர்த்து
செல்வமெனப் பெற்றெடுத்து
இரத்தத்தை உணவாக்கி
பாசமெனும் மலர்கோர்த்து
உன் புனித அன்பால்
என்னை வளர்த்த அன்னையே!

உன் ஆசைதான் என்ன?
இந்த பூத உடல் அழிந்து
இயற்கையோடு கலந்தாலும்
என் ஆத்மா மட்டும்
நன்றி சொல்லும்
என் தாயே உன் அன்புக் கடனுக்காக...
Pin It