Slumமூணு நாள்
சாராயக் கடை பக்கம் போவாத
சுப்பனைப் பிடித்து
மூஞ்சியில் சாராயம் ஊத்தினானாம்
கடைக்காரன்

வெம்பிப்போன குப்பத்தா
கடைக்காரனை
வாய்க்கு வந்தபடி பேசிப்பிட்டாளாம்

...முண்ட
பல்லுமேல நாக்குப் போட்டு பேசுறதான்னு
சேலையை உருவிட்டானாம்
மேஜாதிக்காரன்

அம்மணமா அழுத குப்பத்தாவுக்காக
சேரியே தெரண்டுடுச்சு

ரத்தக்களறி ரணகளறி
இரும்புத் தொப்பி வந்தப்புறம்தா அடங்குச்சு

இருந்தாலுமென்ன
இப்போ சேரிதாண்ட வழியில்லை
கூலிசெய்ய நிலமில்ல

எப்படிச் சொல்றது சாமி
எங்க ஊரு ஐயம்பாளையம்னு

பச்சியப்பன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.