சர்வதேச ‘யோகா நாளை’ இந்துத்துவத்தின் செயல் திட்டமாக்க மோடி ஆட்சி முயற்சிக்கிறது. மதம்-கடவுள் நம்பிக்கைகளோடு தொடர்பில்லாத உடல் - மூச்சுப் பயிற்சியாக யோகாவை பரிந்துரைக்கலாமே தவிர, அதை பள்ளிகளில் கட்டாயப்படுத்தி, கடவுள்-மத நம்பிக்கைகளைத் திணிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. பசி, வறுமை, சமூக நெருக்கடிகள் சூழ்ந்து நிற்கும் மக்கள் பிரச்சினைக்கு ‘யோகா’ தீர்வாகிட முடியாது. பிரச்சினைகளிலிருந்து மக்களை விடுவிக்கச் செய்ய வேண்டுமே தவிர, தப்பிக்கச் சொல்லும் வழிமுறைகள் வெற்றி பெற முடியாது. அய்.நா. அறிவித்துள்ள உலக யோகா தினத்தை பல இஸ்லாமிய நாடுகளும் ஆதரித்துள்ளன. சிறுபான்மை மக்கள் மீது வெறுப்புகளையும் பகைமை உணர்வையும் திணித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன மதவாதம், யோகாவின் வழியாக பிரச்சினைகளுக்கு வடிகால் தேடிக் கொள்ள அறிவுறுத்துவது, காதில் பூ சுற்றும் வேலையாகும்.
தொடர்புடைய படைப்புகள்
யோகா நாளா? இந்துத்துவ நாளா?
- விவரங்கள்
- விடுதலை இராசேந்திரன்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2015
More articles by விடுதலை இராசேந்திரன்
- பெருகி வரும் கோயில் கொள்ளைகள் (22 ஜூன் 2026)
- அம்பேத்கரைத் திரிக்கும் பார்ப்பனியம்! (22 ஜூன் 2026)
- பள்ளிகளில் ஜாதிக் கயிறுகளுக்குத் தடை! (22 ஜூன் 2026)
- ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு (22 ஜூன் 2026)
- தென் மாநிலங்களை ஓரம் கட்டும் ஒன்றிய அரசு (12 ஜூன் 2026)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.