உலக சதுப்பு நிலப்பாதுகாப்பு நாளான பிப்ரவரி 2 அன்று, பூவுலகின் நண்பர்கள் மற்றும் இலயோலா சூழலியல் மன்றம் (என்விரோ கிளப்) ஆகிய அமைப்புகளின் சார்பில், சென்னை இலயோலாக் கல்லூரியில் ‘ஐம்பூதச் சுற்றுச்சூழல் விழா’ சிறப்புற நடைபெற்றது.

காலை 10 மணியளவில், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. சந்துரு, காலை அமர்வுக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். இலயோலாக் கல்லூரிச் செயலாளர் அருட்தந்தை முனைவர் ஆல்பர்ட் வில்லியம் வாழ்த்துரை வழங்கினார்.

நீதிபதி சந்துரு அவர்கள், இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு.கோ.நம்மாழ்வார் அவர்களது படத்தைத் திறந்து வைத்தார். கானுயிர் புகைப்படக் கண்காட்சியை எழுத்தாளர் ஞாநி கேமரா கிளிக் செய்து தொடங்கி வைத்தார். தொல்காப்பியத்திலுள்ள ஐம்பூதக்கோட்பாட்டை விளக்கி, தமிழிய ஆய்வாளரும், பேராசிரியருமான முனைவர் க.நெடுஞ்செழியன் சிறப்புரை வழங்கினார்.

தொடர்ந்து, ஐம்பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய தலைப்புகளில் நடைபெற்றக் கருத்தரங்கில் இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு. பாமயன், இயக்குநர் ம.செந்தமிழன், மருத்துவர் பாரதிச் செல்வன், சென்னை வானிலை மைய இயக்குநர் திரு. இரமணன், எழுத்தாளர் நக்கீரன், அரச்சலூர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வாளர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

நிகழ்வில் கலந்து கொண்டு, கருத்துரையாற்றிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் :

“பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் ஐம்பூதச் சூற்றுச்சூழல் விழா சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை ஒருங்கிணைத்த அனைவருக் கும் எமது பாராட்டுகளை முதலில் தெரிவித்துக் கொள் கிறேன்.

இக்கருத்தரங்கில் உரையாற்றிய பெரும்பாலானத் தோழர்கள், அணுஉலை எதிர்ப்பு, மீத்தேன் எரிவாயுத் திட்ட எதிர்ப்பு, கெயில் எண்ணெய்க் குழாய்த் திட்ட எதிர்ப்பு என சூழலியல் சார்ந்த தமிழகத்தின் வாழ் வாதார உரிமைகளுக்கானப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களாக உள்ளதை நான் பார்க்கிறேன்.

poovulagu- science-exhibitionஇக்கருத்தரங்கத்தில் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு தலைப்பிலும், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையைப் பறைசாற்றிப் பேச முடியும். அந்தளவிற்கு, மரபு அறிவியலைக் கொண்ட செம்மாந்த இனமாக நாம் வாழ்ந்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு இந்த இனம் தமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்தக் கொள்ளப் பலமுனைகளிலும் போராடிக் கொண்டுள்ளது.

இயற்கையை தெய்வமாக வழிபடும் வடநாட்டுப் பண்பாட்டுக்கும் இயற்கையை வெறும் பயன்பாட்டுப் பொருளாகக் கருதும் மேற்கத்தியப் பண்பாட்டுக்கும் மாறாக இயற்கையை சமூகத்தின் ஓர் உறுப்பாக, மூத்த உறுப்பினராகப் பார்த்தப் பண்பாடு பண்டைத் தமிழர் பண்பாடு, ஆனால் அது இன்று மேற்குலகப் பார்வைக்குத் தாழ்ந்துள்ளது. இதற்குக் காரணமென்ன?

தமிழ்ச் சமூகத்தில் நிலவிவரும் சாதிக் கொடுங்கோன்மைகளுக்கு எதிராக, சமூகத் தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும், அரசியல் முனையிலும் போரா டிய திராவிட இயக்கமாகட்டும், உழைக்கும் மக்களின் பொருளியல் உரிமைகளுக்காகக் களமாடிய பொதுவுடைமை இயக்கமாகட்டும், இவ்விரண்டு முற்போக்கு இயக்கங்களும் சில பிற்போக்கான அம்சங்களைக் கொண்டிருந்தன. நமது சமூகத்தின் வேராக இருந்த கிராமங்களை, இம்முற்போக்கு இயக்கங்கள் பிற்போக்கின் அடையாளமாகவே கண்டன. நிலத்தை இழந்தால் நாம் அனைத்தையும் இழப்போம் என்ற சமூகப் பார் வையை மக்களிடம் வளர்க்க வேண்டிய இவ்வியக்கங்கள், ‘நிலம்’ - ஒரு விற்பனைக்குரிய பண்டம் என்ற நுகர்வியப் பார்வையையே மக்களிடம் வளர்த்தன.

இவ்விரண்டு இயக்கங்களும், மக்கள் வளர்ச்சிக்கு பெரும் ஈகங்களை செய்துள்ள போதிலும், தேசிய இனம் மற்றும் தாயகம் குறித்த தெளிவான பார்வை இல்லாத போது, அந்த ஈகங்கள் நம்மை மீண்டும் வந்த இடத்திற்கே அழைத்துச் செல்கின்றன.

“நிலங்களை விற்றுவிட்டு கிராமத்தை விட்டு ஓடிச் சென்று நகரங்களில் குடியேறுங்கள். அது தான் முற்போக்கு, கிராமங்கள் - வெறும் பிற்போக்கின் அடையாளம்’’ என்று கூறி, நகரமயமாக்கலுக்கு இக்கருத்தியல்கள் பெரிதும் துணை நின்றன. பொதுவுடைமை இயக்கங்களோ, நிலத்திற்கு அதிக விலை கேட்டு இயக்கம் நடத்தியதே தவிர, ‘நிலம்’ - நமது தாய் அது நமது தாயகம் என மக்களை உணர்வூட்டி வளர்க்க வில்லை.

எனவே தான், வல்லாதிக்க பெருங்குழும நிறுவனங்கள் உங்கள் நிலத்தை விற்றுவிடுங்கள் என்று கூறும்போது, நம் மக்கள் எளிதாக ஏமாறுகிறார்கள். நிலத்தடி நீரை விற்கக்கோரும் போது நம் மக்கள் நீருக்கு விலை கேட்கிறார்கள்.

இவ்வாறான உலகமயச் சூழலில், நமக்கு மாற்று நுகர்வியக் கொள்கையும் மாற்றுத் தொழில்நுட்பமும் தேவையானவைதான். பூச்சுக் கொல்லிகளை சேர்க்காமல் இயற்கை வேளாண்மை செய்வது, கதிரவன் ஒளியிலிருந்து மின்சாரம் பயன்படுத்துவது என நாம் நடைமுறையில் பல மாற்றுத் தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது தேவைதான். நுகர்வு வெறிப் பண் பாட்டிலிருந்து மக்களை மீட்பதும் தேவைதான். இந் தத் தளங்களில் இப்போது செய்யப்படும் முயற்சிகள் தொடர வேண்டும். ஆனால் முதன்மையாக அதை நிலையானதாக்க, அதற்கான மாற்று அரசியல் நமக்குத் தேவை என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

பொலீவியாவில் தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிரான போராட்டங்களும், அம்மண்ணின் பிற போராட்டங்களும் ஒரு மாற்று அரசியலோடு இணைக்கப்பட்டன. அந்த மாற்றங்கள், ஒரு மாற்று அரசியலின் கீழ் இணைக்கப்பட்ட பிறகே அது நிலைக்க முடிந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள், இப்போது அரசியல் கட்சிகளையே நடத்துமளவிற்கு வளர்ந்துவிட்டன. கட்சிகளும், கம்பெனிகளும் இரண்டறக் கலந்து விட்டன. அரசியல் என்பது காசு போட்டு காசு எடுக்கும் தொழிலாகிவிட்டது. நீதித்துறை, ஊடகத் துறை என அனைத்துத் துறை அநீதியாளர் களுடனும் கார்ப்பரேட்டுகள் கைகோக்கும் ஒட்டுண்ணி அரசியல் இங்கு மேலோங்கியுள்ளது. இந்த ஆதிக்க அரசியலை நாம் தகர்த்தாக வேண்டும்.

உலகளவில் இன்று நிகரமைச் சூழலியல் (Eco-Socialism) குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வெறும் விவாதங்களாக இல்லாமல், பல குழுக்கள் பன்னாட்டு அரங்கில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றனர். சூழலியல் சிக்கல்களை எதிர் கொள்ள பசுமை மார்க்சியம் என்ற மாற்றுக் கோட் பாடுகளை முன்வைத்து அவர்கள் விவாதிக்கின்றனர். இந்திய அளவில், நமது மூத்தவர் கோ.நம்மாழ்வார், மூ.வந்தனா சிவா, காந்தியவாதியான ஜே.சி.குமரப்பா என பலரும் இது குறித்த நிறைய வெளிப்படுத்தியுள்ளனர். புறக்கணிக்கப்பட்ட ஒரு மாபெரும் பொருளியலாளர் ஜே.சி.குமாரப்பா. ஆனால் அவர் வர்ண-சாதி இந்த மாற்றுக்குத் துணையாக இருக்கட்டும் என்றார். இந்தியத் தேசியத்திற்குள் அவர் முன் மொழிந்தார். இதுதான் அவரது முரண்.

இந்திய சுதேசியம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. அது வெறும் கற்பனையே! இந்தியா விடுதலை பெறும் போது, காந்தியும் வெளியே வைக்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டது, சிலருக்கு அவசிய மாகவும், சிலருக்குத் தேவையாகவும் இருந்தது. கொன்றவன் கொலையாளி என அகப்பட்டுக் கொண்டான். அவர் கொல்லப்பட வேண்டியவர் என நினைத் தவர்கள் அகப்படாமல் தப்பித்துக் கொண்டனர். அவர் தேவையற்றவர் எனக் கருதியவர் மனிதருள் மாணிக்கம் எனக் கொண்டாடப்பட்டார்.

காந்தியின் சுதேசியம், தற்சார்பு கிராமப் பொருளியல் கொள்கை உள்ளிட்ட கொள்கைகள், இந்திய விடுத லைக்குப் பிறகு காந்தியைப் போலவே வெளியில் வைக் கப்பட்டன. மனித குலத்திற்கெதிரான சனாதன தர்மத் தின் வழியேதான் காந்தி இதை சிந்தித்தார். என்ற போதிலும், இது போன்ற மாற்றுத் திட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, பெரிய பெரிய தொழிற்சாலைகள், பெரிய பெரிய அணைகள் என சூழலியல் நாசத் திட்டங்களை முன்வைத்த நேருதான் இன்றுவரை நவீன இந்தியாவின் சிற்பி என இந்தியத் தேசியவாதி களால் எடுத்துரைக்கப்படுகிறார்.

இது போன்ற பெரியக் கட்டமைப்புகளை, மையத்தில் குவிந்த அதிகாரம் அடக்குமுறைகளை வைத்துக் கொண்டு தான் இந்தியாவைப் பாதுகாக்க முடியும் என இந்தியத் தேசியவாதிகள் தெளிவாக நம்புகிறார்கள். உலகமயத்துடனோ, பன்னாட்டு மூல தனத்துடனோ இணையாமல் இது நடப்பதில்லை. அதனால்தான், இந்திய சுதேசியம் என ஒன்று கிடையாதென நாம் அடித்துக் கூறுகிறோம்.

ஆனால், பலர் முன் வைக்கும் ‘Think Globally Act Locally’ என்ற முழக்கம் சரியானதல்ல. உலகளவில் சூழலியல் சிக்கல்களுக்கானத் தீர்வு என்பது, உலகளவில் ஒரு தீர்வல்ல. உலகு தழுவிய தீர்வை உள்ளூரில் செயல் படுத்த ஒன்றுமில்லை. அத்தீர்வு, ஒவ்வொரு மண்ணிற் கும் வேறுவேறாகும்.

இதில் வரும் ‘லிஷீநீணீறீ’ என்பது என்ன? இந்த ‘லிஷீநீணீறீ’ என்பது அந்தந்த மொழி சார்ந்த மண் என்பதாகும். இங்கு பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள், தொல் காப்பியத்திலுள்ள ஐம்பூதக் கோட்பாடுகளை சிறப்பாக விளக்கிப் பேசினார். ஆரியர்கள் நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய நான்கு கூறுகளை மட்டும் பேசிக் கொண்டிருந்த போது, சதுர்பூதம் என்ற போது நமது மூதாதையர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘விசும்பு’ எனப்பெயரிட்டு, காற்று அல்லாத வெளியை அடையாளப்படுத்தியிருந்தனர். இது இந்த இனத்தின் மரபான அறிவியலின் வெளிப்பாடு!

இந்த, மரபார்ந்த அறிவை, அறிவியலையும் வேறு எந்த இனத்தில் காண முடியும்? சூழலியல் சிக்கல்களுக் கானத் தீர்வுகளை நோக்கிப் புறப்படும் முன், இந்த மரபான அறிவையும், தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய மொழியைப் புறக்கணித்தால் நமக்குப் பயன் உண்டா?

பூவை ‘பூ’ என்று நாம் சொன்னால், ஆரியர்கள் அதை ‘புஷ்பம்’ எனச் சொல்வார்கள். ‘பூ’ என்றால் உனக்கும் மட்டும் புரியும் ‘புஷ்பம்’ என்றால் நம்மிரு வருக்கும் புரியும். எனவே அதையே வைத்துக் கொள் வோம் என்று ஆரியன் வடமொழிக்காரன் சொல்வான் மொழியில் என்ன இருக்கிறது எனக் கருதி, நமது தாய் மொழியைப் புறக்கணித்தால் அதே இடத்தில் இன் னொரு மொழி வந்து ஆதிக்கம் செலுத்தும். எனவே, மொழியைப் பாதுகாக்காமல் மரபு அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் நாம் பாதுகாக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். மொழியைப் பாது காத்துக் கொள்வதற்கான அரசு கட்டமைப்பு இல்லா மல் இது முடியாது என உணர வேண்டும். ஜே.சி. குமரப்பா இடறி விழுந்த இடம் இது தான்!

எனவே, மொழி சார்ந்து தான் மண் இருக்க முடியும். மொழி சார்ந்து தான் மரபு இருக்க முடியும். மரபு சார்ந்து தான் அவ்வினத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் இருக்க முடியும். அந்த மரபின் அடித்தளத்தில் நின்றுதான் நவீனத்தை வளர்க்க வேண்டும். ஆனால், மொழியை மறுப்பதன் மூலம் நாம் மரபு, அறிவியல் என அனைத்தையும் மறுக்கிறோம் என்பதை சிலர் புரிந்தும், புரியாமலும் இங்கு பேசுகிறார்கள்.

தமிழ் இந்து நாளேட்டில், தமிழ் இனத்திற்கு தொழில்நுட்பம்தான் தெரியும், அறிவியல் தெரியாது என்று எழுதினார்கள். அடிப்படை அறிவியல் தெரிந்த வர்கள்தான், தொழில்நுட்பத்தைப் படிப்பார்கள் என்ற அடிப்படை அறிவியல் கூட தெரியாமல் இங்கு எழுதுகிறார்கள்.

தஞ்சை பெரிய கோவில் எழுப்புவதற்கு முன் இவர்கள், எத்தனை கோபுரங்களை கட்டி இடித்தார் கள்? நவீன கால கணக்கியல் வளந்திராத அந்த காலத்திலேயே, இம்மி என்றால் எவ்வளவு என கணக்குப் போட்டுத் தந்திருக்கிறது தமிழினம். சோழர்களின் நில அளவீடு முறையைக் கண்டு எல்லோரும் வியக்கின்றனர். அறிவியலை அறியாமல் இவற்றையெல்லாம் தமிழன் படைத்திருப்பானா?

பரத நாட்டியம் பரவலாக புழங்குவது, தமிழ் நாட்டில்தான். ஆனால், அதற்கான பரத சாஸ்திரத்தை ஆரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். சிற்பக்கலை யில் சிறந்து விளங்குவது தமிழகம்தான். ஆனால், ஆரியர்கள் சில்பசாஸ்திரம் என அதை எழுதி வைத்தி ருக்கிறார்கள். நாம் கோட்பாடுகளை எழுதி வைக்க வில்லை, அல்லது நம் முன்னோர்களின் நூல்கள் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் ஆரியர்கள் கோட் பாடுகளை மட்டுமே எழுதி வைத்திருக்கிறார்கள்.

தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜச்சோழன் கட்டினான் என்றால், அவன் காலத்தில் வாழ்ந்த கொத்தனாருக்கு சிற்ப சாத்திரம் தெரிந்திருக்கிறது. சிற்பக் கலை நுணுக்கங்கள் தெரிந்திருக்கிறது என்று பொருள். அவரைக் கொத்தனார் என்று ஒதுக்கி விட்டோம். அதையே மற்றொருவர் ஆங்கில வழியில் சொன்னால் அவரை என்ஜினியர் என்று உயரே வைத்தோம். எனவே, மொழியை இழப்பதென்பது நமது வரலாற்றை இழப்பதென்று பொருள். வரலாற்றை இழப்பதென்பது நாம் நம்மையே இழக்கிறோம் என்று பொருள். எனவே, நமது மொழியை, - வரலாற்றை மீட்கும் போதுதான், மரபார்ந்த அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் நாம் முழுமையாக மீட்டெ டுக்க முடியும்.

இந்தியமும் இன ஒடுக்குமுறையும், மொழி ஒடுக்கு முறையும் பிரிக்க முடியாதது. இந்தியத்திற்கு அடிப்படை யான ஆரிய - பார்ப்பனியமும் சாதி ஒடுக்குமுறையும் இணைந்திருப்பது.

பிறப்பு அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் இச்சமூகத்தில், சாதி ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கும் வகையில் இட ஒதுக்கீடு தேவையென நாம் போராடுகிறோம். அது சரியே! அதே நேரத்தில், மருத்துவம் - பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மரபார்ந்த அறிவுடன் நடைமுறையில் இயங்கிக் கொண்டுள்ள சமூகத்தினருக்கு இந்த இடஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டு மெனவும் நாம் கருதுகிறோம்.

இசைத்துறையில் இளையராஜா சாதித்ததை போல எல்லோரும் சாதித்துவிட முடியாது. புறக்கணிக் கப்பட்ட பறையை அவர் மேடையேற்றினார். அந்த இசையின் மேன்மையும் அதைக் கையாண்ட மக்களின் மேன்மையும் வெளிப்பட்டது. எனவே தான், மரபார்ந்த அறிவியல் அறிவைக் கொண்டுள்ள சமூகங்களின் ஆற்றலை வெளிப்படுத்த தனி இடஒதுக்கீடு வழங்கி, அவர்களது மரபு அறிவை, அறிவியலை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறோம். இவ்வாறான, மாற்று வளர்ச்சி முறை ஒவ்வொரு மொழி சார்ந்த மண்ணுக்கும் வேறுவேறானவையே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஐதராபாத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரே மாற்று கிடையாது. அரிசி, நெல் கூட நமக்கு வேறுவேறானவை. அதே போல், தில்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரே மாற்று கிடையாது. அது போலவே, உலகம் முழு மைக்குமோ, இந்தியா முழுமைக்குமோ ஒரு மாற்று கிடையாது. ஒவ்வொரு மொழி சார்ந்த மண்ணுக்கும், அம்மண்ணிக்கேற்ப உள்ள தனித்தன்மையுடன் இணைந்தே இம்மாற்று செயல்திட்டங்கள் நடை முறைப்படுத்த வேண்டும். அதற்கான மாற்று அரசி யலை உருவாக்க வேண்டும்.

ஆங்கில இலக்கண முறைப்படி கி றிமீஷீஜீறீமீ என்றால் தவறு என சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மையில் ஒரு மக்கள் சமூகம் என்றால், அது ஒரு தேசிய இனம் சார்ந்த மக்கள் சமூகம் தான். ஒரு மொழி மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான தனித்த வரலாறு கொண்ட மக்கள் சமூகம் தான்.

சோமாலியா நம் கண் முன்னே உள்ள எடுத்துக் காட்டு. சோமாலியர்கள், தாங்கள் ஆட்சியுரிமை பெற்ற பிறகு தங்கள் அழிந்து போன மொழியைத் தான் முதலில் மீட்டார்கள். அதன்பின்னர், அம்மொழியின் மரபார்ந்த அறிவியலை மீட்டார்கள்.

சோமாலியாவின், கிராம மக்களுக்கு உள்ள கால்நடை அறிவியல் (Vertinary science) என்பது உலகம் வியக்கும் அளவிற்கு புகழ் பெற்றது. 1000 ஆடுகளை மேய்த்துச் செல்லும் ஒரு சோமாலியர், எந்த ஆடு நொண்டி நொண்டி நடக்கிறது, அதற்கு என்ன குறை என சில நிமிடங்களில் சொல்லிவிடுவார். ஆனால், அவரை ‘நாட்டு வைத்தியர்’ என மேற்கத்திய மருத்துவர்கள் இழிவுபடுத்துவர்கள். ஆம் அவர் ‘நாட்டு வைத்தியர்’ தான். அவருக்கென ஒரு நாடு இருக்கிறது. அவர் அந்த நாட்டுக்கான மருத்துவர்!

நம்முடைய மரபான மருத்துவத்தை ‘நாட்டு வைத்தியம்’ என்றுதான் கூறுகிறார்கள். நாட்டு வைத்தியம் இருக்கிறது அதை அங்கீகரிப்பதற்கு நாடு தான் நமக்கு இல்லை.

தமிழர்களே, நமக்கான நாடு எது? தமிழ்நாடுதான்! அதை அடையும் திசை நோக்கி நாம் கரம்கோப்போம்! அதுவே நமக்கான மாற்று அரசியல்! அதுவே, நம் மொழியையும், மரபார்ந்த அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் மீட்டெடுக்கும்! அதற்கான போராட் டங்களில் நாம் கை கோப்போம் எனத் தெரிவித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மீண்டுமொரு நன்றி கூறி விடைபெறுகிறேன்! நன்றி! வணக்கம்!

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

மாலையில், திருவண்ணாமலை பாப்பம்பாடி ஜமா முனுசாமி குழுவினரின் பெரிய மேளம் இசை நிகழ்ச்சியும், சூழலியல் சார்ந்த நூல்கள் வெளியீடும், தமிழர்களின் மரபார்ந்த சிறுதானியங்களால் செய்யப் பட்ட உணவு வகைக்களைக் கொண்ட சிறுதானிய உணவுத் திருவிழாவும் பெருந்திரள் பங்கேற்போடு நடைபெற்றது.

Pin It