குறைந்தாலும் திருக்குறளாய்க் குறுக்கம் கொள்வேன்!
கூன்படினும்வில்லாகவிருப்பம்கொள்வேன்!
மறைந்தாலும்சூரியனாய்மீட்சிகொள்வேன்!
மடிந்தாலும்புல்மீளும்! காட்சிகொள்வேன்!
கரைந்தாலும்சந்தனம்போல்மணமேகொள்வேன்!
கடித்தாலும்கரும்பாகிஇனிமைகொள்வேன்!
இரைந்தாலும்கடலாகஆர்வம்கொள்வேன்!
இருண்டாலும்மேகமெனகர்வம்கொள்வேன்!
குனிந்தாலும்அருவியெனஆற்றல்கொள்வேன்!
குழைந்தாலும்கனிக்குளுமைஇனிமைகொள்வேன்!
தணிந்தாலும்அணைநீராய்த்தேக்கம்கொள்வேன்!
தளர்ந்தாலும்நெய்யாகிவாசம்கொள்வேன்!
பணிந்தாலும்நிலமாகிப்பாதைகொள்வேன்!
படர்ந்தாலும்கொடியாகிப்பூக்கள்கொள்வேன்!
தனித்தாலும்கொடிமரமாய்ஏற்றம்கொள்வேன்!
தவித்தாலும்தமிழ்த்தாகம்நெஞ்சில்கொள்வேன்!
நனைந்தாலும்வேர்விட்டுவளர்ச்சிகொள்வேன்!
நசிந்தாலும்சுக்காகிக்காரம்கொள்வேன்!
தொலைந்தாலும்புதையலெனஅமைதிகொள்வேன்!
தூர்ந்தாலும்மேடாகிஈரம்கொள்வேன்!
அலைந்தாலும்தென்றலாகிஇனிமைகொள்வேன்!
அசைந்தாலும்நரம்பாகிஇசையைக்கொள்வேன்!
கலைந்தாலும்விண்மீனாய்க்காட்சிகொள்வேன்!
கசிந்தாலும்தேனாகிமலர்கள்கொள்வேன்!
உள்மூச்சில்தமிழ்வாங்கிஉயிரில்கொள்வேன்!
உயிர்த்தமிழாய்நரம்பெல்லாம்உணர்வைக்கொள்வேன்!
வெள்ளரியின்குளுமைதனைப்பேச்சில்கொள்வேன்!
விடியலினைஅள்ளி!கவிவீச்சில்கொள்வேன்!
தெள்ளியநீர்பாசனத்தை! எழுத்தில்கொள்வேன்!
தேன்பலாவாய்க்கருத்துதமிழ்நாக்கில்கொள்வேன்!
புள்ளிவரிப்புலிப்பாய்ச்சல்வேகம்கொள்வேன்!
பொழுதெல்லாம்தமிழ்படித்துச்சாவைவெல்வேன்!