* ஆழி சூழ் உலகறிய .
 ஆதி மனிதன் செய்த .
 அக-புற தேடல்களின் .
 அடையாளமாய்.
.
* பிரபஞ்ச மனிதனின் .
 புவி உள்ளங்கையில்.
 நதிகளாய் ஓடும்.
 ரேகைத் தடங்களாய்....
.
* பாலை-மலை நிலமென.
 படர்ந்து விரிந்து .
 முதலும் முடிவுமில்லா.
 பெருவழியாய்....
.
* ஆள்வோர் பெருமை பேச .
 அகன்று கிடக்கும்.
 ஆறுவழிச்சாலையின்.
 பாலப் பருவமாய்....
.
* பல வர்க்கப் பாதங்கள்.
 பதிந்திருந்த போதும் .
 முதலில் நடந்த பாதம் .
 சிந்திய குருதியை.
 சேமித்து வைத்தபடி.
.
* தேடலின் அடுத்த வரவை .
 எதிர்பார்த்து .
 காத்திருக்குதந்த .
 ஒத்தை யடிப்பாதை.

More articles by மங்களக்குடி நா.கலையரசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.