இந்திய சமூகத்தில் சாதி அடுக்குமுறை என்பது ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் முக்கிய காரணியாக செயல்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், ஆதிக்க சாதியினருக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கும் கேடயமாகவும் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் பாலியல் புகாரில் சிக்கி கைதான நடிகை புவனேஸ்வரியும், வாய்க்கு வந்ததைப் பேசி வம்பில் மாட்டிக் கொண்ட நடிகர் விவேக்கும் உடனடியாக புகலிடம் தேடியது முக்குலத்தோர் சாதிச்சங்கங்களிடம்தான். 'எங்க சாதிசனங்களை மீறி என்னைத் தொட்டுற முடியுமா?' என்கிற மிரட்டலைத்தான் அவர்கள் மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள்.
சாதி அடுக்குமுறையில் பங்கேற்காது, அதை வெளியில் நின்று ஒழிக்க வேண்டிய தலித் சகோதரர்களே சமயங்களில், எல்லோரும் அல்ல, தங்களது சுயலாபங்களுக்காக சாதிக்குள் ஒளிந்து பாதுகாப்பு தேடுகின்றனர். 'நான் தலித்ங்கிறதாலத்தான் எனக்கு இந்த கதி' என்று கூறுவது ஆதிக்க சாதியினரதைப் போல் மிரட்டல் அல்ல, இது கழிவிரக்கம். இந்தக் கழிவிரக்கம் பாமர மக்கள் சிலரிடம் இருக்கலாம். ஆனால் மெத்தப் படித்த எழுத்தாளர்களே தங்கள் மீதான விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ளாமல் 'நான் தலித், அதனால் தலித் விரோதத்துடன் நடந்துகொள்கிறார்கள்' என்று சொன்னால் அது எவ்வளவு பரிதாபகரமானது. ஆனால் அந்தப் பரிதாபத்தைத்தான் இரவிக்குமார் செய்தார், இப்போது அவரது பாதச்சுவட்டில் நமது ஆதவன் தீட்சண்யாவும் வந்து நிற்கிறார்.
ஆதவனுக்கு அப்படியென்ன கொடுமை நேர்ந்தது?
ஈழப் பிரச்சினை தொடர்பான அவரது நிலைப்பாடும், செயல்பாடுகளும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் அது தொடர்பாக எழுதிய கட்டுரைகள் கீற்றிலும், இனியொரு, வினவு உள்ளிட்ட தளங்களிலும் வெளிவந்தன. விமர்சனங்களுக்கான பதிலை ஆதவன் எழுதியிருந்தால், அதை கீற்று நிச்சயம் வெளியிட்டிருக்கும். இது ஆதவனுக்கும் தெரியும். ஆனால் ஆதவன் எழுதவில்லை. அது அவரது உரிமை. ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் விவாதங்களையும், விமர்சனங்களையும் திசை திருப்பும் விதமாக அவர் கூறுகிறார், 'நான் தலித். அதனால் கீற்று குழுவினர் என்மீது தலித் விரோதத்துடன் அவதூறு பேசுகிறார்கள்'. (அவரது விமர்சனக் கவிதை கீழே தரப்பட்டுள்ளது.)
ஆதவன் மீது அப்படியென்ன விமர்சனங்கள் வைக்கப்பட்டன?
1. எழுத்தாளர் தமிழ்நதிக்கான எதிர்வினையில், ஆணாதிக்கம் மிகுந்த கருத்துக்களை எழுதியிருந்தார்.
2. ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில், கேரளத்தில், மேற்கு வங்கத்தில், இங்கிலாந்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடத்தில் என எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கிறது. அதனால்தான் ஈழத்தில் இந்தியத் தமிழர்களை வெள்ளாளத் தமிழர்கள் அவமானப்படுத்துகிறார்கள்; இங்கு இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்டு, பார்ப்பன மார்க்சிஸ்ட் தலைவர்கள் குறுக்குசால் ஓட்டுகிறார்கள். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படாத, காலியாக உள்ள இடங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னபோது அதை வரவேற்று அறிக்கை விட்ட ஒரே தமிழர் தலைவர் யார் தெரியுமா? சி.பி.எம் வரதராஜன்தான். வெள்ளாளத் தமிழர்களுக்காக ஈழப்பிரச்சினையை ஒதுக்கும் ஆதவன், கிரீமி லேயர் கேட்கும் சிபிஎம் கட்சியை ஒதுக்காமல் அண்டியிருப்பது ஏன்?
3. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல மாநாடுகள், பொலிட்பீரோ கூட்டங்கள் நடத்திய பின்னர்தான், சாதியை ஒரு பிரச்சினையாகப் பார்க்கும் தெளிவு மார்க்சிஸ்ட்களுக்கு வருகிறதென்றால், அந்தத் தெளிவை உயிர் வாழ்வதற்கு உத்திரவாதம் இல்லாது, போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் ஆதவன் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
4. புலிகள் சாதியைக் கணக்கில் எடுக்காததால்தான் ஈழப்போராட்டம் பலவீனமடைந்தது என்று கூறும் ஆதவன், சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறமுடியுமா?
5. தேவேந்திர பூபதியின் கவிதைகளை யவனிகா ஸ்ரீராம்தான் எழுதிக் கொடுக்கிறார் என்று லீனா வால்பாறைக் கூட்டத்தில் பேசினார். தேவேந்திர பூபதி ஏற்பாடு செய்திருந்த மதுரை கடவுக் கூட்டத்தில் ஆதவனும், கா.சு.கண்ணனும் அதை மறுத்துப் பேசினார்கள். அந்த அரங்கத்திற்குத் தலைமை தாங்கிய ஆதவன், ‘வால்பாறை கூட்டத்தில் பகிரங்கமாக லீனாமணிமேகலையும், தமிழகம் முழுவதும் பல்வேறு எழுத்தாளர்களும் பேசி வருகிற இக்குற்றச்சாட்டைப் பற்றி பூபதியும், யவனிகாவும் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றல்லவா பேசியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் தானாகவே முன்வந்து, தேவேந்திரபூபதி கவிதை எழுதுவதை நானே பார்த்தேன் என்று ஏன் சாட்சியம் கூறினார்? பிடித்து வரப்பட்ட சாட்சியத்திற்கு கொடுக்கப்பட்ட கூலி என்ன? காலச்சுவடுக்கும் கடவுக்குமான உயர்திணை மற்றும் அஃறிணை சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் ஊரறிந்தது. ஆனால் புதுவிசைக்கும் கடவுக்குமான கொடுக்கல் வாங்கல்கள் இனிமேல்தான் ஊரறிய வேண்டியுள்ளது. எப்படியோ மனு ஆதரவாளனையும், மனு எதிர்ப்பாளனையும் மனுவின் மச்சினிச்சி லட்சுமி ஒன்றுசேர்த்து விட்டாள்.
6. தமிழ்நதி சேலத்திலிருந்து திருச்சி வரும் பயணத்தின் பொழுது, உங்களிடம் பூபதியின் நடவடிக்கைகள் குறித்து கூறியதாக நீங்கள் உங்கள் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதையே உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், தமிழ்நதியின் வார்த்தைக்குப் பின்னால் இருந்த வலியை, உங்களால் ஏன் உணர முடியவில்லை? எவ்வளவு தோழமையுடன் அவர், இவ்விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பார்? அதற்கு நீங்கள் எவ்வகையில் உண்மையாக நடந்துள்ளீர்கள்? உங்கள் ஆத்ம நண்பர் பூபதியிடம் இதைப்பற்றி என்றேனும் கேட்டதுண்டா? அல்லது உங்கள் கட்சியின் மாதர் அமைப்பில் சொல்லி போராடச் சொன்னதுண்டா? எதுவுமில்லை. சரி, உங்கள் பெண்ணுரிமைப் போராட்டம் அத்துடன் முடிந்துவிட்டால் கூட பரவாயில்லை. இன்று தமிழ்நதி உங்களைப் பற்றி விமர்சித்து விட்டார் என்றவுடன் அதைத் தூக்கிப் போடுகிறீர்களே, அருவருப்பாக இல்லை!
7. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உலக தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் (N.G.O.) எதிர்ப்புரட்சி அரசியல் பற்றி ஒரு நூலையே எழுதியிருக்கிறார். புரட்சியாளர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் ச.தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும், இலங்கை அரசு சார்பான, N.G.O. நபர்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும், அவர்கள் நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கும் என்னவிதமான நியாயத்தை முன்வைக்கிறார்கள்?
8. ஈழப் போர் இறுதியை அடைந்த காலகட்டத்தில் பிரபாகரனை கொச்சைப்படுத்தும் விதமாக, ஒரு புகைப்படத் தொகுப்பு ஒன்றை புலி எதிர்ப்பாளர்கள் மின்னஞ்சல் பிரச்சாரமாக செய்தனர். அதை தமிழகத்தில் பரப்பும் வேலையை ஆதவன் செய்தார். அந்தப் புகைப்படத் தொகுப்பில், பிரபாகரன் அவரது குடும்பத்துடன் விருந்து உண்பது போன்று ஒரு படம் - ஈழமக்கள் உணவுக்காக வரிசையில் நிற்பது போன்ற ஒரு படம், பிரபாகரனின் மகன் வெளிநாட்டில் படிப்பது போன்ற ஒரு படம் -ஈழக்குழந்தைகள் தெருவில் நிற்பது போன்ற ஒரு படம். இதே போன்ற ஒரு புகைப்படத் தொகுப்பை - ஏழை பாட்டாளிகளின் வாழ்க்கையை பிரகாஷ் காரத் அல்லது ஆதவனின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு தயாரிக்க முடியாதா? பிரகாஷ் காரத் விமானத்தில் பயணிப்பது போன்று ஒரு படம் - ஒரு தலித் காலில் செருப்பு கூட இல்லாது வெயிலில் நடப்பது போன்று ஒரு படம், பிரகாஷ் காரத் பெரிய பெரிய அரசியல்வாதிகளுடன் விருந்து உண்பது போன்ற ஒரு படம் - பாட்டாளி ஒருவர் ஒரு ரூபாய் அரிசி வாங்கி ஒரு வேளை உண்பது போன்று ஒரு படம். இதைத் தயாரித்து அனுப்பினால், அதை ஆதவன் எல்லோருக்கும் ‘forward’ செய்வாரா?
9. 'அரசு என்றால் வன்முறைக்கருவி என்பது வீ.அரசுக்கும் பொருந்தும்போல' என்று எழுதிய ஆதவன் தான், ஈழப்போரில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த இலங்கை அரசின் பிரதிநிதிகளோடு, அதே அரசின் செலவில் நடத்தப்பட்ட இலக்கிய விழாவின் மேடையை பகிர்ந்து கொண்டார். இது என்னவிதமான அறம்?
10. லீனா மணிமேகலையின் கருத்து சுதந்திரத்திற்கு இன்று குரல் கொடுக்கும் ஆதவன், பால் சக்காரியா, மக்கள் தொலைக்காட்சியின் கருத்து சுதந்திரத்திற்காக என்றாவது பேசியிருக்கிறாரா?
11. கம்யூனிசத்தையும், கம்யூனிச இயக்கங்களையும் கொச்சைப்படுத்தியதற்காக ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’நாவலை கடுமையாக சாடிய ஆதவன், அதே வேலையைச் செய்த லீனாவை மட்டும் கொண்டாடுவது ஏன்?
இவைதான் அருள் எழிலன், யமுனா ராஜேந்திரன், வளர்மதி, தமிழ்நதி, அமுதன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் ஆதவன் மீது விமர்சனங்களாக வைத்தவை. ஏதேனும் விடுபட்டிருந்தால் நண்பர்கள் தெரிவிக்கலாம். இவற்றில் எது தலித் விரோதமானது என்பதை ஆதவன் விளக்கினால் நலமாக இருக்கும்.
ஈழ ஆதரவு தொடர்பான விவாதங்களில் ஆதவன் மட்டும் விமர்சிக்கப்படவில்லை; கருணாநிதி, ஜெயலலிதா, நெடுமாறன், திருமாவளவன், ஜெகத் கஸ்பர், அ.மார்க்ஸ், தமிழ்ச்செல்வன், எஸ்.வி.ராஜதுரை உட்பட பலர் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
தலித் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான சரண்குமார் லிம்பாலே தலித் முரசுக்கு அளித்த பேட்டியில் தலித் இலக்கியம் குறித்து இவ்வாறு கூறுகிறார்: “...பக்தி இலக்கியங்களின் மறு உலக சிந்தனைகள், நடுத்தர சிற்றுடைமை வர்க்கத்தினரின் ஆசைகள் ஆகியவற்றில் தலித் இலக்கியம் பங்கேற்பதில்லை. தலித் இலக்கியங்கள் இன்ப உணர்ச்சிகளையோ, மென்மை உணர்வுகளையோ அல்லது தன்னைத்தானே வெறுத்து இரக்கம் கொள்கிற உணர்வுகளையோ கொடுப்பதில்லை. அவை ஒரு தலித்திடம் உள்ள சுயமரியாதை உணர்வை சுடர்விட்டு எரிய வைக்க வேண்டும். சுயமரியாதை என்பதைத்தான் முதல் கருத்தாகவும் முன் வைக்க வேண்டும். ‘நான் பிறந்தேன், வர்ணாசிரமத்தினர் தாக்கினார்கள், நான் பிச்சைக்காரனானேன்' என்று எழுதுவதில் கெட்டிக்காரத்தனம் இருப்பதாகத் தெரியவில்லை.”
என்ன செய்வது? ஆதவன் அதைத்தான் தனது கெட்டிக்காரத்தனமாகக் காட்டுகிறார்.
எவர் ஒருவர் மீதான விமர்சனங்களை வெளியிடும்போதும், அவரது சாதி பார்த்து கீற்று வெளியிடுவது இல்லை. கொலைவழக்கில் கைதான ஜெயேந்திரனும் சரி, அவனுக்கு கார் அனுப்பி மாமா வேலை பார்த்த இந்து ராமும் சரி பார்ப்பனர்கள் என்பதால் மட்டுமே நாம் விமர்சிக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை அங்கீகரிக்க மறுக்கிற, அதன் மீது அதிகாரம் செலுத்துகிற பார்ப்பானாக இருந்தாலும் சரி அல்லது சூத்திரனாக இருந்து கொண்டே தன்னிலும் கீழான மக்கள் மீது சாதித் தீண்டாமையை ஏவும் முதலியார், செட்டியார், நாய்க்கர், தேவர், நாடார், வன்னியர் என எந்த ஆதிக்க சாதியாக இருந்தாலும் கீற்று அதை ஆதரித்தது இல்லை; ஆதரிக்கப் போவதும் இல்லை. தலித்தா தலித் அல்லாதவர்களா என்ற பிரச்சனை வரும்போது தலித் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாடே கீற்றின் நிலைப்பாடு.
‘பிள்ளை கெடுத்தாள் விளை’சிறுகதை தொடர்பான விவாதங்கள், உத்தப்புரம் சுவர், கண்டதேவி போராட்டம், மேலவளவு வழக்கு, கயர்லாஞ்சி படுகொலை, அருந்ததியர் உள்ஒதுக்கீடு, சிறப்பு உட்கூறு திட்டநிதி, நிரப்பப்படாத தலித் பணியிடங்கள், உயர்நீதிமன்ற மாணவர்கள் மோதல், பழையகோட்டை அம்பேத்கர் சிலை விவகாரம் என தலித் மக்களின் பிரச்சினைகளை முன்னுரிமை கொடுத்து கீற்று தொடர்ந்து பிரசுரித்து வருகிறது. இதிலெல்லாம் ஆதவனுக்கு கீற்றுடன் உடன்பாடுதான். அவரே பல கட்டுரைகளை கீற்றிற்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் தோன்றாத கீற்றின் ‘தலித் விரோதம்’, அவர் மீதான விமர்சனங்கள் வந்தவுடன் அவருக்குத் தெரிகிறது. ஒன்று புரியவில்லை, தலித்தியக் கோட்பாட்டை ஆதவன் தன்னிலிருந்துதான் அணுகிறாரா?
பார்ப்பனியத்தின் மீதான, ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்கு எதிராக கோபம் கொப்பளிக்கும் படைப்புகளை முன்வைத்தபோது அதை கீற்று வெளியிட்டது. அதே ஆதவன், இங்கிலாந்து பயணத்திற்குப் பிறகு – தனது நண்பர்களுக்காக - ஈழப்போராட்டத்தை தலித் அரசியலை முன்வைத்து போக்கடிக்கும் வேலையைச் செய்தபோது, அவர்மீது எழுந்த விமர்சனங்களை நண்பர் என்றும் பாராமல் வெளியிட்டது. நண்பருக்காக முகதாட்சண்யம் பார்த்திருந்தால் ஆதவனுக்கு நாங்கள் என்றும் தலித் ஆதரவாளர்களாகவே இருந்திருப்போம்.
புரட்சிகர இயக்கங்களை, அதில் பங்குகொள்வோரைக் கொச்சைப்படுத்தும் விதமாக லீனா கவிதை எழுதியதையும், அதற்கான விமர்சனங்களை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாக சித்தரித்ததையும் கண்டித்து கீற்றில் கட்டுரைகள் வெளிவந்தன. லீனாவுக்கு ஆதரவாக ‘கல்வியறிவு மறுக்கப்பட்டிருந்த நிலையை முறித்துக்கொண்டு ஒரு பெண் எழுதுவதே ஆண்மைய வாதத்திற்கு எதிரானதுதான்’ என்று ஆதவன் எழுதுகிறார். ஒரு பெண் எழுதுவதெல்லாம் ஆணாதிக்கத்திற்கு எதிரானது என்றால், ரமணி சந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன் எழுதுவதும், பேசுவதும் ஆணாதிக்கத்திற்கு எதிரானதுதானா? இதை இன்னும் கொஞ்சம் நீட்டித்துப் பாருங்கள். பொள்ளாச்சி மகாலிங்கம், ராஜேஷ்குமார் என பார்ப்பரனல்லாதோர் எழுதுவதெல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு எழுத்து. நவீன காலனியாதிக்கத்திற்கு உள்ளாகும் இந்தியாவிலிருந்து எழுதும் ஜெயமோகன் எழுதுவதெல்லாம் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுத்து! யோசிக்கும்போதே சிரிப்பு வரவில்லை?
இந்திய சமூகம் எதிர்கொள்ளவேண்டிய மிக முக்கிய பிரச்சினை சாதிதான் என்பதில் புதுவிசையுடன், கீற்றும் உடன்படுகிறது. அதே நேரத்தில் தலித் அரசியலை முன்வைத்து ஈழப்பிரச்சினையை காலி பண்ண முயலும் புதுவிசையின் நிலைப்பாடு கீற்றிற்கு ஏற்புடையதல்ல. சாதி பெரிய பிரச்சினை என்பதற்காக உலகமயமாக்கல், சுற்றுச்சுழல் சீரழிவு, ஈழ மக்கள் படுகொலை, மேற்குவங்கம், சட்டீஸ்கர் மாநிலங்களில் பழங்குடியின மக்களின் மீதான தாக்குதல்கள் இவற்றை ஒதுக்கித் தள்ளி விட முடியாது.
ஆதவன்! சாதிப்பிரச்சினையை ஒழித்துவிட்டு சம்பள உயர்வு கேட்டு போராடலாம் என்றோ, அர்ச்சராகும் உரிமையை அடைந்தபிறகு உற்பத்தியில் பங்கு கேட்கும் போராட்டத்தைத் தொடரலாம் என்றோ என்றாவது தொழிற்சங்கங்களிடம் பேசியிருக்கிறீர்களா? இரட்டைக் குவளை முறையை ஒழித்தபிறகு அணுசக்தி ஒப்பந்தம், சிறப்புப் பொருளாதார மண்டலம் இவற்றை எதிர்க்கலாம் என்று புதுவிசையில் எழுதியிருக்கிறீர்களா? ஆனால், ஈழப்பிரச்சினை என்று வரும்போது மட்டும் சாதியைத் தூக்கி முன்னே போடுகிறீர்கள்.
புதுவிசையை வெளியிட தேவேந்திர பூபதி உதவியதற்காக, யாரும் கேட்கமாலேயே அவருக்காக வாதாடுகிறீர்கள். ஷோபாசக்தியின் நட்புக்காக கம்யூனிஸ்ட்களைக் கொச்சைப்படுத்தும் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து சுதந்திரம் என்று பேசுகிறீர்கள். ஆனால், ‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதுவொன்றையும் எழுதிவிட்டுச் செல்லும் உரிமை எழுத்தாளனுக்கு இல்லை’ என்று முழங்கிய ஆதவனையும் எங்களுக்குத் தெரியும். கீற்றின் நிலைப்பாடும் அதுதான். ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதையில் தலித் பெண்ணைக் கொச்சைப்படுத்திய எழுத்தாளர் சுந்தரராமசாமியை நீங்கள் கடுமையாகக் கண்டித்தீர்கள். அது சரியானது என்பதால் நாங்களும் அதை முழுமனதுடன் வெளியிட்டோம். வி.பி.சிங்கை இந்தியா டுடே கொச்சைப்படுத்தியபோது அதை கடுமையாகக் கண்டித்து, கட்டுரை எழுதினீர்கள்; கீற்று ஏற்பாடு செய்த கூட்டத்திலும் கலந்து கொண்டீர்கள். இப்போது லீனா விவகாரத்திலும் கீற்று அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. ஆதவனும் அதே நிலைப்பாட்டில்தான் இருப்பார் என்று எதிர்பார்த்தால், இல்லை நீங்கள் மாறிவிட்டீர்கள். லீனாவுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்கிறீர்கள். பால் சக்காரியாவிற்கு இல்லையா என்று கேட்டால், ‘நான் தலித், கீற்று அவதூறு செய்கிறது’ என்கிறீர்கள்.
உத்தப்புரம் தொடர்பான கட்டுரையில், எப்போதும் மீசை முறுக்கியபடி போஸ் கொடுக்கும் தலித் தலைவர்கள் குறித்து சாடியிருந்தீர்கள். சரி! கல்வி மறுக்கப்பட்ட பெண்கள் எழுதுவதெல்லாம், ஆணாதிக்கத்திற்கு எதிரானது என்றால், தோளில் துண்டு போடுவதற்கே மறுக்கப்பட்டிருந்தவர்கள் தற்போது மீசை முறுக்குவது சாதி அடக்குமுறைக்கு எதிரான செயல் அல்லவா? என்ன செய்ய? எதிரிகளை குத்திக் கிழிப்பதற்கு ஒரு பேனாவும், நண்பர்களை சொரிந்து கொடுக்க ஒரு பேனாவும் வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.
கட்சியோ, நண்பர்களோ யார் தவறு செய்தாலும் அதை தவறு என்று சொல்லும் துணிவும், நேர்மையும் எழுத்தாளனுக்கு வேண்டும். மாதவராஜிடம் அந்த நேர்மை இருக்கிறது. அப்படி இல்லாத உங்களைப் போன்றவர்கள் மீது விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அந்த விமர்சனங்களையாவது நேர்மையாக எதிர்கொள்ளுங்கள்.
"யார் மனதும் நோகாமல், எல்லோருக்கும் பிடித்தமானதை எழுதிக் காட்டுகிற பபூன் டெக்னிக் எனக்கு கைவரவில்லை. எதை எழுதினாலும் கோவித்துக்கொள்ளவென்று ஒரு கூட்டமோ கோஷ்டியோ இருப்பதைப் பார்த்த பிறகுதான் திருவாளர்.வாசகரும் பொத்தாம்பொதுவானவரல்ல என்பது உறைக்கிறது" என நீங்கள் எழுதியதுதான் கீற்றின் நிலைப்பாடும்.
‘யாருடைய முதுகையும் சொறிந்து கொடுக்க நான் நகம் வளர்க்கவில்லை’ என்று எழுதியிருக்கிறீர்கள். படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் கைகளில் இருக்கும் அழுக்கு, நண்பர்களின் முதுகை சொறிந்து கொடுத்ததால் வந்தது என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். பிறகு இன்னொன்று, இந்தக் கட்டுரைக்காக கீற்றின் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்ட்த்தின் கீழ் வழக்கு தொடுக்கச் சொல்லி கேட்டுவிடாதீர்கள்!!
அனைத்து அமைப்பினருக்கும், வாசகர்களுக்கும்...
கீற்று இணையதளம், எந்த அமைப்பையும் சாராத நான்கு நண்பர்களால் நடத்தப்படுகிறது. இதில் எங்களுக்கு எந்த லாப நோக்கமும் இல்லை. எந்த ஆதாயத்திற்காகவும் யாரையும் அனுசரித்து இயங்க வேண்டிய அவசியமும் இல்லை. எந்தவொரு இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டி, அவர்களிடம் காசு வாங்கியதுமில்லை. சமூக மாற்றத்திற்காக இயங்கும் அனைத்து இயக்கங்களும், எழுத்தாளர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகவும், விவாதிக்கும் தளமாகவும் கீற்று இருக்க வேண்டுமென விரும்புகிறோம். அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் எங்களால் முயன்ற வேலையைச் செய்து வருகிறோம்.
கீற்று இணையதளத்தைத் தொடங்கியபோது, தலித்திய அமைப்புகள், இடதுசாரி இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள், தமிழ்த்தேசிய அமைப்புகள், அதிதீவிர இடதுசாரி இயக்கங்கள், சிறுபான்மையினர் இதழ்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு, அவர்களது கட்டுரைகளையும், இதழ்களையும் கீற்றில் பிரசுரிக்கக் கேட்டோம். பலர் ஒத்துக்கொண்டனர்; சிலர் மறுத்தனர். ஒத்துக்கொண்ட சிலர் சில மாதங்கள் மட்டும் அனுப்பினர்; பிறகு மறந்து விட்டனர். சில பத்திரிக்கைகள் நின்று போயின.
இதையெல்லாம் எதற்குச் சொல்கிறோம் என்றால் எந்தவொரு இயக்கத்தின் மீதும் எங்களுக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை என்பதற்காகவே. எங்களுக்கு எந்தவொரு மதத்தின் மீதும் விருப்பில்லை. மதங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட வேண்டியவையே. அதே நேரத்தில் இந்துமதத்தின் சாதியப்பிடியில் சிக்கியிருக்கும் தலித் மக்கள், சமூக விடுதலைக்காக மதம் மாறுவதை ஆதரிக்கிறோம். பெரும்பான்மை மதச் சமூகத்தினரால் ஒடுக்குதலுக்கு உள்ளாகும் அப்பாவி சிறுபான்மையினருக்கு ஆதரவாக நிற்கிறோம். ஆர்.எஸ்.எஸ்., இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துமதவெறிக்கும்பலை எதிர்ப்பது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும், கிறிஸ்துவ அடிப்படைவாதிகளையும் எதிர்க்கிறோம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான விமர்சனம் கீற்றின் மீது வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கீற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு ஆதரவானது; ம.க.இ.க.வுக்கு எதிரானது என்றார்கள். இப்போது தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானது; ம.க.இ.க.வுக்கு ஆதரவானது என்கிறார்கள்.
எந்தெந்த காலத்தில் எந்தெந்தப் பிரச்சினை மேலெழுகிறதோ அதற்கு கீற்று முகம் கொடுக்கிறது. அதற்காக மற்ற செய்திகளை புறந்தள்ளுவதில்லை. உத்தப்புரம் பிரச்சினையில் கூடுதல் கவனம் செலுத்தியபோதுதான், இடஒதுக்கீடு தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டோம். ஈழப்பிரச்சினை பற்றியெரிந்த காலத்தில்தான், சட்டக்கல்லூரி மாணவர் மோதல் தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டோம்.
கீற்று எங்களுக்கு முழுநேர வேலை இல்லை. பிழைப்புக்காக வேறு வேலை செய்வதால், கட்டுரைகளைப் பிரசுரிப்பதிலும், பின்னூட்டங்களை அனுமதிப்பதிலும் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்தவொரு இயக்கத்தின் கருத்தையும் கீற்று பிரசுரிக்காமல் நிராகரித்ததில்லை, எங்கள் மீதான விமர்சனங்களையும் சேர்த்தே.
கட்டுரைகள், பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் எழுதுபவரது சொந்தக் கருத்துக்களே! அவை அனைத்துமே கீற்று ஆசிரியர் குழுவுக்கு உடன்பாடானது என்று யாரும் கருதவேண்டியதில்லை. பின்னூட்டங்களைப் பொறுத்தவரை, பொதுவெளியில் வைக்கத் தகுதியில்லாத வார்த்தைகள் ஏதும் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து அனுமதிக்கிறோம். விவாதங்கள் ஆரோக்கியமாக இருப்பதும், தரம் தாழ்வதும் அதில் பங்குகொள்பவர்களின் குணம், பண்பாடு சார்ந்த பிரச்சினை.
எங்களுக்கு இசைவான கட்டுரைகளை மட்டுமே வெளியிடுவதற்கான தனிச்சொத்தாக கீற்றை நாங்கள் பாவிக்கவில்லை. கீற்றில் வரும் கட்டுரைகளில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்ற தப்பெண்ணமோ, மாற்றுக்கருத்தை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்யும் குறுகிய எண்ணமோ எங்களிடம் இல்லை. ஏனென்றால் கருணாநிதி மீதான அல்லது திமுகவின் மீதான விமர்சனத்தை, திராவிடக் கருத்தியல் மீதான விமர்சனமாக நாங்கள் சுருக்கிப் பார்ப்பதில்லை. எந்தவொரு தனிநபரையும், அமைப்பையும் தாண்டி, கருத்தியல் இருக்கிறது என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
இந்தத் தளத்தை அடிப்படைவாதிகள் யாரும் பயன்படுத்தாமல் தடுப்பதையும், தளத்திற்கான செலவுகளை ஈடுகட்டுவதையும், படைப்புகளை கூடியமட்டும் பிழைதிருத்தி வெளியிடுவதையும் மட்டுமே எங்கள் வேலையாகக் கருதுகிறோம். எல்லோரையும் திருப்திப்படுத்துவது எங்கள் வேலையுமல்ல; எல்லாருக்குமான இனிப்பும் எங்களிடம் இல்லை.
- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
நண்பர் அசோகன் முத்துசாமி அவர்களே..உங்கள் கேள்வியில் உங்களின் குரூரமான புத்திதான் வெளிப்படுகிறது. உங்களின் கருத்துப்படி மற்ற கிராமத்து தலித்துகள் யாரும் கொல்லப்படவில்லை , கீழ்வெண்மணி தலித் மக்கள் மட்டுமே கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஆகவே இது சுத்தமான அக்மார்க் கூலி உயர்வு போராட்டம்தான். இதில் சாதிப்பிரச்சினை க்கு இடமில்லை என்று எடுத்துக்கொல்லல ாமா?.
அனைத்து தலித் மக்களும் அனைத்து சாதி நிலப்பிரபுக்களா ல் கொல்லப்பட்டிருந ்தால் மட்டுமே இதில் சாதிப்பிரச்சினை யும் உள்ளது என்று ஒப்புகொள்வீகள் என்று கருதலாமா?.
அப்படியும் நீங்கள் இதில் சாதிபிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளமாட ்டீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில் முதுகுளத்தூர் கலவரத்தில் உங்களின் அரசியல் நிலைபாடு பற்றிய முன் அனுபவம் எங்களுக்கு உண்டு.
” தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த விவசாயக் கூலிகளை தலித் விவசாயக் கூலிகளிடம் இருந்து பிரிப்பதன் மூலம் தன்னுடைய வர்க்க நலனைப் பாதுகாத்துக் கொள்கின்றது நிலஉடமை வர்க்கம். சாதியை தற்காக்கும் ஒரு கேடயமாகவும், வர்க்க எதிரிகளான உழைக்கும் மக்களைத் துண்டாடும் ஒரு ஆயுதமாகவும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உடமை வர்க்கத்தினர் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம ்.மேலும், சாதி ஒடுக்குமுறைகளுக ்கும் எதிராகப் போராட வேண்டும் என்கின்றோம்.”
மேலே உள்ள உங்களின் கூற்றுப்படி ஆதிக்கசாதி நில உடமை வர்க்கம் தலித் அல்லாத விவசயக்கூலிகளை தலித் விவசாயக்கூலிகளி டம் இருந்து பிரிக்கிறது என்று ஒப்புக்கொள்கிறீ ர்கள். அப்படியானால் ஆதிக்கசாதியினால ் இங்கு பிரிக்கமுடிந்தத ு பணத்தினாலா? அல்லது சாதிப்பாசத்தினா லா?. இங்கு நீங்கள் தடுமாற்றம் அடைவதால் தான் ”.. மேலும், சாதி ஒடுக்குமுறைகளுக ்கும் எதிராகப் போராட வேண்டும் என்கின்றோம்.”.. என்று பசப்புகிறீர்கள் . நண்பரே மேற்குவங்கம் ,கேரளா, மற்றும் திரிபுரா பற்றியும் நான் விவாதிக்கத் தாயாராக உள்ளேன் என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள ்கிறேன்.
சாதிப்பிரச்சினை பற்றி தமிழ்நாட்டில் , இந்தியாவில் முன்னிறுத்தி பேசினால் இல்லையில்லை வர்க்கப்பிரச்சி னைதான் என்று இடிமுழக்கம் செய்யும் நீங்கள் ஈழம் என்று வந்தவுடன் சாதிப்பிரச்சினை தான் முதன்மையானது என்று கத்திக் கதறி சாமியாடுவது ஏன்?.
இந்தியாவிற்கு ஒரு அளவு கோல் ஈழத்திற்கு ஒரு அளவுகோல் என்று உங்கள் பொலீட்பீரொவில் வைத்திருக்கிறார ்கள் போலும்.
ஆமாம் அதுதான் உண்மை. இறையாண்மை என்றால் தமிழ்நாட்டிற்கு ஒரு அளவுகோல், மேற்குவங்கம், கேரளாவிற்கு ஒரு அளவுகோல்.
நதிநீர்பிரச்சினை என்றால் கேரளாவிற்கு ஒரு அளவுகோல் தமிழ்நாட்டிற்கு ஒரு அளவுகோல் இப்படி அளவுகோல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
தர்மாஆவேசம்கொண் டு பொங்கிஎழும் நண்பர் முத்துசாமி அவர்களே , கொலைக்குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியை பாதுகாக்க முனைந்த இந்து ராம்.மேலும் இந்த மாபெரும் குற்றவாளிகளை, மக்கள் விரோதிகளை வீட்டுகாவலில் தான் வைக்கவேண்டும் என்று வக்காலத்து வாங்கிய உங்கள் கட்சியின் பொலீட்பீரோ உறுப்பினர் திரு.சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் மீது வராதது ஏன்?
அதற்கு என்ன காரணம். உங்கள் கட்சி பொலிட்பீரொவின் வர்க்கபாசமா?... .அல்லது வர்ண பாசம?...இல்லை சாதிபாசம? .. சற்று விளக்கினால் நன்று.
இந்து ராம் எங்கள் கட்சிக்காரரில்ல ை என்று மழுப்ப வேண்டாம். அவர் கட்சிக்காரர் இல்லஎன்றால் உங்களின் ஆதரவாளர். அப்படியும் இல்லை என்றால் உங்கள் பொலிட்பீரோவின் “HIS MASTERS VOICE " இத்தகைய நடவடிக்கையினால் உங்கள் கட்சி அம்பலப்பட்டு அம்மணமாகி நிற்கிறது என்பதை உங்கள் கட்சியினரைத் தவிர மற்ற எல்லோரும் நன்கு அறிவார்கள்.
கீழவென்மணி தலித்துகளை மட்டும் கொல்லும் சாதி இந்துக்கள் போராடும் இதர கிராமத்து தலித்துகளை ஏன் கொல்லவில்லை என்கின்ற கேள்வியின் பொருள் கீழவென்மணி தலித்துகள் அவர்களுடைய சாதியின் காரணமாகவே கொல்லப்படவில்லை என்பதுதான். வர்க்கச் சுரண்டலை எதிர்ப்பவர்கள் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தொலைத்துக் கட்டப்படுவார்கள ் என்பதை வலியுறுத்தத்தான ் ராமச்சந்திரன், வெங்கடாச்சலம், வேலுச்சாமி போன்ற உதாரணங்கள் கூறப்பட்டன. லீலாவதி என்ன சாதி? நிச்சயமாக தலித் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். தலித்துகளின் மீதான ஒடுக்குமுறையின் ஊடகங்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்படு ம் தண்ணீருக்காகப் போராடியவர். அனைவருக்கும் பொதுவான தண்ணீருக்கு விலை வைக்காதே என்று போராடியவர். அவரைக் கொன்றவர்கள் என்ன சாதி?
இன்னும் சொல்லப் போனால் வென்மணி கொடுமைக்கு ஒரு அரசியல் கோணமும் இருக்கின்றது. விவசாயக் கூலிகள் கேட்ட கூலி உயர்வைக் கூட கொடுப்பதற்கு நிலப்பிரபுக்கள் தயாராக இருந்தார்களாம்; ஆனால், செங்கொடியை இறக்க வேண்டும் என்று, அதாவது, கம்யூனிஸ்ட் சங்கத்தை விட்டு விலக வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்ததார்கள். இது ஒரு அப்பட்டமான வர்க்க அரசியல் நிர்ப்பந்தம்.
தலித்துகளுக்கு வேலையும் கொடுக்க மாட்டார்கள்; வேலை பார்த்தால் கூலியும் கொடுக்க மாட்டார்கள்; குடிக்கவோ, குளிக்கவோ, துவைக்கவோ தண்ணீரும் கொடுக்க மாட்டார்கள்; சுத்தமற்றவர்கள் என்று பழிக்கவும் செய்வார்கள். வாய்ப்பே கொடுக்காமல் திறமையற்றவர்கள் என்று பழிக்கின்ற அதே சூழ்ச்சி.
காசு கொடுத்தால் சாதி பார்க்காமல் தண்ணீர் கொடுக்க ஆட்கள் இன்று இருக்கின்றார்கள ். ஆனால், வேலையும் இல்லாமல், கூலியும் இல்லாமல் வாடும் தலித்துகளை து£ய்மை-தீட்டு கோட்பாடுகளால் ஒடுக்குவார்கள். கூலி இல்லாத தலித் தண்ணீரை எப்படி விலைக்கு வாங்க முடியும்? தலித் விடுதலை பேசுகிறவர்களில் எத்தனை கட்சிகள் அல்லது இயக்கங்கள் தண்ணீருக்கும் விலை வைத்த உலகமயத்திற்கு எதிராகப் போராடியிருக்கின ்றன? தண்ணீருக்கு விலையும், சமூக நீதிக்கு உலையும் வைத்துள்ளது உலகமயம். இன்றுள்ள தலித் தலைவர்களில் எவர் உலகமயத்திற்கு எதிராகப் போராடியிருக்கின ்றார்? திருமாவளவன், கிருஷ்ணசாமி, தமிழரசன், மாயாவதி, ராம் விலாஸ் பாஸ்வான்.........யார்?
ஆனால், பாருங்கள், யாராவது ஒரு நடிகரோ அல்லது நடிகையோ, ஏதோ சொல்லிவிட்டார் என்று (அவர் என்ன சொன்னார் என்பதே பெரும்பாலானவர்க ளுக்குத் தெளிவாகத் தெரிவதில்லை; தெரிவிக்கிற வேலையையும் பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாத ஊடகங்களும் செய்வதில்லை) ஆட்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முடிகின்றது அவர்களில் சிலரால். அதிகாரம் கிடைத்தால் தலித்துகளின் இடடஒதுக்கீடு உள்பட எல்லா இடஒதுக்கீடுகளைய ும் காலி செய்கின்ற உலகமய, தாராளமய, தனியார்மளக் கொள்கைகளை அமல்படுத்துவார் கள், மாயாவதி போல.
சும்மா மீசையை முறுக்குகிறீர்க ளே, ஏன் உத்தபுரத்திற்கு வந்த அதைச் செய்யவில்லை என்பதுதான் ஆதவன் சில தலித் தலைவர்களைப் பார்த்து கேட்ட கேள்வி. ஆமாம், ஏகாந்தன் அவர்களே, ஏன் செய்யவில்லை?
விடுதலைப் புலி ஆதரவாளர்களின் சாதியத்தைச் சுட்டிக் காட்டினால் இந்து பத்திரிக்கை ராமின் பிரச்சனையை ஏகாந்தன் எழுப்புகின்றார் . கேட்ட கேள்விக்கு பதிலையே காணோம். அப்படியானால், இந்து ராமும் இவர்களும் ஒன்று என்றாகின்றது. இந்து ராம் எந்தக் கட்சியில் இருந்தாலும் சரி, எந்தக் கட்சியிலுமே இல்லாதிருந்தாலு ம் சரி, அவரது செய்கை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல . அதுபோலத்தான் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பார்ப்பன எதிர்ப்பு போலி நாடகமும்.
இதுவரை ஏகாந்தன் என்னுடைய பின்னு£ட்டங்களு க்கு ஐந்து முறை எதிர்வினை ஆற்றியுள்ளார். ஆனால், மேற்குவங்கம், கேரளம் பற்றி நான் விவாதிக்கத் தயாராக இருக்கின்றேன் என்று சொல்கிறாரே தவிர, செய்ய மாட்டேன் என்கிறார். ஏன், என்பது புரியவில்லை.
-அசோகன் முத்துசாமி
உங்கள் எதிர்வினையால்
இயல்பாக நீளும்
இந்தக் கைகளைப் பற்றி
இரண்டொரு முறை
யோசிக்கச் செய்கிறீர்கள்.
கந்த கந்த கந்த கந்த கந்தசாமியோட வணக்கமுங்க... விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பார்ப்பன எதிர்ப்பு போலி நாடகத்தைப் பற்றி பேசறீங்க... ஆனா விடுதலைப் புலி எதிர்ப்பாளர்கள ின் தலித் அரசியல் போலி நாடகத்தைப் பற்றி எத்த்னை தடவை கேட்டாலும் பேசமாட்டீங்கறீங ்க... எங்களோட கேள்விகளுக்கெல் லாம் பதில் இல்லை.. ஆனா மேற்கு வங்கம், கேரளா பற்றி நாங்க பேசாதது குறித்து ரொம்ப கவலைப்படறீங்க.. . உங்க ஆசையைக் கெடுப்பானேன். அதையும் பார்த்துடுவோம். ..
கேரளா இன்னைக்கு இல்லைங்க சுதந்திரம் வாங்கினப்பவே, 80 சதவீதம் படிப்பறிவு இருந்த மாநிலம்ங்க... அங்க ஒப்பீட்டளவிலே சாதிப் பிரச்சினை குறைவாத்தான் இருக்கும்.. ஆனால் இல்லைவே இல்லைன்னு சொல்லாதீங்க.. இன்னைக்கும் நம்பூதிரிகளோட சமூக ஆதிக்கம் குறையல. எந்த கோயிலேயும் தலித் அர்ச்சகனாகலை.. ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் போகமுடியாது. மாந்திரீக பித்தலாட்டங்கள் குறையலை. ஏன் காம்ரேட்களே கோயிலுக்குப் போறாங்க.. எல்லா சடங்குகளோடவும்த ான் கல்யாணம் பண்னிக்கிறாங்க. .. இன்னொன்னு எங்க அடங்க மறுக்கிறாங்களோ அங்கதான் சாதிப்பிரச்சினை சண்டையா வரும். தமிழ்நாட்டுலே சுயமரியாதை உணர்வை பெரியார் ஊட்டினார். தலித்துகள் போராடுறாங்க... கேரளாவில் அப்படி எதுவும் இல்லை... நின்னு போராடுற அளவுக்கு கேரளாவுலே யாரும் இல்லை.. அங்க வேலைவாய்ப்பே இல்லாம எல்லாம் வெளிமாநிலங்களுக ்கும் வெளிநாடுகளூக்கு ம் போய் டீக்கடை வச்சி பொழக்கிறாங்க...
மேற்கு வங்கத்திலே நீங்க நிலம் பிரிச்சிக் கொடுத்தது எல்லாம் சிபிஎம் தொண்டர்களுக்குத ்தான். இன்னைக்கு வரைக்கும் நிலம், வேலை, அடிப்படை வசதிகள் இல்லாமத்தான் அதுக்காக பழங்குடி மக்கள் போராடுறாங்க.. தாழ்த்தப்பட்டவர ்களிலும் தாழ்த்தப்பட்டவர ்களாக இருக்கிற பழங்குடி மக்கள்மீது சிபிஎம் குண்டர்கள் தாக்குதல் நடத்துவதாக தெகல்கா, அவுட்லுக், உங்களோட் ஈழ எதிர்ப்பு காம்ரேட் அ.மார்க்ஸ் எல்லாம் சொல்றாங்க... நீங்க என்னடான்னா மேற்கு வங்கத்தைப் பாருங்கன்னு சொல்றீங்க.. முதல்ல சிபிஎம் இணையதளத்தையும் கட்சிப் பத்திரிக்கையும் பார்க்கிற நிப்பாட்டிட்டு மத்ததையும் கொஞ்சம் பாருங்க.. இந்த ரெண்டு வருஷத்துலே வந்த தெகல்ஹா மொத்தத்தையும் பார்த்தாலே மேற்கு வங்க காம்ரேட்களின் லட்சணம் தெரியும்.. பழங்குடி மக்களை இவ்வளவு கொடுமைப்படுத்து ற உங்களூக்கு தலித் அரசியல் பேச எந்த தகுதியும் கிடையாது...
விடுதலைப்புலி எதிர்ப்பாளர்களி ன் தலித் அரசியல் நாடகமா? ஆதரவாளர்கள்தான் தலித் அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்ற ார்கள் என்பதுதான் என் வாதம். உத்தரபுரத்திற்க ு வந்து மீசை முறுக்காதவர்கள் , அதற்கு அருகிலுள்ள மதுரைக்கு வந்து மீசை முறுக்கின்றார்க ள். எதற்கு? தலித்துகளுக்காக அல்ல. விடுதலைப் புலிகளுக்காக!
பார்ப்பனர்களுக ்குச் சொந்தமான ஆனந்தவிகடனும், தினமணியும், செட்டியாருக்குச ் சொந்தமான குமுதமும், இன்னும் இது போன்ற பிற பத்திரிக்கைகளும ் விடுதலைப்புலிகள ுக்கு ஆதரவாக இடைவிடாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்ற ன. அவற்றில் நீங்கள் சாதியைப் பார்க்கின்றீர்க ளா அல்லது விடுதலைப் புலி ஆதுரவு நிலைப்பாட்டை பார்க்கின்றீர்க ளா? விடுதலைப் புலி எதிர்ப்பாளர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் என்கின்ற வாதம் ஆதாரம் தேவையில்லாத இந்த உண்மையிலேயே அடிபட்டுப் போகின்றது.
கேரளாவைப் பற்றிக் குறிப்பிடும்போத ு, சுதந்திரம் வாங்கினப்பவே 80% மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள் என்று குறிப்பிடுகின்ற ார். அப்புறம் அவரே, அங்கு நம்பூதிரிகளின் ஆதிக்கம் இன்னும் குறையவில்லை என்கிறார். இதன் பொருள், படிப்பறிவிற்கும ் சாதி ஒழிப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதாகும்.
#கல்வியறிவு சாதிய சிந்தனையை ஒழிக்கவில்லை என்பதுதான் பல்வேறு ஆய்வாளர்களின் கணிப்பு. இல்லை என்றால், நாம் இன்றும் கல்வி நிலையங்களிலும் பணியிடங்களிலும் நிலவும் சாதியம் பற்றி பேச வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காத ு.
#எங்க அடங்க மறுக்கிறாங்களோ அங்கதான் சாதிப் பிரச்சனை சண்டையாகும் என்கிறார். உண்மைதான். மேற்கு வங்கத்திலோ, கேரளத்திலோ தலித்துகள் அடங்கிப் போவதால்தான் அங்கு சாதிச் சண்டைகளே இல்லை என்று சொல்ல வருகின்றார் என்று கருதுகின்றேன். முதலில், கேரளத்தில் படிப்பறிவு அதிகம் இருப்பதால்தான் அங்கு சாதிச் சண்டைகளே இல்லை என்று பொருள்படும்படி வாதிடுகின்றார். அதைச் சரியென்று வைத்துக் கொண்டால் 'எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் வேலை' என்பதல்லவா கந்தசாமியின் முழக்கமாக இருந்திருக்க வேண்டும்? அந்த முழக்கம் உண்மையானால் யாரும் யாரையும் ஒடுக்குகின்ற கேள்வியே எழாதே?
மேலும், பொதுத் தொகுதிகளில் தலித்துகள் போட்டியிட்டு வெற்றி பெறும் நிலை அடங்கிப் போகும் நிலையா? தலித்துகள் சாதி இந்துக்களுக்காக க் கடுமையாக உழைத்துவிட்டு, அதற்கான கூலியையும் பிச்சை போல் பெற வேண்டிய நிலையை போக்கி, சொந்தக் காலில் நிற்கின்ற, எந்த பேமானியின் தயவும் தேவைப்படாத நிலையை உருவாக்கிய நிலச்சீர்திருத் தத்தின் பலன்களை அனுபவிப்பது அடங்கிப் போகும் நிலையா? அல்லது ஆதிக்க சாதியினர் தலித்துகளை அடக்கி ஒடுக்க முடியாத நிலையை அங்குள்ள அரசாங்கம் உருவாக்கியிருப் பது அடங்கிப் போகும் நிலையா?
கடந்த சில மாதங்களாக தலித்துகள் மீதான வன்முறை என்கின்ற செய்திகள் எதுவும் ஊடகங்களில் வரவில்லை. தலித் தலைவர்கள் பலர் இருக்கின்றனர். விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பலர் இன்னும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள ். அவர்களும் தலித் பிரச்சனை பற்றி எதுவும் பேசவில்லை. இதனால் தமிழகத்தில் தலித்துகள் அடங்கிப் போய்விட்டார்கள் என்று பொருள் கொள்ளலாமா? அல்லது தமிழகத்தில் தலித்துகள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள ் என்றுதான் கொள்ளலாமா?
#மேற்கு வங்கத்தில் நீங்க நிலம் பிரிச்சுக் கொடுத்ததெல்லாம் சிபிஎம் தொண்டர்களுக்குத ்தான் என்கிறார். ஒரு வாதத்திற்காக, அதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். ஏற்கனவே குறிப்பிட்டபடி, இடது முன்னணி அரசாங்கத்தின் நிலச்சீர்திருத் தத்ததால் பயனடைந்திருப்பவ ர்களில் பெரும்பகுதியினர ் தலித்துகள். தலித்துகளுக்கு நிலம் கொடுத்தது தவறு என்கிறாரா, கந்தசாமி?
#டெகல்காவும், அவுட்லுக்கும் ஏதோ பழங்குடியின மக்களுக்காகவே பிறப்பெடுத்துள் ள பத்திரிக்கைகள் என்று கந்தசாமி நினைத்தால் அது அவரது சொந்தக் கருத்து. இந்துத்துவ பாஜகவும் கூட இதே போன்ற குற்றச்சாட்டை சிபிஎம் மீது வைக்கின்றது. திரிணாமுர் காங்கிரஸ் கூறுகின்றது. அவை எல்லாம் ஈழ ஆதரவு கட்சிகள் என்று கந்தசாமி நினைக்கிறார் போல.
ஆனால், முதலாளித்துவம் ஒரு குறிப்பிட்ட நாட்டில் தன்னுடைய முதன்மையான எதிரியாக யாரைக் கருதுகின்றதோ அவர்கள் மீதுதான் தன்னுடைய தாக்குதலைக் குவி மையப்படுத்தும். அதற்காக அது மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசவும் செய்யும். இதெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். இங்கே இடம் போதாது என்று கருகின்றேன்.
மேலும், அ.மார்க்ஸ் மட்டும் விடுதலைப் புலி எதிர்ப்பாளரல்ல. அவர் எங்களுடைய ஆளும் அல்ல. அவருக்கும் எங்களுக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், மக்கள் நலன் என்பதுதான் ஒரே நோக்கம் என்றால், அப்படி நினைப்பவர்கள் அனைவருமே எங்களுடைய தோழர்கள்தான். கந்தசாமி உள்பட அனைவருக்குமே இது பொருந்தும். நாம் இப்போது எது சரியான பாதை என்றுதான் விவாதித்துக் கொண்டிருக்கின்ற ோம் என்று நான் கருதுகின்றேன்.
-அசோகன் முத்துசாமி
…” அதிகாரம் கிடைத்தால் தலித்துகளின் இடடஒதுக்கீடு உள்பட எல்லா இடஒதுக்கீடுகளைய ும் காலி செய்கின்ற உலகமய, தாராளமய, தனியார்மளக் கொள்கைகளை அமல்படுத்துவார் கள், மாயாவதி போல.”..
அய்யா அசோகன் முத்துசாமி அவர்களே தனியார் மய,தாராளமய,உலகம யக் கொள்கைகளை மிக ஆவேசத்தோடும்,ஆக ்ரோசத்தோடும் எதிர்த்து போராடவேண்டும் என்று உங்கள் பொலிட்பீரோ அறைகூவல் விட்டது மாயாவதி,கருனாநி தி,போன்ற மார்க்ஸிஸ்ட் அல்லாத முதலமைச்சர்களுக ்கு மட்டும் தானா?..மாயாவதி அரசாவது ரிலையன்ஸ் பிரக்ஷ் போன்ற சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்களை திறக்க அனுமதிக்க மறுத்துவிட்டது. ஆனால் மேற்குவங்க மார்க்ஸிஸ்ட் புத்ததேவ் அரசு அந்நிய நாட்டு வால்மார்ட்முதல் உள்நாட்டு அம்பானியின் ரிலையன்ஸ் பிரக்ஷ்,மோர் போன்ற அனைத்து சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்களை திறக்க அனுமதி அளித்தும், டாடா, சலீம் குழுமம் போன்ற உள்நாட்டு,வெளிந ாட்டு ஏகபோக முதலாளிகளுக்கு ஏழை எளியமக்களின் நிலஙகளை பறித்துக்கொடுக் க முயன்றும் அந்நிய மற்றும் உள்நாட்டு ஏகபோகங்களுக்கு எடுபிடி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறது.
இதுதான் “நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன்,நீ அழுவதுபோல் அழு “என்பது.இதுபோன் றதுதான் உங்களின் தீண்டாமை ஒழிப்பு மற்றும் சாதிஒழிப்பு போராட்டமும் என்பது. இதனை அரசியல் அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். இப்படித்தான் நீங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களு ம், போராட்டங்களும் அப்பாவிபொதுமக்க ளின் கண் துடைப்பிற்காக மட்டுமே என்பதை நாங்கள் அறிவோம்.
..... சாதிப்பிரச்சினை பற்றி தமிழ்நாட்டில் , இந்தியாவில் முன்னிறுத்தி பேசினால் இல்லையில்லை வர்க்கப்பிரச்சி னைதான் என்று இடிமுழக்கம் செய்யும் நீங்கள் ஈழம் என்று வந்தவுடன் சாதிப்பிரச்சினை தான் முதன்மையானது என்று கத்திக் கதறி சாமியாடுவது ஏன்?. இந்தியாவிற்கு ஒரு அளவு கோல் ஈழத்திற்கு ஒரு அளவுகோல் என்று உங்கள் பொலீட்பீரொவில் வைத்திருக்கிறார ்கள் போலும். ஆமாம் அதுதான் உண்மை. இறையாண்மை என்றால் தமிழ்நாட்டிற்கு ஒரு அளவுகோல், மேற்குவங்கம், கேரளாவிற்கு ஒரு அளவுகோல். நதிநீர்பிரச்சின ை என்றால் கேரளாவிற்கு ஒரு அளவுகோல் தமிழ்நாட்டிற்கு ஒரு அளவுகோல் இப்படி அளவுகோல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.....நண் பர் அசோகன் முத்துசாமி அவர்களே நான் கேட்ட மேற்கண்ட கேள்விக்கு நீங்கள் இதுவரை பதில் சொல்லவில்லை.ஆனா ல் மீண்டும் மீண்டும் விடுதலைபுலிஆதரவ ாளர்களின் ஆதிக்கசாதி குணம் என்றும், பார்ப்பன எதிர்ப்பு நாடகம் என்றும் பசப்புகிறீர்களே தவிர என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்க மறுக்கிறீர்கள். உண்மையிலேயே என் கேள்வி உங்களுக்கு புரியவில்லையா?அ ல்லது புரியாதது மாதிரி நடிக்கிறீர்களா? ஆனால் ஒன்றும் மட்டும் தெரிகிறது உங்களுக்கு செலெக்டிவ் அம்னீசியா உள்ளது என்பது.
”......இலங்கை தலித்துகள் இன்று பெற்றிருக்கும் உரிமைகள் அனைத்துமே இடதுசாரி இயக்கங்களின், தலித் இயக்கங்களின் போராட்டங்களால் கிடைத்தவையே; தமிழ்த் தேசிய இயக்கங்களால் கிடைத்தவை அல்ல. (பார்க்க: இலங்கையில் சாதியமும், அதற்கெதிரான போராட்டங்களும். வெகுஜனன், இராவணா). 'சிலர் வேண்டுமென்றும், சிலர் அறியாமையாலும் சாதியம் ஒழிந்துவிட்டதென ்றும் தமிழ்த் தேசியமே அதை முறியடித்தது என்றும் பேசுகின்றனர். இரண்டுமே பொய்யானவை. சாதியம் இன்னும் ஒழிய வில்லை. அதற்கான சான்றுகள் வெளிவெளியாகவே உள்ளன. ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டாயி ற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். அந்த வெற்றிக்கு தமிழ்த் தேசியம் எந்த வகையிலும் பங்களிக்கவில்லை . அதை இயலுமாக்கியவர்க ள் தாழ்த்தப்பட்ட வெகுசனங்களும் அவர்களோடு இணைந்து நின்று போராடிய நேர்மையான இடதுசாரி, சனநாயக, முற்போக்குச் சக்திகளுமேயாவர் . அதை இயலுமாக்கியது மார்க்சிய லெனினியவாதிகளின ் வழிநடத்தலின் கீழ் அவர்கள் முன்னெடுத்த வெகுசனப் போராட்ட பாதையே' என்று மேற்குறிப்பிட்ட நு£லுக்கான முன்னுரையில் சி.சிவசேகரம் கூறுகின்றார்.”. .
நண்பர் அசோகன் முத்துசாமி அவர்களே இலங்கயில் சாதிய ஒடுக்குமுறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டாயி ற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். அந்த வெற்றிக்கு தமிழ்த் தேசியம் எந்த வகையிலும் பங்களிக்கவில்லை .என்பது உங்களது வாதம்.சரி அப்படியானால் சாதிய ஒடுக்குமுறைக்கு சாவுமணி அடிக்க ஈழ (மன்னிக்கவும்,ஈ ழம் என்று சொல்வதையே உங்கள் உமாநாத்களும், போலிட்பீரோவும் ஏற்றுக்கொள்ளமாட ்டார்கள்) ஆகவே இலங்கை இடதுசாரிகள் மட்டும்தான் காரணம் என்கிறீர்கள்.சர ி ஒரு வாததிற்காக ஒப்புக்கொள்கிறே ன். இப்போது என் கேள்வி என்னவென்றால் ஈழ(இலங்கை) இடதுசாரிகளல் சாதீய ஒடுக்குமுறைக்கு சாவுமணி அடிக்கமுடிந்தது என்றால் இந்திய இடதுசரிகளால் ஏன் இயலவில்லை.இந்தி ய இடதுசாரிகளுக்கு ம், ஈழ(இலங்கை) இடதுசாரிகளுக்கு ம் சாதியம் பற்றிய கோட்பாடுகளில் வேறுபாடு உள்ளதா? அல்லது ஈழ(இலங்கை) இடதுசாரிகளின் தலைமை பார்ப்பனர் அல்லாதவர்களாக இருப்பதும், இந்திய இடதுசாரிகளின் தலைமை பார்ப்பனார்களாக இருப்பதும் காரணமா?.கொஞ்சம் விளக்கம் தரவும்.
”..இதுவரை ஏகாந்தன் என்னுடைய பின்னு£ட்டங்களு க்கு ஐந்து முறை எதிர்வினை ஆற்றியுள்ளார். ஆனால், மேற்குவங்கம், கேரளம் பற்றி நான் விவாதிக்கத் தயாராக இருக்கின்றேன் என்று சொல்கிறாரே தவிர, செய்ய மாட்டேன் என்கிறார். ஏன், என்பது புரியவில்லை.” -
அசோகன் முத்துசாமி அவர்களே நான் மேற்குவங்கம், கேரளா பற்றி விவாதிக்கவரமாட் டேன் என்று
நிரம்ப விசனப்படுகிறீகள ் போல் தெரிகிறது. நண்பரே மேற்குவங்கத்தைப ் பற்றி, சிங்கூர்,நந்திக ிராமம், லால்கர்,நான் முதலில் பிராம்னன் அதன் பிறகுதான் மார்க்ஸிஸ்ட் என்று கூறிய ஆதிக்கசாதி மார்க்ஸிஸ்ட் அமைசரை பற்றி, பிறகு கேராளாவில் பேட்டை ரவுடிகள் போல் சண்டையிட்டுக்கொ ள்ளும் திரு பிணராய் விஜயன், திரு .அச்சுதானந்தன் பற்றி, லாவ்லின் ஊழல் பற்றி,லாட்டரிஅத ிபரிடம் ஒருகோடி பணம் வாங்கி திருப்பிக்கொடுத ்தது பற்றி,தமிழ் தொழிலாளர்களை கேரளாவில் இருந்து வெளியேற்றுங்கள் என்று சி.ஜ.டி.யூ கூறியது பற்றி,
பால்சாகாரிய பற்றி,நெய்யாற்ற ில் குமரிமாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்துவிட மறுப்பதுபற்றி, இன்னும் ஏராளமாக விவாதிக்கவேண்டி யுள்ளது. ஆனால் நண்பரே இவை பற்றியெல்லாம் விவாதிக்க இது தருணம் இல்லை.
இது முரண்பாட்டின் மொத்த உருவமான ஆஆஆதவன் தீட்சண்யா அவர்கள், எல்லோரையும் சகட்டுமேனியாக(த ன் கட்சிமற்றும் சார்பு இயக்கத்தவரை தவிர)கூரை மீதேறி,வானமேறி, வைகுந்தம் ஏறி ஓங்கி,உரத்து விமர்சிக்க தனக்கு மட்டும் தான் தகுதி உள்ளது என்று சிங்கம் போல் கர்ஜிப்பார்.சாத ி பித்தர்களையும், சாதிவெறியர்களைய ும் சிங்கம் போல் கர்ஜித்து வேட்டையாடுவார். ஆனால் அவர் மீதான அவரால் பதில் சொல்லமுடியாத விமர்சனங்கள் வந்தால் அவர் உடனே எந்த சாதியத்தை சாடினாரோ அந்த சாதிய வலைக்குள் புகுந்துகொண்டு எலியைப்போல் (வளைக்குள்)கீச் கீச் என்று கீச்சிடுகின்றார ். ஒரு சிங்கம் எலியான கதையைத் தான் கீற்று விமர்சனமக வெளியிட்டிருக்க ிறது.
”.. தமிழ்நதியாகட்டு ம், லீனாவாகட்டும் பிராச்சினை மட்டும்தானே பேசவேண்டும்.'ஆத வனையும் அவன்போல ஆட்களையும் செருப்பால் அடிக்கனும்' என்கிற பின்னூட்டத்தை அணுமதிப்பது எப்படிச்சரி ரமேஷ். நாங்கள் யாரிடம் இதைச்சொல்ல. எனக்கு ஒரு சின்னக்கருத்து இருக்கிறது. மிகநீளமாக அளந்து அளந்து எழுதிய எழுத்தின் வலிமைக்கும் நேர்மைக்கும் 'பிசிஆரில் புக் பண்ணிவிடவேண்டாம ்' என்கிற வார்த்தை சரியா என்பதை இன்னொரு முறை மறுவாசிப்புச் செய்து நீங்களே முடிவு செய்யுங்கள்”.. கீற்றில் வ்ந்த புரட்சியின் பின்னூட்டத்தை சரியாகப் படிக்காமல் இதற்கு பின்னூட்டம் எழுதிய திரு,காமராஜ் அவர்களோ அல்லது திரு அசோகன் முத்துசாமி அவர்களோ, அவர்கள் அமைப்பைச் சேர்ந்த திரு பாலு
என்பவர் எழுதிய ’ ஆதவனை செருப்பால அடிக்கிறதுன்னா ரமேஷை பிஞ்ச் செருப்பால நாங்க அடிப்போம்.’ என்ற பின்னூட்டம் மிகவும் நயத்தக்க நாகரீகம் என்று கருதுகிறார்கள். போலும். இந்த பாலு D.D.C.F.I அதாங்க இந்திய பிஞ்ச செருப்பால் அடிப்பவர் முன்னனி(DEMOCRA DIC DAMAGE CHAPPAL FRONT OF INDIA) என்ற துணை அமைப்பை சேர்ந்தவர் போலும். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தான் பால்சகாரியா மற்றும் மக்கள்தொலைக்காட ்சியையும் தாக்கியவர்கள்போலும்.
இவற்றிற்கெல்லாம் நண்பர் அசோகன்முத்துசாம ி பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.
ஆனால் அந்த நேரத்தில் பிரபாகரனை சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கட்டுவதன் மூலம் அவர்கள் சொல்ல வருவது என்ன?
அதன் மூலம் அவர்கள் அடைய விரும்பியது என்ன?.
மேற்கத்திய ஊடகங்களும் சொல்லி வைத்தாற்போல் அதை மட்டும் பெரிதாக காட்டுகின்றன.
இதுதான் நாகரீக மனிதர்களின் செயல் பாடா?
அதுவரைக்கும் சாகும் மனிதர்களை பற்றி அக்கறை இல்லை.
மக்கள் துன்புறும்போது ஒரு கலைஞன் ஒரு எழுத்தாளன் எந்த பக்கம் இருக்கிறான் என்பதில் இருந்தே அவரது யோக்கியதை
தெரிந்து கொள்ளலாம்.
அந்த நேரத்தில் ஜாதி யை வைத்து அரசியல் அரசியல் பண்ணும் அரசியல் வாதிகளையும், மிஞ்சி விட்டனர் இவர்கள்.
அது எதற்கு இருக்கிறது என்றே தெரியவில்லை.
சீனா வில் மழை வந்தால் இங்கு குடை பிடிபோருக்கு 18 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கும் இனபடுகொலை
தெரியாததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு செய்தியை தாங்கி கொள்ள முடியாமல் மக்கள் தொலைகாட்சியை தாக்கி வன்முறையில் ஈடுபட்டுவிட்டு, ஈழ தமிழர்களை ஒன்றுபட்ட இலங்கையில் வாழ அறிவுருதுவதுதன்
அவர்களின் உன்னதமான அரசியல் பார்வை.
தற்பொழுது என்ன படம் எடுத்து கொண்டிருகின்றார ்கள் என்று தெரியவில்லை.
வருங்காலத்தில் சினிமா துறையினருக்கு நிகராக பல புதிய படங்களை மக்களுகாக காண்பித்து மார்க்சிஸ்ட்களி ன் மக்கள் சேவையை பெருக்கி கொள்வார்கள் என்று கருதுகிறேன்.
வாழ்த்துகள்.
RSS feed for comments to this post