"நாட்டுப்பற்று என்பதும் தேசத்தின் மீதான காதல் என்பதும் இன்னொரு மனிதக் குழுவை வெறுக்கிற அல்லது காழ்ப்புணர்வு கொள்கிற ஒரு உணர்வு" என்று ஒரு வாதத்தை சமூக நெறிகள் பற்றிய ஆய்வாளர் “பால் கோம்பெர்க்” முன்வைக்கிறார். அது ஓரளவுக்கு உண்மையாகத் தான் இருக்க வேண்டும். இந்திய தேசிய வடிவமும் அதன் ஆளுமை மையங்களும் இடைவிடாது ஒரு அண்டை நாட்டின் மீது வளர்க்கும் காழ்ப்புணர்வு இதற்குச் சான்றாகத் தோன்றுகிறது, அரசியல் நிலையிலான பல்வேறு முரண்பாடுகளைக் கடந்து நம்மைப் போலவே அன்றாடம் வாழ்க்கையை நோக்கிப் போராடுகிற எண்ணற்ற மக்களைக் கொண்ட இன்னொரு தேசத்தை வெறுக்கவும் அதன் மீதான நமது காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்க்கவும் நமக்கான காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் தொடர்ந்து ஈடுபடுகின்றன. நாமும் அதனைப் பின்பற்றி முகம் தெரியாத மக்களை, அந்த மக்களின் அழகிய குழந்தைகளை, அவர்களின் வழிபாட்டு முறைகளை, அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளை வெறுக்கத் துவங்கி இருக்கிறோம்.
பல்வேறு இனக்குழுக்களின் நசுக்கப்பட்ட அடையாளங்கள் அடக்குமுறைகளின் உடைபாடுகளில் சிக்கி முனகிக் கொண்டிருப்பதை இந்திய ராணுவத்திற்கு எதிராக அஸ்ஸாம் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் துவங்கி ராஜதானி விரைவு ரயிலின் கடத்தல் வரையிலான பல்வேறு செயல்பாடுகள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் உச்சமாக உலகமே இன அழிப்பு என்று எதிர்க்குரல் கொடுக்கிற இனப்படுகொலையை, சிங்களப் பேரினவாதத்தை நியாயம் செய்து ஒரு பக்கம் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிற தேசிய வடிவம் தங்கள் நாரயணங்களை அனுப்பி தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற அமெரிக்கா வரை பறந்து பறந்து தனது தேசிய வடிவத்தை வார்ப்பில் வடிக்கிறது.
இந்த நிலைகளில் “நான் தமிழனா? இல்லை, இந்தியனா?” என்றொரு கேள்வி விடுதலை பெற்ற இந்தியாவில் வாழும் தமிழ் இளைஞர்களை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த வீச்சுடன் எதிர்கொள்கிறது. இந்தக் கேள்வி எழுந்ததன் காரணிகளை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவை இல்லை என்றாலும், எனது மொழியையும், எனது பண்பாட்டையும் கொண்டு வாழ்ந்து வருகிற எனது உறவுகள் என்று நான் கருதுகிற தமிழினத்தின் மீதான ஒரு பேரினவாதப் போரை ஆதரித்து அதன் அழிவிற்குத் துணை நிற்கிற தேசியத்தின் வடிவம் எனக்கானதா என்ற அடிப்படைக் கேள்வியில் இருந்துதான் மேலே தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் கேள்வியின் மூலம் ஒளிந்து கிடக்கிறது.
என் பள்ளி நாட்களில் தேசியகீதம் இசைக்கப்பட்ட போது அதனை அவமதிக்கும் வண்ணம் நடந்து கொண்ட எனது சக மாணவனைப் பள்ளியின் வழிபாட்டுக் கூடத்தில் அடித்து என்னை ஒரு தேசப் பற்றாளனாக அடையாளம் கண்டிருக்கிறேன், இந்தியா என்கிற கோட்பாட்டை, தேசிய வடிவத்தை எனக்குள் ஊற்றி வளர்த்த எனது பள்ளிகளின் வகுப்பறைகளும், கல்லூரியின் விளையாட்டு அரங்குகளும், என்னை விட்டு விலகி நீண்ட தூரத்தில் இருப்பதைப் போலவே, தேசத்தின் மீது நான் கொண்ட நம்பிக்கையும் சிதைந்து, சிதிலம் அடைந்து இருக்கிறது, இந்தச் சூழலில் தேசியம் என்கிற கருத்தாக்கத்தின் வேர்களைத் தேடி பயணம் செய்ய வேண்டிய நெருக்கடி உருவாகிறது.
1993 ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தின் “லாத்தூர்” மற்றும் “உஸ்மானாபாத்” மாவட்டங்களில் நிகழ்ந்த மிகப்பெரும் கொடிய நிலநடுக்கத்தின் போது, புவி அமைப்பியல் மாணவர்களின் சார்பில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு, நினைவேந்தல் சுவரொட்டிகள் ஒட்டி எனது தீவிரமான தேசியச் சிந்தனைகளை வலிமைப்படுத்தி வைத்திருந்தேன். எனக்குள் மிக ஆழமாக ஊடுருவியிருந்த அந்த தேசப்பற்றின் சுவடுகள் இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் எனக்குள் முற்றிலும் இல்லை, நீர்த்துப் போன எனது தேசியம் பற்றிய சிந்தனைகளோடு தேசியம் பற்றிய எனது பார்வை மாறுபாட்டினை அடைந்து வேறு திசையில் பயணிக்கத் துவங்கி இருந்ததை என்னால் உணர முடிந்தது, இந்த மாற்றம் எனக்குள் எவ்வாறு விளைந்தது? இந்த மாற்றத்தின் அடிப்படைக் காரணிகள் என்ன என்பதைப் பற்றி அடிக்கடி நான் சிந்திக்கத் துவங்கி இருந்தேன், அப்படிச் சிந்திக்கும் போது தேசியம் பற்றிய எனது தேடல் துவங்கியது என்று சொல்லலாம்.
வெவ்வேறு முரண்பாடுகள், அரசியல் மற்றும் சமூகத் தாக்கங்களைக் கடந்து தேசியம் என்கிற கருத்துருவாக்கம் ஒரு மாயத் தோற்றமா? அல்லது கற்பிதமா? உலக இயங்கியலின் இன்னொரு பிரிவா? என்கிற பல்வேறு கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது......
எந்த ஒரு கருத்தாக்கமும் மனித மனங்களில் ஒரே மாதிரியான விளைவுகளை உருவாக்குவதில்லை, ஒரு தனி மனிதனின் அல்லது சமூகத்தின் உள்வாங்குதலைப் பொருத்தும், அதற்குப் பின்புலமாக இருக்கிற புறக்காரணிகளின் அடிப்படையிலுமே கருத்துருவாக்கங்கள் மாற்றம் பெறுகின்றன, பின்னர் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆதி காலம் தொட்டு மனிதர்களுக்குள் நிலவும் பல்வேறு முரண்பாடுகள், வேறுபாடுகளாக மருவிப் போராகவும், ஆட்சி மாற்றமாகவும், ஆதிக்கமாகவும் வரலாற்றின் பக்கங்களில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லாவிதமான கருத்தாக்கங்களையும் போலவே தேசியம் என்பதும் தனி மனிதனின் அல்லது ஒரே சிந்தனையுள்ள மனிதக் குழுக்களின் தன்னியல்பான வாழ்க்கை முறைகளில் இருந்தே கட்டமைக்கப்படுகிறது.
வாழிட ஆதாரங்களை, மொழியை, பழக்கவழக்கங்களை, வழிபாடுகளை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு குறிப்பிட்ட மரபுசார் மனிதக் குழு, நீண்ட காலமாகத் தொடர்ந்து செயல்படுகிற போது தேசியம் என்கிற கருத்தாக்கம் தோற்ற மடைகிறது, அதன் கூறுகளின் வலிமையைப் பொறுத்து வடிவம் பெறுகிறது அல்லது வெற்றி பெறுகிறது என்று நம்மால் தேசியத்தைப் புரிந்து கொள்ள இயலும்.
தேசியம் என்கிற கருப்பொருள் ஐரோப்பிய நிலப்பரப்பில் இருந்தே துவங்கியது என்று வாதம் செய்கிற சில மேலைநாட்டு அறிஞர்களை நம்மால் கண்டறிய முடிகிறது, எடுத்துக்காட்டாக "ஜோகன் காட்ப்ரைட்" என்ற ஜெர்மானிய அறிஞரைப் பற்றிக் குறிப்பிடலாம், இவரை தேசியம் என்கிற கோட்பாட்டின் வடிவமைப்பாளராக சித்தரிக்கிறார்கள், ஆனால் இவரது வாதத்தின் நம்பகத்தன்மை ஏனைய கருத்துக்களில் நிகழும் ஒரு ஐரோப்பிய ஆளுமை மனப்போக்கைப் போலவே காணப்படுகிறது, பதினேழாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் எழுதப்பட்ட சில வரலாற்றுக் குறிப்புகள் உலக வரலாற்றில் எஞ்சிய நிலப்பரப்புகளில் காணக்கிடைத்த உண்மைகளை மறுதலித்து தங்கள் வாழிடங்களின் புறச் சூழலைத் தழுவியே இறுதி செய்யப்படுகிறது என்பதுதான் அதற்கான காரணம்.
ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டின் முன்னதாகவே தொடங்கிச் செழித்திருந்த நமது இலக்கியங்களும், வாழ்வியல் கட்டமைப்புகளும் இத்தகைய ஆய்வுகளில் கணக்கில் கொள்ளப்படவில்லை. ஆகவே தேசியம் பற்றிய நமது கருத்தாக்கம் முன்னரே அறிந்து கொள்ளப்பட்ட ஒன்று என்கிற முடிவுக்கு நம்மால் எளிதில் வர இயலும். தேசியம் என்கிற ஒரு கருத்து வடிவத்தின் இன்றியமையாத பகுதிகளாகப் பண்பாட்டையும், மொழியையும் நம்மால் இனம் காண முடியும், ஒரே மாதிரியான பண்பாட்டையும், மொழியையும் கொண்ட மனிதக் குழுக்களே தேசியம் என்கிற கருத்து வடிவத்தை முழுமை பெறச் செய்யும் காரணிகளாக இருக்க முடியும்.
இதற்கிடையில், தேசியம், தொழில் மயமாதலின் விளைபொருளாகவும், முதலாளித்துவத்தின், ஊடகங்களின் துணைப் பொருளாகவும் சித்தரிக்கப்படுவதும் நிகழ்கிறது, தொழில் மயமாதலின் விளைபொருளாகத் தேசியம் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது, வேண்டுமானால், மேற்கத்திய நாடுகளில் இத்தகைய நிகழ்வுகள் உருவாகி இருக்கலாம், ஆனால், ஒட்டு மொத்த உலகிற்கும் தேசியம் என்கிற ஒரு வடிவம் தொழிற்புரட்சிக்கு முன்னதாகவே தோன்றி வளர்ந்திருந்தது என்பது தான் உண்மை. நதிக்கரை நாகரிக காலங்களில் தொழில் மயமாதலின் அடிப்படை ஆழமாகப் பரவி இருக்கவில்லை என்பதும், விவசாயம் அல்லது நிலப்பரப்பு சார்ந்த தொழில்கள் மேம்பட்டிருந்த காலங்களில் கூடத் தேசியம் என்ற கருத்தாக்கத்தின் படிமங்கள் இருந்ததற்கான சான்றுகளை நம்மால் காண இயலும்.
எடுத்துக்காட்டாக “திராவிட நாகரீகம்” தோன்றி வளர்ந்த சிந்து நதியின் சமவெளி சார்ந்த பண்பாட்டுக் காலத்தை (கி.மு 2600 - 1900) தேசியக் கருத்தாக்கங்களை அதன் மூல வேர்களை உருவாக்கிய காலம் என்று சான்றுகளுடன் நம்மால் உறுதி செய்ய முடியும், கலை, கலாசார, மொழிக் கருவிகளோடு செழித்திருந்த சிந்துச் சமவெளி நாகரீகம் தேசியக் கோட்பாட்டின் வெளிப்பாடாகிய தலைமைப் பண்புகளை வரையறுக்கும் வரையில் கிளைத்திருந்தது என்பதை தேசியம் பற்றிய வெவ்வேறு ஆய்வுகளில் “சார்லஸ்” “மேசன்”, “பியூம்ஸ்”, “கன்னிங்காம்” மற்றும் “தேம்ஸ்” போன்ற அறிஞர்கள் உறுதி செய்திருக்கிறார்கள், அதேவேளையில் தேசியம் பற்றிய ஆய்வுகளில் மேற்கண்ட அறிஞர்களின் ஆய்வையும் அதன் முடிவுகளையும் “மிக்கேல் ஜெ ஹெக்கேன்பெர்கர்” மற்றும் “அன்டோனி டி ஸ்மித்” போன்றவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் இவர்களது தேசியம் பற்றிய வரையறைகளையும் அதன் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. தேசியம் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட அல்லது முரண்பாடுகளை உள்ளடக்கிய ஒரு கோட்பாடாகவே இன்றளவும் காணப்படுகிறது, தேசியத்தின் நன்கு அறியப்பட்ட பிரிவுகளாக கீழ்க்கண்டவற்றை நம்மால் பட்டியலிட முடியும்.
1) மரபு வழியான தேசியம்.
2) அரசியல் வழியான தேசியம்.
3) கொள்கை வழியான தேசியம்.
4) பண்பாட்டு வழியான தேசியம் .
5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம்.
6) உரிமைகள் வழியான தேசியம்.
7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம்.
8) மத வழியான தேசியம்.
9) தனிமனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம்.
10) இலக்கு வழியான தேசியம்.
இந்தப் பிரிவுகள் தவிர்த்து இன்னும் சில தனி வரையறைகளைக் கொண்ட தேசிய வகைகளும் இருப்பினும், நன்கு அறியப்பட்ட தேசிய வகைகளாக மேற்காணும் பிரிவுகளை அடையாளம் காண இயலும்.
1) மரபு வழியான தேசியம். (Ethnic Nationalism)
ஒரே மொழியை, பழக்க வழக்கங்களைக். குடும்ப அமைப்புகளைக் கொண்டு நீண்ட காலமாக வாழிட ஆதாரங்களை மையமாகக் கொண்டு செயல்படும் தேசிய வடிவத்தை மரபு வழியிலான தேசியம் என்று பொருள் கொள்ளலாம்.
2) அரசியல் வழியான தேசியம். (Civic Nationalism)
வெவ்வேறு மொழிகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருந்தாலும், ஒரே மாதிரியான அரசியல் வடிவங்களைப் பெற்று ஆட்சி முறைகளில் ஒருங்கிணையும், நில எல்லைகளை மாற்றி அமைக்கும் நெகிழ்வு கொண்ட ஒரு தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ளலாம்.
3) கொள்கை வழியான தேசியம்.(Expansionist Nationalism)
அரசியல், மொழி மற்றும் கலாசார மதிப்பீடுகளை விடுத்துக் கொள்கைகள் அடிப்படையில் இணைகிற அல்லது உருப்பெருகிற தேசியமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.
4) பண்பாட்டு வழியான தேசியம். (Cultural Nationalism)
மரபு வழி தேசிய வடிவிற்கும், பண்பாட்டு வழியான தேசிய வடிவிற்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை என்றாலும், மொழி மற்றும் நிலப்பரப்பு எல்லைகளில் நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒத்த பண்பாட்டில் ஒருங்கிணையும் ஒரு தேசிய வடிவமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.
5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம். (Post Colonial Nationalism)
பல்வேறு பண்பாட்டு, மொழி மற்றும் அரசியல், குடும்ப அமைப்பு, வழிபாட்டு முறைகள், கலை வேறுபாடுகளைக் கொண்ட வெவ்வேறு தேசியமாகச் செயல்பட்டு வந்த குழுக்கள், மற்றொரு குழுவின் ஆளுமைக்குப் பிறகு வலிந்து ஒரே மாதிரியான அரசியல் அளவீடுகளில், தனது நிலப்பரப்பை வரையறுத்துக் கொள்கிற தேசிய வடிவமாகவும், ஏற்கனவே உருவாகித் தழைத்திருந்த மரபு வழி மற்றும் அரசியல் வழியிலான தேசிய அடையாளங்களை விழுங்கி ஒரு புதிய தோற்றம் தரக்கூடிய தேசியமாக இதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
6) உரிமைகள் வழியான தேசியம். (Liberation Nationalism)
ஒரு குறிப்பிட்ட தேசிய வடிவில் இருந்து இழந்த தங்கள் உரிமைகளை மீட்டு மீண்டும் நிறுவுவதற்குப் போராடித் தங்கள் தேசிய வடிவத்தை உள்ளிருந்து மாற்றி அமைக்கிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள முடியும்.
7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம். (Left – Wing Nationalism)
குறிப்பிட்ட தேசிய வடிவினால் ஒடுக்குமுறைக்கு உட்பட்ட அல்லது உரிமைகளை இழந்த மனிதக் குழுக்கள் ஒருங்கிணைந்து போராடிப் பொது மக்களுக்கு நன்மை தருகிற அரசியல் வழியிலான தேசிய வடிவத்திற்கு மாற்றம் பெறுகிற தேசிய வடிவம் என்று இதனைப் பொருள் கொள்ளலாம்.
8) மத வழியான தேசியம்.(Religious Nationalism)
ஒரே வழிபாட்டு முறைகளைக் கொண்ட, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து உருவாக்கம் பெறுகிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.
9) தனி மனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம். (Fascist Nationalism)
ஒரு தனி மனிதனின் சிந்தனைகளின் அடிப்படையிலும், மாற்றுச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காத மக்களுக்கு எதிரான கொடுங்கோன்மை வழியாக உருப்பெருகிற தேசியமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.
10) இலக்கு வழியிலான தேசியம். (Diaspora Nationalism)
வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழினும் தங்கள் இலக்கு நோக்கிய செயல்பாடுகள் மூலமாக ஒரு தேசிய வடிவைக் கட்டமைக்கிற அல்லது செயல்படுகிற தேசியக் கருத்தாக்கமாக இதனைப் பொருள் கொள்ள முடியும்.
நீண்ட தேடலுக்குப் பிறகு, என்னால் உள்வாங்கப்பட்ட தேசியம் என்கிற கருத்துரு உண்மையில் எனக்கானது அல்ல என்பதை அரசியல் சார்ந்த, இனம் சார்ந்த அல்லது மொழி சார்ந்த சில அண்மைய நிகழ்வுகள் உறுதி செய்தது மட்டுமன்றி என்னைப் போன்று எண்ணற்ற இளம் தலைமுறைத் தமிழர்களை இந்திய தேசியம் என்கிற கோட்பாட்டில் இருந்து திசை திருப்பி இருக்கிறது. இதன் தாக்கம் வரும் காலங்களில் இந்திய தேசிய அரசியலையும், தமிழ் மக்களின் அரசியல் பற்றிய சிந்தனைகளையும் மாற்றி அமைக்கும்.
நான் மரபு வழியிலான ஒரு தேசத்தில், உயர்ந்த பண்பாட்டு மொழிக் கோவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய வடிவத்தில் அல்லது அதற்கும் மேலான " யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற தேசியங்களைக் கடந்த ஒரு வடிவத்தில் எனது வாழ்வியலைச் செம்மைப்படுத்தி வாழ்ந்த போது, பொருளாதார நோக்கிலும், வல்லரசுக் கனவுகளிலும், முதலாளித்துவச் சிந்தனைகளால் வளர்க்கப்பட்டு வரும் ஒரு குறுகிய இருநூறு ஆண்டுகால நாகரீகத்துடன் இணைத்துக் கொண்டு எனக்கான தேசிய வடிவமாக அதனை ஒப்புக் கொள்வது ஒரு வகையில் அறிவீனமானது என்றே தோன்றுகிறது.
மரபு வழியிலான, மொழி வழியிலான, இன வழியிலான கலைப் பண்பாட்டு வழியிலான எனது உறவுகள் என்று நான் கருதுகிற, மக்களின் வாழ்வியலைக் கேள்விக்குள்ளாக்கும் அல்லது பேரினவாதக் கொள்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் ஒரு மண்டல வல்லரசுக் கனவின் வழியாகச் செலுத்தப்படும் தேசியத்திலும், அதன் அரசியல் நிலைப்பாடுகளிலும் எனக்கு முற்றிலும் நம்பிக்கை இழப்பு உருவாகி இருக்கிறது. என்னைப் போலவே எண்ணற்ற தமிழ் இளைஞர்களுக்கும் உருவாகி இருக்கிறது என்பதும் உண்மை.
எனது உறவுகள் என்று நான் கருதுகிற மக்களைப் பாதுகாக்கிற வலிமை இருந்தும், அந்த வலிமையை எம்மிடம் இருந்தே பெற்றிருந்தும் கூட எமது உணர்வுகளைக் கொஞ்சமும் மதிப்புடன் நடத்தாத, எனது நிலப்பரப்பின் வழியாகவே இன அழிப்பிற்கான ஆயுதங்களைக் கொண்டு செல்லத் துணிந்த ஒரு தேசிய வடிவத்தில் நாம் இணைந்து செயல்படுவதும், அதனைக் கொண்டாடி மகிழ்வதும் எனது வழிவழியான மனிதநேயச் சிந்தனைகளுக்கு எதிரானதாகவும், முற்றிலும் முரண்பட்ட ஒரு தேசிய வடிவமாகவும் இருப்பதால் என்னை இந்திய தேசியத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதில் இருந்து மாற்றி இருக்கிறது.
இவை அனைத்திற்கும் மேலாக, எனது மரபு வழியிலான தொழில்களை முற்றிலும் அழித்துப் பொருளாதார மயமாக்கல் என்கிற ஒரு முதலாளித்துவ ஏமாற்று வழியை உள்ளிருத்தி அறம்சார்ந்த எனது வாழ்வியலைப் பொருள்சார்ந்த வாழ்வியலாகத் திரிக்க முனைகிற, எனக்கான இன, மொழி அடையாளங்களை சிதைவுறச் செய்து ஒரு மதச்சார்பு வழியில் இயங்கத் துடிக்கிற குழுக்களின் ஆளுமையை தேசியவடிவம் என்று ஏற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. இவற்றின் ஆளுமையில் இருந்து விடுபட்டு நிலைத்த மேன்மையான எனது "தமிழன்" என்கிற அடையாளத்துடனேயே நான் வாழவும், அடையாளப்படுத்தப்படவும் விரும்புகிறேன்.
என்னுடைய தேசிய வடிவம் மரபு வழியான முதல் பிரிவில் உலகெங்கும் அறியப்படுகிறது, மனித நேயம் நிறைந்த, சாதி வேறுபாடுகளும், மதக் குழப்பங்களும் அற்ற இயற்கையை வணங்கிப், பெண்களின் தலைமைப் பண்புகளை ஒட்டிக், கலை மற்றும் பண்பாட்டு வெளிகளில் நிறைந்து வாழ்கிற நீண்ட காலத் தேசிய வடிவம் என்னுடையது. அதன் அடையாளங்களை எந்த தேசிய கீதத்தின் இசைப்பிலும் நான் இழப்பதை விரும்பவில்லை. என்னை இந்தியன் என்று யாரும் அழைப்பதை இப்போது நான் வெறுக்கிறேன், குடியுரிமைகள் கொண்ட ஒரு இந்தியனாக நான் இருக்கிற போதிலும், கொள்கை வழியாக நான் இந்திய தேசியத்தில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கிறேன், அல்லது எனக்குக் குடியுரிமைகள் வழங்கிய ஒரு தேசம் என்னை தனது செயல்பாடுகள் மூலமாக விலக்கி வைத்திருக்கிறது.
நான் இந்தியனாக இருந்தால் தமிழனாக இருக்க முடியாது, உண்மையான தமிழனாக இருந்தால் இந்தியனாக இனி ஒருக்காலும் இருக்க முடியாது, இதனைப் படிக்கும் உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்!!!!
நான் தமிழனா??? இந்தியனா???
- கை.அறிவழகன்
குறிப்பாக,
//
நான் மரபு வழியிலான ஒரு தேசத்தில், உயர்ந்த பண்பாட்டு மொழிக் கோவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய வடிவத்தில் அல்லது அதற்கும் மேலான " யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற தேசியங்களைக் கடந்த ஒரு வடிவத்தில் எனது வாழ்வியலைச் செம்மைப்படுத்தி வாழ்ந்த போது, பொருளாதார நோக்கிலும், வல்லரசுக் கனவுகளிலும், முதலாளித்துவச் சிந்தனைகளால் வளர்க்கப்பட்டு வரும் ஒரு குறுகிய இருநூறு ஆண்டுகால நாகரீகத்துடன் இணைத்துக் கொண்டு எனக்கான தேசிய வடிவமாக அதனை ஒப்புக் கொள்வது ஒரு வகையில் அறிவீனமானது என்றே தோன்றுகிறது.
//
என்ற பத்தியிலிருந்து தொடங்கி, கட்டுரை இறுதிவரை எழுதப்பட்ட எழுத்துகள் பொன்னெழுத்துகள் .
பகவன் அவர்கள் குறிப்பிட்டது போன்றதொரு தமிழ்த்தேசம் தான், உண்மையானத் தமிழர்கள் விழையும் தமிழ்த்தேசம். தமிழ் சமூகம் உலகின் தாய்ச்சமூகம். அடிமையாய் அவதியுறும் இந்தத் தாய், தனது தறிகெட்டலையும் பிள்ளைகளை (தேசங்களை) நெறிப்படுத்த தனக்கொரு ஆளுமையை (இறைமையை)த் தேடுகிறாள்.
தமிழ்த்தேசத்தின ் அடிப்படை சித்தாந்தங்கள்,
யாதும் ஊரே, யாவரும் கேளிர்.
ஒன்றே குலம், ஒருவனே தேவன்.
இவை உலகில் வேறெங்கும் காணாத ஒப்பற்ற தமிழர் கோட்பாடுகள்.
தோழமையுடன்
கை.அறிவழகன்
அவர்களுக்கு, உங்களின் வார்த்தைகளை, ஒரு முதிர்ச்சியுற்ற தமிழனிடம் இருந்து எனக்குக் கிடைத்த மதிப்பு மிகுந்த பாராட்டு என்று கருதுகிறேன், மிக்க நன்றி, தொடர்ந்து உங்களைப் போன்ற பெரியவர்களிடம் இருந்து கற்று உயரவும், பேரண்டம் முழுமைக்கும் நாகரீகம் வழங்கிய எம் இனத்தின் பாதையில் இடரும் இடையூறுகளைக் களையும் சிறு பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் தொடர்ந்து விழைவேன்.
உங்கள் மாணவன்
கை.அறிவழகன்
தோழமையுடன்
கை.அறிவழகன்
தோழமையுடன்
கை.அறிவழகன்
தோழமையுடன்
கை.அறிவழகன்
>> நல்ல மனிதனாக இருந்தாலே போதும். தமிழனா, இந்தியனா என்ற கேள்வியே தேவை இல்லை
Enough of fooling tamils all along with these meaningless statements. Do you suggest that by raising these questions or choosing tamil identity instead of bogus-indian identity makes us less humans?
Indian brahmins have long put us on notice to chose between a enslaved life in brahminical-san skritic India or a dignified, self-respecting life without associated heavy costs. Eelam war is an eye opener to so many of us on the depths that this brahminical establishment can go to stick its selfish interests. Brahmins by connecting kashmir issue to that of Eelam issue has challenged Tamil nationalists with their ultimate weapon (of Indian integrity) to deny eelam homeland.
The need of hour for us is to organise ourselves has Tamils.
Those Tamils who are outside TN, need to urgently start doing the the following WITHOUT any shame or embarrassment rather with lot of conviction and passion.
1) Whenever we meet another state person, when the topic veers to cricket, we need clearly tell them that we boycott Indian cricket since they no problem in playing with Tamils killing SL nation.
2) In any political conversation with other state person, we need to remind them how from 1948 onwards India has been a friend of Sinhala state resulting in killing and disempowerment of both eelam and Indian Tamils
No one person from other state that I have met has any knowledge of the following. They are all uniformly surprised and display disbelief at some the following indian government's action.
ex.,
(a) 1948-disenfranc hisement of India Tamils
(b) 1966-diabolical and inhuman act of the bast*rd LB
Shastri to bring back 10 lakh Tamils from SL.
(c) 10, 000 Tamils killed by IPKF
recent Indian complicity of killing more than 50, 000
Tamils in mullivaikal
(d) More than 100, 000 Tamils live in near prison condition in India whereas 20 million Bangala and tibetean refugees are having much better access to facilities
3) If some smart as* tries to connect Kashmir and Eelam please do not try to invent any minor differences between the struggle instead, remind our compatriots about the occupational nature of Kashmir which has resulted in killing of 50, 000 kashmiris and then remind them about the serious racist nature of Sinhala occupation thus requiring immediate attention.
4) Copiously compare South African aparthied with Eelam Tamil subjugation
5) If any smart as* brings in the topic of LTTE being terrorist keep reminding them on netaji's INA which killed Indians (sepoys) in the name of liberating India and Netaji colloborated with nazi-Germany and racist-Japan. Further, Netaji would have killed every congressi if they had colloborated with British to kill Indians and INA people.
Convincing other Indians is a daunting task since english language media which is our only link to the other state people intentional blackened any news on Eelam Tamils' struggle and their sufferings and the resulting agitations in TN.
It is really frustrating that we are wasting our energies convincing people like இராஜேந்திரன் who should have instinctly understood all these. Much worse is the incapacity to even understand the underlying politics of all these actions.
தமது சொந்த மன்னிலே, கிட்டத்தட்ட மனிதன் தோன்றிய காலம் தொட்டு வாழும் மன்னிலேயே, "வந்தேறி" சிங்கள நாய்களால் வேட்டையாடப்பட்ட ு அடிமைகளாகவும், அகதிகளாகவும், ஆடு மாடுகளைப்போல அடைத்து வைக்கப்பட்டு, நாள்தோரும் 20, 30 என்று உயிர்கள் பலி வாங்கப்பட்டு கேட்பாரற்றுக் கிடக்கும் அவலத்தைக் கண்டு நாம் திகைத்து நிற்க, இந்த இராஜேந்திரன்களை ப் போன்ற மனிதர்கள்(?) நமக்கு "நல்லவர்களாய்" வாழ்வது பற்றி வகுப்பெடுப்பது எப்பேர்பட்ட அவலம்?
சமீபத்தில் ஈழத் தமிழர், கொழுப்புக் கடலில் அடித்துக் கொலை செய்யப்பட்ட ஒளிப்பதிவை, இந்திய நன்பர் ஒருவருக்கு அனுப்பிவைத்தேன் (Forwarded Message). அதற்கு அந்த மனிதர் அனுப்பிய ஆங்கிலப் பதிலின் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன். இந்தியாவில் இந்த ராஜேந்திரன் போன்றவர்கள் மட்டுமல்ல, ராஜபக்ஷேக்களும் , பொன்சேகாக்களும் மண்டிக் கிடக்கின்றனர் என்பது அவரது பதிலைக் கண்டால் புரியும்.
-----------
அன்புள்ள பாண்டியன்,
எனக்கு சமத்துவத்தில் நம்பிக்கை உள்ளது. ஆனால், ஒரு தனி மனிதனுடைய செயல்களை, ஒரு தேசத்தின் செயல்களாக இப்படி இணைத்துப் பார்த்தால், இனி உலகில் நடக்கும் எந்த ஒரு மனிதநேயமற்ற செயல்களை கண்டு மௌனம் சாதிப்பதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது.
தனிப்பட்ட முறையில் எனக்கு ஈழத் தமிழர்கள் மீது அனுதாபங்கள் உண்டு. அவர்கள் அங்குள்ள வாக்கு வங்கி அரசியலால், ஒதுக்கப்பட்ட சமுதாயமாக வாழ்கிறார்கள் என்பது உண்மை. LTTE ன் வீழ்ச்சியால், அங்குள்ள தமிழ் மக்கள் நிலையில் எந்த ஒரு அதிசய மாற்றமும் நிகழ்ந்து விடாது என்பதும் எனக்குத் தெரியும்.
இருப்பினும், இந்தியாவுக்கு அதன் அருகாமை தேசங்களுடனும், உலகினுடனும் உள்ள உரவு நிலைகளை வைத்துப் பார்க்கும் போது, சிரிலங்கா மீது எந்த ஒரு நேரடி விமர்சனத்தையும் வைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சிரிலங்கா மீதான அத்தகைய தாக்குதல் (விமர்சனம்) என்னுடைய சிந்தனைக்கப்பாற ் பட்டது.
சிரிலங்கா தனது உள் நாட்டு ஜனநாயகத்தில் இந்தியா தலையிடுவதாக உணராத அளவுக்கு மட்டும், இந்தியா தனது ராஜதந்திர உரவுகளை மேம்படுத்தி, தமிழர்களுக்கான தேவைகள் கிட்டும் படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவை தவிர, நமது (இந்திய) சிக்கல்களைக் கண்டுகொள்ளாமல், ஒட்டுமொத்த கவனத்தையும் தமிழ் மக்கள் மீது செலுத்தும் பைத்தியக்காரத்த னம், நமது தேசிய நெருக்கடியைத் தோற்றவித்து, இந்தியாவுக்கான எதிரிகளை அதிகரித்து விடும். இதை எந்த ஒரு இந்தியனும் விரும்ப மாட்டான்.
-------------
இந்த நபர் முன்பு என்னிடம் பச்சையாகவே சொன்னார். சீனாவில் நடத்தப் பட்டதைப் போல, இந்தியாவிலும் இந்தியைக் கட்டாயமாகத் திணித்து, இந்திய மக்கள் அனைவரையும் நாளடைவில் ஒரே மொழியைப் பேச வைத்து, வலுவான தேசமாக இந்தியாவை உருவிக்கினால் தவறா என்று.
நாம் உண்மையிலேயே உஷாராக வேண்டியது அவசியம்!
It is really frustrating that we are wasting our energies convincing people like இராஜேந்திரன் who should have instinctly understood all these. Much worse is the incapacity to even understand the underlying politics of all these actions.
இந்த இராஜேந்திரன்களை ப் போன்ற மனிதர்கள்(?) நமக்கு "நல்லவர்களாய்" வாழ்வது பற்றி வகுப்பெடுப்பது எப்பேர்பட்ட அவலம்? .
----------
நான் உண்மையான தமிழனாக வாழ ஆரம்பித்து பல வருடங்கள் ஆகின்றது.ஈழ போராட்டம் வெற்றி அடைந்து நம் தமிழ் மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும் என்று ஏங்கியவர்களில் நானும் ஒருவன். போராளிக்கு ஜாதி ஏது. பிரபாகரன் அவர்கள் ஜாதி பற்றிய கேள்வி ஏன். அதற்கு பாண்டியன் அவர்கள் கொடுத்த விளக்கத்தையும் படித்தேன். ஈழ போராட்ட விளைவுகளைப் பார்த்து கேட்டு தூக்கம் இன்றி தவித்தவர்களில் நானும் ஒருவன்.இன்னும் நம்பிக்கை இருக்கின்றது ஈழம் வெல்லும்.
நான் சொல்லும் மனிதன் ஜாதி மதத்திற்கு அப்பார்ப்பட்ட உண்மைத் தமிழன். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
நம்மக்களை கொண்றுகுவித்த ராஜபக்ஷேஉடன் சிரித்து கைகுலுக்கிய தமிழக எம். பிக்களை (திருமா உட்பட) நினைத்து நான் ஆச்சிரியத்தில் இருக்கும்போது ,
" இந்தியாவில் இந்த ராஜேந்திரன் போன்றவர்கள் மட்டுமல்ல, ராஜபக்ஷேக்களும் , பொன்சேகாக்களும் மண்டிக் கிடக்கின்றனர் என்பது அவரது பதிலைக் கண்டால் புரியும்." என்று ஒப்பிட்ட, பாண்டியன் அவர்களுக்கும், மற்றும் ரமேஷ் அவர்களுக்கும் நன்றி.
"நான் உண்மையானத் தமிழனாக வாழ ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிறது" என்ற உங்களின் சொல்லின் பொருள் என்ன? அப்படியென்றால் அதற்கு முன்பு?
எப்படியோ! திருந்தினால் உளமார வரவேற்கிறோம். ஆனால், அந்த மாற்றம் முழுமையானதாக இருக்க வேண்டும். ஆனால், உங்கள் பதிலின்படி அப்படித் தெரியவில்லை.
நீங்கள் யாரோ, நான் யாரோ! உங்களின் எழுத்துகளை வைத்துத் தான் அடுத்தவரின் மதிப்பீடுகளும், எதிர் வினைகளும். உங்களைப்பற்றி நாங்கள் தவறாகப் புரிந்திருந்தால ் எங்கள் மீது சற்றும் சினமில்லாமல், நீங்கள் தன்னிலை விளக்கம் கொடுக்கலாம். அதை ஒருவரது அறிவு முதிர்ச்சி என்று கொள்ள முடியும்.
ஆனால், பதிலுக்கு இப்படிக் குற்றம் காண முயலலாமா? நான் யார் சாதியைப்பற்றியு ம் கவலை கொள்வதில்லை, அது பிரபாகரனாக இருந்தாலும். பிரபாகரன் ஈழவர் என்ற ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று முன்பொருகாலம் எழுதியது எந்த அடிப்படையில்?
சில சீர்குலைவு சக்திகள், பிரபாகரனை பாஸிஸ்டு என்றும் அவர் (ஆதிக்க) வேளாளப் பிள்ளைமார் சாதி போன்று திரித்து, பொய்ப்பிரச்சாரம ் செய்து கொண்டிருந்த வேளையில், அதை எதிர்கொள்ள உண்மையை எழுதவேண்டி இருந்தது. அவ்வளவே!
உங்களின் தன்னிலை விளக்கத்தை ஏற்றுக் கொண்டாலும், இந்தச் சிறந்த கட்டுரையின் கருப்பொருளையே சிதைக்கும் வண்ணம் "தமிழனா, இந்தியனா என்ற கேள்வியே தேவையில்லை" என்று கருத்து கூறியது, (உள் நோக்கம் இல்லை என்றால்) ஒரு பயனற்ற சொல்.
சொல்லுக சொல்லிற் பயனுடைய ... என்பது வள்ளுவன் வாக்கு!
You and Dr Pandian (I don’t know whether he is Munaivar or Maruthuvar) interpreted differently. I cannot be a good person without a Tamilan identity. But the Tamil identity is different based on their caste. I want to be a good person beyond my caste and religion. I am aware of all your points. I have read lot of article about Tamil living people in Sri Lanka. Some of my friends ( kerala, Karnataka, Andra, north India and even some Tamil ) thinking all Tamil people in Sri lanka went from India during British rule ( around 100-200 years back). And they argued with me why they want separate country? I tried to explain them the whole story what ever I know. From then they asked lot of thinks about the war.
Yes as you mentioned lot of people used to discuss about cricket. I agree. But I never gave importance to cricket then our Elam issue. Even some time I used to think how the Muthia Muralidaran able to play the cricket for Sri Lanka? Keetru is publishing lot of good article. I am trying to read all. And also back issues.
Who ever seeing and facing social inequality in our Tamil society or wherever it is they can not refuse to accept Thanthi Periyar and Dr Ambetkar’s thoughts and views.
When I read some article about Elam I have read caste and religion also involved. It may or may not be true but in Tamil nadu, caste system is influencing lot.
Arivazhalan explained lot of thinks, there is no second thought about these. My answer to Arivazhakan is I want to be a true Tamilan (beyond my caste and religion). Am I Indian or not , it depends on how much I am giving importance to other people and their lives in other part of India, or in Globe than how India is playing political game with other countries and peoples.
Based on lot of issues including our important Elam issue I may hate to say I am an Indian but if I think about freedom fighters and our national leaders (not current leaders) I have to accepts.
Thanks for reading my views
தோழமையுடன்
கை.அறிவழகன்
நண்பர் ராஜேந்திரன், உங்கள் பதிவிற்கான விடையும், சர்வசித்தன் அவர்களின் பதிவிற்கான விடையும் ஏறக்குறைய ஒன்றுதான். மனிதன் என்கிற உங்கள் சொல்லாடலை விடவும் வலிமையான அன்பை விதைத்து வளர்ந்த எம் சமூகம் மனிதத்தை விடவும் மேலானது.
தோழமையுடன்
கை.அறிவழகன்
உங்கள் கருத்துக்கள் இந்தக் கட்டுரைக்கு மேலும் வலிமை சேர்க்கிறது. நன்றி.
தோழமையுடன்
கை.அறிவழகன்
தோழமையுடன்
கை.அறிவழகன்
இங்கே எவனுக்கும் சூடு சொரணை இல்லை .. அரசியல்வியாதி உட்பட. ஈழ பிரச்சனை குறித்து பிரச்சாரம் செய்ய தோழர்களோடு சென்றால்.. அனைத்து தமிழ் குடி மகன்களும் கேட்பது எலக்சனா? ஓட்டுக்கு எவ்வளவு தருவாய்? என்பதுதான்.. ரொம்பவே நொந்து போய்விட்டேன்..இ வர்களை எப்படி திருத்துவது? யாருக்கோ யாரோ போராடுகிறார்கள் என்பதே இங்கு நிலையாக உள்ளது... இவர்களை எப்படி மீட்டு எடுப்பது??? ஓட்டு அரசியலில் இருந்து மீட்டு இன உணர்வை எப்படி ஊட்டுவது இது குறித்து தோழர் விளக்கினால் நன்மையாக இருக்கும்..
அறிவழகன்,
You have beautifully captured the transition many of us have undergone from being an Indian-national ist to a liberated human being who sees Tamil nationalism as a legitimate aspiration ( or at least as a effective means of deconstructing this imperial-Indian nation and achieve a freedom for nations and masses within India). Even though I may not agree fully agree to your historical evidences for existence of a Tamil nation state, I fully agree that any group of people can identify themselves as nation and if there exist a geographical plausibility for being a contiguous nation then they deserve sovereign rights and also possess a fundamental and absolute right to self determination of their own future. In my opinion there is no need for a very long history of nation or a nation state to the claims of sovereignty.
Sorry if you thought that I am accusing you of being an anti-tamil or something similar. But your two-liners chastising tamil nationalists for being less human is baffling. Unless you express clearly what you meant, there no way no judge your two-liners.
Why did I say that you lack political grasp on the evolving situation? I am giving my understanding on the issue in the form of longer questions.
At the outset, let me clarify that I am not a Tamil nationalist myself. I would rather like to live in a federal/confede ral India. But I support any sub-nationalism as a legitimate aspiration and also as a means to de-construct the imperial India.
To understand the current political situation, we can start from the current status and go backwards,
So, first question is to establish the presumed Indian complicity or guilt. That is, did India really support the war against tamils?
Overwhelming answer is yes. Not only did it support, it also covertly conducted the war and the associated genocide of Tamils.
Rajendran, If you disagree with this starting point then there can be no further discussion on this topic.
If yes, then one needs to answer the following minimal set of questions to have a basis for understanding political situation (both internal and external),
1) What special relationship exists between Sinhalas and Indian-state? How did it evolve over past 60 years?
2) How does India view (-ed) Sinhala-SL?
3) How does Indian view of Sinhala-SL is (was) different or similar to that of other neighbours (ex. pakistan, maldives)?
4) Why India supported SL-Tamil subjugation?
5) How did India treat SL-Tamils in past 60 years ?
6) What was India's stand on eelam Tamil's national aspirations
7) Did it change with respect to time?
8) How are the external policies decided in India?
9) How much hold does the fascist-bureauc racy have in framing the strategic external policies?
10) Did internal political situation in India (TN) had any bearing on core Indian stand on eelam issue?
If so, how?
If not, can we explain india's stand from purely
Indian-national istic perspective?
11) Does Indian establishment seriously view an explicit connection between eelam struggle and other struggles in India and that of east pakistan? In other words, can we reasonably suspect that south block fears an international backlash on Kashmir if it starts supporting eelam nation?
Is this fear supported by facts?
From within Tamil Nadu, there are few questions that need to be answered,
12) Did Indian Tamil nationalism affect India's attitude towards eelam Tamils? Is it supported by facts?
13) Does the fear of rise Indian Tamil nationalistic separatism well justified from our experience in TN society (for past 40 years at least)?
14) Which kind of TN Tamils' struggle would have had more impact on the India's eelam policies?
(a) Struggles that does not question Indian policies but rather focus on rajapakshes and sinhalas
(b) Total blacking out of central institutions with demonization of Indian state, central government run by congress and their DMK lackeys?
(c) or a graduated approach?
15) Is it advisable for Tamil nationalists to take a direct forms of struggle (like the PDK blocking of army convey in coimbatore) considering the fact that opposition (ADMK) is the biggest anti-tamil party in TN and existing no space for democracy in TN?
16) What are the reasons for eelam Tamils' travails being a non-starter in TN?
17) Is it because, opposition failed to capitalise on the situation right from 2007 onwards when eastern eelam Tamils were suffering and by end-2008 was it already too late?
18) Can we identify any extra-constitut ional entities/people (Ram, Cho, RAW individuals, & IB individuals etc..,) who had significant influence or changed the course of Indian foreign policies?
I will just comment on my understanding of Indian external policies on SL.
Indian policies on the neighborhood always been,
a) If you are an explicit enemy: India will try to cut you to sizes so that you do not threaten us. If dismembering of the enemy nation is not possible or counterproducti ve, India will at least try to acquire a quid-pro-quo advantage (examples, Tibet, Baloch, MQM, Burmese fighters in 90s, Tamil fighters in 80s). China and Pakistan fall under this catogery. Burma used to be enemy in 80s and early 90s. SL used to be estranged friend in late 70s and early 80s.
b) If you are not an explicit enemy and you respect territorial integrity of India and its imperial projection in South Asia, then you are allowed to have you own territorial integrity as well as your own racism, fascism against minorities or dissenters. Every nation in South Asia except china and pakistan fall under this category. Eelam Tamils do not even exist in radar of India except for LTTE and the disarray it created for India's power projection in South Asia. This core Indian policy is that of Indian bureaucracy (which can be overturned if a confident politician on power).
Sinhalese clearly understand this Indian establishment's anxiety and very cleverly exploit it by subtly blackmailing India of their choice to align with Indian enemies. Only one time when JR really aligned with west to give up Trinco did India got nervous and trained Tamil fighters. So both Sinhalas and Indians learned their lessons from the aftermath.
Thus, india 'believes' that (1) Sinhalas are not stupid enough to antagonise Indians again by striking explicit military bonds with Indian enemies (2) If India and China are going to be enemies and are going to fight direct and proxy wars, SL is least of South Block's concern since there are far more important and crucial geo-settings (than India's South and Indian ocean sealanes) (3) India can easily compete with china for gaining financial and cultural space in SL. (4) Any Indian missteps can be easily reversed. (5) Even in future, Tamils can be used as a bargaining chip to establish Indian hegemony in the island as Indira/Rajiv did.
Right now, there is a convergence of interests between SL and India in crushing eelam-Tamil nationalism as well as getting permanent foothold on Tamil homelands.
With MK and JJ in Indian-state's pockets, so called TN Tamils' agitation is only a minor PR irritant. Since these dissenting TN-Tamils themselves do not want to antogonise Indian State and do not want to explicitly question and reject symbols of Indian nationalism, there is no internal loss for Indian establishment in cruising with its sinhala pandering. If there was real fear in South Block during 2006-2007 of massive Tamil nationalistic rise in TN and thereby possible exposure of one more front to control and repress then India would have definitely stopped rajapakshe on his tracks.
I understand that virulent Tamil Nationalism in TN will lead heavy handed retaliation from Indian state and we will encounter unacceptable losses. So our struggle needs to always peaceful and should be within the existing democratic setup.
For example, if we assure the survival, participation and loyalty of Tamils to Indian Union but explicitly point out India's transgression in eelam from within the establishment, we will have a chance to compete with the likes of N Ram and Cho'maris'. These are only few realistic options that a friendless Tamil nation has!
RSS feed for comments to this post