தீராத தாகத்தின்
தவிப்புகளில் ஊற்றெடுக்கிறது
வாழ்க்கையின் வேட்கை
ஓடை புரண்டுவந்து
நினைத்த பாதங்கள் உலர்ந்து
அலைகின்றன வெப்ப நிலங்களில்
கழனிகளில் துள்ளிய
ஆரல் மீன்களைக் கொத்திய
கொக்குகள்
வெண்மேகங்களாகித் திரிகின்றன
ஈரப்பதமற்ற காற்றின் திசைகளில்
கானல் மிதக்கும் தெருக்களில்
வாய்பிளந்து கிடக்கின்றன
நகரத்து குடங்கள்
வரப்போகும் தண்ணீர் லாரிக்காய்
மரம் வெட்டியும்
நிலம் உறிஞ்சியும் முடித்த
வாழ்க்கைக் குடங்கள்
நிரம்புகின்றன கண்ணீர்த் துளிகளால்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- யாழன் ஆதி
- பிரிவு: தலித் முரசு - ஆகஸ்ட் 2005