கீற்றில் தேட...

காட்ட இயலா அன்பு,
சொல்ல இயலா உண்மை,
உணர்த்த இயலா வெறுப்பு,
பகிர இயலா காதல்

வெளிக்கொணர இயலா
பல உணர்வுகளுடன்
சில நேரங்களில்
நானும் சௌகரியமாய்
ஒரு கவிதையில்
ஒளிந்து கொள்கிறேன்.

ஆனால்...
இந்தக் கவிதையை
எங்கு? எப்படி?
மறைப்பது
தெரியவில்லை!

- அ.சீனிவாசன்