andhra encounter

செம்மரத்த வெட்டப் போயி
செத்துப்போன எம் தோழரே.
அய்நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு
அநாதையா போயிட்டயே.
பாவி போலீஸ்காரன் உன்ன
பாவம்பார்த்து விட்டிருக்கலாமே.
காட்டுக்குள்ள வெச்சி
கதையை முடிக்கறப்ப
உன் பொன்டாட்டி புள்ளைய நெனச்சயா
உன்ன சூது பண்ணி கூட்டிப்போன
அந்த தேவடியாப்பயன் புரோக்கர நெனச்சயா
குண்டடி பட்டு துடிக்கயில
எம் தோழரே!
உம் குருதி நிலத்துல கொட்டயில
இந்த பாவி சாமியெல்லாம்
பாடையில போனதா.
ஈரக்கொல நடுங்குதே
எம் தோழரே
என் இதயமெல்லாம் பதறுதே
எம் தோழரே
கட்டையோடு கட்டையா
கெடக்கிறயே அந்தக் காட்டுக்குள்ள
காடு மேடெல்லாம் அழுவுதடா
உன் பொண்டாட்டி புள்ளைங்க
கதறும் சத்தத்தில
அந்த திரு வெங்கடத்தானின்
காதும் கிழிந்து போனதடா
பட்டினிக்கு வாக்கப்பட்ட
பஞ்சப்பரதேசியான நம்மல
கொன்னானே அந்தப் பாவி போலீசு
பாட்டாளி நான்
சாபம் உடுறேன் தோழரே
போலீசுகார நாய்ங்களா
அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும்
கூட்டிக்கொடுக்கும் மாம பயலுகளா
உங்கள கருவருக்க வருவாங்கட
எங்க தோழங்க
கோடாலி புடிச்ச
எங்க கையால‌ உங்க கொடல
உருவற‌ நாள் சீக்கிரம் வரும்டா.

- செ.கார்கி

Comments

3 comments

3
seyon yazhvaendhan
சூழ்ச்சிக்கு பலியான பாட்டாளித் தோழர்களுக்குப் பரிந்து பேசும் உங்கள் உணர்வோடு நாங்களும் பங்குகொள்கிறோம்.

சேயோன் யாழ்வேந்தன்
tamil dasan
Adhigara varkagathin soolchi thalai virichi aadi 20 uyira kudichidichi 20 kudumbangalai nirkathi aakiduchu vandharai vaza vachi palagina em thamilinam meendum meendum mannukul pudhaika padum podhu eerakokai arunthu kuruthiyoda thudikkudhu arasan andru kolvan theivam nindru kollum police plan pani konnu pudhiya sattam padaippan arasanum theivamum vedikai parkum avala nilai adivaiyur eriya saabam viduren em thamil uyiragalai kuditha mirugangaluku sandhathigal illamal indha piravi laye thandanai kidaikum,,,,,,,,,,,,naamum unmai velivara poraduvom 20 uyirum pudhaikka pada villai vidhayai vidhaikka pattu irukkukirargal..........thoza
ப.குணசேகரன்
அநியாயமாய்க் கொல்லப்பட்ட அப்பாவி மரம் வெட்டும் தொழிலாளர்க்கு நீங்கள் எழுதிய இரங்கல் கவிதை படித்து நெஞ்சம் கணத்து எழுதுகிறேன். நீதி ஒருநாள் வெல்லும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.