இன்றுடைந்த  மரப்பாச்சியை
சேர்த்துவைக்கிறேன்
நாளைக்கு எப்படியாகிலும் சரி செய்ய வேண்டும்

பின்னொரு நாளில்
துளி துளியாய்
உதிரம் பூக்கும்
என் சதை கீறலை
அன்பொழுக நக்கிவிட
எனக்கு அம் மரப்பாச்சி தேவைப்படலாம் இல்லையா ?

உதாசீனப் படுத்தப்பட்ட பிரியங்களை
பின்னொரு நாளுக்கென
எடுத்துவைக்க வேண்டும்

ஒரு தற்கொலை முடிவு
தூக்க மாத்திரைகளை
எண்ணிக் கொண்டிருக்கும் போது
அப்பிரியங்கள்
என் மதுக் குடுவையை போட்டுடைக்கலாம் இல்லையா?

இக்கணத்தின்
அதிருப்திகளை
விஷம் ஒத்த வார்த்தைகளை
எஞ்சிய கண்ணீரை
நாளைக்கென சேமித்தால் என்ன ?
இக்கணம் வாத்சல்யமாக நீளட்டுமே

- க.உதயகுமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.