யோசிக்க மறந்த
கனமொன்றில்
தொலைந்த நாட்கள்

ஆல விருட்சமென
வேர்பரப்பி
இருள் நீளும்
தருணங்கள்

வற்றாச் சொற்களில்
எழுதிய 
பேசா மொழியின்
இலக்கியங்கள்

ஆறாத்  தனிமையின்
சுடரில் கருகிடும்
விட்டில் பூச்சிகள்

இன்னும் கிடைக்கவில்லை
என்றோ தொலைத்த
புத்தகத்தின்
கடைசி பக்கங்கள்

அதீதன் ......

Comments

3 comments

3
devimagan
ஆறாத் தனிமையின் இருள் நீளும்
தருணங்கள் இன்றுடன் முடிவடைந்தது
வாழ்த்துக்கள் ..
Felix
வாழ்த்துகள் சுரேன்..
ஆத்மார்த்தி
கவிதை நன்றாக இருக்கிறது சுரேன்.
நிறைய்ய எழுதுங்கள்.வாழ்த்துக்கள்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.