குஜராத் படுகொலைகளுக்குப் பிறகான மிக மோசமான வன்முறைத் தாக்குதல்கள் அஸ்ஸாமில் இஸ்லாமிய மக்களின் மீது நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியேறிய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையின் கீழ் இத்தகைய மிகப்பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. நான்கு லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள், போடோ பழங்குடி மக்கள், போடோ அல்லாத பிற இனத்து மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். கொட்டும் மழையில் ஒரு அகதிப் பெண் தனது குடும்பத்திற்கான உணவைத் தயாரிக்கும் புகைப்படங்கள் நம்மை என்னவோ செய்கிறது. இவ்வருடம் ஜூலையில் அஸ்ஸாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் ஆரம்பித்த இக்கலவரங்கள் போடோலாந்து பகுதி முழுவதும் பரவியது. போடோ மக்களுக்கும், போடோ அல்லாத மக்களுக்குமான கலவரம் என சொல்லப்பட்டாலும் போடோ பழங்குடிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில்தான்தான் பிரதான கலவரம் நடைபெற்றது.
அஸ்ஸாமில் நடைபெற்றுள்ள கலவரங்களை ஏதோ இந்தியாவின் ஒரு மூலையில் நடைபெற்ற ஒரு கலவரமாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. தாக்கப்பட்ட மக்கள் இஸ்லாமியர்கள், சிறுபான்மை மக்கள் எனும்போது அந்நிகழ்வு இந்தியா முழுமைக்கும் மிகப்பெரும் அதிர்வுகளை உருவாக்குகிறது. மும்பையில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அது வன்முறை நிகழ்வாக மாறுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு எத்தகைய அச்சத்தில் மும்பை உறைந்திருந்ததோ அந்நிலைக்கு மீண்டும் மும்பை சென்றது. மும்பை இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்பது நமக்குத் தெரியும். மும்பையின் அச்சநிலை இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கவல்லது. அவ்வன்முறைக்கு மறுநாட்களில் மஹாராஷ்டிராவின் இரு வலதுசாரி கட்சிகளும் நடத்திக் காட்டிய பொதுக்கூட்டங்களிலும் பாசிசக் கருத்துகள் உதிர்க்கப்பட்டன. பீகார் மாநில போலீஸ்காரர்கள் மிரட்டப்பட்டனர். பதிலுக்கு பீகார் மாநிலத்தின் அரசியல்வாதிகள் தாக்கரேக்களின் பூர்வீகமே பீகார்தான் என்று தொல்பொருள் ஆராய்ச்சி செய்தனர். மற்றொருபுறம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியாவின் தெற்குப்பகுதியில் வாழும் வட-கிழக்கு மக்கள் மிரட்டப்பட்டனர். அதன் விளைவு அம்மக்களின் பெரும் இடப்பெயர்ச்சி. பிரிவினைக்குப் பிறகான மிகப்பெரும் இடப்பெயர்ச்சி.
இந்தியாவில் நடைபெறும் கலவரங்கள் அனைத்தும் மதரீதியான பரிமாணத்தை மிக விரைவில் அடையும் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தும். முதலாவதாக மதம் ஒரு வன்முறை நிகழ்வின் வீரியத்தை அதிகரிக்கவல்லது. வன்மத்தை அதிகரித்து அதைக் கொண்டிருப்பவர்களை பைத்திய நிலைக்கு கிறங்கடிக்கும் ஆற்றல் மதத்துக்கு உண்டு. ஒரு வன்முறை நிகழ்வுக்கு மதத்தை அடிப்படையாக்கினால் அவ்வன்முறைக்குப் பொறுப்பானவர்கள் எளிதில் தங்கள் குற்றங்களிலிருந்து விடுபடலாம். அல்லது மதம் தக்க பாதுகாப்பை அவர்கள் கேட்காமலேயே அளிக்கும். உலகத்து மனிதர்களின் மனங்களைப் பண்படுத்தத் தோன்றியதாக விளக்கப்படும் மதம் இன்றைக்கு உலகின் ரத்த ஆறுகளுக்கு ஊற்றுக் கண்களுமாக அமைந்து போனதை யாரும் மறுக்கமுடியாது.
இந்தியாவிற்குள் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் இஸ்லாமிய மக்களின் பரவலைப் பற்றி அறிய இந்திய வரலாற்றை நாம் கூர்ந்து நோக்கவேண்டும். இந்தியப் பிரிவினை நடத்திய ஊழிக்கூத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். முதலாவது ஆங்கிலேய-பர்மியப் போரில் ஆங்கிலேயர்கள் வென்றதன் அடிப்படையில் 1826-ல் ஆங்கிலேயர்கள் பர்மாவுடன் செய்துகொண்ட 'யாண்டாபூ' ஒப்பந்தத்தின்படி அஸ்ஸாம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு அஸ்ஸாமின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. காலனியாதிக்கவாதிகளின் லாபவெறி அஸ்ஸாமையும் விடவில்லை. அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேயிலைத் தோட்ட முதலாளிகள் ஆங்கிலேயர்களாக இருந்தார்கள். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு மிகப் பெரும் எண்ணிக்கையில் வேலையாட்கள் தேவைப்பட்டார்கள். இந்நேரத்தில் தமிழகத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய இலங்கை அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதையும், இலங்கை சுதந்திரம் அடைந்தபின்பு அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு நிராதரவாக விடப்பட்டார்கள் என்பதையும் அவர்களில் ஒரு பகுதியினர் தமிழகத்திற்கு திருப்பியனுப்பப்பட்டனர் என்பதையும் மிக்க வேதனையோடு நாம் நினைவு கூர வேண்டும்.
1905-ல் வங்காளப் பிரிவினைக்கு முன்னர் அஸ்ஸாமும், கிழக்கு வங்காளமும் ஒரே மாநில அலகில் இடம் பெற்றிருந்தபோது முஸ்லீம்களின் அஸ்ஸாமியக் குடியேற்றங்கள் தீவிரமடையவில்லை. அதன் பிறகு கிழக்கு வங்காள மக்களை (இஸ்லாமியர்களை) அஸ்ஸாமில் குடியமர்த்தும் வேகம் அதிகரித்தது. 1905-க்குப் பிறகான காலத்தில் ஏறத்தாழ 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் கிழக்கு வங்க இஸ்லாமிய மக்கள் அஸ்ஸாமில் குடியேறினர் என்றும் இது அன்றைக்கு அஸ்ஸாமின் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கிலிருந்து ஆறில் ஒரு பங்கு அளவு வரை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சமீந்தாரி ஆட்சி முறையும், பர்மனென்ட் செட்டில்மெண்ட் முறையும் வங்காளத்தை பஞ்சம், பஞ்சமாக சிதைத்துப் போட்டிருந்த காலம் அது. வங்காளக் குடியானவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும், நிலம் தேடி, பிழைப்பு தேடி இந்தியாவின் எப்பகுதிக்கும் செல்ல அவர்கள் அணியமாகவிருந்தார்கள் என்பதும் வரலாறு.
அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா நதிக்கரையில் செழிப்பான வனங்களும், மேய்ச்சல் நிலங்களும் அபரிதமாக இருந்தன. அவ்வனப்பகுதிகளிலும், மேய்ச்சல் நிலங்களிலும் பாரம்பரியமாக வசித்து வந்த போடோ இனப் பழங்குடிகளினால் எவ்வித லாபமும் ஆங்கிலேய முதலாளிகளுக்குக் கிடைக்கவில்லை. காரணம் போடோ மக்கள் பழங்குடிகளுக்கே உரித்தான பயிரிடு முறையை (shifting cultivation) பின்பற்றி வந்தனர். அது அம்மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்றியதே தவிர உபரி உற்பத்தியை அவர்கள் மூலம் பெற வாய்ப்பில்லை என உணர்ந்த ஆங்கிலேய முதலாளிகள் உபரி மக்கள்தொகையைக் கொண்ட வங்காள மக்களைக் குடியேற்றத் தொடங்கினர். ஆங்கிலேயர்களின் லாபவெறிதான் பிரதான காரணம் என்றாலும் அன்றைக்கு இருந்த வங்காளத்தின் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையும் இக்குடியேற்றத்திற்குப் பெரும் உதவி செய்தது. போடோ பழங்குடிகளின் மற்றுமொரு பண்பையும் நாம் காணவேண்டும். காலம் காலமாக தாங்கள் பயன்படுத்தி வந்த விளைநிலங்களை, மேய்ச்சல் நிலங்களை தங்களுடையது என்று அவர்கள் என்றும் உரிமை பாராட்டியது கிடையாது. வனங்கள் முழுவதையுமே தங்கள் பயன்பாட்டில் வைத்திருந்தாலும் வனம் என்றைக்கும் அழிந்தது கிடையாது. இந்தியா முழுவதும் இன்று பழங்குடி மக்களினங்கள்தான் இருக்கும் சொற்ப வனங்களைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இன்னமும் காப்பாற்றி வருகிறார்கள். அவ்வனங்களுக்குக் கீழே இருக்கும் கனிம வளங்களைக் கொள்ளைக் கொண்டு போவதற்கு வசதியாக அரசு அப்பழங்குடிகளின்மீது பச்சைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அஸ்ஸாமில் குடியேறிய இஸ்லாமியர்களை தொடக்கத்தில் அஸ்ஸாமியர்கள் வரவேற்றனர். அஸ்ஸாமின் வளர்ச்சியில் அவர்கள் பங்கு செலுத்தினர். கிழக்கு வங்காள முஸ்லீம்களின் குடியேற்றத்தை ஒரு கட்டத்தில் அச்சத்தோடு நோக்கிய அஸ்ஸாமியர்கள் குடியேற்றப் பகுதிகளில் ஒரு எல்லை வரை மட்டுமே அவர்கள் குடியமர்த்தப்படவேண்டும் என்ற Line System முறையைக் கொண்டுவந்தனர். 1920களில் Line System அமுல்படுத்தப்பட்டது. இம்முறையினால் இஸ்லாமியர்களின் குடியேற்றங்கள் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. 1939-ல் காங்கிரஸின் பர்டோலோய் அமைச்சரவையின் ராஜினாமாவையடுத்து முஸ்லீம் லீக் உதவியுடன் பதவியேற்ற சையத் முகம்மது சதுல்லா Line System முறையை ஒன்றுமில்லாமல் ஆக்கினார். கிழக்கு வங்க இஸ்லாமியர்களைத் தொடர்ச்சியாகக் குடியேற்றம் செய்தார். 1942-ல் மீண்டும் பதவிக்கு வந்த சதுல்லா, "போருக்கு உதவ அதிகமான உணவை விளைவிக்கவேண்டும்" என்றத் திட்டத்தின்கீழ் நவ்காங், டார்ரங், காம்ரூப் மாவட்டங்களின் வனப்பகுதிகளையும், மேய்ச்சல் நிலங்களையும் குடியேற்றங்களுக்காகத் திறந்துவிட்டார். சதுல்லாவின் இத்திட்டத்தை "Grow More Muslims" என்று வேவல் பிரபு அழைத்தார். 1940 வாக்கில் கீழ் அஸ்ஸாமின் பார்பீட்டா கோட்டத்தின் இஸ்லாமியர்களின் தொகை 49 சதவீதமாக மாறியது. 1911-ல் இது 0.1 சதவீதம் மட்டுமே. சுதந்திரத்திற்குப்பின்பு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசிலும், அஸ்ஸாம் இயக்கத்திற்குப் பின்னர் ஆட்சியைப் பிடித்த அசாம் கனபரிசத் அரசிலும் போடோ பழங்குடிகளின் வாழ்வுரிமைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
குடியேறிய இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் அஸ்ஸாமிய மொழியைக் கற்று, அஸ்ஸாமிய இஸ்லாமியர்களாயினர். இந்நிகழ்வுதான் இயல்பாகவும் இருக்கமுடியும். மொழியால் அவர்கள் அஸ்ஸாமியராயினர். தமிழகத்திலும் கூட மராட்டிய, நாயக்கர் ஆட்சிக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான கன்னடர்களும், தெலுங்கர்களும், மராட்டியர்களும் குடியேறினர். தமிழ் பயின்ற அவர்கள் இன்று அயலவர்கள் என்று பிரித்தறியப்பட முடியாதவர்களாக உள்ளனர். ஒரு தேச உருவாக்கத்திலும் சரி, ஒரு சமூக உருவாக்கத்திலும் சரி மொழி வகிக்கும் பங்கை நாம் நிராகரித்துவிட முடியாது. அதுபோல மதம் என்ற ஒன்று ஒரு தேச உருவாக்கத்திற்கோ, ஒரு சமூக உருவாக்கத்திற்கோ உதவி செய்துவிட முடியாது. மதம் என்பது தேச, சமூக உருவாக்கங்களுக்கு அடிப்படையாக இருக்குமானால் பாகிஸ்தானும், பங்களாதேஷும் பிளவு பட்டிருக்காது. ஐரோப்பாவின் பல தேசங்கள் ஒரே நாடாகத் தான் இருந்திருக்கும். எனவே தான் அஸ்ஸாம் மாநிலத்தில், அஸ்ஸாம் சமூகத்தில் இஸ்லாமியர்களும் என்றைக்குமே பிரிக்கமுடியாத ஒரு அங்கம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. போடோ இனத்தவர்களின் நிலமும், வனமும், அவற்றில் அவர்களுக்குரிய உரிமையும் எவ்வளவு நிதர்சனமான உண்மையோ, அந்த அளவுக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் நீண்ட காலத்துக்கு முன்னரே குடியேறிய இஸ்லாமியர்களுக்குமான உரிமையும் உண்மை.
தங்களின் ஒரே வாழ்வாதாரமான வனங்களும், மேய்ச்சல் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டே வருவதை உணர்ந்த போடோ மக்கள் தனி மாநிலம் கேட்டுப் போராட்டம் தொடங்கினர். தொடக்கத்தில் மத்திய, மேற்கு அஸ்ஸாம் நிலப்பகுதிகளை ஒருங்கிணைத்து அங்கு வசிக்கும் அனைத்துப் பழங்குடி மக்களுக்குமான ஒரு தனி மாநிலம் வேண்டும் எனத் தொடங்கப்பட்ட இப்போராட்டம், நாளடைவில் மிஷிங் மற்றும் ராஃபா இன மக்களின் எதிர்ப்பையடுத்து போடோ இனத்துக்கான தனி மாநிலக் கோரிக்கையாக மாறியது. தாங்கள் கோரிய தனி மாநில நிலப்பரப்பில் போடோ இனமக்கள் மிகப் பெரும் பழங்குடி இனத்தவராக இருந்தபோதிலும் அவர்கள் பெரும்பான்மையினராக இல்லை. தனிமாநில இயக்கம் வன்முறையில் இறங்கியது. அன்றைய அஸாம் கனபரிசத் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய காங்கிரஸ் அரசு போடோ பிரிவினையை ஊக்குவித்தது. மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தபிறகு போடோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்தத்தின்படி அரசியல் சட்டத்தின் ஆறாம் பிரிவு திருத்தப்பட்டு போடோ தன்னாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இக்கவுன்சிலின் மொத்தமுள்ள 46 இடங்களில் 30 இடங்கள் போடோ இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆட்சிப்பிரதேசத்தில் போடோ அல்லாத மீதம் 70 சதவீத மக்களுக்கு மீதம் 16 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டன. பழங்குடி அல்லாத மக்களின் நில உரிமைகளைப் பாதுகாக்க ஒப்பந்தத்தில் ஷரத்துகள் இருந்தாலும் அந்த ஷரத்துகள் தங்களுக்கு எதிரானவை என போடோக்களும், அந்த ஷரத்துகள் நடைமுறையில் மதித்து செயல்படுத்தப்படவில்லை என போடோ அல்லாத மக்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளனர்.
போடோ பழங்குடி மக்களுக்கும், குடி பெயர்ந்த இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மோதல்கள் கடந்த பல்லாண்டுகளாக தொடர்ந்து வந்திருக்கிறது. அஸ்ஸாம் கிளர்ச்சியின்போது தற்போதைய மாரிகோவான் மாவட்டத்தின் நெல்லீ என்னுமிடத்தில் 1983, பிப்ரவரி 18ல் ஒரே நாளில் வங்காள இஸ்லாமிய குடியேற்ற மக்கள் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக 1800 பேர் பழங்குடி மக்களால் கொல்லப்பட்டனர். 1993 அக்டோபரில் நடைபெற்ற கலவரத்தினால் இடம்பெயர்ந்த 4000 இஸ்லாமியக் குடும்பங்கள் இன்னமும் உதவி முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். 1994ல் பார்பீடா மாவட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் போடோக்களும், இஸ்லாமியர்களுமாக 113 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்திருக்கிறார்கள். 2008 அக்டோபரில் டார்ரங், உடல்குரி மாவட்டங்களில் நடைபெற்ற கலவரங்களில் இரு தரப்பிலும் 64 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இரண்டு லட்சத்திற்கும் பேற்பட்ட மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள். இப்படியான ஒரு தொடர்ச்சிதான் சமீபத்தியக் கலவரங்களும்.
போடோக்களின் நியாயமான உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்துகள் இருக்கமுடியாது. அதேபோல் போடோ தன்னாட்சிப் பிரதேசத்துக்கு அரசியல் சாசனத்தின் ஆறாவது பிரிவு (இந்தியப் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் ஆட்சித் திறம் பற்றியது) அதிகாரத்தை வழங்கியது பற்றியும், அக்கவுன்சிலில் போடோக்களுக்கு உள்ள மிக அதிகப்படியான உரிமையை மறுபரிசீலனை செய்வது பற்றியும் மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுப்பது அவசியம். அதோடு மார்ச், 25, 1971 (பாகிஸ்தான் அரசு டாக்காவில் நடவடிக்கை தொடங்கிய நாள்)க்குப் பிறகு பங்களாதேஷிலிருந்து அஸ்ஸாமில் குடியேறிய மக்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதும் மிக மிக அவசியம். இத்தகைய இரு முனை நடவடிக்கைகள் போடோக்களுக்கும், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவரும் இஸ்லாமிய மக்களுக்கும் இணக்கத்தை ஏற்படுத்தும். போடோ மக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்குமான இக்கலவரம் ஒரு இந்து முஸ்லீம் கலவரமாக எவரும் கருதிவிடவும் கூடாது.
போடோக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே நடைபெறும் கலவரங்களில் போடோ அல்லாத அஸ்ஸாமியர்கள் ஒருபோதும் இஸ்லாமியர்களை கைவிட்டுவிடக்கூடாது என்பதை மிகவும் அழுத்தமாகக் குறிப்பிடவேண்டும்.
- செ.சண்முகசுந்தரம், தஞ்சாவூர்.
கிழக்கு மாகாணசபையின் தவிசாளராக சிங்கள உறுப்பினராக ஆரியவதி கலபதி என்ற சிங்களப்பெண்ணை முஸ்லீம்கள் முன்மொழிந்து தெரிவு செய்துள்ளனர். கிழக்கை சிங்களவர்கள ுக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைகள ின் அங்கமாக கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட முஸ்லீம்கள் இதனைச் செய்துள்ளனர்.
கிழக்கு மாகாணசபையின் முதலாவது கூட்டம் இன்று திருகோணமலையில் ஆரம்பமானது.க ூட்டம் ஆரம்பமானதும் கிழக்கு மாகாண தவிசாளர், மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. கிழக்கு மாகாணசபையின் தவிசாளராக ஆரியவதி கலபதி என்ற சிங்களப்பெண்ண ை கிழக்கு மாகாண முதலமைச்சரான நஜீப் முன்மொழிய முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஜெமீல் வழிமொழிந்தார். பிரதி தவிசாளராக சுபைர் தெரிவு செய்யப்பட்டார ். தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிர ுக்கும் ஆரியவதி, மோசடிக் குற்றச்சாட்டில ் கைது செய்ய்ப்பட்டு விளக்கமறியல ில் இருந்த இவர் பிணையில் விடுவிக்கப்பட ்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
படம்:
www.thinakkathir.com/?p=41976
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தொடர்ந்து தமிழர்களின் முதுகில் குத்துவது மட்டுமல்ல, தமிழர்களை ஓரங்கட்ட சிங்களவர்கள ுக்கு உதவுகின்றனர் என்பது தான் உண்மை.
தவுஹித் ஜாமத் தலைவர் ஜெய்னுலாப்தீன் ஈழப் பிரச்சனையில் எந்த போராட்டம் நடத்தவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களும் ஈழப் போராட்டத்தை புறகணிப்பு செய்தனர் என்ற மாயை ஏற்படுத்துகிறார ். ஜெய்னுலாப்தீன் போன்றவர்கள் மதவாதிகள் (உங்களைப் போன்ற). அவர்களுக்கு அவர்களுடைய மதமும், அதனை சுற்றியுள்ள விசயங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரியும். யதார்த்த வாதத்திற்கு அவர்கள் வரமாட்டார்கள் (உங்களைப் போன்ற).
அப்படி பார்த்தால் இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் ஈழப் பிரச்சனையில் பெரிய போராட்டம் நடத்தவில்லை. அதனை ஒட்டுமொத்த இந்துக்களின் மௌனம் என கணக்கில் கொள்ளலாமா ? ஆனால் அதுவே, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் எல்லா போராட்டத்திலும் கலந்து கொண்டார் என்பதும் எங்களுக்கு தெரியும்.
ஈழப் பிரச்சனையில் அமைப்பாக, கட்சிகளாக முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளன என்பதை நீர் அறிவீரா திரு.விசயன் அவர்களே ! பேராசிரியர் ஜவஹிருல்லாவின் தலைமையில் மக்கள் மனித நேய கட்சி போராட்டம் நடத்தியுள்ளது, பல ஆண்டுகளாக தமிழ் தேசியம் பற்றிய பத்திரிகை நடத்தி வரும் தமிழ் முழக்கம் சாகுல் அமீது பற்றி தெரியுமா ? .தோழர் நசுருதீன் அவர்களின் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய நண்பர்களின் கூட்டணியின் போராட்டம் பற்றி தெரியுமா ? இப்படி எல்லாவற்றையும் மறைத்து விட்டு பொத்தம் பொதுவுவாக,
ஓர் குறிப்பிட்ட அமைப்போ, குறிப்பிட்ட சதவிகித மக்களோ ஈழப் பிரச்னைக்கு எதிராக இருந்தார் என்பதை ஒட்டுமொத்த இனத்தின் பழியாக கொண்டுவரும் இந்துத்துவ மாயை உங்களுக்கு நன்றாகவே கை கொடுக்கிறது. தொடரட்டும் உங்கள் கோயாபல்ஸ் பொய் உரைகள்......
என்னிடம் முஸ்லீம்களுக்க ுமெதிராக எந்தக் காழ்ப்புணர்வும ் கிடையாது. என்னுடைய சண்டை, சச்சரவு, வாக்குவாதம் எல்லாமே தமிழைப் பேசிக்கொண்டு, தாம் தமிழரல்ல என மறுதலித்துக் கொண்டு, தமிழர்களைக் கழுத்தறுக்க சிங்களவர்களுக ்கு உதவும் இலங்கையிலுள்ள தமிழ்பேசும் முஸ்லீம்களிடம ் மட்டும் தான். அசாம் பிரச்சனையை நான் இந்து முஸ்லீம் பிரச்சனையாகப ் பார்க்கவில்லை. அசாமில் அத்து மீறிக் குடியேறிய பங்களாதேசி இந்துக்களும் நாடுகடத்தப்ப ட வேண்டியவர்கள ே. ஜெய்னுலாப்தீன் ஈழத்தமிழர்க ளுக்கு எதிரானவர், சிங்கள அரசின் அடிவருடி என்பதை அவரது youtube வீடியோக்களைப் பார்த்தவர்கள ுக்குத் தெரியும். அதனால் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் அனைவரும் ஈழத்தமிழர்க ளை எதிர்ப்பதாக நான் கூறவில்லை. உதாரணத்துக்கு இயக்குனர் அமீர் அவர்கள் ஈழத்தமிழர்க ளின் போராட்டத்தை ஆதரித்தவர். ஆனால் ஜனாப்.ஜாவாகிரு ல்லாவும் ஜெய்னுலாப்தீனும ் ஆரம்பகால நெருங்கிய நண்பர்கள். ஒத்த கருத்துள்ள வஹாபிஸ்டுகள் என்பதை யாவரும் அறிவர். த.மு.மு.கட்சி யின் வளர்ச்சி தமிழர்களுக்க ும் முஸ்லீம்களுக்க ும் தமிழ்நாட்டில் பிளவையேற்படுத ்தும், இப்பொழுது தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத் தும் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் த.மு.மு.கட்சிய ின் வஹாபிய கொள்கைகளின் படி தொடர்ந்து அரபுமயமாக்கப ்பட்டால் இலங்கையில் தமிழ்- முஸ்லீம் ஒற்றுமைக்கு என்ன நடந்ததோ அதே நிலைமையுண்டாகும ் என்பது என்னுடைய கருத்தாகும், அப்படியான மாற்றங்கள் கடந்த சில வருடங்களில் நடந்துள்ளது என்பதை நேரடியாகக் கண்டிருக்கிறேன ். ராமகோபாலன் போராட்டம் நடத்தினாலும் ஒன்று தான் நடத்தாவிட்டால ும் ஒன்று தான். இலங்கையில் நடப்பது இந்துக்களின் போராட்டமல்ல, தமிழர்களின் விடுதலைப் போராட்டம். இலங்கையில் தமிழ்பேசும் முஸ்லீம்கள் தான் தாம் தமிழர்களல்ல என்று தமிழர்களின் எதிரிகளுக்கு உதவுகிறார்களே தவிர, இந்துக்களோ, கிறித்தவர்கள ோ தாம் தமிழர்களல்ல என மறுக்கவில்லை. என்னை மதவாதி, இந்துத்துவா எனும் உங்களைப் போன்ற மதத்தை அடையாளமாகக் கொண்டவர்களின ் முட்டாள் தனத்தை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. என்னிடம் இந்துத்துவாவும் இல்லை, எந்த இந்து மாயையும் கிடையாது. மத அடிப்படையில் தமிழினத்தைப் பிரிப்பதை நான் விரும்பவில்லை. இலங்கையில் பல நூற்றாண்டுகளாக , தாயும் பிள்ளையும் போல், புட்டுக்கு தேங்காய்ப்பூ போட்டது போல், முஸ்லீம் கிராமங்களும், தமிழ்க்கிராமங ்களும் அடுத்தடுத்து ஒற்றுமையாக வாழ்ந்தனர்.ஆண் டுக்கொரு முறை ஊர்நடுவில் பந்தல் போட்டு, சீறாப்புராணம் பாடி, பொங்கலிட்டு இஸ்லாமியத் தமிழர்களாக வாழ்ந்த முஸ்லீம்கள் அரபுமயமாக்க ப்பட்டதால் தமிழர்களுக்க ிடையில் மேலும் பிளவு ஏற்பட்டது போன்ற நிலை தமிழ்நாட்டிலும ் ஏற்படலாம் அதற்கான அறிகுறிகளைத் தமிழ்நாட்டில் இப்பொழுதே காணலாம்.
Attack of Bangladesh High Commission with Stones by Buddhist monks www.youtube.com/.../
ஈழ போரின் அழிவிற்கு இலங்கை முஸ்லிம்கள்தான் காரணம் என்றும், அவர்கள் மூலம்தான் முஸ்லிம் நாடுகள் ஆயூதவி செய்தது என்று திரு.விசயனின் வாதத்திற்கே வருவோம். திருகோணமலை ஆசியாவின் முக்கியமான ராணுவதளம், எண்ணெய் வளம் இல்லாவிட்டாலும் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை அச்சம் உண்டாக்க வேணும் என்ற எண்ணத்தில் இலங்கை மீது அமெரிக்காவிற்கு எப்போதும் ஓர் கண் உண்டு. அதற்க்கு இலங்கை அரசும் அப்போது தளம் அமைக்க விருப்பம் தெரிவித்தது. ஆனால் இந்திரா காந்தி ஆட்சியில் இருந்த சமயம், தனக்கு கீழ் உள்ள நாட்டில் அமெரிக்கா ஆளுமை கொள்வது தனக்கு ஆபத்து என்ற நினைத்த காரணத்தில் தான் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டினார். ஆனால், இலங்கை அரசு முரண்டு பண்ணவே, அதன் பிந்தான் விடுதலை புலிகள் போன்ற போராளி குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்க ரகசிய ஏற்பாடு செய்தார் இந்திரா.
அடுத்து, சீனா தன்னுடைய பலத்தை ஆசியா எங்கும் நிலை நிறுத்தவும், ஆப்கானிஸ்தான் வரை பரவியிருக்கும் அமெரிக்காவின் ஆளுமையை ஒடுக்கவுமே, இலங்கையை தேர்ந்தெடுத்தது , இலங்கையும் சீனாவிற்கு ரத்தன கம்பளம் விரித்து, புலிகளை ஒடுக்க சீனாவின் மூலம் ஆயுதங்கள் இறகுமதி செய்தன.
திரு.விசயன் அவர்களே, நடந்த முடிந்த இன அழிப்பிற்கு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு, சீனா, ரஷ்யா, வியட்நாம், சவூதி அரேபியா, ஈரான், இஸ்ரேல் மற்றும் உலக தாத்தா அமெரிக்காவும் ஒவ்வொரு வகையில் அவர்களின் எதிர்கால லாப நோக்கோடு கூட்டு பங்கு கொண்டுள்ளன. இவற்றில் எத்தனை நாடுகள் முஸ்லிம்கள் நாடுகள் என்று படிக்கும் அனைவருக்கும் தெரியும்.
இங்கு முஸ்லிம் மக்களுக்கு மட்டும்தான் முஸ்லிம் நாடுகள் உதவும் என்ற உங்கள் அதி புதிதிசாலித்தனம ான அறிவிற்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
பாலஸ்தீன பிரச்சனை ஆகட்டும், சாதம் உசேன் கொலை ஆகட்டும், இங்கு தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவும், எதிர்கால லாப நோக்கும் மட்டும் அந்த அந்த நாடுகளுக்கு முக்கியம். அதன் வகையில் சீனாவிற்கு உதவும் இலங்கையும், அமரிக்காவிற்கு உதவும் சவூதி அரேபியாவும் ஒன்று.
பொதுவாக இணைய படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, ஏகாதிப்பத்திய நாடுகள் தங்களுக்கு தேவையான வளங்களை சுரண்ட வளரும் நாடுகளை எந்த வகையிலும் தங்கள் கட்டுக்கு கொண்டுவரும். அது போல், வளரும் நாடுகளில் இருக்கும் அரசு ஆட்சியாளர்கள் தங்களுக்கு லாபமான விசயம் எது என்று, அது தன் நாட்டையும் நாடு மக்களையும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு தாரை வார்த்து கொடுக்கவும் தயங்காத சுய நல ஆட்சியாளர்கள் இருக்கும் வரை, ஒவ்வொரு நாட்டிலும் இந்த இன அழிப்பு தொடரும்.(நன்றி திரு.கலை)
அது எண்ணெய் வளத்துக்கான ஈராக், ஆப்கானிஸ்தான் போராகட்டும், சொந்த நாடு மக்களை கொன்று கனிம வளங்களை திருடும் இந்தியாவாகட்டும ், மொத்த நாட்டையும் பிற நாடுகளுக்கு பங்கு போட்டு கொடுத்துக் கொண்டிருக்கும் இலங்கை ஆகட்டும் ஒன்றுதான்.
பறிப்பவன், பறிகொடுத்தவன் என்பாதுதான் கணக்கு. பொதுவான இந்த விசயங்கள் உங்களைப் போன்ற அதி மேதாவிகளுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் அது பற்றி வாய் திறக்க மாட்டீர்கள். என்னென்றால் உங்களுக்கு இனவாதம் ஓர் வியாபாரம். ஓர் லாபம். திரும்ப திரும்ப ஓர் குறிப்பிட்ட சமூகத்தையே மொத்த இன அழிப்பிற்கும் காரணம் கற்பிக்க பட்டு ஒன்றாக வாழும் மக்கள் இடையே பிரிவினை ஏற்படுத்தும் இலங்கை வாழ் ராஷ்டிரிய சுயம் சேவக்குகள் நீங்கள்.
உங்களுக்கு வேண்டியது மக்களுக்கு இடையேயான பதட்டமும், பீதியும். இத்தனை வாதம் வைத்த நீங்கள் நடந்து முடிந்த இன அழிப்பிற்கு பின் எடுக்க வேனிய நடவடிக்கைகள் கூறித்து இன்னும் பேசவில்லை. அது உங்களுக்கு தேவையும் இல்லை. ஏனென்றால் நீங்கள் ஓர் இன வியாபாரி.
www.keetru.com/.../
RSS feed for comments to this post