‘காதல் அடைதல் உயிர் இயற்கை’ என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். பறவைகளிலும் விலங்குகளி லும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் ஆணும் பெண்ணும் ஈர்ப்புக்குள்ளாகின்றன. எதிர் பாலினத்தின் மீதான இந்த ஈர்ப்பு இனப்பெருக்கத்தின் இன்றியமையாத கூறாக இயற்கையில் இலங்குகிறது. மனிதகுலத்தின் தொடக்கக் காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இத்தகைய ஈர்ப்பு விலங்குகளின் வாழ்நிலையிலிருந்து மேம்பட்டதாக இருக்கவில்லை.

ஆனால் மனித இனம் நாகரிகம் அடைய அடைய, இந்த ஈர்ப்பு வெறும் உடல் சார்ந்தது என்ற நிலை யிலிருந்து மேம்பட்டுக், காதலாக மலர்ச்சி பெற்றது. ஏடறிந்த வரலாற்றுக் காலம் முதல் காதல், மனித வாழ்வில் ஊடும் பாவுமாக இரண்டறக் கலந்துள்ளது. கிரேக்கத்தில் ஹோமர் எழுதிய ‘இலியட்’, மற்றும் நம் சங்க இலக்கியத்தில் அகத்துறைப் பாடல்கள் முதல் இன்று வரை காதல் மனிதனின் படைப்பிலக்கியத்திலும் பிறகலைகளிலும் கருப்பொருளாக இருந்து வருகிறது.

ஆனால் மனிதசமுதாயம் திட்டவட்டமான தன்மை யில் வர்க்கங்களாகப் பிளவுண்டபின் - ஆண்டான்-அடிமை, நிலப்பிரபு-பண்ணையாள், பணக்காரன்-ஏழை, முதலாளி-தொழிலாளி முதலான ஏற்றத்தாழ்வு கள் உண்டானபின், ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக் கும் இடையே இயல்பாக எழும் காதலுக்குப் பலவகை யான கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. இவற்றுடன், உலக அளவில் மதங்கள் பெருந்தடை யாகச் செயல்பட்டன. இந்தியாவில் இந்துமதத்தில் - அதன் ஆணிவேராக உள்ள நால்வருணமும், அவற்றி லிருந்து கிளைத்த ஆறாயிரத்துக்கு மேற்பட்ட உட்சாதி களும், சாதியை மறுத்தெழுகின்ற காதலுக்கு எதிராக உள்ளன.

இத்தகைய தடைகளால் வரலாற்றில் எண்ணற்ற காதல் நெஞ்சங்கள் நெருப்பில் பொசுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில இலக்கியத்தில் சாகா இடம்பெற்றுள்ளன. ரோமியோ-ஜூலியட், லைலா-மஜ்னு, சலீம்-அனார்க் கலி, அம்பிகாபதி-அமராவதி என நீண்ட பட்டியல் இருக்கிறது. இப்பட்டியலில் திவ்யா-இளவரசன் காதலும் இப்போது இடம்பெற்றுவிட்டது.

பெற்றோர் விரும்பாவிட்டால், ஒரே சாதியில் பிறந்தவர்களின் காதலுக்கும் கடும் எதிர்ப்பு ஏற்படு கிறது. ஏனெனில், ‘பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணம்’ என்பதே சமூக நடைமுறையாக இருக் கிறது. இந்நிலையில் ஓர் இளம் ஆணோ அல்லது பெண்ணோ தன் சாதி அல்லாத ஒருவரைக் காதலிப் பதும், திருமணம் செய்துகொள்ளுவதும் அவர்கள் சார்ந்த இருசாதியினரால் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகத்தாலும் கொடியக் குற்றமாகக் கருதப்படுகிறது. இதில் ஆண் தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞனாக இருப்பின், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிடுகிறது.

இந்துமதத்தின் அச்சாணியாக இருப்பது, பிறவி யில் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதி அமைப்பே யாகும். அதனால்தான் பெரியார், ‘இந்து மதம் சாதியைக் காப்பாற்றும் மதம்’ என்று சொன்னார். ஒரே சாதிக்குள் திருமணம் என்கிற அகமண முறையில் தான், அதன் உயிரியக்கம் இருக்கிறது.

சாதி ஒழிப்புக்காக அய்ம்பது ஆண்டுகளுக்குமேல் அயராது பாடுபட்ட பெரியார் வாழ்ந்த தமிழ்நாட்டில் இன்றும் 99 விழுக்காடு திருமணங்கள் ஒரே சாதிக்குள் தான் நடக்கின்றன. எனவேதான் ‘ஒவ்வொரு சாதியும் ஒரு சமூகமாக இயங்குகிறது’ என்று மேதை அம்பேத்கர் 1916ஆம் ஆண்டி லேயே கூறினார்.

கல்வி, வேலை, தொழில் முதலான காரணங்களால் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு, வெளியில் செல்லும் நிலை இப்போது வளர்ந்துவிட்டது. அதனால் ஆணும் பெண்ணும் சந் திக்கவும் பேசவும் பழகவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இவர்களில் சிலர் காதல் வயப்படுகின்றனர். மாமரத்தில் ஏராளமான பூக்கள் பூக்கின்றன. ஆனால் அவற்றுள் மிகச்சிலவே காயாகின்றன. அதுபோலவே பல்வேறு காரணங்களால் இளம்பருவத்தின் முதற்காதலில் பெரும்பாலானவை குறுகிய காலத்திலேயே உலர்ந்து உதிர்ந்து விடுகின்றன. ஏனெனில் கடற்கரையில் மண லில் சிறுவர்கள் வீடுகட்டி விளையாடும் விளையாட் டல்ல காதல். சிறிய அலைகூட, அந்த மணல்வீட்டை அழித்துவிடும். கடந்த காலத்தின் இனிய நினைவு களின் பட்டியலில் ஒன்றாக முதல் காதலின் நினைவும் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் தருமபுரி திவ்யா-இளவரசன் இணையர் தங்கள் காதலுக்காக, கடலில் கடும்புயலின் நடுவே படகைத் திறம்படச் செலுத்துவது போல் போராடினார் கள். மராட்டிய எழுத்தாளரான காண்டேகரின் சிறந்த புதினமான ‘கிரௌஞ்சவதத்’தில், வால்மீகி எழுதிய பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கும்.

“முன்இணையாகிய அன்றிலின்

மோகங் கொள் ஆணினைக் கொன்றனை

மன் நெடுநாள் இனி வாழ்கலை;

வாழ்கலை! வாழ்கலை! வேடனே!”

காதல் இணையில் ஆண் அன்றிலைக் கொன்ற வேடனைப் பழிதூற்றும் பாடல் இது! அந்த வேடனைப் போல், சாதிவெறியும், சாதி அடையாள ஆதாய அரசி யலும், திருமணம் செய்துகொண்டு கணவன்-மனைவி யாக வாழ்ந்த திவ்யா-இளவரசனைத் திட்டமிட்டுப் பிரித்து, இளவரசனைக் கொன்றுவிட்டன.

தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் அருகில் உள்ள செல்லன்கொட்டாய் சிற்றூரில் வன்னியர் சாதியைச் சேர்ந்த நாகராசன் மகள் திவ்யா. இவர் செவிலியர் பட்டப்படிப்பில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தார். இவரின் அகவை இருபது. அதே பகுதியைச் சேர்ந்த நத்தம் ஆதித்திராவிடர் குடியிருப் பில் இளங்கோ என்பவரின் 18 அகவை மகன் இளவரசன். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந் தார். நாள்தோறும் பேருந்துப் பயணத்தில் சந்தித்த திவ்யாவும் இளவரசனும் காதல் கொண்டனர். திவ்யா வின் குடும்பத்தினருக்கு இவர்களின் காதல் செய்தி எட்டியது. எனவே திவ்யாவிற்கு மணமுடிக்க வேறு மாப்பிளையைப் பார்த்தனர். அதனால் திவ்யாவும் இளவரசனும் 2012 அக்டோபர் 8 அன்று ஊரை விட்டு வெளியேறினர். திருப்பதியில் 14.10.2012 அன்று திருமணம் செய்துகொண்டனர். காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு கோரினர். அதன்பின் திவ்யா, இளவரசன் குடும்பத்தி னருடன் இருந்தார்.

சாதிவெறியர்கள் இவர்களைப் பிரிக்கத் திட்டமிட்டனர். இரண்டு சாதியினருக்கும் இடையே 7.11.12இல் நடந்த பேச்சு வார்த்தையில், ‘திவ்யா விரும்பி வருவதானால், அவரை அவரது குடும்பத்தார் அழைத்துச் செல்லலாம்’ என்று முடிவு செய்யப்பட்டது. திவ்யாவின் தாய் தேன்மொழி 7.11.2012 அன்று இளவரசன் உறவினர்கள் 20 பேர், தன் உறவினர்கள் 8 பேர்களுடன் சென்று திவ்யாவைத் திரும்பி வந்துவிடுமாறு அழைத்தார். திவ்யா வரமறுத்து விட்டார். இந்நிலையில் பஞ்சாயத்தின் போது, முற்பகலில், உற்றார் உறவினர் முன்னிலையில் காவல்துறை அதிகாரி பெருமாளின் இழிவான-‘மானம் போவுதுண்ணா, தூக்குப் போட்டுக் கிட்டு சாவேண்டா’ என்ற ஏளனப் பேச்சுகளால் மனமுடைந்திருந்த திவ்யாவின் தந்தை நாகராசன், 7.11.12 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

தங்கள் மனக்கொதிப்பை-சினத்தை வெளிப்படுத்து வதற்கான ஒருவாய்ப்பாக நாகராசனின் தற்கொலை யைப் பயன்படுத்தி, சுற்றுவட்டாரத்திலிருந்து வன்னி யர்களும் மற்ற வகுப்பினரும் ஒன்றுதிரண்டு ஆதித் திராவிடர்கள் வாழும் நத்தம், அண்ணாநகர், கொண்டம் பட்டி ஆகிய ஊர்களைத் தாக்கினர். 268 வீடுகள் தாக்கப்பட்டன. பல வீடுகள் முற்றிலுமாக எரிக்கப்பட்டன. வீட்டில் இருந்த தொலைக் காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி முதலானவை அடித்து நொறுக்கப்பட்டன. இரும்புப் பேழைகளை உடைத்து அவற்றில் இருந்த நகை, பணம் முதலானவை கொள்ளையடிக்கப்பட்டன. இத்தகைய தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்பது காவல் துறையினருக்கும், உளவுத் துறையினருக்கும் இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னரே தெரிந்திருந் தும் காவல்துறை இவ்வளவு பெரிய அழிவு, வேலை யைத் தடுக்கத் தவறிவிட்டது. இதற்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் திறமையின்மையும் ஒரு பெரிய காரணம் ஆகும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் சிற்றூர்களில் சாதி இந்துக்களுக் குக் கட்டுப்பட்டு அடங்கி ஒடுங்கிக்கிடந்த நிலைமையில் கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் பெரும் உடைப்பு ஏற்பட்டது. வேளாண்மைத் தொழில் நலிவடைந்ததாலும் இயந்திரமயமானதாலும், தாழ்த் தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் கல்வி பெற்றதாலும், தங்கள் ஊரைவிட்டு வெளியில் சென்று, நகர்ப்புறங் களில் பெரும் எண்ணிக்கையில் - குறிப்பாக இளை ஞர்கள் வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அந் தந்த ஊரில், சாதி இந்துக்களைச் சார்ந்து வாழும் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டதாலும், பொருளா தார நிலையில் ஓரளவு முன்னேறியதாலும் காலங்கால மாகத் தங்களை அழுத்தி வைத்திருந்த சாதியக் கட்டுப் பாடுகளை மீறிடத் துணிவது இயல்பேயாகும். ஆனால், இந்த நிலை, பொதுவாக, சாதி இந்துக்களிடையே வெறுப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. 7.11.12 அன்று நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் பேரழிவை உண்டாக்கியதற்கு இந்த மனநிலையே காரணமாகும்.

திவ்யா-இளவரசன் இல்வாழ்க்கையில் தொடர்ந்து சாதியப் புயல் வீசிக்கொண்டே இருந்தது.

*             2012 நவம்பர் 24 : தருமபுரி நீதிமன்றத்தில் திவ்யா, தான் கடத்தப்படவில்லை என்றும், இளவரச னுடன் விரும்பியே சென்றதாகவும் தெரிவித்தார்.

*             2013 மார்ச்சு 19 : திவ்யாவின் அம்மா தேன் மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் மகள் காணவில்லை என்ற அடிப்படையில் ஆட்கொணர்வு விண்ணப்பம் செய்தார்.

*             2013 மார்ச்சு 27 : உயர்நீதிமன்றத்திற்கு திவ்யா வந்தார். நீதிபதிகள் முன்னிலையில் இளவரசனுடன் வாழ விரும்புவதாகக் கூறினார்.

*             2013 சூன் 4 : ‘அம்மாவின் உடல்நிலை ஆபத் தாக இருக்கிறது’ என்று உறவினர்கள் தொலைப் பேசியில் அழைத்ததன் அடிப்படையில் திவ்யா தன் தாய்வீட்டுக்குச் சென்றார்.

*             2013 சூன் 6 : தான் பெரும் மனக்குழப்பத்தில் இருப்பதாகவும், தற்காலிகமாக அம்மாவுடன் வாழ விரும்புவதாகவும் திவ்யா உயர்நீதிமன்றத்தில் சொன்னார்.

*             2013 சூலை 1 : தாய் விரும்பினால் இளவரசனு டன் வாழ்வேன் என்று உயர்நீதிமன்றத்தில் கூறினார்.

*             2013 சூலை 3 : ‘இனி இளவரசனுடன் சேர்ந்து வாழப் போவதில்லை’ என்று செய்தியாளர்களிடம் திவ்யா கூறினார்.

*             2013 சூலை 4 : தருமபுரியில் இரயில் தண்ட வாளத்தின் அருகில் தலையில் அடிபட்டு இளவர சனின் இறந்த உடல் கிடந்தது. தற்கொலையா? கொலையா? என்ற விவாதம் இன்னும் நடை பெறுகிறது,

*             2013 சூலை 14 : இளவரசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திருமணம் செய்துகொள்ளாமல் ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வதை நீதிமன்றம் அனு மதிக்கிறது. ஆனால் திருமணம் செய்துகொண்ட திவ்யாவும் இளவரசனும் ஒன்றாக வாழக்கூடாது என்ற சாதிவெறி இளவரசனைக் கொன்றுவிட்டது; திவ்யாவின் வாழ்வையும் சீரழித்துவிட்டது. இளவர சனின் பெற்றோர் தம் மகனை இழந்தும், மருமகளை அழைக்க முடியாமலும் துன்புறுகின்றனர். திவ்யா, தந்தையையும், கணவனையும் இழந்து இடிந்து போய் உள்ளார். அவரை, அரசினரே பொறுப்பேற்றுப் படிக்க வைத்து நல்வாழ்வுக்கு வழி அமைப்பது நல்லது.

சாதியை மறுத்துக் காதலிப்போரும், திருமணம் செய்துகொள்வோரும், சாதியின் புனிதத்தை-பெரு மையைக் காப்பதற்காக என்ற பெயரால் கொல்லப் படுவது இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இவை ‘கவுரவக் கொலைகள்’ அதாவது, ‘சாதி கவுரத்தைக் காப்பாற்றுவதற்கான கொலைகள்-தற்கொலைகள்’ என்று கூறப்படுகின்றன. இந்திய அளவில் 2013இல் இதுவரை 13 கவுரவக் கொலைகள் நடந்துள்ளதாகப் பட்டியல் வெளியாகியுள்ளது. சாதி வேலியைத் தாண்டித் திருமணம் செய்து கொள்ளும் இணையரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருந்தால், அவர்தான் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்.

தஞ்சை மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பான கள்ளர் சாதியில் பிறந்த அபிராமி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, பேருந்துப் பயணத்தின் மூலம், மாரிமுத்து என்கிற ஆதித்திராவிட இளைஞனுடன் பழகினார். காதலர்களாயினர். அபிராமி யின் பெற்றோர் இதையறிந்து, 35 அகவையினரான குடிகாரத் தாய்மாமனுக்கு அபிராமியைத் திருமணம் செய்திட முயன்றனர். எனவே அபிராமி வீட்டைவிட்டு வெளியேறி, மாரிமுத்துவை 2010 செப்டம்பர் 16 அன்று திருமணம் செய்துகொண்டார். சென்னையில் வாழ்ந்த இவர்களுக்கு மகள் பிறந்தாள். அதனால் இவர்கள் மாரிமுத்துவின் பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பினார்கள். குழந்தையின் முதல் பிறந்த நாளை யொட்டி, ஒரு தங்கச் சங்கிலி அளிக்க விரும்புவதாக அபிராமியின் அண்ணன், தங்கள் வீட்டுக்கு வருமாறு, மாரிமுத்துவிடம் கூறினார். அவ்வாறு சென்ற மாரிமுத்து விடம் அபிராமியின் அண்ணனும் தந்தையும் கொன்று விட்டு, காவல்நிலையத்தில் புகலடைந்தனர். சாதி உணர்வு சாதிவெறி என்பது ஒரு மனநிலைதான். ஆனால் அது சில சமயம் கொலைவெறி பிடித்தாடுகிறது.

உள்துறை துணை அமைச்சர் ஆர்.பி.என். சிங், 2012ஆம் ஆண்டில் மட்டும் 333 கவுரவக் கொலைகள் நடந்திருப்பதாகப் புகார்கள் வந்திருப்பதாக நாடாளுமன் றத்தில் 18.12.2012 அன்று கூறினார். ஜாட் சாதியினர் அதிக அளவில் வாழும் மேற்கு உத்தரப் பிரதேசம், அரியானா, இராஜ°தான் ஆகிய மாநிலங் களில் ‘கவுரவக் கொலைகள்’ பெருமளவில் நடக் கின்றன. ‘கபாக்’ என்னும் சாதிப் பஞ்சாயத்துக்கூடி, இக்கொலை களை நிறைவேற்றுகின்றன. அரியானா மாநிலத்தில் கயித்தால் மாவட்டத்தில் ‘ரோர்’ (சுடிச) என்ற சாதி இந்து வான மீனா, சூரியகாந்த் என்ற தலித் இளைஞனை 8.4.2013 அன்று திருமணம் செய்து கொண்டார். அதனால் ரோர் சாதியினர் சூரியகாந்த் வாழ்ந்த தலித் குடியிருப்பை 13.4.2013 அன்று தாக்கினர். வீடுகளைச் சேதப்படுத்தினர். பொருள்களைக் கொள்ளையடித்தனர்.

ஏணிப்படிகள் போல் அமைந்துள்ள சாதி அமைப் பில் எல்லாச் சாதிகளிடமும், பிறப்பால் உயர்வு-தாழ்வு கருதும் பார்ப்பனியச் சிந்தனை படிந்துகிடக்கிறது என்று மேதை அம்பேத்கர் கூறியுள்ளார். இத்தாக்கம் சாதிப்படி நிலையில் கடைசிப் படியாக - ‘தீண்டப்படாத’ சாதியாகக் கருதப்படும் சாதிகளுக்கிடையிலும் ஊடுருவியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ‘பறையர்’ சாதிப் பெண் கோகிலாவும், அருந்ததியர் இளைஞன் கார்த்தி கேயனும் 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கோகிலா குடும்பத்தினர் இதை எதிர்ப் பார்கள் என்பதால் திருமணம் செய்துகொண் டதை இரகசியமாக இவ்விருவரும் வைத்திருந்தனர். 2012 ஆம் ஆண்டு இந்த உண்மை வெளிப்பட்டதும், கோகிலா தன் பெற்றோர் வீட்டில் மர்மமான முறையில் செத்தார். இது ஒரு கவுரவக் கொலையாகவே கருதப் படுகிறது (தி இந்து,13.7.2013).

இதுபோன்ற கவுரவக் கொலைகளில் பெரும்பாலா னவை குடும்ப அளவில் மட்டும் அறிந்த செய்தியாக மறைக்கப்படுகின்றன. பெண் ஒரு பணக்காரரின் மகள் என்றால், அல்லது மேல்சாதிக்காரி என்றால், தெருவில், ஊரில் மட்டும் கசமுசவென்று பேசப்படும் செய்தி யாக மட்டும் உள்ளன. ஆனால் திவ்யா-இளவரசன் காதல் திரு மணமும், அதையொட்டி நடந்த நிகழ்ச்சி களும் தமிழ் நாட்டையும் தாண்டி, இந்திய அளவில் பேசப்படும் செய்தியாக ஆனது ஏன்? எப்படி?

இதற்கான முதல் விசை, ஏற்கெனவே, 2012ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரத்தில் வன்னியர் குடும்பங்கள் கூடும் விழா வில், காடுவெட்டி குருவின் பேச்சிலிருந்து வெளிப்பட்டது. ‘வன்னியர் பெண்கள் மீது கைவைக்கும் பறையன்களை வெட்டுங்கள்’ என்று அப்போது குரு பேசினார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு, “தலித் இளைஞர்கள் டி சர்ட், ஜீன்° பேண்ட், கூலிங்கிளா° அணிந்துகொண்டு, பிற சாதிப் பெண்களை மயக்கி ஏமாற்றித் தம் வலை யில் விழவைக்கிறார்கள். பிறகு தமது நாடகக் காதலை நடத்திப் பணம் பிடுங்கிக்கொண்டு விரட்டி விடுகிறார் கள்” என்று பல கூட்டங்களில் பேசினார்.

திவ்யாவின் தந்தை நாகராசன் தற்கொலை செய்து கொண்டபின், நத்தம், அண்ணாநகர், கொண்டம் பட்டி ஆகிய ஆதித்திராவிடர் குடியிருப்புகள் தாக்கப் பட்டு, சூறையாடப்பட்ட பிறகு, மற்ற சாதிகளின் தலைவர்களை இணைத்து, ‘அனைத்துச் சமூகப் பாதுகாப்புப் பேரவை’ என்பதை மருத்துவர் இராமதாசு ஏற்படுத்தினார். இந்தப் பேரவையின் பெயரில் பல ஊர்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆதித்திராவிட இளைஞர்கள், சாதி இந்து இளம்பெண்களின் இளமைக் கும் சொத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார் கள் என்ற கருத்து இப்பேரவைக் கூட்டங்களில் பேசப்பட்டது. கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சாதித் தலைவர்கள் இப்பேரவையில் ஆர்வமுடன் செயல் பட்டனர். ஆனால் மற்ற சாதியினர் இப்போக்கை ஆதரிக்காததால் இப்பேரவையின் தொடர் கூட்டச் செயல்பாடு முடங்கிப்போயிற்று.

5.4.2013 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், திவ்யா, “எனக்கு அறிவுரை கூறும் போதெல்லாம் என் அப்பா திரும்பத் திரும்பச் சொன்ன ஒரே செய்தி - நான் ஏற்றுக்கொண்டாலும் உன் காதலை இந்தச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. என் அண்ணன், தம்பிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இளவரசன் பக்கத்து ஊர் என்பதுதான் என் பிரச்சனை. இதே சாதிப் பையன் தூரத்தில் ஏதாவது ஊரைச் சேர்ந்தவன் என்றால் எப்படியாவது சமாளித்துவிடுவேன் என்பது தான்” என்று கூறினார் (இதன் ஒலி வடிவம் உள்ளது).

இளவரசனின் தந்தை இளங்கோவுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திவ்யா-இளவரசன் திருமணம் புயலாக வடிவவெடுத்த நிலையிலும் இளவரசனின் தந்தை எந்தவொரு தலித் அமைப்பிடமோ, கட்சியிடமோ ஆதரவு கேட்கவில்லை.

எனவே, குடும்ப அளவில் நல்லது, கெட்டதை முடிவெடுக்க வேண்டிய திவ்யா-இளவரசன் திருமணச் சிக்கல், முதலில் பாட்டாளி மக்கள் கட்சியாலும், இரண்டாவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாலும் தங்கள் தங்கள் சாதிக் கட்சியின் அரசியல் ஆதாயத் திற்காகக் கையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனால் இது சாதிய மோதலாக வெடித்தது. இந்தச் சாதி ஆதிக்கத் தீயில் திவ்யா-இளவரசன் காதல் பொசுங் கியது. இளவரசன் மண்ணோடு மண்ணாகிப் போனான்.

கொண்டம்பட்டி ஆதித்திராவிட இளைஞர் நேதாஜி யும் 20 கி.மீ.க்கு அப்பால் உள்ள கருவேலம்பட்டி வன்னியர் குடும்பப் பெண் முத்துலட்சுமியும் கல்லூரி யில் ஒரே வகுப்பில் படிக்கும் போது காதலர்களாகி, திருமணம் செய்துகொண்டு சாதிப் பேய்க்கு அஞ்சி நெடுந்தொலைவில் வெளியூரில் வாழ்கின்றனர். இது சாதிப் பிரச்சனையாக்கப்படவில்லை. இதுபோல் திவ்யாவும் இளவரசனும் சில ஆண்டுகள் வெளியூரில் வாழ்ந் திருந்தால், இக்கொடிய தாக்குதலும் சாவும் நேர்ந்திருக்காதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

1990ஆம் ஆண்டு மேதை அம்பேத்கரின் நூற்றாண்டு தொடங்கியது. அது தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட இளை ஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த எழுச்சியை-இளைஞர்களின் உணர்ச்சி யை சில பகுதிகளில், ‘தலித்துகளில் சிலபேர் தாங்கள் தலைவராக வளரப் பயன்படுத்திக் கொண்டனர். கட்டப்பஞ்சாயத்துகள் மூலம் அதிகாரமும் செல்வமும் பெற்றனர். பரந்துபட்ட அளவில் செயல்பட்ட தொல். திருமாவளவன் போன்றவர்கள், டாக்டர் அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அளித்த, ‘கற்பி, போராடு, ஒன்றுபடு’ என்ற முழக்கத்தை முன் வைக்காமல், ‘அடங்கமறு, அத்துமீறு, திருப்பி அடி’ என்று முழங்கினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ள தலித்அறிவாளி எனக் கூறப்படும் இரவிகுமார் போன்றவர்கள், “தலித்துகளின் எதிரிகள் பார்ப்பனர் கள் அல்லர்; பிற்படுத்தப்பட்ட சாதியினரே” என்ற கருத்தைப் பரப்பினர். ‘பார்ப்பனியமும் முதலாளியமும் ஒடுக்கப் பட்ட வகுப்பினரின் முதன்மையான எதிரிகள்’ என்று மேதை அம்பேத்கர் கூறியதைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டனர்.

டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் விடுதலையைத் தன் வாழ்வின் குறிக்கோள் என வரித்துக்கொண்டு, செயல்படத் தொடங்கிய காலம் முதல் இறுதி மூச்சுவரை, சாதி இந்துக்களில் முற் போக்குச் சிந்தனையாளர்களின் பங்கேற்பையும் ஆதர வையும் வரவேற்றார். 1936இல் அம்பேத்கர் தொடங் கிய சுதந்தரத் தொழிலாளர் கட்சியும், தன் இறுதிக் காலத்தில், தொடக்க நினைத்திருந்த குடியரசுக் கட்சியும், உழைக்கும் மக்களான பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களும் ஒன்றிணைந்து இந்திய அரசின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றாத வரை யில், உழைக்கும் மக்களுக்கு விடுதலை கிடைக்காது” என்பதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டி ருந்தன. 25-4-1948 மாநாட்டில், இதையே, அரசியல் குறிக்கோளாக, மேதை அம்பேத்கர் அறிவித்தார்.

சாதி அடையாளத்தை மட்டுமே முன்னிறுத்தி, தலித்துகள் ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. அதேபோல எந்தவொரு புரட்சிகர இயக்கமும் அல்லது கடசியும் தலித் விடுதலையை முன்னிலைப்படுத்தாமல் வெற்றி பெற முடியாது. ‘பறையன்’ பட்டத்தை ஒழிக் காமல், ‘சூத்திரன்’ பட்டத்தை ஒழிக்க முடியாது, என்று பெரியார் வகுத் தளித்த கொள்கையே கலங்கரை விளக்கம் போன்ற தாகும்.

கைநிறைய சம்பளம் வாங்கும் வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த ஆணும் பெண்ணும் காதலித்தால் பெரிய அளவில் எதிர்ப்பு எழுவதில்லை. பெரும்பாலும் இரு சாதிகளின் உற்றார் உறவினரும் இத்தகைய சாதிமறுப்புத் திருமணங்களில் கலந்துகொள்கின்றனர். பணம் பத்தும் செய்யும் என்பது இதுதானோ! சாதியைக் காப்பாற்றுவதில் ஆண்களுக்கு மட்டுமே சொத்துரிமை என்கிற நடைமுறை இருப்பது ஒரு பெரிய காரணமாகும். எனவே பெண்களுக்கு உயர்கல்வியும், சொத்துரி மையும், தன் காலில் நிற்கக் கூடிய வருவாய் வாய்ப்பும் அமையும் போது இயல்பாகவே சாதி மறுப்புத் திருமணங்கள் பெருகும். இவற்றுக்கான எதிர்ப்பும் குன்றும். சாதியை மறுத்துக் காதலிக்கும் இன்றைய இளைஞர்கள் இந்தப் பொருளாதார அடித்தளத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். காதல் வெறும் உணர்ச்சிப் பெருக்காக இருந்தால் மட்டும் போதாது. அது வெற்றிபெற, அறிவுநெறியும் தேவைப்படுகிறது. காதல் என்பது மட்டுமே வாழ்க்கை அன்று; இளை ஞர்கள் தங்கள் ஒப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தவும் சாதனைகள் புரியவும் எண்ணற்ற களங்கள் உள்ளன.

‘சாதி ஒருமையில் ஒன்றுமில்லாதது; பன்மையில் தான் அது உயிர் வாழ்கிறது’ (Caste in the singular number is an unreality; Caste exists only in the plural number) என்று, 1916இல் ‘இந்தியாவில் சாதிகள்’ என்ற கட்டுரையில் டாக்டர் அம்பேத்கர் எழுதி னார். மக்களைப் பல சாதிகளாகப் பிரித்துவைத்து மேல்சாதி ஆளும்வர்க்கம் வரலாறு நெடுகிலும் சுரண்டி யது. இன்றும் இதேநிலைதான் கிட்டத்தட்ட நீடிக்கின்றது. இந்த ஆளும்வர்க்கத்தின் இளைய கூட்டாளிகளாக ஆவதற்காகச் சாதியை முன்னிலைப்படுத்திட முனை வோரின் முயற்சியைக் கிள்ளி எறிவோம். அதேசமயம் பெரியார், மேதை அம்பேத்கர் காட்டியுள்ள வழியில் சாதியமைப்பின் முதுகெலும்பை முறித்திட ஒன்றி ணைந்துப் போராடுவோம்!

Pin It