நிலம் மானுட வரலாற்றில் முக்கியத்தன்மை பெரும் மிகப்பெரிய பொருண்மை வட்டம் ஆகும். தொடக்க கால சமூகம் அதிகம் போர்களையும், பாதிப்புகளையும், கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்தது நிலத்திற்காக மட்டுமே. இது வரலாற்று நெடுகிலும் இதற்கான எச்சங்கள் தொக்கி நிற்கின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. இத்தகைய நிலம் சார்ந்த பொருண்மை அதிகம் விவாதத்திற்குட்பட்டது. இலக்கியங்களில் மட்டுமே என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. தொடக்க கால சங்க இலக்கிய காலம் முதல் பக்தி இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியங்கள் வரை நிலம் என்பது முக்கியத்துவம் பெறக்கூடிய ஒரு விவாதப் பொருளாகவே இருக்கின்றது. இதற்கு காரணம் சாதி என்ற ஆலவிழுதுகளே ஆகும். இத்தகைய சாதியம் சார்ந்த நிலவுடைமை சமூகம் சி.ஆர். ரவீந்திரன் அவர்கள் எழுதிய ஓடைப்புல் என்னும் புதினத்தில் எவ்வகையில் கையாளப்பட்டுள்ளது என்பதனை குறித்து கட்டுரையில் விவாதிக்கின்றது.
இறைவன் படைப்பில் எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து மறைவதை காண முடிகிறது மதம் இனம் மொழி பாகுபாடு இன்றி பறவைகள் விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஒற்றுமைக்கு உதாரணமாக பறவைகளை காண முடிகிறது. உலக வாழ்வில் நிலையாமையை உணர்ந்தவன் மனிதனாவான் மனிதன் தங்களுக்குள் மனிதநேயத்தை தொலைத்து ஏழை, பணக்காரன், உயர்ந்த குலம், தாழ்ந்தவன் என பிரிவினைகளை உருவாக்கி வாழ்ந்து வருகிறான். பல நூற்றாண்டுகள் வரலாற்றில் இடம் பெற்ற மன்னர்களும் தங்கள் வாழ்க்கையை இழந்து நிலையாமையில் மறைந்து போயினர். சராசரி மனிதர்கள் காலந்தோறும் தங்களின் அடையாளம் சாதி எனக் கருதி நம்சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக மாற்றம் பெற செய்கின்றனர்.
சாதி சொற்பொருள்
சாதி என்ற சொற்பிறப்பியல் ஆங்கில வார்த்தை சாதி (/ kɑ st , k æ s t /) என்பது ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசிய காஸ்டாவிலிருந்து பெறப்பட்டது, இது ஜான் மின்ஷூவின் ஸ்பானிஷ் அகராதியின் (1569) படி, "இனம், பரம்பரை, பழங்குடி அல்லது இனம்" என்று பொருள்படும். சாதி என்பது பழைய தமிழ்ச்சொல் இது ஜாய் என்பதிலிருந்து வருவதாக சொல்லப்பட்டாலும் சாதிகள் பிறப்பினால் உண்டாகவில்லை. ஆதியில் தொழிலாள்தான் உண்டாகினர். ஆதிகால சமூகம் என்பது அறியாமை நிறைந்தது. வேட்டை சமூகமாக வாழ்ந்திருந்தது. நாகரீக வளர்ச்சி தான் மனிதனை மனிதன் வேறுபடுத்தியது. கால சூழல்களினால் இன மக்கள் தொழில் சார்ந்தும், உணவிற்கும் இடப்பெயர்வு அடைகின்றனர். தங்களுக்குள் இனப் பிரிவுகளும் தோன்றுகின்றன. இவ்வாறு தோற்றம் பெற்ற இனக்குழு பொருளாதார அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும் பிரிக்கப்பட்டனர்.
இலக்கியங்களில் சாதியம்
மனிதவாழ்க்கை காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை, நாகரிக நிலை என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. காட்டுமிராண்டி நிலையின் இறுதியில் இனக்குழுகால கண ஆட்சிமுறை உருவாகத் தொடங்குகிறது. கண ஆட்சி முறையில் ஆண் பெண் உட்பட அனைவரும் அனைத்திலும் சமமாக இருப்பர். முழுமையான மக்களாட்சி இருக்கும். உண்மையான சகோதரம், சமத்துவம், சுதந்திரம் இருக்கும். அகமணமுறையிலான குழுமணம், இணைமணம் இருக்கும். மனிதர்கள் இரத்த உறவுமுறை அடிப்படையில்தான் பிரிக்கப்படுவர். இந்த கண ஆட்சிமுறையில் குடும்பம், கற்பு, பரத்திமை முறை, தனிச்சொத்து, தொழில்பிரிவுகள், வகுப்பு, அரசு ஆகியன இருக்காது. அநாகரிக நிலையின் இறுதியில் இந்த கண ஆட்சிமுறை அழிந்து குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியன உருவாகத் தொடங்கும். நாகரிக காலத்தில் குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியன உருவாகி இருக்கும். இக்காலத்தில்தான் தொழில் பிரிவுகள், வகுப்பு, ஒருதாரமணம், குடும்பம், கற்பு, பரத்திமைமுறை முதலியன இருக்கும். மக்கள் பிரதேச அடிப்படையில் பிரிக்கப்படுவர். ஆகவே நாகரிக காலத்தில்தான் தொழில் பிரிவுகளும் வகுப்பும் உருவாகி இருக்கும் என்பது இங்கு முக்கியம். அதுபோன்றே கண ஆட்சிமுறை அழிந்தபின்தான் நாகரிககால அரசு உருவாகிறது என்பதும், கண ஆட்சிமுறையில் உள்ள குழு மணம், இணை மணம் முதலியனவற்றுக்கு அடிப்படையாக இருந்த அகமணமுறை அழிந்துதான் ஒருதார மணமும் குடும்பமும் உருவாகிறது என்பதும் முக்கியம். மகாபாரதத்தில் பீசுமர் ஒருதார மணத்துக்கு முன்பு, குழுமணம் இணைமணம் முதலியன இருந்தன எனக் குறிப்பிடுகிறார். ஆகவே அகமண முறை அழிந்துதான் ஒருதார மணமும் குடும்பமும் உருவாகியது என்ற புரிதல் மிக முக்கியம். ‘உடன்போக்கு’ என்ற மணமுறை மூலம் அகமணமுறை அழிந்து போவதை சங்க கால அகப்பாடல்கள் உறுதி செய்கின்றன. ஆகவே நாகரிக காலத்தில் அகமணமுறையோ, சாதியோ இருக்காது, தொழில் பிரிவுகளும் வகுப்புகளும்தான் இருக்கும். இவை அனைத்தும் உலகெங்கும் இருந்து வந்த வரலாற்று உண்மைகள்(விதிகள்). ஆகவே நாகரிக காலத்தில் சாதிமுறை இருப்பது என்பது தொழில் பிரிவுகளும் வகுப்பும் உருவாகியபின் மிக நீண்ட காலம் கழித்து அது ஒரு சிலரால் இங்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற புரிதல் மிக முக்கியம். சங்ககாலத்தில் பாணன், பறையன், துடியன், ஈமச்சடங்கில் ஏவல் புரிவோர், பிறர் அழுக்கை வெளுப்போர், கூடைமுடையோர், வயல்களில் வேலை செய்வோர், என அகநானூறு குறிப்பிடுகிறது.
"மடிலாயத் தன்னுமை கிழிசினள் குரரே" (அகநானூறு ப எ 157 )
மனிதனின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குத் தொழில் அவசியமாகிறது. மனிதனுக்கு விவசாயம் அவசியமானது. உணவு மனிதனுக்கு தேவையான ஒன்று. அவற்றை போல மனிதன் சார்ந்த குப்பை போன்ற கழிவுப் பொருட்களை அகற்றுவதும் தேவையான ஒரு செயலாகும். இத்தகைய வேறுபட்ட செயல்களில் உயர்வு தாழ்வு கருதுவதும், சாதி அடிப்படையில் பிரித்து மக்களை கையாளுவதும் மனித அறமற்றது. இத்தகைய கருத்தை வள்ளுவர்
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972)
என்று அனைவரும் ஒருவரே என்றும் பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உணர்த்துகிறது. மனிதனின் வளர்ச்சியை கெடுக்கும் சாதி மத பேதங்களை விட்டு விலகுதல் சிறந்த நற்குணம் என்பர். சாதியின் பெயரில் தனிமனிதன் அனுபவிக்கும் அவமரியாதைகளால் தற்கொலை எண்ணங்கள் தோன்றுகின்றன. மனிதன் தன்வாழ்வில் மரணத்தருவாயை அடையும்போது உலகில் உள்ள மூடநம்பிக்கைகளையும், சாதிய நிலைப்பாடுகளையும் கண்டு வருந்துவான் என்று சித்தர் பாடல் விளக்குகின்றது.
"சாதி குலம் இல்லை சத்குரு வறிந்தால்
சாதி பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சாதி பேதம் என்பது ஒன்று சற்றும் இல்லை இல்லையே" ( சித்தர் பாடல் பா எ 4)
என்று சித்தர்கள் சாதியை குறித்து பாடியுள்ளனர். சாதிப்பிரிவை மிகைப்படுத்தி வளர்க்கும் சடங்கு சாத்திர குப்பைகளால் தீமையே அன்றி அணுவளவும் நன்மை இல்லை என்கின்றார்.இலக்கியங்களில் மட்டுமல்லாமல் மனிதனின் அறியாமையை போக்க கதை கவிதைகளிலும் சாதிய கொடுமைகள் எடுத்து தரப்படுகின்றன.
பொருளாதரமும் சாதியும்
நிலம் ஒரு மனிதனின் உரிமையாகும் தொடக்க காலம் தொட்டே ஒரு மனிதனின் வாழ்வியல் வாழ்வாதாரம் என்பது அவனை சார்ந்த நிலமாகும். அத்தகைய நிலத்தை வைத்து ரவீந்திரன் அவர்கள் தனது ஓடைப்புல் என்னும் நாவலை இயற்றியுள்ளார். கொங்கு மண்டலத்தை சார்ந்த நாவல் என்பதும் எல்லோரும் அறிந்ததே. ராக்கி அண்ணன் என்பவரை சுற்றி இந்த நாவல் நகர்கின்றது. ராக்கி அண்ணன் என்பவன் தன் நிலத்தை எவ்வாறு நேசித்தான் என்பதனை நாவல் முழுவதும் சுட்டிச் செல்கின்றார். சமூகத்தில் தாழ்ந்த குலத்தில் இருக்கக்கூடியவர்கள் நிலங்களை ஆதிக்க சாதிகள் பறித்துக் கொண்டு அவர்களை எவ்வாறு அடிமைப்படுத்தினார் என்பதை குறித்த ஒரு உண்மை சம்பவம் நாவலாக நகர்கின்றது.
"கந்தாயம் கட்ட கூட காசு இல்லாமல் ஊருக்குள் கடன் வாங்க வேண்டி இருந்தது. பாகக் காரரான பின்னால் கரண்டு பில்லுக்கும் காசு தேட வேண்டி இருந்தது. பங்காளிகள் கைவிரிக்கையில் ராக்கி அண்ணன் படுகிற பாடு பெரும்பாடாக இருந்தது" என்ற வரிகள் சமூகத்தில் தாழ்ந்த குலத்தில் இருக்கக்கூடிய மக்களுடைய பொருளாதார சூழலை இயல்பாக எடுத்துரைக்கின்றது. சமூகத்தில் தாழ்ந்த மக்கள் என்று உருவாக்கப்பட்டார்களோ அன்றே ஒருவேளை உணர்விற்கு கூட கஷ்டப்படுகின்றனர்.என்பதனையே கதை வழியே உணர்த்தியுள்ளார். பட்டினிக்கு வலியுறுக்கும் முன்னேற்றம் மற்ற சூழ்நிலைகளையே உருவாக்கும் என்பதனை குறிப்பிடுகின்றார். உணவு கிடைப்பதற்கும் உண்பதற்கும் சாதி ஒரு தடையாகிறது மேட்டின்மை மக்கள் உரைப்பது பசிப்பிணி தீர்த்தல் வேண்டும் என்பதே "பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினார்" (ப. மார்க்கபந்து மணிமேகலை அடி 12 பக்கம் 118)
உயர் குலமும் சாதியும்
உயர் குலத்தில் பிறந்த ஒருவன் கஷ்டமில்லாமல் வாழ்ந்து வருகின்றான். ஏழை கீழ் சாதி இருக்கும் வரை தொழிலாளியாக வறுமையில் சாவதும் சாதிக் கொடுமையை கூறுகின்றது. அவ்வகையில் ஓடைப்புல் நாவலிலும் உயர்வு தாழ்வு என்ற முறை அதிகமாக பயின்று வருகின்றது. இந்தன் அடிப்படையில் ஒரு தாழ்ந்த குலத்தில் உள்ள மக்களின் நிலங்களை பிடுங்கிக் கொண்டு பண்ணையார் என்பவர் வாழ்ந்து வருகின்றார் என்பதனை "நமக்கும் நாலு சாதிசனம் நல்லது கெட்டதுன்னு வேணும்னு சின்னையா நினைக்கிறாரு பெரிய மனுஷன் நீங்க கொஞ்சம் அனுசரணை பண்ண கூடாதா" (ப .எ 72) "செல்லம்மாள் ஊர் கவுண்டருக்கு காபி கொண்டு வந்து கொடுத்தால் தொடர்ந்து பித்தளை தம்ளர்களில் ஒவ்வொருவருக்கும் காபி கொடுத்துக் கொண்டே வயக்காட்டு பக்கம் பார்த்தால் மாறாதால் குனிந்த தலை நிமிராமல் களை வெட்டிக் கொண்டிருந்தாள்" (ப. எ 72) இத்தகைய வரிகள் சமூகத்தில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை மிக தெளிவாக புலப்படுத்துகின்றன. சமுதாயத்தில் ஒரு இனம் சார்ந்த மக்களின் தலைமுறை ஒடுக்கப்பட்ட பின் உயர்வினை அடைவதில்லை. உயர்வு என்பது பரம்பரையை பொருத்து அமைகிறது என்பதனை இங்கு எடுத்துக்காட்டி உள்ளார். சாதி மனித சமுதாயத்தின் முற்போக்குப் பாதைக்கு தடைக்கல்லாகும். விழிப்புணர்வு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமையை பெறுவது கடினமானது. கால சூழலிலேயே சாதி நிலைகளை கலந்து எரியும் மனிதனின் மனங்களில் அன்பு நிறைந்த எண்ணங்கள் உருவாக வேண்டும். மனிதநேயம் காக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் சாதி கொடுமைகள் விலகும். என்ற கருத்தை சி.ஆர் மறைமுகமாக சுட்டுகின்றார்.
சாதியும் ஏற்றத்தாழ்வும்
"15 , 20 நாளைக்கு முன்னே பெரிய கவுண்டர் அவன் வேலப்பன் ஒருத்தன கொன்னாரு" (ப.எ 90) "பொழச்சி போகட்டும்னு விட்டுட்டாரு மக்கமாறு வேல பணம் சிங்காரமும் ஊட்டுல ஒரு கை பார்த்து விடலாம் என்று நின்னாங்க பெரிய கவுண்டர்வும் சரின்னுட்டாரு பார்த்துட்டே இருந்தேன் ஒருநாள் சாமப் படையில் தனியா வேலைக்கு போயிட்டு இருந்தா வந்து சொன்னேன் அவ்வளவுதான் முடிச்சு போட்டோம்" (ப. எ 90) இத்தகைய சொல்லாடல்கள் சமூக எதார்த்தத்தை விளக்குகின்றன. சமுதாயத்தில் கீழ் சாதி மக்களை தனிமைப்படுத்துவதும், மரணத்திற்கு பின்பு கூட அவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை இத்தகைய வரிகள் கூறுகின்றன. பதவி பணம் இவற்றின் மூலம் மக்களிடம் செல்வத்தை பெற விரும்பும் சுயநலக்காரர்களுடன் ஒதுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றன என்பதனை உணர்த்துகின்றன. சாதிப் பெயரிலும் ஏழை என்கின்ற நிலையிலும் ஒதுக்கப்பட்ட மக்களின் அறியாமை விழிப்புணர்வுயின்மை காரணமாகவே தன்னை மேலும் தாழ்வு படுத்திக் கொள்கின்றனர். சாதியின் பெயரினால் ஒதுக்கப்படுகின்ற மனிதன் சக மனிதர்கள் அவனை மரியாதையுடன் வழிநடத்துவதில்லை விலங்குகளை விட கொடுமையான முறையில் பார்க்கப்படுகின்றான். மேல் சாதியினிடம் கைகளை கட்டிக்கொண்டு பேச வேண்டும் கீழ்படிந்து நடத்தல் போன்றவை தனிமனித சுதந்திரத்திற்கும் உரிமைக்கும் எதிரானது. இத்தகைய நிலையில் சமுதாய முன்னேற்றம் பெறுவது கடினமாகிறது. தற்கால சாதி வேற்றுமையானது இந்தியாவில் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாகும். அது வாழ்க்கையை குறுக்குகிறது. கட்டுப்படுத்துகிறது. பிரிவினை செய்கிறது. அரிப்பு வெள்ளத்தின் முன்பாக அது வந்து மாயும் என்கின்றார் விவேகானந்தர்.
முடிவுரை
சாதி வேற்றுமை மனித உரிமைகளை பெறுவதில் தடையாகவே அமைந்துள்ளது என்பதனை உணர்த்துகின்றது. வரலாற்றின் அடிப்படையில் மாற்றங்களில் சாதிய நிலைப்பாடு மனிதர்களிடம் வைரஸ் என பரவுகிறது. தாழ்த்தப்பட்ட இனம் சார்ந்த மக்கள் என்று அழைக்கப்படும் மனிதர்களின் சூழ்நிலை மாற்றம் வர வேண்டும். மனிதனின் உயர்வான நற்சிந்தனைகள் உருவாக வேண்டும். சிந்தனைகளின் மூலம் கொடுமைகளையும் அதனை மீட்கும் நிலைப்பாட்டினை சி.ஆர் ரவீந்திரன் எடுத்துரைத்துள்ளார். கொங்கு மண்டலத்தின் எதார்த்த சித்தரிப்புகளை ஓடைப்புல் என்னும் ஊடகத்தின் வழி தெளிவு படுத்துகிறார்.
அடிகுறிப்புகள்
1. மதுரை உப்பூரி குடிகிழார் அகநானூறு பக்க எண் 157
2. திருவள்ளுவர் திருக்குறள் குறள் எண் 972
3. சித்தர்கள் சித்தர் பாடல்கள் பக்க எண் 4
4. ப. மார்க்கபந்து மணிமேகலை பக்க எண் 118
5. ஓடைப்புல்
- மு.தவமணியன், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்பத்தூர்.
& முனைவர் மா. சம்பத்குமார், உதவிப் பேராசிரியர், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்பத்தூர்.