உழுதுபுரட்ட

மலர்ந்துமணக்கும்

மண்வெட்டிவிழ

மார்புமுட்டலெனநெகிழும்

சாணம்

புழுக்கைகளை

உரமாய்பிரசவிக்கும்

குறுவை

சம்பா

தாளடிகளின்

தாய்மடி

வேரோடுபிடுங்கி

வீசப்படுகிறதுவேளாண்மை

முள்வேலி

கல்நடவு

பணஅறுவடை

தாராளமயம்

தந்ததிருவோட்டோடு

உழவன்நிற்கிறான்

நகரத்துதெருவோரத்தில்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.