நீலமணி
= சூலம் மறந்து வந்த சிவன்
சூரனிடம் பேசினார் சமரசம்.
= இராட்டைக்கு மின் இணைப்பாம்
உலக மயமாக்கல்
= தாண்டுவதற்கே
கிழித்தது கோடு
= அரசியல்வாதி கேட்கிறார்
பொய் அகராதி ஒரு பிரதி
= காதால் ஆமாம் போடுகிறது
யானை
= மரத்தடிப் பள்ளி
கரும்பலகையில் எழுதியது
காக்கை எச்சம்
= பல்லக்கில் ஊர்வார்
அறியார் வியர்வை
- நீலமணி