வீசிய புயலில்
வேரறுந்த மாமரத்தில்
கூடுகட்டி வாழ்ந்த
குருவி ஒன்று
வட்டமடித்து
வட்டமடித்து
வந்து வந்து
தேடுகிறது
கண் விழிக்காத
தன் குஞ்சுகளை
பசித்த பருந்தொன்றுக்கு - அவை
விருந்தானது தெரியாமல்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.