காலா காலத்தில்
மழையும் பெய்தது
தேவைக்கும் மேலாக
வெயிலும் காய்ந்தது
பூ விரியும் பருவத்தில்
பனியும் பெய்தது
மகரந்தம் பரவ
காற்றும் வீசியது
இலக்கினும் மேலாய்
விளைச்சல் வந்தது
வழக்கம்போல் வருமானம்
வட்டிக்கே தீர்ந்தது
விதைத்தவன் வாழ்க்கை
விளையாத பதரானது.

தென்றலுக்குக் கண்ணில்லை

திறந்து வைத்த சன்னலில்
கடந்து வரும் காற்றுக்கு
விளக்கு மாடத்தில் எரிவது
எண்ணெய் தீபமென்று
தெரிவதில்லை.

More articles by நாவல் குமாரகேசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.