பாபா பிளாக்ஷிப்
வா! வா! செம்மறி
இருக்கிறதா கம்பளி?
ஆம்! ஆம்! அய்யா!
முதுகில் மூன்று மூட்டைகள்
ஒன்று எசமானுக்கு
ஒன்று எசமானிக்கு
ஒன்று தோப்பில் அழுகிற
சின்னச் செல்லப் பிள்ளைக்கு!
புஸ்ஸி கேட்....
பூனையாரே! பூனையாரே!
எங்கே போனீங்க?
லண்டனுக்கு ராணியைத்தான்
பார்க்கப் போனேங்க
போன இடத்தில் பூனையாரே
என்ன செய்தீங்க?
அரியாசனம் அடியில் இருந்த
எலியைக் கொன்னேங்க!
ட்விங்கிள் ட்விங்கிள்...
மின்னும் மீனே! மின்னும் மீனே!
எப்படி உன்னை வியப்பேன் நானே!
பூமியின் மேலே வெகு உயரத்தில்
வைரம் போலே ஒளிர்கின்றாயே!
நரசிம்மன்,
தாவரவியல் பேராசிரியர், சென்னை கிறித்துவக் கல்லூரி
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
- பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?
- பாவிகள்
- நினைவு
- நீயென் ஆதூரன்
- குழந்தை வளர்ப்பும் சுகாதாரமும்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)