Buddhaசைவம் 6ஆம் நூற்றாண்டில் வேதமதத்தில் இருந்து தோன்றிய ஒரு பிரிவு. எனவே புத்தர் சைவர் என்பது தவறு. அவர் வேத மதத்தவர். பின்னாளில் சாதியை மறுத்துரைத்தவர். பிராமணர்களுடைய வேள்வியில் விலங்குகள் ஆகுதி ஆக்கப்படுவதைக் கண்டித்தவர்.

கடவுள் இல்லை, இருந்தால் உலகம் இந்தளவு அலங்கோலமாக இருக்காது என வாதிட்டவர். கடவுள் உலகைப் படைத்தார் என்றால் கடவுளை யார் படைத்தார் என்ற கேள்வி எழும். புத்தர் ஆன்மா என்ற ஒரு பொருள் இருப்பதை மறுத்தவர்.

ஒவ்வொருவனும் தனது விடுதலையை தானே முயன்று பெற வேண்டும். மற்றவர்கள் உதவி செய்ய முடியாது. தான் ஒரு வழிகாட்டி, ஆசிரியர் என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றார்.

- வேலுப்பிள்ளை தங்கவேலு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.