சபர்மதியில் ராஜி ஒப்பந்தம் முடிந்த பிறகு ஸ்ரீமான் ஜெயக்கர் மகாத்மாவிடம் சென்று ”இந்த ராஜீயை உண்டு பண்ணியதிற்காக தங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்” என்று சொன்னாராம் . அதற்கு மகாத்மா “நானும் உங்களுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்” என்று சொன்னாராம். மகாத்மா எதற்காக இந்த விஷயத்தில் ஸ்ரீ ஜெயக்கருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்கிற கேள்வி இதில் பிறக்கக்கூடும். அது எதற்கு என்று யோசிப்போமானால், சுயராஜ்யக் கக்ஷியார் உத்தியோகம் ஒப்புக்கொள்ளாத தன்மையின் திருட்டுத்தனத்தை வெளியாக்கிய தற்காகத்தான். (குடி அரசு - பெட்டிச் செய்தி - 02.05.1926)
தொடர்புடைய படைப்புகள்
மகாத்மாவின் நன்றியறிதல்
More articles by பெரியார்
- பொன்விழாப் புரட்டு (24 ஜூன் 2026)
- உலகில் முஸ்லீம்கள் ஜனத்தொகை விபரம் (23 ஜூன் 2026)
- பொப்பிலி பெருந்தன்மை (22 ஜூன் 2026)
- முஸ்லீம்கள் தேசத் துரோகிகளா? (19 ஜூன் 2026)
- தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் இலங்கை மந்திரிக்கு உபசாரம் - மந்திரி பதில் (18 ஜூன் 2026)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.