சுயராஜ்யக் கட்சியென்று சொல்லப்படும் ராஜுயகட்சி அங்கத்தினர்களுக்கு வேலையென்னவென்றால் தாங்கள் யோக்கியர்களென்பதிலும் தங்கள் கட்சிக்கு பலம் குறையவில்லையென்பதிலும், தங்களுக்கு செல்வாக்கு இருக்கிற தென்பதிலும் சந்தேகமேற்பட்ட காலங்களிலெல்லாம் மகாத்மாவிடம் போய் நற்சாட்சிப் பத்திரம் வாங்குவதான வேலையையே அவர்களது தலையில் கடவுள் விதித்து விட்டார் போலும்! இப்படியே இருந்தால் இக்கட்சியின் “செல்வாக்கும் , பலமும், பெருந்தன்மையும்” மக்களுக்கு உபயோகப்படுவது தான் எப்பொழுது என்று தெரியவில்லை.

(குடி அரசு - குறிப்புரை - 30.08.1925)

Pin It