தேவையான பொருட்கள்:

இறால் - 200 கிராம்
எண்ணெய் - 200 மில்லி
பாசி பருப்பு மாவு - 50 கிராம்
பச்சை மிளகாய் - சிறிதளவு
பூண்டு - சிறிதளவு
சோம்பு தூள் - சிறிதளவு
கடலை மாவு - 100 கிராம்
பொரிக்கடலை - 50 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு தூள், எல்லாவற்றையும் இறாலில் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். அதனுடன் அரிசி மாவு, பாசி பருப்பு மாவு, சிறிது சூடாக்கிய எண்ணெய் சேர்த்து தண்ணீர் தெளித்து உதிர்ந்து விடும் பக்குவத்தில் பிசைய வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பக்கோடாவை பக்குவமாக உதிர்த்து போட்டு பொன்னிறமாக வெந்ததும் இறக்கி பரிமாற வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.