தேவையான பொருட்கள்:

மீன் - அரைக்கிலோ
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
தனியாதூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மிளகுத் தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு சிறிதளவு தண்ணீரில் கலந்து மீன் துண்டுகள் மீது தடவி 30 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். அதன் பின் வாணலியில் 300 கிராம் நல்லெண்ணெயை ஊற்றி சூடேறியதும் மீன் துண்டுகளைப் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழைகளைத் தூவி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறாலாம். 

Pin It