தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த தக்காளி - 7
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
மிளகுத்தூள் – தேவையான அளவு
வேகவைத்த காய்கறிகளின் தண்ணீர் - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை பெரிய பெரிய துண்டுகளாக அரிய வேண்டும். இஞ்சியை சிறிதாக அரிய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு எல்லாவற்றையும் லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும். வெந்த பின் ஒரு தட்டில் பரப்பி ஆறவிட வேண்டும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வடிகெட்டியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் உப்பு, வேகவைத்த காய்கறி தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் சூடாக்க வேண்டும். சூடான பின் மிளகுதூள் தூவி உடனே பரிமாற வேண்டும்.
தக்காளி குடைமிளகாய் சூப்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.