தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - 250 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 1 தேக்கரண்டி
கிராம்பு தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 150 கிராம்
இஞ்சி பூண்டு
விழுது - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஆட்டுக்கறியை நன்றாக கழுவி, குக்கரில் போட்டு அதனுடன் தயிர், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். கடாயை அடுப்பில் ஏற்றி, வெண்ணெய் போட்டு உருகச் செய்ய வேண்டும். அதனுடன் பட்டை, கிராம்பு தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகுத் தூள், சீரகத் தூள், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், வேக வைத்த கறியை இதில் கொட்டி, நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து இதைப் பரிமாறலாம்.
மட்டன் மசாலா
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மிலிட்டரி ஹோட்டல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.