தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 200 கிராம்
உளுந்து - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
தேங்காய் - 3 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 2

செய்முறை:

பாசிப்பருப்பை குக்கரில் நன்கு குழைய வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் உருளைக்கிழங்கினையும் சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து, பச்சை மிளகாய், தேங்காய், சீரகம் அனைத்தையும் போட்டு வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பருப்பு மற்றும் அரைத்த விழுது அனைத்தையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதித்தவுடன் இறக்க வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.