தேவையான பொருட்கள்: பச்சரிசியையும், புழுங்கல் அரிசியையும் ஒன்றாக சேர்த்து நன்கு ஊறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவினை நன்கு புளிக்கவிடவேண்டும். இரவு சிறிது ஈஸ்ட் அல்லது கொஞ்சம் மோரினை மாவில் இட்டு கலந்து வைத்துவிட வேண்டும். தேங்காயினைத் துருவி, பிழிந்து முதல் பாலினை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது முறை பிழிந்து எடுக்கும் பாலினை மாவுடன் கலந்து, சிறிது உப்பும், சோடா உப்பும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். தோசைமாவைவிட இன்னும் சற்று நீர்க்க கரைத்துக்கொள்ள வேண்டும்.
பச்சரிசி - 500 மி.லி
புழுங்கல் அரிசி - 500 மி.லி
தேங்காய் - 1 மூடி
ஈஸ்ட் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
சோடா உப்பு - சிறிதளவு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். வாணலி சூடானதும் இரண்டு கரண்டி மாவு ஊற்றி, வாணலியை சுழற்றி மூடி வைக்க வேண்டும். சிறிது நேரம் சென்று வெந்தவுடன் எடுக்க வேண்டும். மாவினை எடுப்பதற்கு முன்பு சிறிது தேங்காயினையும் துருவிப்போட்டு அரைத்துக்கொண்டால் ஆப்பம் ருசியாக இருக்கும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்