தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கிலோ
தேங்காய் - 1
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
மிளகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 7
நல்லெண்ணைய் - 100 மி.லி.
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிய துண்டு
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
பொல பொலவென்று சாதத்தை வடித்து ஆற வைக்க வேண்டும். வாணலியில் கொஞ்சம் எண்ணைய் விட்டு, அதில் துறுவிய தேங்காயைப் போட்டு பொன் நிறத்திற்கு வறுத்துக் கொள்ளவும். பெருங்காயத்தை வறுத்து தூள் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து அதில் கடுகைப் போடவும்.
கடுகு வெடித்ததும் அதில் மிளகு மற்றும் உளுந்து பருப்பை போட்டு, பருப்பு செந்நிறத்திற்கு வந்ததும் அதில் கறிவேப்பிலையைப் போட்டு பொரியும் தருணத்தில் இறக்கவும். வாணலியில் இருப்பதை ஆற வைத்த சாதத்தின் மேல் கொட்டவும். தேங்காய், பெருங்காயப் பொடி ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும்.
தேங்காய் சாதம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.