ஒரு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆசிரியர் பாடம் நடத்தி முடித்து விட்டு கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தார். ஒரு மாணவன் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் அலட்சியமாக நின்றான். கோபங்கொண்ட ஆசிரியர் அவன் அருகில் சென்று அவனை அடிப்பதற்குப் பிரம்பை ஓங்கி அடிக்க முயற்சித்தார். பையன் சற்று விலகி பிரம்பின் மறு முனையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். உடனே ஆசிரியருக்கு எரிச்சல் அதிகமாகி விட்டது. ஆத்திரங்கொண்ட ஆசிரியர் அம்மாணவனை நோக்கி ‘பிரம்பின் முனையைப் பிடித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் என்றார். பையன் பிரம்பின் மறுமுனையைப் பிடித்தவாறே கேட்டான். ‘எந்த முனையை பிடித்துக் கொண்டிருப்பவர் சார்’ என்று. வகுப்பில் மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். ஆசிரியர் அமைதியாக நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.
குட்டீஸ்
எந்த முனை சார்?
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.