• ஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி!: தமிழ்நதி

  • கருத்துப்புலிகள் அல்லது சற்றேறக்குறைய காகிதப்புலிகள்: ஆதவன் தீட்சண்யா

  •  

    அன்புள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கு,

    நான் உங்களைப் போல போலி மார்க்ஸிய அடிமையல்ல. மாறாக மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்டுகளின் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக பழங்குடி மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டவனும், நந்திகிராமில் மார்க்ஸ்சிஸ்டுகளால் கொல்லப்பட்ட விவசாயத் தோழர்களின் மீதான படுகொலைகளுக்காகவும், மேற்குவங்க மார்க்சிஸ்டுகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு இன்று வேட்டையாடப்படும் ஒரு இனமாக மாறியிருக்கிற பழங்குடி இனத்தின் இன்னொரு பிரிவில் பிறந்தவன் என்கிற முறையிலுமே இதை உங்களுக்கு எழுத நேர்ந்தது.

    நீங்கள் தமிழ் நதிக்கு எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்தது. அவரைப் போட்டு காய்த்து எடுத்து விட்டீர்கள். இதற்கெல்லாம் அவரிடம் என்ன பதில் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு தலித் கிறிஸ்தவன் என்னும் நிலையில் என்னிடம் சில பதில்கள் இருக்கின்றன. அதைப் பதில்களாக நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி இல்லை வழக்கம் போல இதெல்லாம் புலிக் கோஷம் என்று நிராகரித்தாலும் சரி எமக்கு அது குறித்து கவலை இல்லை.

    Srilanka's attack on eelam childமதுரையில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் காரசாரமான உரையாடலின் போது தமிழ்நதி ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் என்று உங்களைக் கேட்டதாகவும், நீங்கள் அதற்கு ‘‘நீங்கள் மலையக மக்களையும், தலித்துக்களையும் முஸ்லீம்களையும் எப்படி நடத்தினீர்கள்? ஏனைய அமைப்புகளைக் கொன்றீர்கள்? உங்களுக்காக ஏன் நாங்கள் பேச வேண்டும். அதை எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்?’’ என்று பேசியதாக நண்பர்கள் சொன்னார்கள். சத்தியமாக தமிழ்நதி சொல்லவில்லை.

    நீங்கள் பேசியது குறித்து தேவேந்திரபூபதியிடம் கேட்டபோது, அவர் தமிழ்நதிக்கும் ஆதவனுக்குமிடையிலான விவாதத்தில் வந்தது என்று சொல்லிவிட்டு பிஸியாக இருப்பதாகவும், அப்புறம் பேசுவதாகவும் சொன்னார். நான் அவரை விட பிஸியாக இருந்தேன் என்பதைத் தாண்டி இதை அவர் பேச விரும்புகிறாரோ இல்லையோ என்பதால் அதை விட்டு விட்டு இதை எழுதத் துவங்கிவிட்டேன்.

    நீங்கள் பேசியது உண்மை என்றால் ஒரு தலித் கிறிஸ்தவன் என்ற முறையில் சொல்கிறேன். உங்கள் பேச்சு மிக ஆபாசமானது. ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு, தினந்தோறும் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கப்படும் ஓர் இனம் குறித்த உங்களின் இந்தப் பேச்சு தலித் அரசியலின் பெயரால் நீங்கள் செய்த ஆபாசமான வன்முறை. புலிகளின் தவறுகளை மட்டுமே வைத்தும் ஈழத்தின் ஆதிக்க சாதி அமைப்பை வைத்தும் நிகழ்காலத்தில் நடந்துள்ள மாபெரும் இனவெறிக் கொலைகளை, கொடுமைகளை மறைப்பீர்கள் என்றால், நீங்கள் ஈழம் என்கிற கருத்துருவையே மறுக்கிற நிராகரிக்கிற பார்ப்பன தலைமையிலான உங்கள் மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டில் நின்று கொண்டு தலித் அரசியலை துணையாக்கி உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே இவ்வாறு செய்திருக்கிறீர்கள் என்று கூறுகிறேன்.

    தேசிய இனப்பிரச்சனையின் தீர்வு தொடர்பாக வலதுகளுக்கும் இடதுகளுக்கும் ஏராளமான முரண்கள் உண்டு. புதிய தேசம் ஒன்று அதுவும் வலதுசாரிக் கொள்கை கொண்ட தேசம் ஒன்று உருவாவதை மார்க்ஸிஸ்டுகள் நீங்கள் விரும்பமாட்டீர்கள். இன்னும் சொல்லப்போனால் பிரிந்து போகும் உரிமை கொண்ட சுயநிர்ணய உரிமை என்ற மார்க்ஸிய கோட்ப்பாட்டைக் கூட உங்கள் மார்க்ஸ்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளாது என்கிற நிலையில், நாம் தேர்தல் பரபரப்பில் இருந்தபோது, அங்கே வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது சிங்களப் படைகள். ‘சண்டையை நிறுத்து; பேச்சுவார்த்தை நடத்து’ என்று இன்று லால்கரில் ஒலிக்கிற உங்கள் குரல் ஈழத்திற்காக ஒலிக்கவில்லை.

    தமிழ் மக்களை புலிகள் பணையக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். லால்கரில் ஐம்பது கிராமங்களை இராணுவம் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கைப்பற்றி விட்டது. அந்த கிராமங்களின் பெரும்பங்கு மக்கள் மாவோயிஸ்டுகளோடு ஜார்க்கண்ட் காடுகளை நோக்கி நகர்ந்து விட்டார்கள். அந்த ஆதிவாசிகள் எப்படி மாவோயிஸ்டுகள் இல்லையோ - ஆனால் மார்க்ஸ்சிஸ்டுகள் செய்த துரோகம் எப்படி அவர்களை மாவோயிஸ்டுகளை நோக்கி நகர்த்தியதோ - இராணுவம் துரத்தும் போது சிக்கினால் சீரழிந்து விடுவோம் என்று எப்படி மாவோயிஸ்டுகளோடு சென்றார்களோ, அப்படியே வன்னி மக்களும் புலிகளுடன் போனார்கள். அதுதான் உண்மை. வன்னி மக்கள் எல்லாம் புலிகள் என்றோ ஈழ மக்கள் எல்லோருமே புலிகள் அமைப்பில் குப்பி சுமந்தவர்கள் என்றோ யாருமே சொல்லவில்லை. அவர்கள் சிங்களனை விட புலிகள்தான் தமக்கு பாதுகாப்பானவர்கள் என்று நம்பினார்கள். அதுதான் உண்மையும் கூட.

    இந்தியா, கம்யூனிச சீனா, பாகிஸ்தான், ஈரான், பிரிட்டன், அமெரிக்கா போன்ற பிராந்திய, ஏகாதிபத்திய வல்லரசுகளின் கூட்டு இராணுவ பலத்துடன் மோதிய புலிகளால் அவர்களையே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்பதோடு மக்களையும் பாதுகாக்க முடியவில்லை என்பதுதான் அப்போரின் கசப்பான முடிவு. உண்மையில் இலங்கை அதன் உண்மையான இராணுவ பலத்தோடு புலிகளை எதிர்கொண்டிருந்தால் கிழக்கையும் மீட்டிருக்க முடியாது வடக்கையும் மீட்டிருக்க முடியாது என்பதோடு இந்தப் போரின் முடிவில் பெரும் அழிவை இலங்கை இராணுவம் சந்தித்திருக்கும் என்பதுதான் இராணுவ யதார்த்தம். ஆனால் அரசியல்? அது துளி கூட புலிகளிடம் இல்லையே? அழிவுக்குப் பிறகு இன்றைக்கு புலி ஆதரவாளர்கள் சொல்கிற அரசியல் போராட்டம் என்கிற கருத்தை மூன்று வருடங்களுக்கு முன்பே, செப்டம்பர் தாக்குதலைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளிலேயே நான் எழுதியிருக்கிறேன். ஆனால் இராணுவ வாதத்தால் எல்லாவற்றையும் வெல்லலாம் என்ற புலிகளின் மிதமிஞ்சிய நம்பிக்கையும் இந்த கசப்பான முடிவுக்கு ஒரு காரணம். இதை நாம் நெடுமாறன் அவர்களிடமிருந்தோ அல்லது சீமான் பேசியோ, அல்லது வரதராஜனிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இதுதான் யதார்த்தம்.

    இன்றைக்கு மாவோயிஸ்டுகளை அரசியல் ரீதியாக வெல்ல வேண்டுமே தவிர அதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியாது என்று மேற்குவங்கத்தில் சொல்ல வேண்டிய கசப்பான யதார்த்தத்துக்கு வந்திருக்கிற நீங்கள் ஈழம் என்று வந்தால், புலிகள் என்று வந்தால் புலி எதிர்ப்பின் பெயரால் சிங்கள வெறியர்களுக்கு காவடி தூக்குகிறீர்கள். சமீபத்தில் லீனாமணிமேகலை ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பிரான்சில் இருந்து வந்திருந்த சுகன் சிங்களர்களின் தேசிய கீதத்தை பாடித்தான் தன் உரையை தொடங்கினார். (வாங்குன காசுக்கு ரொம்பத்தாண்டா கூவுறான் கொய்யால). ஆனால் அப்படி பாடுவதற்கு முன்னால் புலிகளையும் அவர்களுக்காக பாடல்கள் எழுதிய காசி ஆனந்தன் அவர்களையும் தன் அறிவால் உடைத்துத் தகர்த்து விட்டே இந்த மொள்ளமாரித்தனத்தை செய்தார் சுகன். மகாசேனனும், துட்டகைமுனுவும் பண்டாரவன்னியனையும், எல்லாளனையும் வென்றதைவிட கடினமான வெற்றி என்று தமிழ்மக்களை வென்றதை ஒரு வார விழாவாக கொண்டாடச் சொன்னான் பயங்கரவாத ராஜபட்சே. அதை சிங்கள தேசிய கீதத்தை சென்னையில் பாடி கொண்டாடிவிட்டுப் போனார் சுகன்.

    தேசத்துரோகிகளும், மறுத்தோடிகளும் எப்படி ஒரு தேசத்தின் அதுவும் பாசிச பயங்கரவாத தேசத்தின் கீதத்தை பாட முடியும் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்ப்பற்று என்று தாங்கள் நம்புகிற ஒன்றிற்காக, தமிழர், தமிழினம் என்று உணர்வுப்பூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கிற ஒன்றிற்காக ஆவேசமாகப் பேசும் தமிழகத்து ஈழ ஆதரவாளர்களை வைத்தே நீங்கள் ஈழ விடுதலையை அணுகுறீர்கள். புலிகளின் தோல்வியில் ஒட்டு மொத்தமாக சிதைக்கப்பட்டுக் கிடக்கும் மக்களின் பிணங்களின் மீது நின்று சிங்கள தேசியகீதத்தைப் பாடும் சுகன் போன்றோருக்கும், உங்களுக்காக நாங்கள் ஏன் போராட வேண்டும் எனக் கேட்கும் உங்களைப் போன்ற தலித்தியப் பார்வை கொண்ட மார்க்ஸ்சிஸ்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?

    புலி எதிர்ப்பு குறித்தும் இலங்கை இறையாண்மை குறித்தும் இன்றைய சூழலில் பேசுவதில் தான் ஆதாயம் அதிகம். புலி எதிர்ப்பு என்கிற கருத்துக்காக இலங்கை அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை புலத்தில் கொட்டுகிறது. சிங்கள தேசிய கீதத்தை பௌத்த மரபுக்குள் நின்று பாடுகிற சுகன்கள்தான் இன்றைய இலங்கைச் சூழலில் ஆயிரம் கருணாக்களுக்கு சமம். ஷோபாசக்தியோ, ஆதவனோ இலங்கை அரசிடம் பணம் பெற்றுக் கொண்டு இப்படிப் பேசுகிறார்கள் என்று நான் நம்பவில்லை. பொதுவாக இப்படி பேசுகிறவர்களுக்கு தமிழகத்திலும் புலத்திலும் இலங்கை அரசு செலவு செய்கிறது என்பது உண்மைதான். ஆனால் புலி ஆதரவாளர்களுக்கு புலிகள் காசு கொடுப்பார்கள் என்பதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை. அவர்கள் நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வார்களே தவிர அவர்கள் யாருக்கும் கொடுத்தார்கள் என்பதை நான் நம்பவில்லை. 

    ஆனால் புலத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் இங்கு புலிகளை எதிர்ப்போர், ஆதரிப்போர் என இருசாராரையுமே அங்கு அழைத்து விருந்து வைப்பதும் கவனிப்பதும் இருந்தது. அந்த வகையில் சிலர் புலத்திற்கு அழைத்தவர்களுக்கு நன்றியாக செயல்படுகிறார்கள். காப்பி கோப்பை கழுவியும், கார்பெட் துடைத்தும், டாய்லெட் க்ளீன் பண்ணியும் சம்பாதித்த காசில் இங்கிருந்து போய் வந்த சில புலி ஆதரவாளார்கள் இந்தத் தேர்தலின்போது புலிகளுக்கு பச்சைத் துரோகம் செய்தார்கள் என்பதைக் குறிப்பிடுவதோடு புலி ஆதரவாளர்களை விட புலி எதிர்ப்பாளார்களுக்கு கிடைக்கிற அனுகூலம் அதிகம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். தன்னார்வக்குழுக்கள், இலங்கை அரசு என பலதரப்பிலும் பணம் கொடுக்கிற ஒரு துறைதான் புலி எதிர்ப்பு.

    CPM leadersபுலிகளின் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டத்தையோ, சகோதரப் படுகொலைகளையோ, சிறுபான்மை முஸ்லீம்களை துரத்தி விட்டதையோ - மாற்றுக்கருத்தோ கண்டனமோ இல்லாமல் நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என நினைக்கிறீர்களா? (புலிகளுக்கு மட்டுமல்ல அங்கு ஆயுதம் தூக்கிய எல்லா போராளிக் குழுக்களுக்குமே தெளிவான விடுதலைப் பார்வை இருந்ததில்லை.) இந்தியாவை நம்பியே ஈழப் போரை துவங்கினார்கள். சகோதரப்படுகொலையில் புலிகள் நடந்து கொண்ட விதத்தைத் தவிர, ஏனைய அமைப்புகளை விட புலிகள் சிறந்தவர்கள்தான். என்னைக் கேட்டால் நான் பார்த்த தலைவர்களுள் என்னைக் கவர்ந்தவரும், என்னில் நிறைந்திருப்பவரும் பிரபாகரன்தான். நீங்கள் ஆசியாவின் சேகுவேரா என்று பிரபாவை நக்கல் செய்தாலும் உண்மை அதுதான். தன்னையும் தன் பிள்ளைகளையும் களத்தில் பலியாக்கி வீரமரணமடைந்த பிரபாகரன், (பிரபாகரன் சரணடைந்து கெஞ்சினார்; உயிர்ப்பிச்சை கேட்டார் என்றெல்லாம் புலி எதிர்ப்பு சகோதரக் குழுக்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது தனி) - இலங்கைக்கு எதிராக ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதில் பெரும் பங்கு வகித்த க்யூபாவின் முன்னாள் போராளியான சேவோடு பிரபாகரனை ஒப்பிடுவதல்ல விஷயம் - உண்மையில் பிரபாகரன் என்கிற பிம்பம் ‘சே’வை தமிழக இளைஞர்களிடம் காலியாக்கி இருக்கிறது என்பதுதான் உண்மை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் யதார்த்தம்.

    புலிகள் மீதான விமர்சனங்களை ராஜபட்சேவின் தோள்களில் நின்று கொண்டு பேசுவதையோ, பாரதமாதாவின் முந்தானைக்குள் ஒழிந்து கொண்டு பேசுவதையோ நாங்கள் விரும்பவில்லை. காரணம் எமது மக்களை கொன்றொழித்தவர்களை நாம் எப்படி நண்பர்களாகக் கொள்ள முடியும்? இந்தப் போருக்குப் பிறகு ஒரு பேரினவாத, பயங்கரவாத அரசாகவே நான் ராஜபட்சேயையும் இலங்கை அரசையும் பார்க்கிறேன். இனி எப்போதும் தமிழ் மக்கள் சிங்களர்களுடன் சேர்ந்து வாழும் சாத்தியங்கள் இல்லை. ஆனால் இங்குள்ள சி.பி.எம் வரதாராஜனும், பிரகாஷ்காரத்துக்களும் இலங்கையின் இறையாண்மை குறித்தே கவலைப்படுகிறார்கள். விளைவு மேற்குவங்கத்திலும், கேரளத்திலும் உங்களின் கட்சி இறையாண்மை களவு போனது. மேற்கு வங்கத்தில் வரக்கூடிய காலங்களில் உங்கள் கட்சி அப்புறப்படுத்தப்படும்.

    பட்டாச்சார்யாக்களும், நாயனார்களும், யெச்சூரிகளும், நம்பூதிரிகளும், பிரகாஷ்காரத்துக்களும், பாப்பா உமாநாத்துக்களும், வாசுகிகளுமான பார்ப்பன தலைமையே மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் தலைமை. கேரளத்தில் அச்சுதானந்தன் தலித் என்று நீங்கள் சொல்லலாம். பாவம் என்ன செய்வது? மக்கள் செல்வாக்குப் பெற்றிருக்கும் அச்சுதானந்தனுக்கு கட்சியில் செல்வாக்கில்லை. கட்சி ஊழல் மன்னன் பிரணாய் விஜயனையே கொண்டாடுகிறது. விளைவு அச்சுதானந்தன் தனிக்கட்சி துவங்கும் ஆலோசனை கூட நடத்தினார்.

    நீங்களும் நானும் நம்பக் கூடிய தலித் அரசியலின் உரையாடலை நீங்கள் ஈழத்துக்கு எதிராக, புலிகளுக்கு எதிராக, எளிய தமிழ் மக்களின் இந்துக் கதையாடலுக்கு எதிராக வைத்து தமிழ் அரசியலை உடைத்தெறிகிறீர்கள். சிங்களப் பேரினவாதத்திற்கு மாறாக தமிழ்ப் பேரினவாதம் என்ற ஒன்றை முன்வைக்கிறார்கள் உங்கள் புலத்து நண்பர்கள். புலிகளின் ஜனநாயக மறுப்பை முன்னிட்டு வைக்கும் இந்த தமிழ்ப் பேரினவாதம் என்கிற அயோக்கியத்தனத்தை உங்களால் நிறுவ முடியுமா? மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குள் வன்னிப் போர் வடக்கில் மட்டும் ஐம்பதாயிரம் விதவைகளை உருவாக்கி இருக்கிறதாம். நான்காயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தவர்களாக, அன்றாடம் பாலியல் கொடுமை, கொலைகளுக்குள் வாழ்கிறார்கள். இவர்களா தமிழ்ப் பேரினவாதிகள்.

    தமிழர் உரிமைக் கோரிக்கையை உடைக்க நீங்கள் பயன்படுத்தும் தலித் அரசியலை உங்கள் கட்சிக்குள் ஒரு விவாதமாகவாவது வைக்க முடியுமா? நானும் உத்தபுரத்திற்காக எழுதினேன், சட்டக்கல்லூரி நிகழ்விற்காக எழுதினேன். ஆனால் உங்கள் மார்க்ஸ்சிஸ்டுகள் உத்தபுரத்திற்காக எழுதிய அளவுக்கு பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி வெறியின் பிடியில் இருந்து வதைக்கப்பட்ட சட்டக்கல்லூரி தலித் மாணவர்கள் குறித்து எழுதவில்லையே ஏன்? அதற்காக போராடவில்லையே ஏன்? சங்கரன்கோவிலில் கொல்லப்பட்ட இரண்டு தலித் சிறுவர்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

    இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை இங்கே தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள் இட்டுக் கட்டி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஜெர்மனியில் அகதிகளுக்கு விண்ணப்பம் நிரப்பிக் கொடுத்தும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை பார்த்தும் இலங்கை அரசின் அனுசரணையோடும் வாழும் சுசீந்திரனை பொறுக்கி எடுத்து புது விசையில் நேர்காணலாக வெளியிட்டிருந்தீர்களே? அந்த நேர்காணலில் பதில்கள் மட்டுமல்ல, நீங்களும் யவனிகாவும் கேட்ட கேள்விகளுமே நக்கலாகத்தான் இருந்தது. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி மரியாதைக்குரிய முத்துக்குமார் குறித்த கேள்விகள் எல்லாமே கிண்டல் தொனியில்தான் இருந்தது. புலி எதிர்ப்பின் பெயரால் பௌத்த மரபுக்குள் ஒழிந்து மக்கள் அழிவை ரசிக்கிற மனோநிலையில் இருக்கும் உங்கள் நண்பர்களும் நீங்களும் பேசுவதுதான் மார்க்ஸியமா? இது மார்க்சிய இனவாதம் இல்லையா? சமணக்காட்டை அழிக்க அன்றைய பார்ப்பான் சமணர்களைக் கழுவுவேற்றியதைப் போல இன்று பௌத்த மரபுக்குள் ஒழிந்து கொண்டு புலி எதிர்ப்பின் பெயரால் தமிழ் மக்களைக் கழுவேற்றுகிறார்கள் உங்கள் புலத்து நண்பர்கள். இதையே நீங்களும் செய்கிறீர்கள். இந்த சுசீந்திரனை அம்பலப்படுத்தி இணையம் வழியே ஏராளமாக எழுதப்பட்டிருக்கிறது அதையும் உங்களுக்குத் தருகிறேன்.

    தமிழ்நதிக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில், அவர்கள் ஊர் திரும்பிச் செல்வது குறித்து எழுதியிருந்தீர்கள். எந்தத் தமிழனும் வாழ்வதற்குரிய சூழலோ சுதந்திரமாக சென்று வரும் சூழலோ இலங்கையில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். இன்றைய இலங்கைச் சூழலில் ஷோபாசக்தியோ, சுகனோ, நீங்களோ கொழும்பு சென்றால் உங்களுக்கு இலங்கை அரசின் சிகப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும். ஏனென்றால் உங்கள் பௌத்த மரபுதான் அங்கே இப்போது ரத்த வெறியோடு தமிழ் மக்களை வீழ்த்தியதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்ந்தியோ, புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த என்னை மாதிரி நபர்களோ இல்லை ஏனைய ஈழ ஆதரவாளர்களோ இலங்கைக்கு அல்ல இராமேஸ்வரத்துக்கே செல்ல முடியாத தமிழர் அரசியல் வீழ்ச்சியுற்ற இந்த நிலையைத்தான் சுகன் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்.

    தமிழ்நதியால் தற்போது அங்கு செல்ல முடியாது என்பது தெரிந்திருந்தும் அவர் தமிழகத்தில் இருப்பது குறித்து கிண்டல் செய்கிறீர்கள். நீங்களோ நானோ நமக்கு சமூகப் பாதுகாப்பு இருக்கிறது. மனைவி குழந்தையோடு சந்தோசமாக வாழ்கிறோம். ஒரு அரங்கக் கூட்டம் என்பதும் மாற்றுக்கருத்து என்பதும் இந்த வாழ்வில் நாம் செலவிடுகிற மிகக் குறைவான இன்னொரு பகுதிதான். ஆனால் அவர்களுக்கு அப்படியல்ல. காலம் முழுக்க அவர்கள் இழப்புகளினூடே வாழ்கிறார்கள். இந்தியாவில் இருந்து இந்த அரசால் எப்போது துரத்தப்படுவோம் என்று அஞ்சி வாழ்கிறார்கள். அவர்கள் சகஜமான வாழ்வை இங்கு வாழ முடியவில்லை. ஆனாலும் தமிழகச் சூழல் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. 

    தமிழ்நதிக்கும் உங்களுக்கும் இடையிலான இலக்கிய, அரசியல் விவாதங்களை முன்னெடுக்கும்போதே அவரது உயிர்வாழ்வோடு தொடர்புடைய தமிழக இருத்தல் குறித்து நக்கல் செய்கிறீர்களே? புலத்தில் இருந்து வருகிற தமிழ்நதி ஆனாலும் சுகன் ஆனாலும் ஷோபாசக்தியானாலும் அவர்களுக்குக் கிடைக்கிற மரியாதை இலங்கையில் இருந்து கள்ளத்தோணி வழியாக முகாம்களுக்கு வருகிற ஏழைத் தமிழ் மக்களுக்கு கிடைப்பதில்லை. அகதி என்றால் மேற்குலகில் இருந்து வருவோரே என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இருந்தாலும் அவர்கள் இங்கு சந்தோசமாக இல்லை. அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. போவதற்கு இடம் இருந்தால் போவார்கள். ஆகவே அவர்களை ‘‘இப்போ உங்க நாட்டுக்கு போங்களேன் பாப்போம்’’ என்று வெவ்வே காட்டாதீர்கள். அது அசிங்கமானது.

    தமிழக தமிழ்த் தேசியவாதிகள் குறித்து...

    பொதுவாக புலி ஆதரவாளர்கள் என்றும் தமிழ் தேசியவாதிகள் என்றும் அழைக்கப்படுகிற தமிழக ஈழ ஆதரவாளர்கள் அனைவருமே ஒத்த கருத்துடையவர்கள் அல்ல. சாதி ஒழிந்த தமிழ் தேசியம் பேசும் குழுக்கள், சுயநிர்ணய உரிமை பேசும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற இடது அமைப்புகள், பெரியார் திராவிடர் கழகம் போன்ற தீவிர பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள், அப்புறம் நெடுமாறன், சீமான் போன்றவர்கள். இதை விட ஆர்.எஸ்.எஸ். நகைமுகன் போன்றோர் கூட தமிழர் விடுதலை குறித்துப் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாம் நமக்கு பிடித்தவர்களாகவும் பிடிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள். தலித் அரசியலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலேயே ஈழ விடுதலையை எறிந்து விடுவீர்களா என்ன? 

    தலித் மக்களின் இட ஒதுக்கீடு கோரிக்கை, அருந்ததியினரின் உள் ஒதுக்கீடு கோரிக்கை, சட்டக்கல்லூரி, உத்தபுரம் போன்ற விவகாரங்களில் தமிழ் தேசியவாதிகளின் கள்ள மவுனத்தை நான் வெளிப்படையாக தீவீரமாக கண்டித்திருக்கிறேன். ஆனால் சீமான் உணர்ச்சிகரமாகப் பேசுகிறார் என்கிறீர்கள். ஈழம் தவிர இட ஒதுக்கீடு, பார்ப்பன எதிர்ப்பு தொடர்பாகவும் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவரது ஈழக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு. உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படாத, காலியாக உள்ள இடங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்ன போது அதை வரவேற்று அறிக்கை விட்ட ஒரே தமிழ் தலைவன் யார் தெரியுமா? சி.பி.ஐ.எம் வரதராஜன்தான். பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் முலாயம் சிங் யாதவ் உள் ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்கிறார். மார்க்ஸ்சிஸ்டுகள் குதியோ குதி என்று குதிக்கிறார்கள். எங்கள் ஊரில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது பத்து பார்ப்பனர்கள் தலைவர்களாக வந்தார்கள் என்கிற பழைய டயலாக் இன்றைய சி.பி.ஐ.எம் -க்கும் பொருந்தும்.

    வெறுப்புணர்வுக்கு எதிரான முகங்கள்

    Eelamபெருந்தன்மை, அன்பு, கருணை, கரிசனம் இந்த வார்த்தைகளை எல்லாம் இப்போது நான் அதிகமாகக் கேட்கிறேன். சுகன் கூட இப்படி ஏதோ ஒன்றிரண்டு வார்த்தைகளை அன்றைக்குப் பேசினார். கேட்பதற்கு ‘திவ்யமாக’ இருந்தது. ஆனால் இந்த வார்த்தைகளுக்கான உண்மையான அர்ப்பணிப்பு உங்களிடம் இருக்கிறதா? வெறுப்புணர்வுக்கு எதிரான முகமென்றால் உங்களுக்கு உடனே தெரிவது இந்து ராமைத்தான். ஆமாம் கொலைகார ஜெயேந்திரனின் சிஷ்யப் பிள்ளையும் குட்டி காமுகனுமான விஜயேந்திரனை தன் காரில் வைத்து ஹைதராபாத்தில் இருந்து அழைத்து வந்த மார்க்சிய முகமூடியான இந்து ராமிடம் இருந்தே தற்காலத்தில் வெறுப்புணர்வுக்கு எதிரான முகமும் இந்த வார்த்தைகளும் பிறக்கின்றன. சந்திரிகாவிடம் எப்போது அவர் சிங்கள கேல் விருது பெற்றுக் கொண்டாரோ அப்போதே அவரது வெறுப்புக்கு எதிரான முகமூடி கழண்டு அம்மணமாகிவிட்டது. ஆனால் அதே இந்து ராமுடன் கூட்டு சேர்ந்துதான் சிபிஐஎம் ஈழப் பிரச்சனையில் நிலைப்பாடு எடுக்கிறது; வெறுப்புணர்வுக்கு எதிரான கூட்டம் நடத்துகிறது. சிங்கள பாசிஸ்ட் கட்சியும் இனவெறிக் கட்சியுமான ஜே.வி.பி-க்கும் மார்க்ஸ்சிஸ்டுகளுக்குமான தொடர்பு ஆழமாக நோக்கப்பட வேண்டியது. சென்னையில் நடக்கும் இவர்களின் மாநாட்டுக்கு அவர்கள் கொழும்பில் இருந்து வருவதும் கொழும்பில் நடக்கும் அவர்களின் மாநாட்டிற்கு இவர்கள் செல்வதுமாக இந்து ராம், ஜே.வி.பி, மார்க்ஸ்சிஸ்ட் கூட்டுதான் ஈழத்தின் மீதான் கொலை வெறிக் கொள்கையை கொண்டிருக்கிறது. ஆதவனின் ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டை தலித்திய அரசியலில் இருந்து அணுகுவதென்பது ஷோபா சக்தியின் சிந்தனை. அவருடைய இன்னொரு கூந்தல் நடிகன்தான் சுகன். ஒருவர் பௌத்தமரபு, ஒருவர் மறுத்தோடி, இன்னொருவர் தலித் அரசியல் நிலைப்பாடு கொண்டவர். புலி எதிர்ப்புக்கு ஒன்று சிங்கள் அரசு ஆதரவிற்கு ஒன்று என்று மிகத் துல்லியமான அமைக்கப்பட்டிருக்கும் குழு.

    சிபிஐஎம்-என் அறிவிக்கப்படாத லோக குரு இந்துராம். இந்துராமின் அயலுறவுக் கொள்கைதான் சிபிஐஎம்-ன் அயலுறவுக் கொள்கை. கட்சி வளர்த்துவிட்ட செக்குமாட்டு சிந்தனைகளின் வார்ப்புதான் ஆதவன் போன்றவர்களின் ஈழப்பிரச்சினை நிலைப்பாடு. தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்களை சுசீந்திரன் போன்ற புலியெதிர்ப்பு குழுவினரிடமிருந்து உருவியெடுத்து தலித் அரசியல் நிலைபாட்டில் இருந்து ஈழத்தை அணுகுகிறார் தோழர்.

    ஈழத்தில் இந்து மதமும் சாதியும் இருக்கிறது என்ற உலக மகா கண்டுபிடிப்பு ஒன்றை இவர்கள் பிரான்சுக்கும் ஜெர்மனுக்கும் போய் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று வரை இந்துப் பாசிச பார்ப்பனக் கருத்தியல் குறித்து மார்க்ஸ்சிஸ்டுகளுக்கு தெளிவான பார்வையே கிடையாது. பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை தந்தை பெரியாரை இழிவுபடுத்தி காந்தியை வைத்து ஜல்லி அடித்துக் கொண்டிருந்தவர்கள்தான் இவர்கள். இங்குள்ள மார்க்ஸ்சிஸ்ட் கட்சியில் தலித்தியத்திற்கோ, பெரியார் சிந்தனைகளுக்கோ துளியும் இடம் கிடையாது. நிலைமை இப்படி இருக்க ஆதவன் பேசுகிற நம்புகிற கொள்கைகளை குறைந்த பட்சம் கட்சியின் மாநிலக் குழுவிலாவது வைக்க முடியுமா? என்ன செய்ய? பில்டிங்கு ஸ்டிராங்கு! பேஸ்மெண்டு கொஞ்சம் வீக்கு!!

    சாதி எங்கே இருக்கிறது? இந்து மதம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சாதி இருக்கிறது. ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில், கேரளத்தில், மேற்கு வங்கத்தில், இங்கிலாந்தில், ஏன் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடத்தில் என எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கிறது. அதனால்தான் ஈழத்தில் இந்தியத் தமிழர்களை வெள்ளாளத் தமிழர்கள் அவமானப்படுத்துகிறார்கள்; இங்கு இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்டு, பார்ப்பன மார்க்சிஸ்ட் தலைவர்கள் குறுக்குசால் ஓட்டுகிறார்கள். வெள்ளாளத் தமிழர்களுக்காக ஈழப்பிரச்சினையை ஒதுக்கும் ஆதவன், கிரீமி லேயர் கேட்கும் சிபிஐஎம் கட்சியை ஒதுக்காமல் அண்டியிருப்பது ஏனோ? எல்லா இடத்திலும் இருக்கிறது ஆகவே அதைக் கண்டு கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை. இனவாதமும் இனக் கொலைகளுமே ஒரு நாட்டின் கடந்த கால நிகழ்வாக இருக்கும் போது அதை எதிர்கொள்ளத் துணியாமல் புலிகளையிட்டு தலித்தியத்தின் பெயரால் மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

    புலிகள் சாதியைக் கணக்கில் எடுக்காததால்தான் ஈழப்போராட்டம் பலவீனமடைந்தது என்று கூறும் ஆதவன், சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறமுடியுமா? கட்சியின் அடுத்த விசாரணையை அவர் சந்திக்க வேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல மாநாடுகள், பொலிட்பீரோ கூட்டங்கள் நடத்திய பின்னர்தான், சாதியை ஒரு பிரச்சினையாக பார்க்கும் தெளிவு மார்க்சிஸ்ட்களுக்கு வருகிறதென்றால், அந்தத் தெளிவை உயிர் வாழ்வதற்கு உத்திரவாதம் இல்லாது, போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் ஆதவன் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்பதற்காகத்தான் கேட்கிறேன்.

    ஆதவன் நீங்கள் தலித் அரசியலில் இருந்தால் மார்க்ஸ்சிஸ்டாக இருக்க முடியாது. நான் தலித் அரசியலில் இருந்து கொண்டே தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது இதுதான் யதார்த்தம். தமிழகத்தில் தமிழ், தமிழன், தமிழினம். திராவிடர் என்கிற ஒற்றை அடையாளத்தின் கீழ் இணைவதை நான் எதிர்க்கிறேன் காரணம், தலித் அரசியல் நிலைப்பாடுதான். ஆனால் ஈழத்தில் அப்படியல்ல. அது சாதீய சமூகமாக இருந்தாலும் இனப்படுகொலையும் இன முரணுமே அங்கு பிரதானம். எப்படி ‘‘வர்க்கப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும்’’ என்று உங்கள் மார்க்ஸ்சிஸ்டுகள் சொல்கிறார்களோ அது போல ஈழத்திலே தமிழ் தேசியப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும் என்று நான் சொல்லவில்லை. அந்த முட்டாள்தனமும் எனக்கில்லை. ஆனால் அந்த தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் முடமாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் செயல்படாதன்மையை பயன்படுத்தி தலித்தியம் என்கிற அரசியலை உங்களின் புலி எதிர்ப்பு அரசியலுக்கு இனியும் பயன்படுத்தாதீர்கள். அதிலிருந்து உங்களுக்கு ஆதாயமாக பொய் பிரச்சாரம் செய்யாதீர்கள். “ஆமாம் ஆதவன் ஒரு மநு விரோதி எப்படி மநுவின் நிழலில் அரசியல் செய்ய முடியும்?”

    குறிப்பு:

    (ஈழ நிலைப்பாடு ஒன்றை மட்டுமே வைத்து, ஆதவனின் தலித் அரசியல் – இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடுகளில் நான் சந்தேகம் கொள்ளவில்லை. மாறாக இவற்றிலெல்லாம், அவரது கட்சி நிலைப்பாடே அவருக்கு எதிராக இருக்கும்போது ஏன் ஷோபா சக்தியின் ஸ்பீக்கரை இங்கே ஒலிக்க வேண்டும்? ஷோபாவே நேரடியாக இங்கே பேசலாம். அதற்குத் தடை ஒன்றும் இல்லை.)

    இந்து ராமின் மார்க்ஸ்சிஸ்ட் முகமூடி

    CPM leadersகட்டுரையை எழுதி முடித்து, ‘அப்பாடா’ என்று கீற்றிற்கு அனுப்ப இணைய தளத்தில் உலாவியபோது இந்தச் செய்தி கண்ணில்பட்டது.

    மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்காணிப்பு முகாம்கள் என்று இலங்கை அரசாலும் இந்து ராமாலும் அழைக்கப்படும் வதை முகாம்களுக்குள் சிக்கியிருக்கிறார்கள். அன்றாடம் பாலியல் கொடுமைகள் அதன் விளைவாய் தற்கொலைகள் என்று ஓர் இனமே அழிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு பாசிச கொடூர மிருகங்களிடம் சிக்கியிருக்கிறது. முகாம்கள் குறித்து அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்த மேற்குலக ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று வரை மனித உரிமை அமைப்புகளையோ தொண்டு நிறுவனங்களையோ முகாம்களுக்குள் அனுமதிக்க மறுக்கிற இலங்கை அரசாங்கம் அங்கு அன்றாடம் கொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் கேள்விக்கிடமின்றியும் சாட்சியங்களின்றியும் நடத்தி வருகிறது.

    உண்மைகளை வெளிக் கொண்டு வந்த மேற்குலக ஊடகவியலாளர்களை அனுமதிக்காத இலங்கை அரசு முகாம்களைப் பார்க்க அழைத்துச் சென்றது யாரைத் தெரியுமா? மார்க்சிஸ்ட் முகமூடியை அணிந்து முற்போக்கு பேசிவரும் இந்து ராமை... பார்ப்பன வெறி பிடித்த இந்து ராம் இப்போது முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு இலங்கை அரசிற்கும் ராஜபட்சேவுக்கும் பாராட்டு தெரிவித்திருக்கிறார். தோழர் ஆதவன் அவர்களே வெறுப்புணர்வுக்கு எதிரான முகங்களின் யோக்கியதை இப்போதாவது தெரிகிறதா? அது மட்டுமல்ல இலங்கைக்கு இப்போது ராஜமரியாதையோடு செல்லத் தகுதியானர்கள் யார் என்றாவது தெரிந்து கொள்ளுங்கள்.

    அந்த செய்தி இதோ,

    சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன - இந்து ராம் கூறியதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது:

    இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான இந்து பத்திரிகையின் ஆசிரியர் என் ராம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று முன்தினம் அங்கு சென்ற அவர், முகாம்களை பார்வையிட்டுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ராம், சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன என்பதை இதன்போது தன்னால் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.

    சர்வதேச ஊடகங்கள் முகாம்களுக்கு சென்று உண்மை நிலைமையை அறிக்கையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தமிழ் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக முகாம்களில் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மக்களின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றுவார் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்து பத்திரிகையின் ஆசிரியர் கடந்த காலம் முதல் இலங்கை ஆட்சியாளர்களுக்கு சாதகமான முனைப்புகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் இலங்கை ஆட்சியாளர்களுடன் நெருங்கி தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.

    நன்றி- http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=11424&cat=1

    வாங்குன காசுக்கு sorry சந்திரிகாவிடம் வாங்குன விருதுக்கு ரொம்பதாண்டா கூவுறான்...கொய்யா...ல. என்று போய் விடலாம். ஆனால் நம் மௌனம் அப்படி அமைதியடைய மறுக்கிறது.

    ஒரு இனமே அழிந்து கண்ணீரிலும் இயலாமையிலும் தவித்துக் கொண்டிருக்கும் போது கொலைகார இராணுவத்துக்கும் கொடூர ராஜபட்சேவிற்கும் சான்றிதழ் கொடுக்கும் இம்மாதிரி மநுவாதிகளை மக்கள் விரோதிகளை, ஆதவன், முடிந்தால் அம்பலப்படுத்துங்கள். 

    - டி.அருள் எழிலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

    வாசகர் கருத்துக்கள்
    பொரம் போக்கு
    2009-07-03 09:44:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    ஆதாவன் தீட்சன்யா ஈழப் பிரச்சினை தொடர்பாக எந்தக் கட்டுரையும் எழுதியதாக தெரியவில்லை. 

    அவர் போன்ற அரசியல் சமூக விமரிசகர்கள் ஒரு இனப் படுகொலை நடந்த போது வாளா இருந்தது சரியல்ல. ஆனால் இப்போது இப்படி மாறி, மாறி கட்டுரைகளாக கலாய்ப்பதால் என்ன பலன்? 

    இப்போது வேலிக்குள் அடை பட்டுக் கிடக்கும் மக்களை மீட்டு எடுப்பது எப்படி, அவர்களுக்கு என்ன உதவி செய்யலாம் என்று சிந்த்தித்தால் ஆக்க பூர்வமாக இருக்கும்! அதை செய்வதுதான் மிக முக்கியம். 

    சந்தடி சாக்கில் அருள் நிலவன் தன்னுடைய மதப் பிரசாரத்தை பூடகமாக அரங்கேற்றி உள்ளது தெரிகிறது! தான் சார்ந்த மதத்தை தவிர பிற மதங்கள் எல்லாவற்றையும் ஒரு 'வாங்கு வாங்குகிறார்' ஐயா! 

    சட்டக் கல்லூரியில் 40 பேர் சேர்ந்து, கீழே விழுந்த மாணவனை செத்த பாம்பை அடிப்பது போல அடித்து நொறுக்கிய கொடூரத்தை, பிளேட்டை திருப்பி சப்பைக் கட்டு கட்டுபவரிடம் நியாயம் எதிர்பார்க்க முடியுமா? 

    "சமணக்காட்டை அழிக்க சமணர்களைக் கழுவுவேற்றியதைப் போல" என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாத ஒரு பச்சை பொய்யை பிரச்சாரமாக செய்கிறார். 

    சிலுவைப் போர்கள் எனற பெயரில் இலட்சக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்த வரலாறை படித்து விட்டு, இப்போது பாலஸ்தீனில், இராக்கில் அதே செயலை மீண்டும் அரங்கேற்றி விட்ட நிலையில் , அதே நினைவில் கர்ப்பனையை இந்தியாவில் திருப்பியிருக்கிறீர்கள். 

    நான் அறிங்கர் அருள் எழிலனிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்.

    இங்கெ முதலியாரோ, செட்டியாரோ, தலித்துகளோ, பார்ப்பனரோ , இசுலாமியரோ, தனியே தனி சாலைகள், பாலங்கள், ஆலைகள், சந்தை என்று வாழ முடியுமா? 

    மக்களை சாதி மத அடிப்படையில் பிரித்து, இரத்த ஆறு ஓட விட்டு அதில் குளிர் காய விரும்பாதீர்கள்! 

    வெறி பிடித்த நிலையில் இருப்பது மிருகத் தனம். இணக்கமாக வாழ்வது தான் மனிதத் தனம்.

    malaian
    2009-07-03 10:11:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    Miga Sariyana Netthiyadi..

    ganeshkumar
    2009-07-03 11:24:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    ஈழத்தில் சாதி அப்பட்டமாய் இருக்கு என முழங்கும் ஆதவனுக்கு வாழ்த்துக்கள். சாதி எங்கு இருந்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அனைத்து ம்நுவிரோதிகளுடைய வேலை, பொறுப்பு. ஆனால் ஆதவன் சார்ந்துள்ள இயக்கத்தில் சாதி இல்லையா, அதை ஒழிக்க அவர் அமைப்புக்குள் என்ன குரல் கொடுத்துள்ளார். சிபிஎம் -ன் மத்தியத்தர வர்கத்தின் மகிழமன்றம் போல் செயல்படும் தமுஎசவின் உறுப்பினர்களில் எத்தனை பேர் சாதி மறுப்பாளர்கள், எத்தினி பேர் சாதி மறுப்பு திருமனம் செய்தி கொண்டாவவர்கள், எத்தினி பேர் தங்கள் குழந்தைகளுக்கு சாதி மறுப்பு திருமனம் செய்த வைத்தவர்கள், எத்தினி பேர் இன்னும் தங்களி சாதி வெறிபிடித்த சிறு தெய்வங்களை வணங்குபவர்கள், இதனை ஆய்வு செய்து ஆதவன் வெளியிட்டால் உசிதம். இலங்கைய்ல் , புலிகள் கிட்ட மட்டும் அல்ல சார் கொஞ்சம் திஉர்ம்ப்பி பாருங்கோஒ

    fredirck
    2009-07-03 11:36:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    Ram is a member of CPI(M). Adavan is also a member of CPI(M). Adavan cannot talk about Ram. Ram is the person who decides about the external affairs policies of CPI(M).
    The same Ram who was shaking hands with Sri Sri SEX Jeyendrar after the sex scandal. Surely people against Manu cannot co-exist with RAM.

    apavi
    2009-07-03 12:13:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    hello first of all do all the Tamil people in TN know that the LTTE had done those attocities against their own people? Why do you so called 'ezha aatharavaalarkal' hide these facts as minor mistakes by LTTE. How is that they expect us to have Racial unity when they killed their own race. The tamils seem to have put mud on their heads by disowning their country... for the advantage of some caste hindus in lanka. adhavan is 100% correct. has any srilankann tamil helpes an Indian tamil?

    kali
    2009-07-03 12:20:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    யாழ்ப்பாண வெள்ளாள சிந்தனை இரண்டு தலித் நண்பர்களிடம் மோதலை உண்டுபநியுல்ளது . டி.அருள் எழிலன் புலி காசு உங்களை எப்படி எல்லாம் பேச விடுறது

    இளைய அப்துல்லாஹ்
    2009-07-03 03:30:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    அருள்! கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் மட்டக்களப்பிலும் புலிகள் நிழல் அரசை ஆட்சி செய்த காலங்களிலும் பாடசாலைகளில் அங்கு காலை வேளையில் தேசிய கீதம் பாடித்தான் பாடசாலையை ஆரம்பிக்க வேண்டும். அதுமட்டுமல்ல இலங்கைக்கு நமோ நமோ தாயேயை விட வேறு தேசிய கீதம் இல்லை. இலங்கையின் தேசிய கீதம் பாடுங்கள் என்றால் யார் வேண்டுமானாலும் இதனைத்தான் பாடுவார்கள். சுகனுக்கு மட்டுமல்ல தமிழ்நதிக்கும் வேறு தேசிய கீதம் தெரிய வாய்ப்பில்லை.
    mnmanas.blogspot.com

    Dr. V. Pandian
    2009-07-03 07:04:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    தலித் இலக்கியங்கள் தேவை, தலித் அரசியல் தேவை, தலித்திய தமிழ்த்தேசியமும் தேவை. ஆனால், வரட்டுத்தனமான நிலைப்பாடுகள் எதிரிகளுக்கே உதவுவதாக அமையும். C. P. M கட்சியில் ஒரு நேர்மையான அறிவாளியில், படைப்பாளியால் இயங்க முடியுமா? C.P.M கட்சியில் ஒரு நேர்மையான மனிதனால் நீடிக்க, அவனது பகுத்தறிவு அனுமதிக்குமா? 

    ஆதவன் தீட்சண்யா நீடிப்பது எப்படி? அருள் எழிளன் அவர்களின் ஆணித்தரமான கேள்விகளுக்கு தீட்சண்யா விடை சொல்லித்தானாக வேண்டும். 

    தமிழன் என்பது வெட்டிப் பெருமை என்பார். ஆனால், திருக்குறளை எழுதியவன் தலித் என்று உரிமையும், பெருமையும் கொள்வார், ஆதவன். 

    ஆதவன், முரண்பாடுகளின் மொத்த உருவமா நீங்கள்?

    "நெற்றியில் பிறந்த பார்ப்பனன்" ஒரு பொதுஉடைமைவாதியாக "இருக்கவே" முடியாதென்ற அடிப்படை ஞாணமற்றவரா நீங்கள்? 

    உருதியாகத்தான் சொல்கிறேன். பார்ப்பனன் ஒரு பொது உடைமைவாதியே அல்ல. இது அனுபவத்தால் உணர்ந்தவை. 100 சதவீதம்! 

    பார்ப்பனர்களிடம் வேடங்கள் அதிகம். இவை ஆரியக் கூத்துகளே!

    கம்யூனிச பார்ப்பனர்கள் "ஆரியக் கூத்தாடினாலும், காரியத்தில் கண்". 

    அந்தக் "கண்" என்பது, கம்யூனிசத்தையே ஒழிப்பது தான். இதைத்தான் "அடுத்துக் கெடுப்பதென்பது". 

    கண் திறவுங்கள் ஆதவன்!!!!

    மூடியக் கண்களுக்கு உலகம் இருட்டுதான்!!!!

    IknowWhatYouHave DoneIn AllSummers
    2009-07-03 07:19:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    சுகனின் சிந்தனையை வெள்ளாளச்சிந்தனை என்று சொல்பவரைக் கண்டிக்கிறோம். அவர் வெள்ளாளராக இருந்தாலும் தலித்துக்காக தான்மட்டுமே வெள்ளாளரைத் தட்டிப் பேசும் வெள்ளாளராகக் காட்டும் நல்லவர். அவரைக் கண்டிப்பவர்களைக் கண்டிக்கிறோம்.

    அனஸ் அண்னலே வா எண்டு சொல்ல வரவும் போ எண்டு சொல்லப் போகவும் வன்னித்தமிழர் மட்டும் ஆட்டுமந்தைகளோ? உங்களின் ஸ்ரீலங்கா அரசுதான் யாழ்ப்பாணத்திலே 1995 இலிருந்து ஆட்சியிலே இருக்கிறதே? எதுக்கு உங்களை லண்டனுக்கு ஓடிவந்து தீபம் ஏற்றும்வரைக்கும் அ(தோ)கதியாக அலையவைக்கிறது. நினைத்திருந்தால், அக்குறணையிலே இருக்கையிலேயே திரும்பக்கொண்டுபோய் ஏற்றியிருக்கலாமே? முஸ்லீம் அரசியல்பேசும் பௌசருக்கும் அரசியலாலேதான் லண்டனிலே அகதிவாசமோ? கருணாதான் மட்டக்கிளப்பிலே முஸ்லீங்கள் கலைக்கப்படும்போது புலிப்பெரிசு. ஆளின் காலை இப்ப தழுவித் திரியிற நேரம் அதைவிட்டுவிட்டுக் கேள்விகளைக் கேட்கலாமே? சுகனுக்கும் புட்டும் தேங்காய்ப்பூவும் உதாரணம் காட்டும் சின்னமாஸ்ரர் ஞானத்தூக்கும் அவற்றை தோழி விஜிக்கும் வாயிலே என்ன புலி அடிச்சுப் புண்வந்து பிளாஸ்ரரா போட்டிருக்கிறார்கள்? முஸ்லீங்கள் ஊர்காவற்படையிலே எஸ்ரிஎப்புடன் சூட்டைக் கீளப்பியதுகளை சுகனும் பேசமாட்டார் ஞானம் விஜி கப்பிளும் பேசமாட்டினம். நீங்களும் பேசமாட்டியள். பௌசர், கருணாவைக் காப்பாற்றின முஸ்லீம்காங்கிரசும் பேசமாட்டியள்.

    கவிதை மட்டும் மசிருக்குச் சிரைக்கச் சிரைக்கக் கன்னத்திலும் கவட்டிடுக்கிலும் உமக்கு முளைக்கும்.

    kamaraj
    2009-07-03 08:43:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    அன்பார்ந்த நண்பர்களே,

    மதுரையில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் தோழர் தமிழ்நதி, ஈழம் குறித்த சமகால எழுத்தாளர்களின் பதிவு ஒன்றும் இல்லை, அப்படி இருக்கிற ஒரு சில பதிவுகளும் நட்சத்திர எழுத்தாளர் எழுதியதில்லை என்று கருத்து முன்வைக்கிறார்.
    அதே கூட்டத்தில் தலித்துக்கள் குறித்து பொது எழுத்தாளர்கள் என்ன செய்தார்கள் என்கிற கேள்வியை முன்வைக்கிறார் ஆதவன். இதில் மோதல் வருவதற்கு சாத்தியம் இருப்பதாக தோன்றவில்லை. இரண்டுபேருடைய ஆதங்கத்தையும் புரிந்துகொள்ள இந்த எழுத்துலகம் தவறுகிறது.அங்கு நடந்த இனப்படுகொலையை எங்காவது ஆதரித்துப் பேசினாரா 
    ஆதவன் ?. ஒரு எழுத்தாளன் அப்படிப்பேச முடியுமா?. பேசினால் அவன் எழுத்தாளனாக இருக்க வாய்ப்பில்லை.
    மாறாக இந்த விசயத்தில் கருத்துச்சொல்கிறேன் என்கிற பெயரில் இடஒதுக்கீடு, தலித்தியம், தமுஎச ஆகிய எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு காலில் மிதிப்பது போன்ற எழுத்தால் என்ன சாதித்துவிடமுடியும். கீழ்தரமான
    சிந்தனைகளை கடைவிரிப்பது தவிர. தவறி தனிமனித ஈகோக்களை உரசிக்கொள்ள கிடத்த மேடையாக்குகிற பின்னூட்டம் எழுதுகிற நண்பர்களும் பிரச்சினையோடு தொடர்புள்ள விடயங்கள் மேல் கருத்துச்சொல்லாமல் அவர்களுக்கு இந்த உலகில் எது எது பிடிக்காதோ அதைப்பற்றியெல்லாம் எழுதுகிறார்கள். இதில் என்ன துரதிஷ்டம் என்றால் ஒரு தீவிர பெண்ணியம்
    பேசுகிற தமிழ்நதியும், தீவிர தலித்தியம் பேசும் ஆதவனும் எதிர் எதிர் திசையில் நிறுத்தப்பட்டதுதான். இரண்டும் வேறு வேறானதாக கருதுகிற யாரும் நிச்சயமாக நல்ல சிந்தனையுள்ளவர்களாக இருக்கவாய்ப்பில்லை. இதில் இருக்கிற உள்ளார்ந்த பிரித்தாலும் சூழ்ச்சி கவனிக்கத்தவறுமேயானால், அது மேலும் ஒரு சாபம்தான். சமூக மாற்றம் சின்னசின்ன பிணக்குகளை உதறித்தள்ளிவிட்டு ஒன்றாகப்போராடுவதால் மட்டுமே சாத்தியம், விமர்சனங்களைக் கூட வேரறுக்க நினைக்கிற
    எதுவும் முற்போக்காக முடியாது. அன்பு நண்பர் அருள் எழிலனுக்கு சில கேள்விகள் இருக்கிறது. அதை ஆதவனை நோக்கி
    கேட்காமல் பொதுவில் வைக்கலாம். எனக்கு தெரிந்து இந்த மூன்று பேருமே நல்ல நண்பர்கள். அது கெட்டுவிட்டது.நடபினைத்தொலைத்து கிடைக்கப்போவது என்ன?

    Suresh Kannan
    2009-07-03 08:54:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    சாதி இன்று நம் சமூகத்தில் நீக்கமர நிறைந்துள்ள்து. அது ஈழத்தில் மட்டும் அல்ல, இந்தியா, தமிழகம் முதல் புலப்பெயர் வரை எங்கு நீண்டு கிடக்கிறது. ஆதவன் முதலில் சிபிஎம்-ல் உள்ள சாதியை- பார்பனியத்தை ஒழிக்க குரல் கொடுங்கள், அதனை சுத்தம் செய்யுங்கள். எங்கள் அமைப்பில் சாதியை ஒழித்து விட்டோம் என அறிவியுங்கள். அதை செய்து பாருங்கள் அப்பொழுது தான் இது எத்தகைய நீண்ட ஒரு போராட்டம் என தெரியும். எங்கள் தொகுதியில் சிபிஎம்- ஜாதி பார்த்து தான் தெர்தலில் வேட்பாளரை நிறுத்துகிறது என்பது ஊர் அறிந்த் உன்மை, ஆதவன் இந்த ஜாதிய சிபிஎம் பக்கம் அதை சுத்தீகரிக்கும் வேலையில் முதலில் களம் இறங்களாம்.

    ஜாதிய ஒழிப்பு போராட்டம் என்பது நீண்ட நெடியது, அது இன்று புலிகளிடம் உள்ளதா.. ஓகே.. அதை கண்டிபோம்..
    அது போல் நீங்கள் உங்கள் கட்சியிற்குள் உள்ள சாதியை இவ்வாறு அப்பட்டமாக கண்டித்ததுன்டா. கண்டிக்க மாட்டீர்கள் என்பது அனைவரும் அறிவர். இது உங்கள் செலக்டிவ் அம்னீஷியா வா?

    ஒரு லட்சம் பினங்கள் மீது நின்று கனக்கு தீர்க்கும் வன்மம் வேண்டாம்.

    neengalum manusangalaa
    2009-07-03 09:05:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    காமராஜ் அய்யா வசதியா அருள் எழிலனைப் பொதுவாகப் பேசச் சொல்லறீங்க. மாறாக இந்த விசயத்தில் கருத்துச்சொல்கிறேன் என்கிற பெயரில் இடஒதுக்கீடு, தலித்தியம், தமுஎச ஆகிய எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு காலில் மிதிப்பது போன்ற எழுத்தால் என்ன சாதித்துவிடமுடியும் என்று அவற்றைவிட்டுவிட்டு ஈழத்தமிழனுங்களை மிதிச்சா ஓக்கேன்னு சொல்லராப்பல பேசறீங்க. ஒங்கலுக்கெல்லாம் பெண்ணியம் தலித்தியமின்னு இயமும் ஈயமுந்தான் இளிக்கிறது முக்கியமாவுது. மனுசங்க, தலித்தோ, தமிழனோ இல்லை. பொதுவிலேயா ஆதவன் பேசினாரு. எதுக்கு கிழக்கு மட்டக்களப்பு தமிழன் இனியொரு அசோக்கை யாழ்ப்பாண தமிழன் ஷோபாசக்தி அண்ட் கோ பிரான்சுல வெச்சு அடிக்கறப்ப ஆதவனுக்கு தமிழனுங்க அழுதானுங்களா குத்தினானுங்களான்னு தோணலை? நேர சிபிஎம்கட்சியும் ஷோபாசக்தியும் சொன்னதுக்கு கத்தறேன்னு சொல்லிட்டே ஈழத்தமிழனுங்க செத்தது சரின்னு சொல்லிருக்கலாம். 

    ஏங்க ஈழத்தமிழன்னா இழுத்து ஒரு அடி அடிக்கணுமின்னு ராஜபக்ச ராம் சார் ஊடாக ஒங்கலுக்கும் ஆர்டர் போட்டிருக்கானா? ஒங்களுக்கு ஏத்தாப்பல ஆதவன் சொன்னதை சொல்லல்லைன்னும் அவரைவிட்டுவிட்டு இசங்களையும் இலக்கியத்தையும் தூக்கிவெச்சு ஈழத்தமிழனுங்களை உதைன்னு சொல்ல்லனும்? நீங்களும் சிபிஎம் மெம்பரா? பார்ப்பனியத்தோட நவீனகூஜாதூக்கியா?

    திருவாத்தான்
    2009-07-03 09:19:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    தம்பி காமராசின் ஆதங்கம் புரிகிறது....எல்லோரும் போறபோக்கில் பூணூலிஸ்ட் பார்ட்டியையும், தமாசு எழுத்தாளர் சங்கத்தையும் காலி செய்தால் எப்படி நாளைக்கு கடை விரிப்பதாம்? 

    ஆனால் ”தலித் புகழ்” ஆதவனுக்கு தெரியும்.... 
    இருப்பது ஒரே ஒரு எம்.பி.சீட்தான் என்றாலும் 
    எழுந்த எல்லா எதிர்ப்புகளையும் மீறி 
    அவைகளை தங்களது தந்திரோபாயத்தால் ”முறியடித்து” 
    ராஜ்ய சபா எம்.பி.சீட்டினை 
    அக்மார்க் ”தலித்” மாமா ரங்கராஜனுக்கு அளித்தது 
    ”சமூக நீதி காத்த” சி.பி.எம்.தான் என்பது. 

    தலித்துகளால்
    தலித்துகளுக்காக
    தலித்துகளே 
    வழிநடத்தும் ஒரே ”ஸ்தாபனம்”
    மார்க்ஸிஸ்டுகளுடையதுதான்.

    சும்மா வாய் புளுச்சுதோ
    மாங்காய் புளிச்சதோன்னு
    எங்களவாவை பேசிண்டு திரியாதேள்.

    இரவி சங்கர்
    2009-07-03 11:54:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    திரு அனஸ்,

    நான் யாழ்பாணத்திலுள்ள முன்னணிப்பாடசாலையில் 7 ஆண்டுகளும், அதற்கு முன்னர் ஒரு கிறிஸ்தவ பாடசாலையில் 3 ஆணடுகளும், ஒரு இந்துப்பாடசாலையில் 2 ஆண்டுகளும் (1968 -19980 வரை) கல்விகற்றேன் நான் கற்ற பாடசாலைகளிலும் சரி அங்குள்ள பெரும்பாலான பாடசாலைகளில் "நமோ நமோ" பாடப்படுவதில்லை, வானொலியிலும் பின்னர் தொலைக்காட்சியிலும் கேட்டுத்தான் அப்படியொரு பாடலின் சிலவரிகள் பரீட்சயமானது. வன்னியில் விடுதலைப்புலிகளின் ஆட்சியில் பாடசாலைகளில் நமோ நமோ பாடியிருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. தவிர புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழர் நிகழ்வுகளில் இந்த ஒப்பாரி பாடப்படுவதில்லை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

    யாராவது தமிழன் இதைப்பாடுகிறான் என்றால் அவன் புத்தி பேதலித்தவன் இல்லை எனின் ஒன்றில் சக தமிழர்களை புண்படுத்த விரும்புகிறான் அல்லது சிங்களவனுக்கு கொத்தடிமையாக வாழவிரும்புகிறான் என அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

    எனக்கு தமிழ் இஸ்லாமிய பாடசாலைகள் பற்றியோ, அவர்களது நிகழ்வுகள் பற்றியோ எவ்வித பரீட்சியமும் இல்லை என்பதால், அவைபற்றி குறிப்பிட முடியாமைக்கு வருந்துகிறேன்.

    Dilip Narayanan
    2009-07-04 12:33:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    //தமிழகத்தில் தமிழ், தமிழன், தமிழினம். திராவிடர் என்கிற ஒற்றை அடையாளத்தின் கீழ் இணைவதை நான் எதிர்க்கிறேன் காரணம், தலித் அரசியல் நிலைப்பாடுதான்... அது போல ஈழத்திலே தமிழ் தேசியப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும் என்று நான் சொல்லவில்லை. அந்த முட்டாள்தனமும் எனக்கில்லை.// Dalit activist of all kind has to note.

    Sarvachitthan
    2009-07-04 01:21:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    புலிகள் தமிழ்ப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலப்பகுதியில் அங்கு எந்தப் பாடசாலையிலோ அல்லது பொது நிகழ்ச்சிகளிலோ “நமோ நமோ ---” கீதம் பாடப்பட்டதில்லை. அது மட்டுமல்ல, ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போராளிகளில் பலர் உயர் சாதி இந்துக்களல்ல.அதில் இருந்த பெரும்பான்மையோர் 
    கடல்சார் தொழில்களில் ஆற்றல் வாய்ந்தவர்கள்.ஆகையினால்தான் அவர்களால் வலிமையான “கடற் புலி” களை உருவாக்கமுடிந்தது. சொல்லப்போனால் ஸ்ரீசபாரட்ணம், முகுந்தன் போன்றவர்கள்தான் உயர்சாதி வெள்ளாளர்கள்! 1986ல் இவர்களது இயக்கம் யாழ்ப்பாணத்தில் செயல்பட இயலாத நிலை தோன்றிய பின்புதான் புலிகள் இயக்கத்தில் உயர் சாதியினர் பலர் இணைந்து கொண்டனர். ஆனால், யாழ்ப்பாணத்தில் 1970ம் ஆண்டுவரை நிலவிவந்த சாதித்திமிர் அதன் பின்னர் படிப்படியாக மறைந்து,ஈழப்போரின் உச்சகட்டத்தில் அது குறித்துப் பேசுபவர்களே இல்லாமல் போய்விட்டார்கள் என்பதுதான் உண்மை.போராட்டமும், புலப்பெயர்வும் , அறிவுத்தேடலும் சாதி அமைப்பினை ஈழமண்ணிலிருந்து படிப்படியாக அகற்றுவதில் வெற்றி பெற்றிருக்கிறது எனலாம்.மேலும், தமிழகத்திலோ அல்லது ஏனைய இந்திய வட மாநிலங்களிலோ காணப்படுவது போன்ற “பொல்லாத தீண்டாமை” ;கிராம எரிப்புகள் என்று எதுவுமே அங்கு கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியில் நடைபெற்றதில்லை.பொது இடங்களில், கோவில்களில், திருமண பந்தங்களில் 'தாழ்த்தப்பட்டவர்கள்' எனச் சிலரை உயர்சாதியினர் என்று சொல்பவர்கள் ஒதுக்கிவைத்திருந்தது உண்மையேயாயினும் ,புலிகள்' இதனை ஆதரித்தில்லை.இந்தியாவில் தலித்துகளுக்கு இன்றும் நடைபெறும் கொடுமைகளுக்கு ஒப்பான செயல் அங்கு என்றுமே நடைபெற்றதில்லை.எனவே இந்தியாவில் நிலவும் சாதிக் கொடுமைகளை மனதில் நினைத்துக்கொண்டு ஈழத்திலும் அது போன்று நடைபெற்றது எனக் கற்பனைசெய்வது பொருத்தமானதாகப் படவில்லை.அது மட்டுமல்ல ‘புலிகள் இயக்கம்' முற்றுமுழுதாக ஈழவிடுதலையில் நாட்டம் செலுத்திய ஓர் போராளிக் குழு. அவர்களது சிந்தனையில் தமிழின விடுதலை ஒன்றே ஆழமாகப் படிந்திருந்தது. இன விடுதலையின் பின்னர் சாதி வேறுபாடுகள் மறைந்து போகவாய்ப்பிருந்தது. எனவே அவர்கள் ஈழத்தமிழரது பொது எதிரியான “சிங்கள இனவாத'த்துக்கு எதிராகப் போரிடுவதற்கு முன்னுரிமை அளித்ததில் தப்பேதுமில்லையே?

    பி.புத்ரன்
    2009-07-04 01:56:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் மட்டக்களப்பிலும் புலிகள் நிழல் அரசை ஆட்சி செய்த காலங்களிலும் பாடசாலைகளில் அங்கு காலை வேளையில் தேசிய கீதம் பாடித்தான் பாடசாலையை ஆரம்பிக்க வேண்டும்//

    பொய்..
    98 வரை வன்னியின் முல்லைத்தீவில் வாழ்ந்தவன். அங்கே சாதரணதரம்வரை படித்தவன். அப்படியொரு நிலையும் அங்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால்.. சிறிலங்காத்தேசிய கீதத்தில் நமோ நமோ தாயே.. நல்லெழில் பூரணி என்ற வார்த்தைகளுக்கு அப்பால் எனக்கு வரிகளும் தெரியாது. அதுவும் பூரணமென்கிற எனது அம்மம்மாவை நக்கலடிப்பதற்காக அடிக்கடி நல்லெழில் பூரணி என்று பாடுவதால் மனப்பாடமானது. 

    அதேநேரம் புலிகள்கட்டுபாட்டுபகுதிகளில் பாடசாலை சார் நிகழ்வுகளில் கூட (விளையாட்டுபோட்டி) புலிகளின் கொடி ஏற்றப்படுவதோது ஏறுதுபார் என்ற கொடிப்பாடலும் பாடப்படும்.

    ஆழியூரான்
    2009-07-04 03:30:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    எதிர் கருத்தை முன் வைப்பவர்களை நோக்கி ‘பணம் வாங்கிட்டான்’ வகையறா குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது இது முதல் முறையல்ல. ஆனால் அருள் எழிலன் இந்த வார்த்தைகளை உச்சரிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. புலி எதிர்ப்புக் கருத்துக்களை உற்பத்தி செய்வதிலும், உலவ விடுவதிலும் இலங்கை அரசாங்கம் செலவு செய்யத்தான் செய்யும். உலகத்தின் கண்கள் பார்த்திருக்க ஒரு பேரழிவை நடத்தி முடித்தவர்களுக்கு மேற்கொண்டும் பணத்தை வாரியிறைப்பதும், கருத்துக்களை உருவாக்குவதும் பெரிய விஷயமல்ல. ஆனால் இலங்கை அரசினது செலவுகளின் பயனாளிகள் என்று ஷோபா சக்தியையும், ஹிந்து என்.ராமையும் சமமாக மதிப்பிடுவது சரியல்ல. இது எப்படி சரியாகும்? ஹிந்து ராமின் அரசியலும், ஷோபா சக்தி முன்வைக்கும் அரசியலும் ஒன்றா..? ’என்னோடு இல்லை என்றால் எதிரியுடன் இருப்பதாக அர்த்தம்’ என்ற குரலில் அமையப்பெற்ற இந்தக் குரல் வலதுசாரியின் குரலை ஒத்தது. மாற்று அரசியலை முன்னெடுப்பவர்கள் எல்லோரும் துரோகிகள் என முத்திரைக் குத்திய புலிகளின் குரலில் தொடர்ந்து கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. இது ஆபத்தான் எல்லைக்கே இட்டுச்செல்லும்.

    * மதுரைக் கூட்டத்தில் ஆதவனின் பேச்சின் தொனி -அதற்கான சூழல் அங்கு உருவாக்கப்பட்டது என்றபோதிலும்- நிச்சயம் தவறானது. ஆனால் அவரது அரசியல் நிலைபாடு என்பது அந்த ஒரு கூட்டத்தை மட்டும் வைத்து மதிப்பிடப்படுவதல்ல. அன்று அவர் பேசியதன் அரசியல் கருத்துகளுக்கு தமிழ்நதி உள்பட யாரும் நேரடி பதில் எழுதவில்லை. அப்படி எழுதியிருக்கும் அருள் எழிலன், ஆதவனை ஒரு சி.பி.எம். ஆள் என குற்றவாளிக் கூண்டில் அடைக்கிறார். அவர் சி.பி.எம். கம்பெனியின் ஆள் என்பது இப்போதுதான் தெரிகிற ஒன்றா..? அவர் மீதான விமர்சனங்களுக்கு இன்றுவரை அவராலேயே காத்திரமான பதில் சொல்ல முடியாத விமர்சனம் இதுதான். அதற்காக சி.பி.எம்.மின் சாயம்போன சிவப்பு மையை ஆதவனுக்கும் பூசி அவரை ஒதுக்க முடியாது. அதேநேரம் ஒரு பேரழிவின் வாசலில் நிற்கும் ஒரு அகதிப் பெண்ணை நோக்கி ‘இப்ப ஊருக்குப் போயேன் பார்ப்போம்’ (அடைப்புக்குறிக்குள் ஆதவன் எழுதியவை இந்த வகை விமர்சனத்துக்கான தற்காப்பு என்றே கருத வேண்டியிருக்கிறது) என்று ஆதவன் கேட்பது வக்கிரமானதும், அசிங்கமானதுமாக இருக்கிறது. படைப்பாளி, மென் மனம், உள்மனம் என்றெல்லாம் பேசுகிறவர்கள் ஒரு அழிவின் விழிம்பில் நிற்கிறவர்களிடம் மிக நக்கலான தொணியில் பேசியிருப்பது எவருக்கும் எரிச்சலூட்டக் கூடியது. அதிலும் தமிழ்நதிக்கான பதிலாக ஆதவன் எழுதியிருக்கும் கட்டுரைகளில் தனிமனித தூற்றுதல்களூம், ஒரு சினிமா கிசுகிசு நிருபரைப்போல அறமற்ற வார்த்தைகளை எழுதிச் செல்வதும் கண்டிக்கப்பட வேண்டியது. இவற்றை உரையாடுவதனூடாக இலக்கிய-அரசியல் இடைவெளியைக் குறைக்க முயல்வோம். மாறாக எல்லோருக்கும் ஒரு முத்திரைக் குத்தி புட்டிக்குள் அடைத்து பூதமாக்க வேண்டாம்.

    * தமிழ்நதி, மதுரைக் கூட்டத்தில் கேட்டது நியாயமான கேள்வி. அது நியாயமற்றதாக இருந்தாலுமே அதைக் கேட்பதற்கான உரிமையும், தெரிவும் அவருடையது. ஆனால் அதைத் தொடர்ந்து தமிழ்நதி எழுதிய மறுப்புரையிலும், பின்னூட்ட விவாதங்களிலும் எந்தவித அரசியல் தர்க்கங்களும் இல்லை. மாறாக வெறும் கழிவிரக்க எழுத்துக்களை மட்டுமே காண முடிகிறது. ’விமர்சனங்களற்ற புலி ஆதரவாளர் என்ற தன் மீதான விமர்சனத்தை ஒற்றை வார்த்தையில் கடந்துபோகிறார்’ என்பதையும் அவ்விதமே எதிர்கொள்கிறார் தமிழ்நதி. ஒரு அறிவுத்தளத்திலான தர்க்கம் என வந்தபிறகு மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனதுடனான உரையாடலே சரி. அரசியலற்ற பிரதிகளை திரும்ப, திரும்ப உற்பத்தி செய்வது, மைய நீரோட்டத்துக்கே இட்டுச்செல்லும்.

    naankaam maamanithan
    2009-07-04 06:03:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    /’என்னோடு இல்லை என்றால் எதிரியுடன் இருப்பதாக அர்த்தம்’ என்ற குரலில் அமையப்பெற்ற இந்தக் குரல் வலதுசாரியின் குரலை ஒத்தது. மாற்று அரசியலை முன்னெடுப்பவர்கள் எல்லோரும் துரோகிகள் என முத்திரைக் குத்திய புலிகளின் குரலில் தொடர்ந்து கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. இது ஆபத்தான் எல்லைக்கே இட்டுச்செல்லும்./

    ஆவி ஆழியூரான் அய்யா. டோட்டலி கரெக்ட்டு

    அப்படியே மாற்று அரசியலைப்பேசுகின்றோம் என்பவர்களை எதிர்கேள்வி கேட்பவர்களையெல்லாம் புலி ஆதரவாளர்கள், மனிதகுலத்துரோகிகள், சாதிவெறியர்கள் என்று பூட்டிச் சாத்தும் ஷோபாசக்திகள் தொடக்கம் ஆதவன் தீட்சண்யா பிளஸ் அ. மார்க்ஸ் வரைக்கும் இதே பிளேட்டையும் திருப்பிப்போட்டுக் கேளுங்கையா. 

    மனுநீதி பூணூலணி சிபிஎம் பேரிலே இந்து ராமும் பிரபாகரன் பொல்பொட் என்கிறார். புலி பேரிலே மனுசமண்டையிலே போட்ட மண்டைதீவு அந்தோனிதாசனும் பிரபாகரன் பொல்பொட் என்கிறார். ஆக இடதால் வந்தாலென்ன வலதால் வந்தாலென்ன நாமோ நமோ நமோ தாயடியே சரணம் என்பதுதான் அவர்களின் பாடல். நீங்கள் வேறு ஒரு பெரிய பதிவு போட்டீர்கள் ஏதோ பிரபாகரனேதான் வன்னிமக்களைக் கொன்றுதள்ளினார் என்பதாக. யானையைப் பார்த்த குருடரைப் போல் ஈழத்தமிழரைப் பார்த்தால் என்ன செய்வோம்?

    தேவா
    2009-07-04 06:22:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    தலித் கிறிஸ்த்தவனுக்கு கிறிஸ்த்துவத்திலிருந்து விலகியவன்.

    ஆதவனின் ஈழத்த்மிழர் பார்வை தலித் அரசியல்கட்சி என்றெல்லாம் கட்டம் கட்டி எழுதியதற்கு ஆதவனே பதில் சொல்லட்டும். புலிகள் பாதுகாப்பென்றுதான் மக்கள் அவர்களுடன் சென்றார்கள் என்கிறீர்களே அப்படிபோனவர்களுக்கு பாஸ் சிஸ்ரம், வயதுக்கட்டுப்பாடு, ஆள்பிணை என்றெல்லாம் தடைகளைப்போட்டு மக்களை வெளியேறவிடாது தடுத்தது மக்களின் பாதுகாப்பிற்காகவா அருள்? போர் ரொமான்டிசம் வேறு உண்மைநிலை வேறு. சலமோன்சம்மாட்டி போரின்போது கட்டாய இடம் பெயர்வில்சென்றவர் இரத்தம் கக்கியபோதிலும் மருத்துவத்திற்காக வெளியேற புலிகள் விடவில்லை இரத்தவாந்தி எடுத்தே எந்த மருத்துவமும் இன்றி மாண்டுபோனார் சம்மாட்டி. பிள்ளைகள் அப்பனைப்புதைக்கக்கூட போகமுடியவில்லை. எத்தனை தடவை முயன்றும் புலிகளிடமிருந்து தப்பிவரமுடியாதவர்கள் கதை நிறைய இருக்கிறது. காசு பணம் இருந்தால் கொடுத்துவிட்டு வந்தவர்களும் உண்டு. யாரும் இலங்கையில் நடந்த கூட்டுக்கொலைகளை மறுக்கவில்லை, மறுப்பவன் மானிடம் பேசத்தகுதி அற்றவன். மக்களை வெளியேறவிட்டால் இறப்பின்தொகையாவது குறைந்திருக்காதா. இறுதிப்போர் என்று இவர்கள் சொல்லும் போரில் பலவந்தமாகப்பிடித்து அவசர அவச்ரபயிற்சியின்பின் மாண்டுபோனவர்கள் தொகை தெரியாவிடினும் கதையாவது தெரியுமா எழிலன். எல்லாவற்றையும் தமிழரின் விடிவிற்காக என்று சப்பைக்கட்டு கட்டுவதை ஏற்கமுடியுமா? மாவீரர் குடும்பங்கள் புலிகளுடன் இருந்தார்கள், புலியை நமிபியவர்களும் புலிகளுடன் இருந்தார்கள் ஓட்டிச்சென்றவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இது உண்மை என்பதை என் சொந்தங்களில் செத்தது போக மீதி சொல்கிறது.

    யுவன்பிரபாகரன்
    2009-07-04 07:01:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    ஆதவன் தீட்சன்யா போன்ற முரன்பாடுகளின் மூட்டைகள் தெரிந்தே தமது முரன்பாடுகளை பேணுகிறார்கள். ஒரு பக்கம் புரட்சிகர வாய்ச்சவடால்கள் மூலம் தமது சமூக அரிப்பை சொரிந்து விட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் தமது நடுத்தர வர்க்க சுக வாழ்வை பேணும் வாய்ப்பளிக்கும் சிபிஎம் போன்ற கட்சிகளை விட்டு செருப்பால் அடித்தால் கூட வெளியேற மாட்டார்கள். அதற்குப் பதில், ஈழப் பிரச்சினை போன்ற விசயங்களில் தமது கட்சி சார்ந்த பித்தலாட்ட நிலைப்பாடுகளை தலித்திய இன்னபிற முகமூடிகள் கொண்டு புனிதப்படுத்தும் கீழ்த்தரமான வேலைகளில் இறங்குவர். 

    கழுதைக்கு குட்டிச்சுவர் ஆதாரம், குட்டிசுவருக்கோ கழுதையே அங்கீகாரம்.

    இப்படிக்கு
    புரச்சி [:P]

    குணாளன்
    2009-07-04 07:26:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    நண்பர் அருளுக்கு! 

    தாங்கள் ஆதவன் மீது விமர்சனம் வைப்பதும், அவரது கட்சி அரசியலைக் கேள்விக்குட்படுத்துவதும் உங்கள் உரிமை. பதில் சொல்ல வேண்டியதும், சுயவிமர்சனம் செய்யவேண்டியதும் ஆதவனின் கடமை. இதற்கிடையில் இப்போதைக்கு நாம் கருத்துச் சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கின்றேன். 

    ஏனெனில் ஏற்கனவே ஆதவனுக்கும் தமிழ் நதிக்குமான விமர்சனக் களத்தில் ”வைக்கிறன் பார் வெடி” என்பது கணக்காய் பலர் பின்னூட்டம் விட்டு தங்கள் தங்கள் பங்கிற்கு கருத்தாடலை பல திசைகளுக்கும் திருப்பி அடித்து சொதப்பி விட்டார்கள். இங்கே விமர்சனம் கருத்துப் பரிமாறல் என்பதற்கு அப்பால் அணிசேர் அரசியல் பன் முகங்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. 

    எனவே அது தொடர்பாய் இப்போ அதிகம் பேசத் தேவையில்லை என்று நினைக்கின்றேன். தங்கள் கருத்துப் பதிவில் எனக்கு உறுத்திய சில விடையத்தை மட்டும் இப்போ நட்போடு நான் பேசித்தானாக வேண்டும். தவிர்க்க முடியாது.

    இதிலே கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் தாங்கள் ஆதவனை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று புலம்பெயர் மாற்றுக் கருத்தாளர்கள், தமிழ்நாட்டு மாற்றுக்கருத்தாளர்கள் அனைவர் மீதும் துரோகிப் பட்டத்தை சுலபமாகவே சுமத்தியுள்ளீர்கள். கவனியுங்கள்: 

    //புலி எதிர்ப்பு குறித்தும் இலங்கை இறையாண்மை குறித்தும் இன்றைய சூழலில் பேசுவதில் தான் ஆதாயம் அதிகம். புலி எதிர்ப்பு என்கிற கருத்துக்காக இலங்கை அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை புலத்தில் கொட்டுகிறது//

    //பொதுவாக இப்படி பேசுகிறவர்களுக்கு தமிழகத்திலும் புலத்திலும் இலங்கை அரசு செலவு செய்கிறது என்பது உண்மைதான். ஆனால் புலி ஆதரவாளர்களுக்கு புலிகள் காசு கொடுப்பார்கள் என்பதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை. அவர்கள் நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வார்களே தவிர அவர்கள் யாருக்கும் கொடுத்தார்கள் என்பதை நான் நம்பவில்லை. //

    //புலி ஆதரவாளர்களை விட புலி எதிர்ப்பாளார்களுக்கு கிடைக்கிற அனுகூலம் அதிகம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். தன்னார்வக்குழுக்கள்இ இலங்கை அரசு என பலதரப்பிலும் பணம் கொடுக்கிற ஒரு துறைதான் புலி எதிர்ப்பு. //

    அருள்! 
    தங்களது இப்படியான பரப்புரை இந்த நாடுகளில் மாற்றுக் கருத்தாளர்களை எதுவும் செய்யப் போவதில்லை. இதைத்தானே புலிகளும் இத்தனைகாலம் பரப்புரை செய்து, தம்மை விமர்சிப்பவர்கள் எல்லோருக்கும் இனாமாகவே துரோகிப் பட்டம் வழங்கினார்கள். அந்த மிக மலிவான வழியையே அருள் நீங்களும் கையிலெடுத்திருக்கிறீர்கள். 

    மேலே நீங்கள் புலிகள் தொடர்பாக எழுதியுள்ள அத்தனை விடையங்களும் இங்கு ஏற்கனவே புலிப் பினாமிகள் விவாதித்து முடிந்தாயிற்று. 

    //ஏனைய அமைப்புகளை விட புலிகள் சிறந்தவர்கள்தான். என்னைக் கேட்டால் நான் பார்த்த தலைவர்களுள் என்னைக் கவர்ந்தவரும்இ என்னில் நிறைந்திருப்பவரும் பிரபாகரன்தான். // 

    //நீங்கள் ஆசியாவின் சேகுவேரா என்று பிரபாவை நக்கல் செய்தாலும் உண்மை அதுதான்.// 
    இதுதான் உலக மகா அபத்தம். நீங்கள் அவிழ்க்கும் அறிவீனத்துக்கு ஒரு அளவு வேண்டாமா நண்பரே?! 

    //தன்னையும் தன் பிள்ளைகளையும் களத்தில் பலியாக்கி வீரமரணமடைந்த பிரபாகரன் // 

    // தமிழ் மக்களை புலிகள் பணையக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். லால்கரில் ஐம்பது கிராமங்களை இராணுவம் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கைப்பற்றி விட்டது. அந்த கிராமங்களின் பெரும்பங்கு மக்கள் மாவோயிஸ்டுகளோடு ஜார்க்கண்ட் காடுகளை நோக்கி நகர்ந்து விட்டார்கள். அந்த ஆதிவாசிகள் எப்படி மாவோயிஸ்டுகள் இல்லையோ - ஆனால் மார்க்ஸ்சிஸ்டுகள் செய்த துரோகம் எப்படி அவர்களை மாவோயிஸ்டுகளை நோக்கி நகர்த்தியதோ - இராணுவம் துரத்தும் போது சிக்கினால் சீரழிந்து விடுவோம் என்று எப்படி மாவோயிஸ்டுகளோடு சென்றார்களோஇ அப்படியே வன்னி மக்களும் புலிகளுடன் போனார்கள். அதுதான் உண்மை. வன்னி மக்கள் எல்லாம் புலிகள் என்றோ ஈழ மக்கள் எல்லோருமே புலிகள் அமைப்பில் குப்பி சுமந்தவர்கள் என்றோ யாருமே சொல்லவில்லை. அவர்கள் சிங்களனை விட புலிகள்தான் தமக்கு பாதுகாப்பானவர்கள் என்று நம்பினார்கள். அதுதான் உண்மையும் கூட. //

    இப்படி அருள் எழிலன் சொல்வதுபோல் பலப்பல வண்ணங்களில் இங்கே ”புலிவாய்மொழிப்” புலவர்களால் 
    (ஆனால் உண்மை அதுவல்ல நண்பரே. இதில் நீட்டி முழக்கி நான் எழுத முடியாது கொஞ்சம் பொறுங்கள் வன்னிச் சிறைகளில் வாடிக்கிடக்கும் அந்த மக்கள் நியாயஞ் சொல்ல வருவார்கள். முதலில் அவர்களை விடுவிக்கப் பாடுபடுவோம்) 

    இவற்றை விடுவோம். தாங்கள் நம்புவதைத்தான் சொல்கிறீர்களா அது உங்களுக்கே வெளிச்சம். 

    ஆனால் புலியின் மொழியிலேயே அருள் எழிலனும் ”புலம்பெயர் நாடுகளிலுள்ள மாற்றுக் கருத்தாளர்களுக்கெல்லாம் இலங்கை அரசிடமிருந்து கோணி கோணியாக காசு கொட்டுப் படுகின்றது” என்ற தொனியில் எழுதும் கோணங்கித் தனமான பேச்சுத்தான் எரிச்சலைத் தருகின்றது. 

    அப்படி அரசிடமிருந்து பணம் வாங்குவோரின் பெயர்களை ஆதாரபூர்வமாய் முன் வையுங்கள். நாங்களே அம்பலத்தில் வைத்து நார் நாராய்க் கிழிக்கிறோம்.

    நண்பரே அருள் எழிலன்! நீங்கள் இப்படிச் சொல்லி விட்டீர்கள் என்பதற்காக இங்கிருக்கும் மாற்றுக் கருத்தாளர்கள் “புலிகளிடம் வாங்கிய பணத்துக்காகத்தான் இப்படியெல்லாம் நீங்கள் பேசுகிறீர்கள்” என்று சொல்ல மாட்டார்கள்.
    அப்படியிருந்திருந்தால் நல்ல நல்ல குறும் படங்களெல்லாம் எடுத்திருப்பீர்களே.

    அருள் எழிலன் உங்களுக்க ஒன்று தெரியுமா? அரசின் கூலி வாங்கிகளாக தாங்கள் இப்போ சித்தரிக்கும் மாற்றுக் கருத்து நண்பர்கள்தான் மாற்றுச் சினிமாவுக்கான தளமொன்றை ஏற்படுத்தும் பொருட்டு தமிழ் நாட்டிலிருந்து ”தப்புக்கட்டை, தங்களது ”ராஜாங்கத்தின் முடிவு” போன்ற நல்ல படைப்புக்களைத் தருவித்து தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடித் திரிந்தனர். 
    இலங்கை அரசு மாற்றுக் கருத்தாளர்களுக்குக் கொட்டித் தந்த பணத்தில்த்தான் தங்களுக்கு விருது தந்தார்கள் என்று தயவு செய்து சொல்லி விடாதீர்கள். ஏனென்றால் மாற்றுச் சினிமாவுக்கான தளத்தை நிறுவ வேண்டுமென்பதில் அவர்கள் எத்தனை தூரம் கடினமாய் உழைத்தார்கள், அர்ப்பணித்தார்கள் என்பதை நாம் அறிவோம். இவை தொடர்பாக உங்கள் நண்பர்கள் பாரீஸ் அசோக், லட்சுமி, பிரகாஸ், டென்மார்க் தாஸ், நோர்வே பானுபாரதி, தமயந்தி, ஜேர்மன் பரா மாஸ்டர், ஜெகா போன்றவர்கள் உங்களுக்குச் சொல்லியிருப்பார்களே. இப்போ அவர்களையுமல்லாவா அரச கைக்கூலிகள் என்பதுபோல் சொல்லி விட்டீர்கள். 

    குணாளன்-

    kulanathan
    2009-07-04 07:29:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    //இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை இங்கே தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள் இட்டுக் கட்டி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஜெர்மனியில் அகதிகளுக்கு விண்ணப்பம் நிரப்பிக் கொடுத்தும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை பார்த்தும் இலங்கை அரசின் அனுசரணையோடும் வாழும் சுசீந்திரனை பொறுக்கி எடுத்து புது விசையில் நேர்காணலாக வெளியிட்டிருந்தீர்களே? //டி.அருள் எழிலன்.

    அருள் எழிலன், சுசீந்திரன் என்பவர் இலங்கை அரசுக்கு வேலை செய்வது பரவலாக புகலிடத்தில் எல்லோருக்கும் தெரிந்த விசயம். எனவே இவர்களைப் பற்றி அம்பலத்திற்கு கொண்டுவருவது அவசியம்

    Abinanthan
    2009-07-04 08:48:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    உங்கள் உணர்ச்சிகர பொங்கல் காந்துப்போச்சு..... போதும்..... முடியல!!!! 
    LTTE ஆதரவு என்பது தலித்தியத்திற்கு எதிரானது என்பதை நினைவுபடுத்துகிரேன் 
    சே'வோட போயி பிரபாகரனை ஒப்பிடுவதா?!?!?! ஜனநாயம், மனிதநேயம், தியாகம், வீரம்............ தனிமனித சாகசங்களுக்கு அப்பாற்பட்டவன் சே, உங்கள் தளபதி இதில் ஒன்றிலாவது பொருந்துவாரா??????????????? உங்களை நீங்களே வினவுங்கள் ???????????? 
    LTTE க்கு ஆதரவாக பேச தமிழ் நாட்டுக்கு பணம் வருவது இல்லைஎன்பது உண்மையா !!!!! LTTE நிதியில் நடத்தப்படும் தமிழை மட்டுமே பேசும் டிவி சேனல், நாளிதழ், நகழலம், ஏன் ஒரு அரசியல் கட்சியே உண்டு உங்களுக்கு தெரியாத.... ஒரு வேலை நீங்களும் இப்பட்டியலில் இருபீர்களோ????.... உங்கள் குல தெய்வம் பிரபாகரனுக்கு தன் வெளிச்சம்!!!!!! 
    மாற்று கருத்தாளர்களை தமிழின விரோதிகள் என்று LTTE பயன்படுத்திய அதே முத்திரையை இப்போ தமிழ்நாடுக்கு இறக்குமதி செய்ய பார்கிறிர்கள்..... சகோதர படுகொலையும், சொந்தங்களை இலங்கை ராணுவத்திடம் பலி கொடுத்தது மட்டுமே உங்கள் தமிழ்தேசியத்தின் சாதனை.... நீங்கள் இங்கு வைக்கும் உணர்ச்சி பொங்கலால், இலங்கையில் கருகுவது என்னவோ தமிழ் மக்கள் தான்.... 
    ....தயவு செய்து கட்டுப்படுத்துங்கள் உங்கள் உணர்ச்சியை

    surendhar
    2009-07-04 09:14:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    ஆழியூரான், குணாளன்!
    புலி ஆதரவை விட புலியெதிர்ப்புக்கே பணம் கொட்ட வாய்ப்பு அதிகம் என்றுதான் அருள் எழிலன் சொல்லியிருக்கிறார். அதற்காக ஆதவன், ஷோபாசக்தி ஆகியோர் காசு வாங்கிவிட்டுத்தான் எழுதுகிறார்கள் என்று தான் கருதவில்லை என்றும் கூறியுள்ளார். பிறகு ஏன், ‘இவர்கள் எல்லாம் காசு வாங்கிக்கொண்டுதான் எழுதுகிறார்கள்’ என்று அருள் எழிலன் சொல்வதாக விஷயத்தைக் திரிக்கிறீர்கள்? குணாளன், உங்களுக்குப் புலிகள் மீது ஆயிரம் விமர்சன்ங்கள் இருக்கலாம், அருள் எழிலனுக்கு ஒரு சில விமர்சனங்கள் இருப்பதுபோல! அதற்காக ஆதவனின் ‘வெவ்வே’ + ஆணாதிக்கமான பேச்சுக்கு சப்பைக்கட்டு கட்டாதீர்கள். 

    எந்த சிற்றிதழும் வாசிக்கக் கிடைக்காத, ஏமன் நாட்டில் எனக்கு கீற்றின் மூலமாகத்தான் ஆதவனை தெரியும். கீற்று ஆசிரியக்குழு ஆதவனைக் கொண்டாடுவதுபோலத்தான், என்னைப்போன்ற கீற்று வாசகர்களும் ஆதவனைக் கொண்டாடுகிறோம்; அவரிடமிருந்து இப்படி ஒரு கட்டுரை வரும் என்று நான் ஒருக்காலும் நினைக்கவில்லை. இதை கீற்று குழுவாவது வெளியிடாமல் நிறுத்தியிருக்கலாம். ஆதவன் போன்ற முற்போக்காளரிடமும் அழுக்கு இருக்கிறது என்பதை என்னைப் போன்றவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கும். என்ன செய்வது? அதற்கான சந்தர்ப்பத்தை ஆதவன் தரவில்லையே!

    ஏகைலவன்
    2009-07-04 09:51:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    ஷோபாவோ, ஆதவனோ காசுவாங்கியதாக அவர் எழுத வில்லையே? ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் பிரான்சில் வேலைக்கே செல்லாமலிருக்கும் ஷோபா சக்தி எப்படி உலகம் முழுக்க ஓயாமல் சுற்றி வந்து கொணிடிருக்கிறார். எப்படி ஷோபா தமிழகத்தில் இருந்து ஆட்களை அழைத்து விருந்து வைக்கிறார். எனத் தெரியவில்லை.அத்தோடு சுகன் போன்ற சாடிஸ்டுகள் மக்கள் கொலையில் மகிழ்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அப்புறம் சேவையும் பிரபாவையும் ஒப்பிட்டே அருள் எழுத வில்லையே? நிதானமிழந்து குதிக்கிறவர்கள் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை படித்து விட்டுக் கருத்துச் சொல்லவும். தமிழகத்தில் சேவை விட பிரபாகரந்தான் அதிக் இளைஞர்களைக் கவர்ந்தவர் என்கிறார். நமக்கு பிடிக்குதோ இல்லையோ அதுதானே உண்மை?

    RAVI
    2009-07-04 10:07:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    //ஷோபாசக்தியோஇ ஆதவனோ இலங்கை அரசிடம் பணம் பெற்றுக் கொண்டு இப்படிப் பேசுகிறார்கள் என்று நான் நம்பவில்லை. பொதுவாக இப்படி பேசுகிறவர்களுக்கு தமிழகத்திலும் புலத்திலும் இலங்கை அரசு செலவு செய்கிறது என்பது உண்மைதான். //அருள் எழிலன்

    ஐரோப்பாவில் அகதியாக வாழும் ஒருவர் முழுநேர வேலை செய்தால் அவருக்கு கிடைக்கும் அடிப்படைச் சம்பளத்தில் தன் வாழ்க்கையை கொண்டு நடாத்துவது எவ்வளவு கஸ்ரம் என்பது இங்குள்ள அகதி தமிழருக்கு புரியும். அப்படி இருக்கும்போது எந்தவித வேலையுமற்ற ஷோபாசக்தி போன்றவர்கள் மலேசியா சிங்கப்பூர் பாங்கொக் லண்டன் இந்தியா என்று பயணம் பண்ணுவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது?. இது நியாயமான சந்தேகமாக தெரியவில்லையா? இந்தியாவுக்கு அடிக்கடி வரும் ஷோபாசக்திக்கு பயணச் செலவு ஏனைய செலவுகளை கூட்டிப்பாருங்கள். வேலை செய்கின்ற அகதித் தமிழர்களுக்கு பக்கத்து நாட்டிற்கே போகமுடியாத பொருளாதார பற்றாக்குறை. ஷோபாசக்தி போன்றவர்களின் இந்த உல்லாச பயண வாழ்வுக்கு எப்படி பணம் கிடைக்கிறது. இச் கேள்வியில் நியாயமில்லையா? ஷோபாசக்தியோடு பழகிய இன்னும் தமிழ்நாட்டில் பழகிக் கொண்டிருக்கிற அவரை நியாயப்படுத்துகின்ற நண்பர்கள் மனச்சாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள். நட்புக்காக தவறான பேர்வழிகளை நியாயப்படுத்தி நியாயப்படுத்தி எம் இனத்தை அழித்ததுதான் மிச்சம். புலிகளின் அழிவுக்கும் இதுதான் காரணம். புலியெதிர்ப்பாளர்களின் அழிவுக்கும் இதுதான் காரணம். உறவுகளுக்கு அப்பால் உண்மையை பேசுவோம். வாருங்கள் நண்பர்களே.

    குணாளன்
    2009-07-04 10:14:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    நண்பர் சுரேந்தருக்கு! 

    //புலி ஆதரவாளர்களை விட புலி எதிர்ப்பாளார்களுக்கு கிடைக்கிற அனுகூலம் அதிகம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். தன்னார்வக்குழுக்கள்இ இலங்கை அரசு என பலதரப்பிலும் பணம் கொடுக்கிற ஒரு துறைதான் புலி எதிர்ப்பு.// அருள் எழிலன். 

    புலிகளும் புலி ஆதரவாளர்களும் மாற்றுக் கருத்தாளர்களைப் “புலியெதிர்ப்பாளர்கள்” என்றே விழிப்பதுதான் நண்பரே வழக்கம். அது தவிர அவர்களுக்கு வேறு பாஷையே தெரியாது. இந்த விடையம் அருள் எழிலனுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தும் மேற்படி எழுதுகிறார் என்பதைக் குறித்தே விசனப் பட்டேன். திரிக்க வேண்டிய தேவை நமக்கு இல்லை. அப்படிப்பட்ட தொழிலில் நம்பிக்கையோ விருப்போ கிடையாது. 

    //ஆதவனின் ‘வெவ்வே’ + ஆணாதிக்கமான பேச்சுக்கு சப்பைக்கட்டு கட்டாதீர்கள்.// சுரேந்தர்.

    சுரேந்தர்! ஆதவன் எழுதிய கடிதப் பதிவுக்கு நான் ஏற்கனவே 
    July 2, 2009 6:17 pm கண்டித்துள்ளேன். 

    //”நாங்கள் ஈழத்தமிழர்களுக்காகப் பேசவேண்டுமென்று குரல்கொடுக்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று ஆதவன் கேட்டிருந்தால் அது எமக்கும் கொஞ்சம் வருத்தமாகவும் சங்கடமாகவும்தான் இருக்கிறது. அவரது பதில் கடிதத்தைப் படிக்கும்போது அவரை உசுப்பேற்றிய ஒரு சூழலில் அப்படிப் பேசித் தொலைத்ததாகக் குறிப்பிடுவதை அவதானிக்க முடிகின்றது..// 
    //ஆனாலும் உங்களை எந்தக் கொம்பாதி கொம்பன் உசுப்பேற்றியிருந்தாலும் நீங்கள் அந்த வார்த்தையைப் பாவித்திருக்கக் கூடாதென்றே நினைக்கின்றேன் ஆதவன்.//

    தவிரவும் அவரது ஏனைய சில வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்பாக சஞ்சிகை ஒன்றிற்கு விரிவான கட்டுரை எழுதியுள்ளேன். யாருடைய தவறான கருத்துக்களுக்கும் சப்பைக் கட்டுக் கட்டும் தொழில் நம்மதில்லை ஐயா. அது உயிர்த் தோழனாயிருந்தாலும்.

    “விமர்சனம், சுயவிமர்சனம்” என்றால் என்ன என்பதை முடிந்தளவு கற்று, அதை ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்லும்படியாகவே மக்கள் மத்தியில் வேலை செய்தவர்கள் நாம். 

    இந்த விவகாரம் குறித்து அதிகப்படியான பின்னூட்டங்களில் எந்தவித கருத்துப் பரிமாறல்களோ, பயனுள்ள விவாதங்களோ இல்லை என்பது மட்டுமல்ல, வேறு திசைகளுக்கு சிலர் வேண்டுமென்றே இதை இட்டுச் செல்வது புரிந்ததாலும் நான் மேற்கொண்டு தமிழ்நதி, ஆதவன் பற்றிய கருத்துச் சொல்லலைத் தவிர்த்தேன். இதில் பலர் தங்களது அரசியலை வலிந்து நுழைக்கிறார்கள். அதுதான் உண்மை. 

    ஆதவனின் எழுத்தியக்கத்தில் எனக்கு எப்படி மதிப்பிருக்கிறதோ அதேபோல் அருளின் படைப்பாற்றலிலும் விருப்பிருக்கிறது. நட்போடு தோழமையோடு விவாதிப்பதென்றால் தொடர்வோம். "என்னை எதிர்த்து எழுத யாரடா நீ?" என்ற கொலோடு வருவீர்களானால்... எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. உங்களுக்கும் இருக்குமென்று நினைக்கிறேன். 

    -குணாளன்-

    குணாளன்
    2009-07-04 10:30:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    இப்போது பாரீஸ் அரசியலும் இதற்குள் தன் பங்கிற்கு நுழைந்து விட்டது. எல்லோரும் ஒதுங்கி வழி விடுங்கள். பாருங்கள் கூத்தை. 

    பயப்பிடாதீர்கள் இவர்களெல்லாம் கடந்த காலங்களில் பாரீசில் ஒரே குடையின்கீழ் மாற்று அரசியலும் மக்கள் இலக்கியமும் சமைத்துக்கொண்டிருந்த கூட்டாளிகள்தான். இனி இவர்கள் எல்லோரும் சேர்ந்து மற்றவர்களை முட்டாளாக்கும் முயற்சியில் கூட்டாக இறங்குவார்கள். 

    கல்யாணம் செய்து எனக்கும் 2 பிள்ளைகள் இல்லையென்றால் மாதமொரு நாட்டுக்குப் பயணிக்க முடியும். சாதாரணவேலையில் பாதி செய்தாலே போதும். 

    -குணாளன்-

    RAVI
    2009-07-04 11:19:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    //கல்யாணம் செய்து எனக்கும் 2 பிள்ளைகள் இல்லையென்றால் மாதமொரு நாட்டுக்குப் பயணிக்க முடியும். சாதாரணவேலையில் பாதி செய்தாலே போதும். //குணாளன்

    குணாளன் எந்த உலகத்திலிருந்து கதைக்கிறீர்கள். ஐரோப்பா பொருளாதார நெருக்கடி விலைவாசி ஏற்றம் வேலை நேரக் குறைப்பு இவற்றைப்பற்றிய புரிதல் தங்களுக் இருந்தால் இவ்வாறு எழுதமாடடீர்கள். முழுநேர வேலை செய்தால் அடிப்படைச் சம்பளம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? நியாயமான கேள்விகளை சந்தேகங்களை எழுப்புகின்றவர்களை குழுவாத அரசியலுக்குள் இழுத்து நியாயங்களுக்கு மாசு கற்பிப்பதே உங்களைப்போன்றவர்களின் தொழிலாகிவிட்டது. இதுதான் புகலிட அரசியல் சாக்கடையாய் மாறியதற்கு காரணம். காரண காரியங்களை நியாயமான கேள்விகளை சந்தேகங்களை விமர்சன ரீதியாக ஏற்றுக் கொண்டு உண்மை நிலையை ஆராய்ந்திருந்தால் புகலிட சாக்கடை அரசியல் தமிழகத்துக்குள்ளும் நுழைந்திருக்க முடியாது. முதலில் உங்களின் குழுவாத சாக்கடை அரசியலிருந்து வெளிவரப்பாருங்கள்.

    இளைய அப்துல்லாஹ்
    2009-07-04 11:29:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    ''வா எண்டு சொல்ல வரவும் போ எண்டு சொல்லப் போகவும் வன்னித்தமிழர் மட்டும் ஆட்டுமந்தைகளோ'' என்று சொல்வதற்கு எந்த கொம்பனுக்கும் உரிமையில்லை. வாங்கோ 

    மனிதக்கேடயங்களாக இருங்கோ என்று சொன்னது நாங்களா? போய் அகதி முகாமில் இருக்கிற உங்கள் உறவுகளை கேளுங்கள். கதை கதையாய் சொல்கிறார்கள். பச்சை பனை மட்டை அடிவாங்கியவர்களும் துப்பாக்கி சூடுபட்டு கால்கை முடமாகி இருப்பவர்களும் சொல்வார்கள். மண்மேட்டால் ஏறி உயிர் தப்ப விட்டார்களா காதகர்கள் என்று.

    வா எண்டு சொல்ல வரவும் போ எண்டு சொல்லப் போகவும் முஸ்லிம்கள் மட்டும் ஆட்டுமந்தைகளோ

    என்ற கேள்வியை திருப்பி எனது உறவினர்கள் முஸ்லிம்களும் கேட்கிறார்கள். புத்தளம் அகதி முகாமில் இருந்து கொண்டு. எங்கள் பூமியில் இருந்து துப்பாக்கி முனையில் விரட்டியடித்ததும் அது ஏன் என்று கேட்க ஒரு நாயும் இதுவரை பதில் சொல்லாததும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. திருப்பி அடித்திருக்கலாம். ஆனால் அந்த காதகர்கள் கையில் ஒரே நேரத்தில் நூறு பேரைக்கொல்லும் கொலையாயுதம்.ஒரு சிறுபான்மை இனத்துக்காக போராடுபவர்கள் என்று சொல்லிக்கொண்ட கொலையாளிகள் எங்களை கொன்றார்கள். எங்கள் காணிகளை அபகரித்து தமிழர்களுக்கு கொடுத்தார்கள். இரவிரவாக வரட்டி விரட்டி அடித்தார்கள். தெய்வம் நின்று கொன்றிருக்கிறது 19 வருடத்தில். கண்ணீர் சும்மா விடாது மகனே. 

    இன்னும் எனது உம்மாவின் கையில் எங்களது அம்மப்பா இரத்தமும் வியர்வையுமாய் காடு வெட்டி களனியாக்கிய 5 ஏக்கர் புளியங்குளத்து காணியின் உறுதி இருக்கிறது. 

    முல்லைத்தீவு ஆஸ்பத்திரியில் இருந்து என்னை பச்சை மண்ணாய் கொண்டு வந்து போட்ட எனது வீட்டு முற்றத்துக்கு சமாதான காலத்தில் போவோம் என்று 2004 ஆம் ஆண்டு போக அங்கு சோதனைச்சாவடியில் நின்ற தவ்வல் புலி ஒன்று சொன்னது '' அண்ணை உங்கை போகேலாது நீங்கள் தமிழ் ஈழம் கிடைச்சாப்பிறகு வாங்கோ'' நான் கேட்டேன் ''தம்பி எப்ப ராசா தமிழ் ஈழம் கிடைக்கும்'' தவ்வல் முழுசுகிறது.

    நான் சொன்னேன் தம்பி அது என்ரை காணியடா அங்கு போகோணும் பார்க்க வேணுமடா. அண்ணை மேலிடத்து உத்தரவு சோனக ஆட்களை விடக்கூடாது என்று. செக்பொயின்ட்டுக்கு அங்கால் என்னை போக விடவில்லை. இந்த லட்சணத்தில் இருக்கும் எல்லாவற்றையும் மறந்து விட்டு வெறும் முண்டமாக வாழச்சொல்ல எந்த கொம்பனுக்கும் அருகதையில்லை.

    அடுத்தது ஏன் வெளிநாட்டில் வந்து இருக்கிறாய் என்று என்னையோ அல்லது தமிழ் நதியையோ கேள்வி கேட்கிறதுக்கு யாருக்கும் உரிமையில்லை. நான் மற்றவர்களைப்போல் புலிகளின் பெயரை சொல்லி அடிக்கிறார்கள் கொல்கிறார்கள் என்று அகதி அந்தஸ்து கேட்கவில்லை.அவர்களை போய் கேளுங்கள்.நான் வேக் பேமிட்டில்தான் இருக்கிறேன்.

    நான் எனது பெயரில்தானே மிகத்தெளிவாக கருத்துக்களை தெரிவிக்கிறேன். நீங்கள் பொய் யாஹு அட்ரஸில் ஒழிந்து கொண்டு பயந்து கொண்டும் தொடை நடுங்கியும் ஒரு கருத்து தெரிவித்தல் தேவைதானா. பெயர் சொல்ல அச்சப்படுபவர்கள் பொத்திக்கொள்ளலாம்.
    mnmanas.blogspot.com

    I may be sick, but won't suck
    2009-07-04 12:40:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    அனஸ் அண்ணலே அப்ப அபலைவிட்ட கண்ணீருக்கு அப்பாவிகள் முப்பதினாயிரம் பேரையும் சேரக்கொன்ற அரைலூஸ்தெய்வம் காத்தான்குடிகொலைகாலத்திலே மட்டக்கிளக்கிலே புலிக்கொம்பாயிருந்த கருணாவை மட்டும் எதுக்கப்பனே கொல்லாமல் உம்மடை பௌசர், ஆசாத் மௌலானா இவையோட கூடிக்குலாவச் சொல்லுது? மந்தி(ரி) ஆக்கிவைச்சது? பிரபாகரனே வந்து துவக்கெடுத்துச் சுட்டது? அல்லாவுக்கென் என்ன அரைக்கண் பார்வையோ?

    முஸ்லீங்களைக் கலைச்சது ஏதோ சரியெண்டு ஆரோ வாதாடினதுமாதிரி சன்னதம் ஆடுறீர்? கலைச்ச நேரத்திலை எதிர்த்துப்பேசின குரல்களிலே நமதும் அடங்கும் அய்யா. ஆனால், உம்மட இண்டைய மசிர்வாழ்க்கைகாக புளியங்குளம் உள்ளடக்கின வன்னிகொலைகளை தெய்வம் நிண்டாடும் எண்டுறீர் பாரும். அந்த பம்மாத்தின் கோளாறைத்தான் உமக்கும் சுட்டுறம். ஆதவன் தீட்சணியமற்றதுக்கும் கலைச்ச புலியைக் கடித்த தொனியோடு சுட்டுறம். முஸ்லீங்கள் கொம்புகளல்ல. தமிழர்களும் கொம்புகளல்ல. சிங்களவர்களும் அல்ல. கேட்பதெல்லாம் சிம்பிளான ஒரு கேள்விதான். 1995 இலே உம்முடைய அரசு யாழ்ப்பாணத்தைப் பிடிச்சது. எதுக்கு திரும்ப கலைச்ச முஸ்லீங்களைக் குடியேற்றமுடியவில்லை. அதுக்கும் புலிவாலைப்பிடித்துத் தூக்கிக் காட்டுவது சிலருக்கு லண்டன் பிழைப்புக்கு ஆகலாம். பேமிட் எண்டால் நல்லதுதான். கருணாகூட ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடனேதான் லண்டன் பயணித்தார். சொன்னாப்போலை, சின்னமாஸ்ரர் வீட்டுக்கு பிரான்சுக்குப் பயணித்தார். ஆனால், உந்தப் பேமிட்கூட இல்லாமல் எத்தனை சனம் ஊருக்குள்ளே சாகுதென்று உங்களுக்குத் தெரியாதாக்கும். நீங்கள் தெய்வம் நின்று அது அறுக்குமென்று சொல்கிறீர்கள். போலித்தனம் எண்டுறது அதுதான். 

    தமிழ்மேலாதிக்கத்தினைப் பேசிக்கிழிக்கும் நீங்கள் ஒருநாளும் ஊர்காவற்படையாக எஸ்ரிஎப்போடு நின்று தமிழரைக் கொன்ற முஸ்லீங்களைப் பற்றிப் பேசப்போவதில்லை. பேசியதுமில்லை. மூதூரிலே கூடப் பேராதனையிலே படித்த சேனையூர் நவரெட்டினராஜாவை பெருநாளுக்கு வரச்சொல்லி வெட்டிக்கொன்று வாய்க்குள்ளேயே அவனின் ஆன் குறியை வெட்டிவைத்துவிட்டுப்போனவர் அவருடைய சக பேராதனை கலைப்பீட முஸ்லீம் மாணவனே. இருபதாண்டுகளின் பின்னாலே அவர் பெயரைக் குறிப்பிட்டுக் கிளறுவது அவசியமில்லை. விட்டுவிடலாம்.

    காரைதீவிலே புலிகளிலும்விட ஈபி ஆர் எல் எப் அதிகம். காத்தான்குடி காரைதீவு வெட்டுதல்களிலும் சுடுதல்களிலும் புலிகளைவிட ஈபிஆர்எல் எப்புக்கும் காத்தான்குடி ஊர்காவற்படைஜிகாத்துக்கும் அதிகப்பங்குண்டு என்பதை வடபகுதி முஸ்லீம் நீங்கள் அறியாவிட்டால் மன்னிக்கவேண்டும். கருணாவைக் காத்த காருண்யன் அலவிமௌலானா முதல் பிள்ளையான்கூட அரசியல் பங்குவிற்கும் முஸ்லீம் காங்கிரஸ், முன்னாள் ஈரோஸ், பின்னால் பின்னாள் முஸ்லீம் காங்கிரஸ், இந்நாள் எங்கோ ஷேகு தாவுத் இவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். திருகோணமலையிலே புலிசார் ஈரோஸிலே இருந்த முஸ்லீங்களின் உடன்பிறப்பினை ஈபிஆர்எல்எப் வரதராஜப்பெருமாளின் அலுவலகம் முன்னுக்கே வைத்துச் சுட்டுத் தள்ளியபோது, பெருமாளின் மந்தி சபையிலே குந்தி இருந்த இன்றைய ஸ்ரீலங்கா அரசு ரேசிஸ்ட் தயான் டயத்திலகாவும் கேட்கவில்லை. இன்றைக்கு ஆங்கிலத்திலே வெட்டித்தள்ளும் doctor Imtiyas இன் மாமா அபுயூசுப்பும் கேட்கவில்லை. அதே நேரத்திலே சுடப்பட்டுச் செத்த புலி உறுப்பினரின் தம்பியொருவர் தமிழர் என்பதாலே நாய் சாகட்டும் என்று விட்டுவிடலாம்.


    புலிகளைப் புனிதர்கள் என்று நிறுவுவதல்ல என் நோக்கம். புலிகள் முஸ்லீங்களை யாழ்ப்பாணத்திலிருந்து காரணம் எதுவானாலுங்கூட கலைத்தது குற்றமே. மறுகருத்தில்லை. ஆனால் புழுக்களின் ஈனச்செயல்களையெல்லாம் புலிகளின் மேலே சுமத்திவிட்டுப் போகும் அதே புழுக்களை இளைய அப்துல்லாவும் ஆதரிக்கவேண்டாம் என்பதே இங்கே நோக்கம். அண்மையிலே பஹீமா ஒரு கவிதைநூல் விமர்சனம் இதே குற்றஞ்சாட்டுத்தொனியிலே எழுதியிருக்கிறார். அவருக்கும் இருக்கிறது அறளை பேர்ந்த என் அட்வைஸ். 

    தொடை நடுங்கி என்றால் ஒத்துக்கொள்ளத்தான் வேணும். ஏனென்றால், நீங்கள் அரச ஆதரவு பெற்ற மாற்றுக்கருத்து முஸ்லீம். பாதிப்பில்லை. இலங்கையிலேயே இருந்துகொண்டு உங்களிடம் சொந்தப்பெயரிலே கேள்வி கேட்டால் நாளைக்கு சுரேஷ் காசிமோ டக்ளஸ், கருணா, சித்தார்த்தன் கும்பலோ வெள்ளைவானோடு வந்து நீலவான் நோக்கி அனுப்பமாட்டார்கள் என்பதை நிச்சயப்படுத்துங்கள். எண்ணச்சுதையெல்லாம் இழுத்திழுத்து முன்னைப்பழம் வன்னக்கதைகள் பின்னிப்பின்னிப்பேசுவோம் பெருநேரம்.

    குணாளன்
    2009-07-04 12:49:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    //முதலில் உங்களின் குழுவாத சாக்கடை அரசியலிருந்து வெளிவரப்பாருங்கள்.//ரவி 

    ஐயா இரவி! குழுவாதத்துக்குள் புதைந்து கிடந்து புழுத்தப்போவது யாரென்பதை முதலில் நீங்கள் உங்கள் எழுத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். 

    தெரியாமல்த்தான் கேட்கிறேன் இவ்வளவு பேசுகிறீர்களே வருடத்தில் குறைந்த பட்சம் 5 தடவைகள் தமிழரின் கதவைத் தட்டி காசு கறந்த புலம்பெயர் புலிகளின் இன்றைய சொத்துப்பத்து என்னவென்று உங்களுக்குத் தெரியாதென்று சொல்லுங்கள் பார்க்கலாம். அதையெல்லாம் கேட்பதற்கும் சொல்வதற்கும் உங்களுக்கு முதுகெலும்பில்லை. ஆனால் உங்களது முன்னையத் தோழர்களோடு நீங்கள் பண்ணும் இந்த ஊடலில் நாங்களும் பங்காளிகளாக வேண்டுமா என்ன? 

    முதலில் ஆதாரத்தோடு முன் வையுங்கள் நண்பரே. நார் நார்ராய்க் கிழிக்கப் படுகிறார்களா இல்லையா என்பதைப் பிறகு பாருங்கள். உங்களது ஊகங்களுக்கெல்லாம் நாமும் துணை வர முடியா சரியா…??? 

    -குணாளன்-

    back in full form
    2009-07-04 01:11:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    /முல்லைத்தீவு ஆஸ்பத்திரியில் இருந்து என்னை பச்சை மண்ணாய் கொண்டு வந்து போட்ட எனது வீட்டு முற்றத்துக்கு சமாதான காலத்தில் போவோம் என்று 2004 ஆம் ஆண்டு போக அங்கு சோதனைச்சாவடியில் நின்ற தவ்வல் புலி ஒன்று சொன்னது /

    அண்ணே இதே கதைதான் ஆலங்கேணி தமிழர்களுக்கு கிண்ணியா முஸ்லீங்களாலே சொல்லப்பட்டதாம். சொல்லப்படுகிறதாம். அரசு ஆசியுடன். பிள்ளைப்பூச்சியின் நொள்ளை ஆட்டுவைத்தியர் 'புட்டும் தேங்காய்ப்பூவும்' உதரத்துள்ளே உதிர உதிரப் பேசும் அஞ்ஞானி ஸ்டாலினின் கண்ணுக்குத் தெரியவில்லையோ உங்களின் சபையிலே தெண்டனிட்டுச் சொல்லியிருக்கிறோம். அடுத்த தடவை ஏதோ பார்த்து குடுங்க ஆண்டே

    megasankaram
    2009-07-04 08:34:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    ///அப்படி அரசிடமிருந்து பணம் வாங்குவோரின் பெயர்களை ஆதாரபூர்வமாய் முன் வையுங்கள். நாங்களே அம்பலத்தில் வைத்து நார் நாராய்க் கிழிக்கிறோம்.///
    குனாளன் அய்யா அப்படி ஆதாரங்களுடன் தான் ஆதவன் இத்தனை நாள் திருமாவை, சிமானை, நெடுமாறனை சகலரை கிண்டலட்டித்தாரா....
    அவர் ஆதாரங்களை வெளியிடுவாரா

    Gajendran
    2009-07-04 09:08:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    நன்பர் காமராஜ் அவர்களே
    இப்படி எடுத்தேன் கவிழ்தேன் என கருத்துக் கூறும் பானியை இங்கு ஏற்படுத்தியதில் ஆதவனுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை நீங்களும் உங்கள் செளகர்ய மறதியில் புதைக்க முற்படுகிறீர்கள். சுந்தரராமசாமியின் இழவுவீட்டை, கவிஞ்ர்கள் ஈழ்த்திறுகு திரண்டால் அதை ஒப்பாரி என அடுக்கிக் கொண்டே போகலாம் இவை அனைத்திற்கும் புதிவிசையில் அக்கப்போர்களை எழுதியது யார்? இதை எதிர்து நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?? தமிழ்நதியிடம் உடன் முறையிடும் நீங்கள் அதே மனுவை ஆதவனிடம் போடுவ்வீர்களா!

    குணாளன்
    2009-07-05 01:20:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    megasankaram! அவர்களே!

    எம்மால் அது முடியும். புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்குப் பணம் சேர்த்தவர்கள் தனிப்பட்ட முறையில் கோடி கோடியாகவும் வீடு கடையென்றும் வாங்கிப் போட்டிருக்கும் சொத்துக்களுக்கு முடிந்தால் இவர்கள் காசு கறந்த புலம்பெயர் மக்கள் முன் தமது சொத்துக் கணக்கை முன் வைக்கட்டும். உங்களுக்கு இது ஒன்றும் கடினமில்லைத் தலைவா. 

    நாடு வாரியாக, பிரதேசவாரியாக, ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் நிதி சேகரிக்கும் பொறுப்பை யார் யாரிடம் கொடுத்தீர்கள் என்பது தெரியுமல்லவா. அந்தப் பெயர்ப் பட்டியலை எடுங்கள். 

    அவர்கள் வெளிநாடுகளுக்கு வந்து எத்தனை காலம் சொந்த வருமானம் எவ்வளவு என்பதையெல்லாம் இங்கு எடுப்பது மிகச் சுலபம். எடுங்கள். இன்று அவர்களுக்கு இருக்கும் சொத்து மதிப்பை மக்களுக்குக் காட்டுங்கள். 

    இன்னும் கொஞ்சக் காலம் பொறுங்கள். வெளிநாடுகளில் மக்களின் சொத்துக்களை கட்டிடங்களாகவும் கடைகளாகவும் தம் வசமாக்கியவர்களின் பட்டியல் புட்டுக்கொண்டு வரும். இதே கீற்றில் வந்தாலும் வரலாம். 

    ஒரு சில கேள்விகள் இப்போதைக்குக் கேட்டு வைக்கிறேன். புலிகள் நெய்தல் கடைகள் என்னாச்சு? 

    அன்னைபூபதி கலைக்கூடங்களளின் சொத்துக்கள் என்னாச்சு?

    இன்று நோர்வேயிலிருக்கும் முருகன் கோயில் சொத்துக்கு என்ன கதி நடந்திருக்கிறதென்பதாவது தெரியுமா…? பின்னூட்டம் இணையத்தளத்தில் வெய்தியாக வந்திருந்ததே தெரியாதா?

    முதலில் மக்களின் சொத்தைக் கொள்ளையிட்ட பயல்களிடமிருந்து பிடுங்கி வன்னி மக்களின் புனர்வாழ்வு வேலைகளைப் பார்க்க முடியுமா பாருங்கள். 

    ”மூன்று லட்சம் மக்கள் அவலப்படுகிறார்கள்” என்று சொல்லிக்கொண்டு திரும்பவும் உண்டியல் கொண்டு புறப்பட்டு விட்டீர்கள். கட்டிய வீடும் வெட்டிய கிணறும் போதாதோ மக்களே? 

    வணங்காமண் என்று 850தொன் பொருட்கள் சேர்த்தீர்களே அனுப்பி வைக்கப்பட்ட 350தொன் பொருட்கள் தவிர மீதி எங்கேயென்று தெரியுமா? லண்டனில் புலிப் பினாமிகளின் கடைகளில் வந்து பாருங்கள். 

    -குணாளன்-

    Damazan பிரபு
    2009-07-05 09:16:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    புலி எதிர்ப்பு பிரச்சாரத்துக்காக ராஜபக்‌ஷே கொடுத்த பல கோடி ருபாயை ஷோபா சக்தி சரி வர விநியோகிக்கவில்லை என பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில சில்லறைகளை மட்டும் தான் தமிழக சகாக்களுக்கு வ்கொடுத்துள்ளார். அது போலவே ராஜபக்‌ஷேயின் முக்கிய கட்டளை அந்த பண விநியோகத்தில் இருந்த்து. அது ஷோபா- ஆதவன் மார்க்ஸ் வகையறாக்கள் கருணா வை பற்றீ ஒரு வரி கூட அவதூறாக எழுத்க்கூடாது.
    ஹிந்து ராம் க்கும் வந்த பல ஆயிரம் கோடியில் தான் அவர் சிபிஎம் கட்சியை ஈழம் விஷ்யத்தில் விலை பேசி வைத்துள்ளார்.
    பிரகாஷ் காரத்தை அவர் பக்குவமாய் கவனித்தும் உள்ளார். இந்த ராம் தான் ஏற்கனவே யெச்சுரியை கவனித்து ஜெயேந்திரருக்கு ஆதரவாய் அறிக்கை விட வைத்தவர் ஆயிற்றே. எல்லம் நடக்கும் இந்த பூடக உலகில்

    R.R.Kubenmdran
    2009-07-05 10:49:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    It is said that CPI(M) has understood the caste problem after a long discussion. It is not corect. They try to create wedge between BCs and SCs in the name of understanding caste problem. They never touch Brahmins. They very well know that all Brahmins can't be high I.Q. Then how it happens brahmins are placed in jobs of power, money and not requiring physical lobour? Why not brahmins with low I.Q. be pushed into jobs without power, less paid, and requiring heavy phisical labour? CPM never asks this question

    purachi
    2009-07-06 01:04:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    //http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5953:2009-07-05-14-39-30&catid=277:2009//
    ஆதவன் தீட்சண்யா என்ற ஒரு மானுடவிரோதி, அதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றான்
    Written by பி.இரயாகரன் Sunday, 05 July 2009 15:33 பி.இரயாகரன் - சமர் 2009
    E-mail Print PDF
    எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)

    பெருப்பிக்கசிறுப்பிக்க

    இடதுசாரியம், முற்போக்கு, மார்க்சியம் பேசியபடி மானுட விரோதியாக உள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கும், தமிழ் தேசியத்தின் பெயரில் புலியிசம் பேசும் தமிழ்நதிக்கும் இடையில், பல மானிடம் சார்ந்த விடையங்கள் கொச்சைப்படுத்தப் படுகின்றது. இவை இந்திய எழுத்தாளர் தளத்தில், இவை மலினப்படுகின்றது.

    தங்கள் பிழைப்புவாத எழுத்துக்கு ஏற்ப, சமகால நிகழ்வுகள் பச்சோந்திகளாக வாழ்வதுதான், எழுத்தாளர்களின் தார்மீகமான நிலையென்று நிலைநிறுத்த முனைகின்றனர். 



    இப்படிப்பட்டவர் தான் ஆதவன் தீட்சண்யா. இவர் மனு விரோதியல்ல, மானுட விரோதி. இவர் போர்த்தியுள்ள துண்டுக்கு ஏற்ப, "புதுவிசை" இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் இருப்பவர். இதற்கமைய அவரின் மானுடத்துக்கு எதிரான கோட்பாடு, நடுவீதிக்கு வந்துள்ளது.



    இதற்கு தமிழ்நதி எழுப்பிய கேள்வி உதவியது. அவர் கேள்வி "சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன?" இந்தக் கேள்வியில் என்ன தவறு? மக்களை ஏமாற்றி பிழைக்கும் ஆதவன் தீட்சண்யா போன்ற மானுட விரோத கூத்தாடிகளுக்கு இதனால் கோபம் வருகின்றது. தங்கள் சொந்தமுகம் இப்படி அருவருப்பாக இருப்பது கண்டு, குமுறி எழுகின்றார். நெற்றிக்கண்ணை திறந்து, ஈழத்தமிழனை தமிழ்நதிக்கு ஊடாக புலியாக காட்டி காறி உமிழ்கின்றார்.



    அந்த மானுட விரோதி அம்பலமாக, அவர்களின் தயவில் பெயரையும் புகழையும் இலக்கிய உலகில் மிதப்பாக்கி பதியும் சோபாசக்தி, அவரைக் காப்பாற்ற தமிழ்நதியை தன்பாணியில் இழிவாடுகின்றார். அத்துடன் பெண்கள் சந்திப்பு, தமிழ்நதி, தமிழச்சி என்று, இதற்குள் பழைய கறள்களையும் சேர்த்து தீர்க்க முனைகின்றார். என்ன அரசியல் கூட்டுகள்.



    புலிகள் வேறு, தமிழ்மக்கள் வேறு என்பதைக் கூட காணமுடியாத, காணமறுக்கின்ற ஆதவன் தீட்சண்யாவின் அறிவு சார்ந்த புலமையும், மானிட விரோதமும் கூடிநிற்கின்து. தமிழ்நதி தமிழ் தேசியத்தை புலிக்கூடாக பார்த்தார், பார்க்கின்றார் என்றால், ஆதவன் தீட்சண்யா என்ன செய்கின்றார். அவரும் அதை அதனூடாகக் காட்டி, தமிழ்மக்கள் மேல் காறி உமிழ்கின்றார். இவர்கள் எல்லாம் தங்களை சர்வதேசவாதிகள் என்ற வேறு வேஷம். தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறையை, புலியூடாக நியாயப்படுத்துகின்றார்.



    இங்கு இப்படி இதை புலிக்கு எதிராகவும் ஆதரவாகவும் நின்று நியாயப்படுத்தும் அரசியல் மூலம், தமிழ்மக்கள் மேல் ஏறி கூத்தாடுகின்றனர்.



    தமிழ்நதி தமிழ்த்தேசியத்தை புலியிசத்தின் ஊடாக பார்ப்பவர் என்ற வகையில், வலதுசாரிய கண்ணோட்டம் கொண்டவர். இந்த வகையில் அவரின் சிந்தனைமுறை தனிமனித நலன் சார்ந்தது. இதில் இருந்து அவர் வெளிவர பட்டறிவும், வாழ்வின் அனுபவமும் தேவை. இந்த எல்லையில் வைத்துதான், அவரை அணுக வேண்டும். அவரின் கருத்தை விமர்சிக்க வேண்டும். அவரின் சமூகம் பற்றிய பார்வை குறுகியது. அதுவோ சின்ன வட்டம்.



    அதில் உள்ள அறியாமையுடன் கூடிய நேர்மையும், ஓர்மமும் உண்டு. அவர் பெரிய மேதாவி எழுத்தாளராக பவுசு விட்டுத் திரியும் கூட்டத்தைப் பார்த்து, கேள்வி எழுப்புகின்றார். இதற்கு மானுட விரோதிகளால், பதில் சொல்ல முடிவதில்லை. இதுதானே இதில் உள்ள அடிப்படை உண்மை. அந்த மக்களுக்காக இந்த எழுத்தாளப் பொறுக்கிகள், குரல் கொடுத்தது கிடையாது. இதுதான் உண்மை. நீங்கள் கேட்கலாம் புதுவிசை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ன செய்தது என்று? சிலரை பிரபல்யமாக்க, தனக்குத்தானே அது முதுகு சொறிந்தது. புலியெதிர்ப்பு பேசும் ஏகாதிபத்திய தன்னார்வ சுசீந்திரனுக்கு பாய்விரித்தது. தாங்கள் என்ன செய்தோம் என்று இந்த மானுட விரோதி ஆதவன் தீட்சண்யா அழகாக கூறுகின்றார். "இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது மட்டுல்ல, பொதுவாகவே சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக வெளிப்படுத்துவதில் தமிழகப் படைப்பாளிகளிடம் ஒரு மனத்தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது" இப்படி இலங்கை விடையத்தில் எதிர்ப்புரட்சியை கட்டவிழ்த்தவர்கள் இந்த முதுகுசொறியும் கும்பல். "சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக" உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டும் என்று, இலண்டனில் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பேசிய சோபாசக்தி, மண்ணில் நடந்த தொடர்ச்சியான மனித அவலம் மீதும் கள்ள மௌனத்தையே பதிலளித்தவர். அவரின் கூட்டாளிகள் எல்லாம் மனிதன் மேலான ஒடுக்குமுறையை ஆதரித்து நிற்கின்ற போது, மௌனம் மூலம் நட்பை தக்கவைக்கின்றார். இவர்கள் பிரபலமான சஞ்சிகை மூலம், திடீர் பேட்டி கொடுத்த சமாளிப்பதில் விண்ணாதி விண்ணர்கள். இப்படித்தான், இந்த பச்சோந்திகள் அரசியல் செய்கின்றனர். இவர்களின் கூட்டாளிதான், ஆதவன் தீட்சண்யா. இதனுடன் ஒப்பிடும் போது தமிழ்நதியின் புலியிசம் வலுக்குறைந்தது. 



    உண்மையில் தமிழ்நதியின் வலதுசாரிய தனிமனித சமூகக் கண்ணோட்டம் ஊடாக விடையங்களை தவறாக பார்ப்பது என்பது, அந்தத் தத்துவத்தினால் ஏற்படுவதுதான். ஆனால் ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் மார்க்சியம் பேசுபவர்கள் என்றால், அவர்கள் சமூக கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதையும் சமூகம் ஊடாகவே பார்க்க வேண்டும். சர்வதேசியவாதியாக இருக்கவேண்டும். அப்படியா இருக்கின்றனர்? இல்லை. 



    இங்கு தமிழ்நதியின் கேள்வி மூலமும், இவர்கள் போலி மார்க்சியம் பேசும் சமூக விரோதிகள் என்பதையே மீண்டும் அம்பலப்படுத்துகின்றது. சமூக கண்ணோட்டத்துக்கு பதில், சமூக விரோத கண்ணோட்டத்தை சமூகம் மீது திணிக்க முனைகின்றனர்.



    இந்த இடத்தில் ஆதவன் தீட்சண்யா மானுட விரோதி, உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. புலிக்கூடாக தமிழ்மக்களை தீட்டித் தீர்க்கின்றார். ஈழத்து தலித்துகள், மலையகமக்கள், முஸ்லீம் மக்கள் மேல் புலியிசம் அக்கறை கொள்ளவில்லை அல்லது தாக்கியது என்பதால், தமிழ்த்தேசியம் தவறானதல்ல. இது புலியிசத்தின் தவறு. புலியிசம் வேறு, தமிழ்தேசியம் வேறு என்பதை மறுத்து, ஆதவன் தீட்சண்யா போன்றோர் தமிழ்மக்களுக்கு எதிராக குதறுகின்றனர். தமிழ்மக்களுக்காக, இதைப் பற்றி தமிழ் மக்களுடன் என்றும் பேசவில்லை. இப்படிப்பட்ட நீங்கள், இன்று புலியெதி;ர்ப்பு அரசியலுடன் இதைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கின்றது. புலிப்பாசிசம் பற்றி, சரியான தமிழ்தேசியம் பற்றியும், சர்வதேசிய கண்ணோட்டத்துடன் மக்களுக்காக தமிழ்நாட்டில் பேசப்பட்டு இருக்கின்றது. ஆனால் நீங்களல்ல. நீங்கள் பிடில் வாசித்துக்கொண்டு இருந்தீர்கள்.



    மார்க்சிய அடிப்படையில் தமிழ்; மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக எங்கே குரல் கொடுத்தீர்கள். இதை முன்னெடுப்பவர்களின் அரசியல் தவறுகள் மேல், ஒரு சர்வதேசியத்தை கையாண்;டது கிடையாது. இவரின் எழுத்து, இவரின் செயலாளராக இருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இவரின் கட்சி, தமிழ்மக்களின் சுயநிர்ணயத்துக்காக லெனினிய வழியைக் கையாண்டது கிடையாது. இந்த வகையில் தமிழ்மக்களை ஒடுக்க துணை நின்றவர்கள். இதை இன்று புலியின் பெயரால் சொல்லி நியாயப்படுத்துகின்றனர்.



    இலங்கை விவகாரத்தில் மட்டும் இவர்கள் இப்படியிருக்கவில்லை. தங்கள் சொந்த நாட்டில், சொந்தப் புரட்சியை குழிபறிக்கும் அரசியலைக் கொண்டவர்கள். இவர் இருக்கும் கட்சி, இந்திய ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் ஒரு பாசிசக் கட்சி. மேற்குவங்கம் முதல் இந்தியா முழுக்க, இந்தக் கட்சி மூலதனத்துக்கு சேவை செய்கின்றது. புலி வலதுசாரிய பாசிசத்தை, அதன் வலதுசாரி அரசியல் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்;. இந்தியாவில் இவர்கள் நடத்தும் மேற்குவங்க பாசிச ஆட்சி முதல் ஆட்சியில்லாத இடத்தில் ரவுடியிசத்தையே கட்சிக் கொள்கையாக கொண்டது இந்தக் கட்சி. ஆனால் இதை மார்க்சியத்தின் பெயரில் செய்கின்றனர். கட்சி வேட்பாளர்களின் சொத்துகளின் பெறுமதி முதல் கட்சியின் கோடிக்கணக்கான சொத்துக்கள், அதை பெருக்கும் வழி அனைத்தும் இதுவொரு மக்கள் விரோதக் கட்சியின் ஒரு கொள்கையாக, செயல்முறையாக இருப்பதைக் காணமுடியும். இந்த கட்சியில் உள்ள பார்ப்பனிய நடைமுறைகள், சாதியமும் ஊர் உலகம் சிரிக்கும் வண்ணம் அம்மணமாகவுள்ளது.



    இப்படிப்பட்ட இவர்கள் சொந்த ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிக்கே குழிபறிக்கும் போது, ஈழத்து மக்களுக்காக குரல்கொடுப்பார்கள் என்று நம்புவது முட்டாள் தனம். ஈழத்து விடையத்தில் தங்கள் சொந்த மக்கள் விரோதத்தை மூடிமறைக்க, புலியைக் காட்டி புலுடா விடுகின்றனர். புலியிருக்கட்டும் நீ என்ன செய்தாய்? அந்த மக்களுக்காக உன் கட்சி என்ன செய்தது. பச்சை இனவாதம் கக்கும் ஜேவிபியுடன் கூடி, தமிழ் மக்களை ஒடுக்க துணை நின்றவர்கள் நீங்கள்.



    தங்கள் மக்கள் விரோத நிலையையும், சர்வதேசியமல்லாத நிலையையும் தக்கவைக்க, புலியின் மனிதவிரோத செயலை புலியெதிர்ப்பு கும்பலிடம் இரவல் வாங்கி, அதை தமிழ் மக்களுக்கு எதிராக காட்ட முனைகின்றனர்.



    இப்படி இதில் இரண்டு மக்கள் விரோத விடையங்களை கையாளுகின்றார்.



    1. புலியெதிர்ப்பு நிலையில் நின்று தமிழ்மக்களை எதிர்க்கின்றார்.



    2. புலியெதிர்ப்பு அல்லாத, புலியையும் புலியெதிர்ப்பையும் எதிர்க்கும் புரட்சிகர மக்கள் நிலையை மறுதலிக்கின்றார்.



    ஒரு சர்வதேசியவாதியாக காட்டிக்கொள்ள மார்க்சியத்தைக் கையாளும் ஒரு மானுட விரோதியால் மட்டும்தான், இப்படி இதை அணுகமுடியும்;. அறிவற்ற பகட்டுத்தனத்துடன், ஒரு மானுட விரோதியாகவே புலம்புவதைப் பாருங்கள்.



    "இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது மட்டுல்ல, பொதுவாகவே சமகால நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து படைப்பாக வெளிப்படுத்துவதில் தமிழகப் படைப்பாளிகளிடம் ஒரு மனத்தடை இருந்து கொண்டேதான் இருக்கிறது" என்று கூறும் ஆதவன் தீட்சண்யா, அந்த "ஒரு மனத்தடை" தான் என்ன? மானுட விரோதம் தான். மானுடத்தை குழிதோண்டிப் புதைக்க, மார்க்சியத்தை பயன்படுத்தும் வக்கிரமான சுரண்டும் வர்க்க நரிப் புத்திதான், தடையின் அடிப்படையாகும். இப்படி தங்கள் மானுட மறுப்பை தக்கவைக்க, புலியெதிர்ப்பு அடிப்படையில் அதை அள்ளி மானுடம் மீது வீசுகின்றார் பாருங்கள்.



    "இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள், கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்?" "இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா?" "தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து 500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்?" "தமிழ்நாட்டில் வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டபோது ஈழத்திலிருந்து எந்த குரலும் ஒலிக்கவில்லை. திண்ணியத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமையை எதிர்த்தோ இதோ இப்போதும் உத்தபுரத்தில் மறித்து நிற்கிற சாதிச்சுவரை இடிக்க வேண்டுமென்றோ ஈழத்திலிருந்து எழுந்த தமிழினக்குரல் எதுவுமுண்டா?" "பிறந்தமண்ணை பிரிந்து ஏறத்தாழ 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் அவர்களது குடியுரிமையைப் பறித்து சுமார் 10 லட்சம் பேரை நடுத்தெருவில் நிறுத்தியபோது ஈழப்படைப்பாளிகள் எத்தனைபேர் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினார்கள்?" 



    இப்படி கேட்கும் நீங்கள், இவற்றை அடிப்படையாக கொண்டு சர்வதேசியவாதியாக எங்கே போராடியிருக்கின்றீர்கள். "ஒரு மனத்தடை" என்று கூறி, இதைச்செய்யாத நீங்கள், இன்று இதை அள்ளியெறிவதோ வெறும் புலியெதிர்ப்பு. புலத்து இலக்கியப் பன்னாடைகள் மக்களுக்காக அரசியலை வைத்தது கிடையாது. அதையே அள்ளி மீள எறியும் ஆதவன் தீட்சண்யா, அரசியலற்ற புலியெதிர்ப்பு ஊடாக தங்கள் மானுட விரோதத்தை மூடிமறைக்க முனைகின்றார்.



    கடந்தகாலத்தில் ஒரு சர்வதேசியத்தை எங்கே எப்படி எந்த அரசியல் அடிப்படையில் கட்டியிருக்கின்றீர்கள். அப்படி ஈழத்தில் குரல் கொடுத்தவர்களுடன் எந்த சர்வதேசியத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். ஏகாதிபத்திய தன்னார்வ பணத்தை நக்கவே அரசியல் பேசும் சுசீந்திரனுடனும் கூடி அரசியல் லூட்டி.

    (1. நம்பிக்கையூட்ட முடியாத சீரழிவுவாதி, புதுவிசை இதழில் புலம்பியது என்ன? 

    2.புலியல்லாத புகலிடத் துரோகமும், புதுவிசையில் பொம்மலாட்டம் போடும் சுசீந்திரனும் )

    பேரினவாதம் வென்று தன் பாசிச செருக்கை நிலைநாட்ட பாடிய சிங்கள தேசியகீதத்தை பாடும் நக்குண்ணி சுகனும், அவரின் கூட்டாளியாக கூடித் திரியும் எந்த மக்கள் கருத்துமற்ற சோபாசக்தி உங்கள் கோழையாக்கள். தலித்தியத்தின் பெயரில், இவர்களும் சேர்ந்து கூத்தாடும் பேரினவாதத்தை ஆதரிக்கும் தலித்துகள், உங்கள் தலித் அரசியல் கூட்டாளிகள். இப்படி சிங்கள அரசுடன் சேர்ந்து கும்மியடிக்கும் புலத்து தலித்துக்களையும் சார்ந்து, புலியெதிர்ப்பு லூட்டி அடிப்பதே ஆதவன் தீட்சண்யாவின் சர்வதேசியம்.



    இப்படி புலத்தில் மாற்றுகள் என்று கூறிக்கொண்டு மகிந்தாவுக்கு குடை பிடிக்கும் பன்னாடைகள், தங்களைப் போர்த்திக் கொள்ள தலித்துகள் பெயரால் கடைவிரித்தனர். இதைத்தான் இந்தியாவிலும் தலித்தியத்தின் பெயரால் பலர் செய்தனர். இப்படி ஆதவன் தீட்சண்யா இலண்டனில் கலந்து கூத்தாட, தலித்தியம் உதவியது. இந்தியாவில் இவரும் இவரின் கட்சியும் தலித்துக்கு எதிரானது. தலித் பெயரால் பிழைத்த கூட்டமும், அதன் பெயரால் ஆதவன் தீட்சண்யா பிழைக்க, புலத்தில் அதன் பெயரில் பேரினவாதத்துக்கு நக்கும் கூட்டமும் ஒன்றாகக் கூடித்தான் சலசலத்தது, சலசலக்கின்றது.



    ஆனால் மானிடத்துக்கு எதிராக புலிகள் மற்றும் அரசு இழைத்த கொடுமைகளுக்;கு எதிரான போராட்டம், இதற்கு வெளியில் நடந்தது. எத்தனை நூறு குரல்கள். 1980 களில் தொடங்கி பத்தாண்டுகளில் கொல்லப்பட்டவர்களில் கணிசமானவர்கள் இதற்காகத்தான் கொல்லப்பட்டனர். உள் இயக்க படுகொலை முதல் எத்தனை பல நூறு சம்பவங்கள். இதற்குப் பின்பும், இதற்கான போராட்டம் நடந்தது. இந்த மானுட விடையத்துக்காக, நாங்கள் நடத்திய போராட்டம் தனித்துவமானது. சர்வதேசியத் தன்மைகொண்டது. இதை மூடிமறைக்கும் மானுட விரோதியாக ஆதவன் தீட்சண்யா இருப்பதால் தான், இப்படி இதைப் பற்றிய எதுவும் நடக்காத மாதிரி கேட்க முடிகின்றது.



    "இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள், கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன

    -குணாளன்-
    2009-07-06 03:03:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    உங்கள் பங்கு இன்னமும் உங்களுக்கு வந்து சேரவில்லையா பிரபு...? அடடா... பரவாயில்லை அடுத்த கட்டக் கொடுப்பனவுடன் வந்து சேரும். 

    சற்றுத் தாமதாமாகிவிட்டதும் இப்படிப்போட்டு அம்பலத்தில் உடைத்து விட்டீர்களே...! கடந்த ஆண்டு கிடைத்ததில் அந்த பெரியகுளம் தோப்புநிலம் மட்டும்தான் வாங்கி விட்டதாக அறிந்தேன். அத்தனை தொகையையும் ஏன் பிரபு அதற்குள் போட்டீர்கள்? சென்னையில் கிறவுண்ட் வாங்கிப் போட்டாலாவது பயனுள்ளதாயிருக்கும். சரி விடுங்கள். மகிந்த மாத்தையா நிச்சயம் உங்களையும் இரட்சிப்பார். 

    -குணாளன்-

    குணாளன்
    2009-07-06 04:20:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    என்ன பங்காளி பிரபு! 

    இப்படியான மலிமான முறையில்த்தான் இங்கே பின்னூட்டம் இடுவோமாயிருந்தால் எந்தப் பயனுமில்லை. ஆக்கபூர்வமாய் ஏதாவது விவாதிப்பதானால் தொடர்வோம். இல்லையேல் இதை விட்டு ஒதுங்கிக் கொள்வோம். 

    பிரபுவின் தரத்துக்கே இறங்கி எழுதியதற்கு வாசக நண்பர்களே மன்னித்துக் கொள்ளுங்கள். பிரபுவை யாரென்றே எனக்குத் தெரியாது நண்பர்களே. ச்சும்மா...!. ஆயினும் இப்படியும் எழுத முடியுமல்லவா. மீண்டும் இதில் தொடர்வதா இல்லையா என்பது: இதே தரத்தில்த்தான் விவாதம் போகுமானால்.... தேவையில்லையென்றே நினைக்கிறேன். 

    -குணாளன்-

    கீற்று ஆசிரியர் குழு
    2009-07-06 04:32:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    தோழர்களுக்கு,

    ஆரோக்கியமான முறையில் விவாதத்தைத் தொடரவும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அள்ளித் தெளிப்பது, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மூன்றாம்தர விவாதத்திற்கே விட்டுச் செல்லும். இது நம் அனைவரது நேரத்தையும் வீண்டிப்பதாகும். 

    என்றும் அன்புடன்,
    கீற்று ஆசிரியர் குழு

    குணாளன்
    2009-07-06 05:38:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    கீற்று இணையம் ஆசிரியர் குழுவிற்கு!

    தங்களுக்கு அனுப்பப்படும் பின்னூட்டங்களை தாங்கள் சரியான முறையில் மட்டடிறுத்தி நெறிப்படுத்திப் பிரசுரத்துக்கு விட வேண்டிய பொறுப்பு தங்களதே. தாங்கள் இதில் சிரத்தை எடுப்பது மிகமிக முக்கியம். 

    -குணாளன்-

    Puram Boakku
    2009-07-06 05:41:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    அன்பின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் தான் மக்கள் கூட்டம் சமுதாயமாக மாறுகிறது. வெறுப்பு உணர்ச்சியைத் தூண்டுவதால் அந்த சமுதாயம் இருந்த இடம் சுடுகாடு ஆக மாறுகிறது. 

    ஹிட்லர் யூதர்களின் மீது வெறுப்பு உணர்ச்சியைத் தூண்டினான். சிங்களர்கள் தமிழர்கள் மீது வெறுப்பு உணர்ச்சியை தூண்டினார்கள். சங்க பரிவாரங்கள் இசுலாமியர்கள் மீது வெறுப்பு உணர்ச்சியைத் தூண்டுகின்றன. இசுலாமியாய மத அடிப்படை வாதிகளோ, தங்கள் மதத்தைத் தவிர பிற எல்லா மதங்களையும் அறுத் தொழிக்க வேண்டும் என்று வெறுப்பு உணர்ச்சியைத் தூண்டுகின்றனர். இப்படி எல்லோரும் வெறுப்பைக் கக்கினால் மக்கள் கூட்டம் மிருக கூட்டமாகும். 

    அழகிகளின் படங்கள், சினிமா செய்திகள், டீக்கடை... இது போல மசாலாவாக இல்லாமல், கீற்று பிரச்சினைகளை அலச சரியான தளத்தை அமைத்து தருகிறது. அந்த வகையில் கீற்றுவை பாரட்டுகிறோம். ஆனால் கீற்று வில் வரும் பெரும்பாலான கட்டுரைகளும், கருத்துக்களும் யாரையாவது தாக்கி எழுதப் படுவதாகவே உள்ளதே தவிர, பிரச்சினைகளை அலசி தீர்வு தரும் வகையில் இல்லை. 
    நாம், நம் மனமார திட்டி மகிழ்ந்தோம் என்று திட்டுவதில் போட்டி போடும் வகையில் வரும் கருத்துகளை. கட்டுரைகளை தான் அதிகம் காண முடிகிறது. ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் முன்னேற்றம் ஏற்படும் வகையில், சமுதாயத்தில் இணக்கம் ஏற்ப்படும் வகையில் ஆக்க பூர்வமான கட்டுரைகளை கீற்று ஆசிரியர் குழு முனைந்து வெளியிட வேண்டும். அதற்கான தகுதியும், திறமையும் அவர்களிடம் உண்டு. அதனால் கீற்றின் வாசகர் வட்டமும் விரிவடையும். 

    அதனால் நமது சமுதாயத்துக்கும், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், தமிலனத்துக்கும் சிறந்த நன்மையாக முடியும். 

    SUNDAR
    2009-07-06 08:52:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    நண்பர் R.R.Kubenmdran,

    //They very well know that all Brahmins can't be high I.Q. Then how it happens brahmins are placed in jobs of power, money and not requiring physical lobour? Why not brahmins with low I.Q. be pushed into jobs without power, less paid, and requiring heavy phisical labour?//

    Can you please go and see the factories in Chennai, Tiruchi and verify yourself as how Bhramins are working as welders,fitters , Khalasi helpes? 

    எங்கள் வழி எல்லோரும் முன்னேறும் வழி. ஆனால் உங்கள் எண்ணம், அடுத்தவர் காலை இடறி கீழ விழ வைப்பது. 

    இட ஒதுக்கீடு செய்யுங்கள், அதே நேரம் மற்றவருக்கு பாதிப்பு இல்லாமல் இட ஒதுக்கீடு செய்யுங்கள். 

    பிற சாதியினர் முன்னேற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமும்! அதற்கு முதலில் அதிக இடங்களையும், கல்லூரிக்ளையும் உண்டாக்க வேண்டும்! ஒவ்வொரு மாநிலத்திலும் 3 IIT , IIM ஆரம்பித்து விட்டு இட ஒதுக்கீடு செய்தால் எங்களுக்கு பாதிப்பு, ஆட்சேபம் இல்லை! யாரையும் ஏத்திப் பிழைக்க வேண்டும், சவாரி செய்ய வேண்டும், பொதுப் பணத்தைக் கொள்ளை அடித்து வாழ வேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை! 

    எல்லா சாதிக்காரனுக்கும் நில, புலம் இருக்கிறது அல்லது வருமானம் வரும் தொழில் இருக்கிறது!தொழில் செய்யும் வாய்ப்பு இருந்தது. 

    பார்ப்பானை வூருக்கே எடுத்துக் காட்டாக வாழ வேண்டும், பண ஆசை இல்லாமல் வாழ வேண்டும் என்று கூறி தெருவிலே பிச்சை எடுக்க விட்டார்கள். வெறும் உயர் சாதி அந்தஸ்தை மட்டும் வைத்துக் கொண்டு, சோற்றுக்கும், துணீக்கும் பிட்சை எடுக்கும் இழிவான நிலைதான் பார்ப்பானுக்கு இருந்தது! ஆங்கிலேயன் காலத்தில் அரசாங்கத்தில் தபால், ரயில்வே என்று புதிய துறைகளில் வேலை வாய்ப்பு கிடைத்த போது, அதை உபயோகித்து கொண்டான்- சோற்றுக்கு, துணீக்கு வழி கிடைத்தது- இதில் என்ன தவறு?


    இவர்களின் சமூக நீதி என்ன? பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஒரு கலெக்டரின் மகனாக இருந்தாலும் அவர் காரிலே போய் கான்வென்டிலே படித்தாலும் , மாலை நேரத்திலே பிரைவேட் டியூஷன் வைத்து படித்தாலும், அவர் அப்போதும் பிற்படுத்தப் பட்டவர்தானா? அதுவும் கல்லூரி பீஸ் (fees) இலவசம். ஹாஸ்டல் இலவசம். சாப்பாடு இலவசம். பிற்படுத்தப் பட்டவர்க்கு பாதி பீஸ் இலவசம்! பொதுப் பிரிவு மாணவனுக்கு- அவன் அப்பா ஹோட்டலில் சர்வராக இருந்தாலும் முழுப் பீஸ் பணத்தையும் கட்ட வேண்டும். இதுவா சமூக நீதி? 

    பிராமணர்கள்தான் சாதியை உருவாக்கினார்கள் என்பதற்க்கு என்ன ஆதாரம்? 

    பிராமணர்களுக்கு உயர் சாதி அந்தஸ்து கொடுத்தது மற்றவர்கள்தானே! 

    எண்ணிக்கையில் குறைந்த, உடல் வலிவு குறைந்த ஒரு பிரிவினர் தங்களைத் தாங்களே உயர்ந்த சாதி என்று அறிவித்துக் கொண்டால் மற்றவர் எப்படி ஒத்துக் கொண்டார்கள்? 

    அதுவும் அரசர்கள் எல்லோரும் தமிழர்கள், படைத் தளபதிகள்,அமைச்சர்கள் , வியாபாரிகள், விவசாயப் பெருங்குடியினர் எல்லோரும் தமிழர்கள். மிகப் பழமையான மொழி, மிக நீண்ட வரலாறு, ஆட்சி, வீரம், நிர்வாகம், பண்பாடு, சிறந்த அறிவு, நாகரீகம் உடைய தமிழ் சமுதாயத்தை வெளியில் இருந்து வந்த பிரிவினர் "நாங்கள் உயர்ந்த சாதி" என்று எப்படி கூறியிருக்க முடியும்? அதைக் கேட்டுக் கொண்டூ அறிவும், வீரமும் உடைய தமிழ் சமுதாயம் சும்மா இருந்திருக்குமா? எனவே மற்ற பிரிவீனரைப் போல தமிழ் பிராமணர்களும் தமிழ் சமுதாயத்தின் பூர்வ கூடி மக்கள் ஆகத்தான் இருந்திருக்க முடியும்!

    கண்ணகி அம்மாள் மதுரையை எரிக்க "தீ" க்கு ஆணையிடும் போது, " பார்ப்பனர், பெண்டிர், குழவிகள், முதியோர் பசு இவர்றை விட்டு விடும்" படி கூறியது ஏன்? 

    இந்தியாவில் சாதி வரலாற்றை எடுத்துப் பார்த்தால், பல பரிணாமங்கள் கிடைக்கும்! வரூநாசிரம முறையால், அதிகம் பாதிப்புக்கு உள்ளானது யார் என்று பார்த்தால், கண்டிப்பாக தலித்கள் தான்! 

    அதே வரூநாசிரம முறையால், அதிகம் பலன் அடைந்தது யார் என்று பார்த்தால், மேல் எழுந்தவாரியாகப் பார்த்தால் பார்ப்பான் என்று தோன்றும். நன்கு ஆராய்ந்தால் பார்ப்பனரை விட வைசியரும், சத்திரியர்களும் அதிக பயன் அடைந்துள்ளது புரியும்! ஏன் என்றால் விவசாயம், கூலி வேலை செய்ய எதிர்ப்பு காட்ட முடியாத வேலை ஆட்கள் வைஷ்யருக்கும், சத்திரியருக்கும் தேவைப் பட்டது! அதற்கு இந்த சாதி முறை அவர்களுக்கு உதவியாக இருந்தது! இன்னும் சொல்லப் போனால், வர்ணாசிரம முறையால் பார்ப்பணர்கள் கஷ்டப் பட்டார்கள் என்பதே உண்மை! ப்ரோகிதம் செய்வதையும், பிட்சை எடுத்து வாழ்வதையும் தவிர வேறு வாழ்க்கை முறை பார்ப்பணர்களுக்கு மறுக்கப் பட்டது என்பதே உண்மை!

    எல்லோருக்கும் திறமை இருக்கிறது, சாதி வித்யாசம் தொழில் அடிப்படையில் உருவானது , அது மறைய வேண்டும், என்றுதான் விரும்புகிறோம். 


    இவர்கள் கண்ணுக்கு தெரிவது ஹிந்து, சோ , போன்ற பணக்கார பார்ப்பனர் மட்டும்தான். எத்தனை பார்ப்பான் ஒத்தை வேட்டியில் வாழ்ந்தான் என்று இவர்கள்க்கு தெரியாது!


    டில்லியில் ரிக்ஸா இழுப்பது 
    முதல், மலம் அள்ளுவது வரை இப்படிப்பட்ட பல பணிகளில் இருப்பவர்கள் உத்தர பிரேதேசத்து பார்ப்பணர்கள். 

    மலம் அள்ள நான் தயார். அது ஒன்றும் இழிவான செயல் அல்ல! All students studied in Ramakrishna mission schools were already accostomed for the same!

    முதலில் மலம் அள்ள நீங்கள் தயாரா? மற்ற வன்னிய, தேவர், சாதி தயாரா? தலித்களிலே எல்லா சாதி தலித்கலும் தயாரா? மலம் அல்லும் தொழிலே மறைந்து வருகிறது. கிராமங்கலீல் வெளியே தான் மலம் கழிக்கின்றனர். நகரங்களில் sewage, septic tank உள்ளது.

    திராவிடர் கழகத்தால் சுவரில் எழுதப்பட்டுள்ள வாசகங்களைப் படித்தேன்


    "கண்டதுண்டா கண்டதுண்டா மலம் அல்லும் மாதவ சர்மா"

    ஆனால் இதை எழுதவில்லை

    "கண்டதுண்டா கண்டதுண்டா மலம் அல்லும் முதலியார்

    கண்டதுண்டா கண்டதுண்டா மலம் அல்லும் தேவர்"

    என்று எழுதாமல் உண்மையை மறைக்கின்றனர். தலித்துகளை அடக்கி வாழ்ந்தது, இன்னமும் தலித் வாயில் பீ திணிப்பது யார் என்ற உண்மையை மறைக்கின்றனர். 

    உங்களின் சாதி வெறிக் காழ்ப்பு தெளிவாகத் தெரிகிறது. உங்களால 
    என்னை நசுக்க முடியும். சிறுமைப் படுத்த முடியாது. எந்த அளவுக்கு அடிக்கப் படுகிறதோ, அநத அளவுக்கு பந்து மேலே எழும்!

    எனக்கு ஒரு இட ஒதுக்கீடும் வேணாம், எல்லோருக்கும் குடுப்பது போல எனக்கு 2 ஏக்கர் இலவச நிலம் குடுங்க. நான் பயிர் செய்து பிழைத்துக் கொள்கிறேன்!

    NAGASUNDARAM.R
    2009-07-07 05:21:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    அருள் எழிலன் தமிழ்நதி போன்றோர்கள் தாங்கள்தான்ஈழத்தமிழ் மக்களுக்குக் காவலர்கள் என்று எண்ணுகிறார்கள் போலும். ஆதவனின் கேள்விகளுக்கு நேரிடையான மறுப்பு சொல்ல இயலாமல் மார்க்சிச்த்களையும் அவ்வியக்கத்தையும் கேலி செய்து சுகம் கண்டுள்ளார் அருளேழிலன்ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மார்க்சிஸ்டுகள் பலஆண்டுகளுக்கு முன்பே மிகச்சரியாக புலிகளின் பாசிசப்போக்கை எதிர்த்தவர்கள்.சகப்போராளி 
    இயக்கங்களையும் தலைவர்களையும் கொன்று நிர்மூலம் ஆக்கிவிட்டுத்தங்களை மட்டுமே aஏகப் பிரதிநிதிகளாக வரித்துக் கொண்டவர்கள் என்பதை உலகவரலாறு மறக்கமுடியாது.

    Sukdev
    2009-07-07 05:37:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    I totally agree with the sentiments expressed here by Arul Elilan. CPM is silent over the issue of Elam fearing China. This is totally against Proletariat principle. A Proletriat party is expected to air its views without fearing anyone. How can we expect such great things from a corporate party like CPM? Adavan is just a product of CPM's hypocrisy.

    - பாவண்ணன்
    2009-07-08 04:30:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    டாக்டர் பாண்டியன் போன்ற மரமண்டைகள் எல்லாம் பின்னூட்டம் என்ற பெயரில் பினாத்துகின்றன. 
    கீற்று வாசகப் பெருமக்களே.... எச்சரிக்கையாக இருங்கள்....
    இந்த பாண்டியன், ஆர்எஸ்எஸ் பார்ப்பன அடிவருடி.... 
    இந்த ஆளுக்கு, தலித்துக்கள் என்றாலும் பிடிக்காது, இசுலாமியர்கள் என்றாலும் பிடிக்காது...!
    கேட்டால், நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று படம் காட்டி, குரளி வித்தையெல்லாம் போடக்கூடிய பேர்வழி...!

    சேதுபதி
    2009-07-08 05:40:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    ஆதவன் கேள்விகளுக்கு பதிலளிக்க திராணியில்லாதவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது விழுந்து பிராண்டியிருக்கிறார்கள்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, பார்ப்பன கட்சி என்று வலிந்து கூறும் இந்த "தலித் ஆதரவாளர்கள்", தமிழத்தில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக எங்கெல்லாம் முஷ்டியை உயர்த்தி குரல் கொடுத்திருக்கிறார்கள்... ஆவேசமாக அணி திரண்டிருக்கிறார்கள்... போராட்டக் களம் கண்டு, உரிமையை நிலைநாட்டியிருக்கிறார்கள்....? என்றுதான் தெரியவில்லை.

    ஆனால், கடந்த பத்தாண்டுகளில் வாச்சாத்தி, சின்னாம்பதி தொடங்கி, நடுநாலுமூலைக்கிணறு, சிதம்பரம் பத்மினி, தாமிரபரணி கொத்துக்கொலைகள்.... அண்மைக்காலத்திற்கு வந்தால், கல்கேரி, பந்தல்புளி, உத்தப்புரம், மிக சமீபமாய் வாட்டாக்குடி.... என இன்னும் ஏராளமான கிராமங்களில் தலித் மக்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக களம் கண்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான்...
    இரண்டு தலித் சிறுவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக போராடவில்லையே ஏன்? என்று அருள் எழிலன் கூட கேட்கிறார்.... பாவம் ஏதுமறியாத அவரை அந்த கர்த்தர்தான் மன்னிக்க வேண்டும்.
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியதா, இல்லையா? என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் வன்னியரசு போன்றவர்களிடம் கேட்டு, இனியாவது தெரிந்து கொண்டால் நல்லது.

    பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக விடுதலைச் சிறுத்தைகளைத் தவிர்த்து, மாபெரும் போராட்டத்தை நடத்திய.... அதுவும் உசிலம்பட்டியில் நடத்திய, அதனாலேயே சாதி வெறியர்களின் தாக்குதலுக்கு உள்ளான ஒரே அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான்.
    அதுமட்டுமல்ல, தற்போது பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய இடங்களில் சாதிவெறியர்கள் நிறுத்திய தலித் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ள நிலையில், கீரிப்பட்டியில் மட்டும்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் சாதிவெறியர்களின் சதி முறியடிக்கப்பட்டது. அங்கு மார்க்சிஸ்ட் கட்சி ஊக்கம் கொடுத்த நிறுத்திய பாலுச்சாமி வெற்றிபெற்றிருப்பது, எத்தனை பேருக்குத் தெரியும்?

    மேலவளவில், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் தலித் மக்கள் பகுதிக்கு செய்திருக்கும் நலத்திட்டங்கள் பற்றியெல்லாம் இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வேண்டுமானால் உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம்.... கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், "தென்தமிழக முதல்வர்" மு.க.அழகிரி, பணம் வாரியிறைத்து ஓட்டுக் கேட்டும், துணைக்கு விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்த்தும் கூட, மேலவளவு வாக்குச்சாவடியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பொ.மோகனுக்குத்தான் கூடுதல் வாக்குகள் கிடைத்தது என்பது வெறும் தகவல் அல்ல.

    டிகே.ரங்கராஜன் என்ற பார்ப்பனருக்கு எம்.பி. பதவி கொடுத்திருக்கிறார்கள் என்று சில "அதிமேதாவிகள்" கண்டு பிடிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
    ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 13 பேர் போட்டியிட்ட நிலையில், அதில் வாசுதேவநல்லூர், பெரம்பூர், அரூர் ஆகிய மூன்று தனித் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெற்றது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதுமட்டுமல்ல, பொதுத்தொகுதியான குடியாத்தத்தில், தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறச் செய்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். தற்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ள 9 சட்டமன்ற உறுப்பினர்களில், மூவர் தலித்துக்கள். 

    அதேபோல, "இந்து" பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம், ஒரு பார்ப்பனர். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்றும் இவர்களாகவே கதையடிக்கிறார்கள்....
    மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்று அவர் என்றாவது சொல்லியிருக்கிறாரா...? அல்லது மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள்தான் சொல்லியிருக்கிறார்களா? 
    யாரையாவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தரங்குகள், கூட்டங்களுக்கு அழைத்தால், அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஆகிவிடுவார்களா? 
    அப்படிப் பார்த்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தரங்குகளில், திமுகவின் மு.நாகநாதன், காங்கிரசிலிருந்து தற்போது வெளியேறியிருக்கிற தமிழருவி மணியன் போன்றோரெல்லாம்தான் பேசியிருக்கிறார்கள்.

    தலித்துக்களிலியே தலித்தாய் உழலும் அருந்ததியர் மக்களுக்கான உள்ஒதுக்கீட்டின் வெற்றியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ள பங்கை, இவர்களால் மறுக்க முடியுமா?

    அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்று திரும்பத் திரும்ப ஒரு பொய்யை பரப்பி வருகிறார்கள்.
    இடஒதுக்கீடு கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எங்கே எப்போது கூறியது? சரி, அவர்கள் வாதப்படியே வைத்துக் கொண்டாலும், இடஒதுக்கீடே வேண்டாமென்று கூறிய கட்சி, பிறகெப்படி அருந்ததியர்க்கு உள்ஒதுக்கீடு கோரிப் பெற்றது?
    தலித் மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்று ஏன், தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது....? அத்துடன் தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தி வரகிறது.

    மேலும்,பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டையும் ஆதரிக்கும் இயக்கம்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எனினும் ஓரளவு முன்னேறிய சமூகமாக உள்ள பிற்படுத்தப்பட்டோரில், கீழ் நிலையில் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் பொருளாதார அளவுகோலை வைக்கலாம் என்று கூறியது. 
    ஒருவேளை தகுதியான ஏழைகள் பிற்படுத்தப்பட்டோரில் கிடைக்கவில்லை எனில் அந்த இடம் வசதி படைத்த பிற்படுத்தப்பட்டோருக்குத்தான் செல்ல வேண்டுமே தவிர, முற்பட்டோருக்கு செல்லக் கூடாது என்பதையும் அறுதியிட்டது கூறியது. 

    இப்படியிருக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலித் மக்களுக்கு எதிரானது, இடஒதுக்கீட்டிற்கு எதிரானது கூறுவது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனமன்றி வேறல்ல.
    உண்மையில் சொல்லப் போனால், தலித் மக்களுக்கான ஒரே கட்சி, தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுமைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான். அதை காலம் நிரூபிக்கும்.

    Hariharan
    2009-07-08 07:52:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    இங்கு நடைபெறுகிற விவாதம் இலங்கை பிரச்சனை குறித்து, ஆனால் சிபிஎம் ஐ தலித் விரோதி, பார்ப்பனர் கட்சி என்று ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள்.

    தலித் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்காக யார் போராடுகிறார்கள் என அடையாளம் காணுவார்கள். தொழிற்சங்க இயக்கத்திலும் சரி மற்ற இயக்கங்களிலும் சாதி மதங்களை கடந்து மக்கள் ஒற்றுமைக்காக ஒரு இயக்கம் என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே.

    பகத்
    2009-07-09 12:45:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    மிகவும் சரியான, ஆழமான கருத்தாக்கங்களோடு ஆதவன் என்கிற பிழைப்புக்காக தலித்தியம்-மார்க்சியம் பேசும் மானுட விரோதிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து தோழர் அருள் எழிலன் (தேவையற்றதுதான்; இருந்தபோதிலும் அதையும்) அதிக பட்ச பொறுப்புணர்வோடு எழுதியிருப்பது பாராட்டிற்குரியதாகும். தன்னை நோக்கி வரும் பெரும்பாலான விமர்சனங்களுக்கு மான்கராத்தே பாணியில் எதிர்கொள்ளும் சி.பி.எம்.கட்சியின் தலைவர்களுக்கே உரிய நடைமுறையைத்தான் ஆதவனும் கைக்கொள்கிறார், என்பது அவரது பதிலலிக்கத்திராணியற்ற பல்வேறு சந்தர்ப்பங்கள் நிரூபித்திருக்கின்றன. 

    ஏற்கெனவே, ‘நான் ஒரு மநு விரோதன்’ என்கிற நூல் வெளியீட்டு விழாவில் கீற்று இணையதளத்தைச் சேர்ந்த தோழர் மினர்வா அவர்கள் ஆதவனுக்கு ‘’பாரதி குறித்த விமர்சனங்கள் பல வந்துவிட்டன, சாதியம் குறித்து பேசும் ஆதவன் இதற்கு எந்தக் கருத்தையும் இதுவரை சொல்ல வில்லை, இந்த மேடையில் சொல்லவேண்டும்’’ என்று வேண்டுகொள் விடுத்திருந்தார். அதற்கு, பதிலளிக்கிறேன் பேர்வழி என்று அந்தக் கூட்டத்தில் ’’நாங்கள்தான் பாரதிதாசனை விமர்சித்து புதுவிசையில் எழுதியிருக்கிறோமே’’ என்று கேனைத்தனமாக பதிலளித்த அனுபவம் ஆதவனுக்கு ஏராளமாக இருக்கிறது. அவற்றைக் கேட்டு காறி உமிழ்ந்த அனுபவமும் நமக்கு ஏராளமாக இருக்கின்றது. பாரதிதாசனை பெண்பித்தன் என்று நிறுவுவதற்கு கணக்கற்ற அவதூறுகளைக் கூட்டி கட்டுரை எழுதிய மார்க்சிய திரிபுவாதியான எஸ்.வி.ராசதுரையைத் துணைக்கழைத்துக் கொண்டார் ஆதவன். இப்போது ஈழம் குறித்து கருத்து சொல்லச் சொன்னால் சோபாசக்தி, சுகன், சுசீந்திரன் போன்ற ஏகாதிபத்திய கைக்கூலிகளையும் ஊதாரிகளையும் துணைக்கழைத்துக் கொள்கிறார். 

    சேதுபதி, ஹரிஹரன் என்ற சி.பி.எம். ஆதரவு தோழர்களின் கருத்துக்கள் இங்கே கடைசியாக பதியப்பட்டிருக்கின்றன. தங்களது கட்சி இங்கே விமர்சனத்துக்குள்ளாவது கண்டு பொருமுகிறார்கள் அவர்கள்; பாவம்! 

    விமர்சனம் என்றால் ‘எங்களை ஏன் கேள்விக்குட்படுத்துகிறீர்கள்?, எங்கள் கட்சியினை ஏன் விமர்சிக்கிறீர்கள்?’ என்கிற மன்றாடல்களெல்லாம் இதுபோன்ற பொது அரங்கில் யாரிடத்திலிருந்து வரும் என்பது இங்குள்ள அனைவருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். விமர்சனத்துக்கு வருந்தியழுவது என்றால் அது சி.பி.எம். கட்சியினர்தான். விமர்சனத்தை நேர்மையாக உள்வாங்கி பதில் சொல்ல முயன்று இயலாத பட்சத்தில் புலம்பும் அக்கட்சியின் நேர்மையான உறுப்பினர்கள்தான், இங்கு கருத்து பதிந்துள்ள சேதுபதியும் ஹரிஹரனும். இவர்களுக்கு இருக்கும் நேர்மையில் கடுகளவேனும் இவர்களது கட்சியின் தலைவர்களுக்கு இருந்ததேயில்லை. 

    விமர்சனங்களை வரவேற்று அவற்றுக்கு கூர்மையாக பதிலளிப்பதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள இயலாத அளவுக்கு அக்கட்சியின் நிலைப்பாடு தாழ்ந்து கிடப்பதற்கு நீண்ட வரலாறு நிச்சயமாக உண்டு.

    தோழர்கள் சேதுபதி, ஹரிஹரன் அவர்களே! ஆதவனின் கேள்விகளுக்கு அருள் எழிலனும், இரயாகரனும், இன்னபிற பதிவர்களும் பதிலளித்துள்ளார்கள், அதனை நீங்கள் திறந்த மனநிலையுடன் மீண்டுமொருமுறை வாசிகக் வேண்டும். ஆதவனை நோக்கியும், சிபிஎம் கட்சியின் பேரினவாதத்துக்கு காவடி தூக்குகின்ற மோசடி நிலைகள் குறித்தும் இங்கு பதியப்பட்ட கேள்விகளுக்கு பதிலை உங்கள் கட்சிக்குள் தயவு செய்து தேடிப்பாருங்கள். 

    ஈழத்தை ஆதரிப்பது என்றால் புலியை ஆதரிப்பது அல்ல என்பதை உங்கள் கட்சியின் தலைவர்களுக்கு முடிந்தால் உரைக்கக் கற்றுத்தாருங்கள். 

    சங்கராச்சாரியின் பாதந்தாங்கியாகவும் ஈழமக்களின் ஈரக்குலையறுத்த ராசபக்சேவின் பங்காளியாகவும் இருக்கும் இந்து ராம் போன்றவர்களையும், மே.வங்க சட்டமன்றத்திலேயே தன் பூநூலை வெளியே இழுத்து காண்பித்து ’நான் முதலில் பாப்பான், அப்புறம் ஒரு இந்து, அப்புறந்தாண்டா கம்யூனிஸ்டு’ என்று சொன்ன உங்கள் கட்சியின் அமைச்சர் சுபாஷ் சக்கரவர்த்தி போன்றவர்களையும் நேரடியாக ஆதரித்து வைத்துக் கொண்டு, ‘நாங்கள்தான் உண்மையான சாதி எதிர்ப்பாளர்கள்’ என்று முழங்கும் உங்கள் அறியாமையை தயவுசெய்து விளங்கிக் கொள்ளுங்கள். 

    சாதியை துடைத்தெறிய வேண்டுமென்றால், அதனை மோசடியாகப் பாது காக்கின்ற இந்து மதத்தையே அடியோடு வெட்டிவீச வேண்டும். அதுவன்றி சாதி எதிர்ப்பு சாத்தியமில்லை. இந்து மதத்தை எதிர்ப்பதில் உங்கள் கட்சியின் பங்கு என்ன? பி.ஜே.பி.ஐ தேர்தல் களத்தில் தோற்கடித்து காங்கிரசையும், திமுக வுக்கு பதில் அதிமுகவையும் ஆதரிக்கும் தேர்தல் கயவாளி நாடகங்களை தயவு செய்து இதற்கு உதாரனமாகத் தராதீர்கள். இங்கு, இந்தியா என்ற ஒரு நாடும், பாராளுமன்றமும் உருவாவதற்கு முன்பே உருவானதுதான் இந்த் பார்பன இந்துமதமும் அதன் சாதியமைப்புகளும். இந்துமத வெறியர்கள் தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்ள, தங்களது மதரீதியான இருத்தலைப் பாதுகாத்துக் கொள்ள பாராளுமன்றத்தை நாடி வருவதில்லை. எனவே, பாராளுமன்றத்தில் பி.ஜே.பி.ஐ வீழ்த்துவதால் இந்துமத விழுமியங்களை துடைத்தெறிய முடியாது. அதற்கு பாராளுமன்றத்துக்கு வெளியில் இந்துமத வெறியர்கள் பயன்படுத்துகின்ற களம் வேண்டும். அங்கேயே நின்றுதான் அவர்களை கருவறுக்க முடியும். நாங்கள் பாராளுமன்றத்தில் வைத்து அவர்களை வீழ்த்திவிடுவோம் என்பதெல்லாம் நாற்காலிக் கனவோடு உங்கள் ‘காம்ரேடு’ங்க கண்டு பிடிச்ச வாய்சவடால் மட்டுமே!

    பார்ப்பன, இந்துமத எதிர்ப்பில் சமரசம் செய்துகொள்ளும் உங்கள் கட்சி சாதியை ஒழிக்கும் என்று நீங்கள் நம்புவது அறியாமையிலிருந்து வருவதே என்பது எனது கருத்து, தயவுசெய்து இதனைப் பரிசீலியுங்கள், மாற்றுக்கருத்துக்களை அவசியம் தெரியப்படுத்துங்கள். முடிந்தால் ஆதவனுக்கு இங்கே பதிவர்கள் வைத்திருக்கும் கேள்விகளுக்கு பதிலெழுதச் சொல்லி அவர‌து காதைப்பிடித்துதிருகியாவது பதில் எழுதச் செய்யுங்கள், தோழர்களே!

    நட்புடன்,
    பகத்.

    உய்யலாலா
    2009-07-09 03:29:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    முன்னர் பின்னூட்டம் இட்டுள்ள சேதுபதி, ஹரிஹரன் ஆகியோருக்கு, தோழர் பகத், அளித்துள்ள பதிலைப் பார்த்தேன். அதிலொன்றும் பிழையில்லை. 
    ஆனால், ஆதவனுக்கு, தோழர் டி.அருள் எழிலனும், இரயாகரனும் சரியான பதில்களை அளித்துள்ளதாக கூறியிருக்கும் இடத்தில்தான் சறுக்கல்.
    ஏனெனில், ஆதவனுக்கு எந்த வகையிலும்- சொல்லப்போனால் அவரையும் விட கூடுதலாக புலியெதிர்ப்பு நாடகம் போடுபவர்தான் இந்த இரயாகரனும், அவர் சார்ந்த ம.க.இ.க. என்ற "அதிதீவிர புரட்சி" அமைப்பும் - என்று படித்திருக்கிறேன். 
    இதுதொடர்பாக முன்பு தோழர் அதிரடியான் எழுதியவற்றை நினைவூட்டலாம் என்று நினைக்கிறேன்...

    "........ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு.(அப்பாடா..!) என இவர்களது அமைப்புப் பெயரை இப்படித்தான் இவர்கள் பட்டியலிட்டு எழுதுவார்கள். ஏகலைவன், ட்ராட்ஸ்கி என பல பெயர்களில் பதிவுகள் எழுதி ம.க.இ.க.வின் கருத்துகளை வெவ்வேறு பெயர்களில் எழுதி இணையதளங்களில் மட்டுமே ‘புரட்சி’யாளர்கள் போல் நடிக்கும் கைதேர்ந்த ஆள்பிடிக்கும் கும்பல் இவர்கள். ஆயுதப்புரட்சி பற்றி இவர்கள் பேசாத பேச்சில்லை. ஆனால், இதுவரை அட்டைக் கத்தியைக் கூட இவர்கள் காட்டியதில்லை. ‘இந்திய முழுமைக்கும் புரட்சி நடத்த வேண்டும்’ என்று கூச்சல் போடுவார்கள் ஆனால் தமிழக எல்லையைத் தாண்டினால் இவர்களை சீண்ட ஆளில்லை. இவர்கள் வசைமாரிப் பொழிந்து அவதூறு பேசாத தலைவர்கள் உலகத்திலே யாருமே இல்லை எனலாம்.

    ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்க சிங்கள இனவெறி அரசு என்ன உத்திகளையெல்லாம் கையாண்டதோ அதே உத்திகளை கையாளும் இயக்கம் தான், ம.க.இ.க.வாகும். விடுதலைப்புலிகளை ‘பாசிஸ்ட்’கள் என்பது முதல் புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டங்களை இழிவுபடுத்துவது வரை சிங்கள இனவெறி அரசுக்கு நன்கு உதவிய ம.க.இ.க.விற்கு சிங்கள அரசு பாராட்டு விழா நடத்தினாலும் நாம் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

    ஈழத்தமிழர்களின் எதிரிகளான பார்ப்பனிய ஜெயலலிதா, இந்து ராம், சு.சாமி, துக்ளக் சோ உள்ளிட்டவர்களின் அறிக்கைக்கும் ம.க.இ.க.வின் நிலைப்பாட்டிற்கும் என்ன வித்தியாசம் என்று ம.க.இ.க.வில் உள்ள அப்பாவித் தோழர்கள் என்றாவது யோசித்ததுண்டா..?

    ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாகவும் தான் செயலலிதா இன்று வரை கூறி வருகிறார். இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...!?

    ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று ஊளையிடும் பார்ப்பனக் கம்யுனிஸ்டு தலைவர் வரதராஜனின் நிலைபாடு தானே ம.கஇ.க.வின் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு...!?

    பி.இரயாகரன் என்ற புலம் பெயர்ந்த ‘கீபோர்டு புரட்சி’யாளரின், சிங்களத்தின் பாதம் பிடித்துக் கொண்டு, புலிகளுக்கு எதிராக அனல் கக்கும் ‘தமிழ் அரங்கம்’ இணையதளத்தில் ம.க.இ.க.வினரின் கட்டுரைகள் அதிகமாக பிரசுரிக்கப்படும். ‘வினவு’ என்ற ம.க.இ.க.வின் சொந்த இணையதளம் ஒன்றும் உள்ளது. நாளடைவில் சிங்கள இராணுவத்தின் இணையளங்களில் கூட ம.க.இ.க.வின் கட்டுரைகள் பதிவு செய்யப்படலாம். ஏனெனில், அந்தளவிற்கு தான் இவர்களது கருத்தும் செயல்பாடும் இருக்கிறது. ‘துக்ளக்’ சோ, ‘தினமலர்’, சிங்கள இரத்னா ‘இந்து’ என்.ராம் ஆகியோருக்குப் பிறகு விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் இவர்களையும் இனி நாம் பட்டியலிட்டாக வேண்டும். ஏனெனில், இவர்கள் அவர்களுக்கு சளைத்தவர்களல்ல என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு உரிமையை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்ற மூன்றாவது நிலையை ‘ராஜதந்திரமாக’ ம.க.இ.க. எடுத்து, தான் யாரென அம்பலப்பட்டது. இட ஒதுக்கீட்டை நேரடியாக எதிர்க்கும் பார்ப்பனர்களுடன் முற்போக்கு வேடங்கட்டிக் கொண்டு கைக்கோர்த்தல் நெருடலாக இருந்ததால், மறைமுகமாக இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் எல்லை என்று புருடா விட்டார்கள். இவர்களை அம்பலப்படுத்தி தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி ஐயா. மணியரசன் ‘ம.க.இ.க.வின் மறைமுகப் பார்ப்பனியமும் மனங்கவர்ந்த இந்தியத் தேசியமும்’ என்று தனியொரு நூலே எழுதியுள்ளார். மேலும் ‘தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை மறைமுகமாக பறித்திட அறைகூவல் விடுத்தது, இதே ம.க.இ.க. தான். இதனை மணியரசன் நடத்தும் தமிழர் கண்ணோட்டம் இதழ் அம்பலப்படுத்தியது.

    தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தமிழின உணர்வு மேலொங்கியுள்ள நிலையில், அதனை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இந்திய அரசின் உளவுப்பிரிவினருக்கும் தமிழக ஆளும் வர்க்கத்திற்கும் ம.க.இ.க.விற்கும் மறைமுக மற்றும் நேரடி தொடர்புகளே இருக்கலாம். உணர்வுடன் எழுகின்ற தமிழ் இளைஞர்களை, வாய் கிழிய பேசியும், எழுதியும் மயக்கி ‘நாங்கள் தான் புரட்சியாளர்கள்’ மற்றவர்கள் அனைவரும் துரோகிகள் அல்லது எதிரிகள் என்று அவதூறு பரப்பி ம.க.இ.க.வில் சேர்க்கிறார்கள். உண்மையான புரட்சிகர சக்திகளிடம் தமிழக இளைஞர்கள் சேருவதை விரும்பாத ஆளும் வர்க்கத்தின் உளவுத்துறையே ம.க.இ.க. போன்ற ‘வாய்ச்சவடால்’ ’புரட்சி’க் குழுக்களை உருவாக்கிவிட்டிருக்கலாம்.

    தமிழக இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்கள்! எதிரிகளைவிட உடனிருந்தே உளவு பார்க்கும் துரோகிககள் மிகவும் ஆபத்தானவர்கள்...! "
    - இவையெல்லாம் "ம.க.இ.க. எனும் பிழைப்புவாத பார்ப்பன கும்பல்" என்ற தலைப்பில் தோழர் அதிரடியான் கீற்றுவில் எழுதியவைதான்.

    பகத்
    2009-07-09 08:08:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    ஐயா உய்யலாலா அவர்களே!

    ’அதிரடியாக’ வந்து இங்கே பதிவிட்ட உங்கள் அதிரடியானின் அவதூறுகளுக்கு அப்பதிவின் பின்னூட்டத்திலேயே பதில்களைப் பதிந்து விவாதித்த எமது தோழர்களின் நேர்மையான பதில்கள் காட்சிக்கு இருக்கின்றன. முடிந்தால் அவற்றைப் படித்து புரிந்து கொள்ளுங்கள். அப்பதில்களுக்கு தனது கருத்தைத் தெரிவிக்காமல் உங்கள் அதிரடியான் புஸ்வானமாகிப் போனதையும் அப்பதிவினுடாகப் பார்த்தோம்.

    வசைமாறி பொழிவதென்றால் யார் வேண்டுமானாலும் யார்மீது வேண்டுமானாலும் அள்ளி வீசலாம். அந்த அர்த்தமற்ற விவாதங்களுக்குள் முக்கியத்துவம் கொடுத்து பேசி எந்தப் பலனுமில்லை என்பது எமது தொடர்ச்சியான அனுபவம். 

    நீங்கள் மேற்குறிப்பிட்டது நேர்மையான் கருத்து என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எமது தோழர்களின் மறுப்புகளை எதிர்த்து எதையாவது பதிந்திருப்பீர்கள், அது வெறும் அவதூறு எனும் பட்சத்தில் இங்கே பதியப்பட்டது என்பதால்தான் எமது எதிர்வினைகளுக்கு யோக்கியமான பதிலைச் சொல்லாமல் மீண்டும் தொடக்கத்திலிருந்தே உமது அவதூறுகளை பிடித்து இழுத்து வருகிறீர்கள், போலும்.

    இப்போதாவது உறுதியாக சொல்லுங்கள், நேர்மையாக விவாதத்தில் பங்கெடுக்கத்தயாரா? இடஒதுக்கீடு குறித்து பெ.மணியரசன் அவர்கள் வைத்த அவதூறுகளுக்கு உடனடியாக பதிலெழுதி எமது நிலைப்பாட்டை ‘இட ஒதுக்கீடு: ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை’ என்கிற தலைப்பில் எமது தோழர்கள் வெளியிட்டார்கள். அவற்றை நேர்மையாக பரிசீலித்து விமர்சிக்கக் கையாளாகாத தமிழ்த்தேசியர்கள் அவ்வப்போது தங்களது அரிப்பைச் சொறிந்து கொள்வதற்கு மட்டும் ஏற்கெனவே பலமுறை பதிலளிக்கப்பட்ட அவதுறுகளை அள்ளிக்கட்டிக் கொண்டு கூத்தாடுவது வழக்கத்திலும் வழக்கமானதுதான். 


    /////////ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாகவும் தான் செயலலிதா இன்று வரை கூறி வருகிறார். இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...!?

    ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று ஊளையிடும் பார்ப்பனக் கம்யுனிஸ்டு தலைவர் வரதராஜனின் நிலைபாடு தானே ம.கஇ.க.வின் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு...!?///////////

    இது நீங்கள் குறிப்பிட்ட அதிரடியானின் ‘அதிரடி’யான விமர்சனமாம்! இந்தப் பிதற்றலுக்கு என்னவென்று பதிலெழுதுவது? 

    ஜெயலலிதா சுயநிர்ணய போராட்டத்தை ஆதரிப்பதாகச் சொல்வதால் மகஇக -வின் கருத்தோடு ஒத்துப் போவதாக பிதற்றுவது ஒருபுறமிருக்க, அதே செயலலிதா தனி ஈழம்தான் திர்வென்றும் அதனைப் பெற்றுத்தருவதாகவும் தேர்தல் நாடகத்தில் பேசி நடித்ததை வைத்து அவர்களுக்கும் உங்களுக்குமான ஒற்றுமையை நாமும் அளக்கலாம் அல்லவா? ஆனால், இதுபோன்ற குருட்டுத்தனமாக யாரையும் மதிப்பிட்டு எமக்குப் பழக்கமில்லை. 

    அதேவேளையில், செயலலிதா மட்டுமின்றி வேறு எந்தெந்த ஓட்டுப் பொறுக்கியெல்லாம் ஈழத்திற்கு ஆதரவு என்று பம்மாத்தாக பேசித் திர்ந்தார்களோ அனைவரையும் சமரசமின்றி நாங்கள் எதிர்த்து அம்பலப்படுத்தியிருக்கிறோம். ஆனால், செயலலிதா ஓட்டுப் பொறுக்குவதற்காக ஈழம் பெற்றுத்தருவாக சொன்னதை ஏற்று அவருடன் கைகோர்த்து ஓட்டுப் பொறுக்கித்தந்த அல்லது தரமுயன்ற உம்மைப் போன்ற தமிழ் தேசியர்களின் மொன்னைத்தனத்தை என்னவென்பது?

    இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற தங்களது அவதூறுகளில் வழக்கமாக தம்மைத்தாமே அம்பலப்படுத்திக் கொண்டு பரிதாபமாகத் திரியும் இவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபத்தை மட்டுமே தெரிவிக்கலாம். மணியரசனிலிருந்து விடுதலையார் வரை இவர்களை சீரியசாக எடுத்துக் கொண்டு பதிலளித்துக் கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. எமது பதில்களையோ அல்லது எதிர்விணையையோ பரிசீலிக்கத் திராணியற்ற இக்கூட்டத்திற்கு பதில் சொல்லிப் பலனில்லை. 

    முடிந்தால் நேரடியான விவாதத்திற்கு இணையத்தினூடாக வாருங்கள், திறந்த மனத்தோடு விவாதத்தில் பங்கெடுக்க நாங்களும் காத்திருக்கிறோம். 

    நட்புடன்,
    - பகத்.

    ப.கவிதா குமார்
    2009-07-09 09:15:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.




    ஒரு நபருடைய கருத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அது பொதுச்சபையில் முன் வைக்கப்பட்டிருக்க வேண்டும். மதுரையில் தேவேந்திரபூபதியால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தமிழ்நதி எழுப்பிய விஷயத்திற்கு, ஆதவன் தீட்சண்யா அளித்த பதில் சரியா, தவறா என்ற விவாதப்புள்ளியை மறைத்து விட்டு இணையத்தில் அருள்எழிலன் வரைந்துள்ள கட்டுரையின் நோக்கம் ஆதவனைத் திட்டுவது என்ற பெயரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது சேறு அள்ளி வீசுவது தான்.(சூரியனைப்பார்த்து நாய் குலைத்தது என்ற பழமொழி ஏன் திடீரென ஞாபகத்திற்கு வந்தது எனத் தெரியவில்லை). 
    மேற்கு வங்க அரசையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் ஒருபிடிபிடித்துள்ள அண்ணன் அருள்எழிலன், "புலிகளுக்கு மட்டுமல்ல, அங்கு ஆயுதம் தூக்கிய எல்லா போராளிக்குழுக்களுக்குமே தெளிவான விடுதலைப்பார்வை இருந்ததில்லை " என்ற தனது அறிவார்ந்த புரிதலை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன்," சகோதரப்படுகொலையில் புலிகள் நடந்த கொண்ட விதத்தைத் தவிர, ஏனைய அமைப்புகளை புலிகள் சிறந்தவர்கள் தான்" என்றும் அத்தாட்சி பத்திரம் வழங்கியுள்ளார்.
    ஒருவன் அழுது கொண்டிருந்த போது ஏன் அழுகிறாய் எனக்கேட்டதற்கு, என் தந்தை இறந்துவிட்ட துக்கம் தாங்காமல் அழுகிறேன் என்றானாம். எப்படி உன் தந்தை இறந்தார் எனக்கேட்டதற்கு, நான் தான் கொலை செய்தேன் என்று கூறினானாம்! அதுபோல் இருக்கிறது அண்ணன் அருள் எழிலனின் இந்த கண்டுபிடிப்பு. இலங்கை விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய தமிழ்த்தலைவர்களைக் கறுவறுத்த புலிகளின் மீது விமர்சனம் செய்வது போல பாவலா செய்து கொண்டே, ஏனைய அமைப்புகளை விட புலிகள் சிறந்தவர்கள் என உற்சாகம் கொப்பளிக்கும் புலிஎழிலன் மன்னிக்கவும் அருள் எழிலனுக்கு, எதுவீக்கு எனத் தெரியவில்லை.
    தமிழ்நதிக்கு ஆதரவு என்ற பெயரில் புலி ஆதரவு திரட்ட தாவிக்குதிக்கும் அருள்எழிலன் இக்கட்டுரையில், "பழங்குடியினரின் இன்னொரு பிரிவில் பிறந்தவன்" என்ற முறையில் எழுதுவதாகக் கூறியுள்ளார். உத்தப்புரம் குறித்து கீற்று இணையத்தில் அவர் எழுதிய கட்டுரையில், "எனது சொந்த சமூகமான மீனவ மக்களுக்கு" என்று தன்னைக் குறிப்பிட்டுள்ளார்.மீனவ சமுதாயத்தை தமிழக அரசு எப்போது பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தது எனத்தெரியவில்லை! 
    ஆதவனுக்கென்று தனித்த அடையாளம் உண்டு. அது தலித்திய விடுதலையின் நோக்கமானது. தங்களுக்கென்ற தனித்த அடையாளமற்றவர்கள், தங்களைச் சொரிந்து கொள்ள பேனாவிற்குப்பதில், கீபோர்டுகளின் வழியாக கதறுகிறார்கள். வழிகளற்ற திசையில் பயணிக்கும் அவர்கள் முட்டுச்சந்தில் முட்டிவிட்டு, எவன் சுவர் வைத்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.(கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்ற பழமொழி எதற்கு எனக்கு நினைப்பிற்கு வருகிறது?) 
    அதற்காக வார்த்தைகளைக் குழைத்துப் பூச அவர்கள் எடுத்துக் கொண்ட ஆயுதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதானத்தாக்குதல். நெஞ்சத்துணிவோடு ஆதவன் பேசிய பேச்சிற்கு பதில் அளிப்பதற்குப்பதில், அவரை கட்சி உறுப்பினராக்கி அக்கட்சியின் மீதான தங்கள் உழுத்துப்போன வாதங்களை முன்வைக்கும் அருள்எழிலனின் வார்த்தைகளைப் படித்தால், உஷ் ! அப்படா கண்ண கட்டிக்கிட்டு வருது! முடியல. . . . 

    லிங்கன்
    2009-07-09 09:30:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    அடப்பாவி....தலித்தியம், கம்யூனிசம் என்றெல்லாம் பேசுறீங்க.... மினவ மக்கள் பழங்குடிகள் என்பது கூடத் தெரியாதா? காட்டின் மக்களை மட்டும்தான் பழங்குடிகள் என்று உங்க சி.பி.ஐ.எம் சொல்லிக் கொடுக்குதோ, பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள பாரம்பரீய மீனவமக்களை பழங்குடிப்பட்டியலில் சேர்க்கும் கோரிக்கை நீண்டநாட்களாக மீனவ் மக்களால் முன் வைக்கப்படுகிறது. இது கூடத் தெரியல்ல.. நீயெலாம் கம்யூனிசம் பேசுற கொடுமடா? சாமி

    Shanmugam king
    2009-07-10 12:40:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    புலிகளின் தோல்வியில் ஒட்டு மொத்தமாக சிதைக்கப்பட்டுக் கிடக்கும் மக்களின் பிணங்களின் மீது நின்று சிங்கள தேசியகீதத்தைப் பாடும் சுகன் போன்றோருக்கும், உங்களுக்காக நாங்கள் ஏன் போராட வேண்டும் எனக் கேட்கும் உங்களைப் போன்ற தலித்தியப் பார்வை கொண்ட மார்க்ஸ்சிஸ்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?''

    பதில் உனடா.. அருமை அருள். நல்ல கட்டுரை.. நெத்தியடி

    உய்யலாலா
    2009-07-10 11:19:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    அய்யா பகத் அவர்கள், ஏன், இவ்வளவு ஆத்திரப்பட வேண்டும்...? என்று தெரியவில்லை.
    இவர் தனக்குச் சரியென பட்ட அரசியலை மற்றவர்கள் முன்பு எடுத்து வைக்கும் போது, மற்றவர்களும் தங்களின் அரசியலை எடுத்து வைக்க உரிமை உண்டு. இதில் அவரவர் அவரவரது நிலைபாடுகளைத்தான் சரியென்றுதான் எழுதுவார்கள். இது பொதுவானது.
    அப்படியிருக்க- இரயாகரனையும், ம.க.இ.க. கூட்டத்தையும் விமர்சிப்பதா? விடுவேனா? என்கிறார் என்கிறார் பகத். 
    ஆனால், இவர்தான் முன்பு, சேதுபதி, ஹரிஹரன் ஆகிய சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அறிவுரை பகன்றார்..... விமர்சனங்களைக் கண்டு பொருமாதீர்கள், விமர்சிக்க வேண்டாம் என்று மன்றாடாதீர்கள் என்றெல்லாம் அவர்களுக்கு "ஓசி அட்வைஸ்" செய்திருந்தார்.
    இப்போது இவரே, ம.க.இ.க. கூட்டத்தை மட்டும் தயவு செய்து விமர்சித்து விடாதீர்கள்.... நாங்கள்தான் தினமும் கோழியைக் கூவ வைப்பவர்கள்... புதிய விடியலுக்கு நாங்கள்தான் கட்டியக்காரர்கள் என்றெல்லாம் மன்றாடுகிறார்.... அதிகாலை வானத்திற்கு "செவ்வண்ணம்" அடிப்பதற்கான பெயிண்டே எங்களின் ஓட்டை டப்பாக்களுக்குள்தான் இருக்கின்றன என்று வளவளக்கிறார்.
    இவ்வாறு அவர் மன்றாடுவதிலிருந்தே, இவரும் சிபிஎம் வகையறாக்களின் சின்னத் தம்பிகள்தான் என்பது அம்பலமாகி விடுகிறது...
    இன்னொன்று ஆதவனை எந்த அடிப்படையில் பகத் விமர்சிக்கிறார்... அல்லது அருள் எழிலனை எந்த வகையில் பாராட்டுகிறார் எனத் தெரியவில்லை... ஆதவனை விமர்சிப்பதாலேயே அருள் எழிலனை பாராட்டுகிறார் போலும்.
    அருள் எழிலன் தனது கட்டுரையில், தன்னை மூச்சுக்கு மூச்சு "தலித் கிறிஸ்தவன்" என்று கூறுகிறாரே... ஒருவேளை இதை பார்த்துதான், பகத் அவர்களுக்கு, ம.க.இ.க. கற்றுக்கொடுத்த இயக்கவியல் பொருள்முதல்வாத "பக்தி" பொங்கியெழுந்து விட்டதோ என்னவோ...?
    //வசைமாறி பொழிவதென்றால் யார் வேண்டுமானாலும் யார்மீது வேண்டுமானாலும் அள்ளி வீசலாம். அந்த அர்த்தமற்ற விவாதங்களுக்குள் முக்கியத்துவம் கொடுத்து பேசி எந்தப் பலனுமில்லை // - இது பகத் சொன்னதுதான். அதையே நாமும் அவருக்கு சொல்லி வைப்போம்.

    Jackulin Saraswathi
    2009-08-06 02:53:00
    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

    Aathavan avrgal Jathiyai mun niruthi sonnathal thal yarukum thanga mudiyavillai.
    Eru nattu arasial vathigal elangai pirachanaiku enna seithargal? tamilargal endru engae irukirargal? muslim-tamilargal,christian-tamilargal,matham mariya-tamailargal, Fc-tamialargal,Bc- tamailargal, Mbc-tamilargal,Sc- tamilargal,Sc(A) tamilargal,St-tmailargal.....INTHA PATRU MIKKA TAMILARGAL ellam Aathavanai vimarsanam seikirargal.Aathavanai ullvangavum vimarsanam seiyavum
    SEVENTH SENSE vendum.

    Pin It