மனித உடலின் செல்லில் ஒரு இடைவெளி உண்டு. இந்த இடைவெளியை எச்.ஐ.வி. கிருமி ஆக்கிரமித்துக் கொண்டு நுழைந்த வேகத்திலே ஒன்றுபலவாக பலநூறாக பல்கிப் பெருகி அந்த செல்லை அழிக்கிறது. பிறகு இன்னொரு செல்லுக்குத் தாவுகின்றது. இவ்வாறு பல செல்கள் அழிக்கப்பட்டு உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறையும் போது தயாராகக் காத்திருக்கும் ஏராளமான தொற்று நோய்களில் ஒன்று உடனே வந்து ஒட்டிக்கொள்கின்றது.
மனித உடலில் செல்லில் உள்ள இடைவெளியில் எச்.ஐ.வி. கிருமி நுழைவதைத் தடுக்க இடைவெளியை நிரப்பக் கூடிய ஒரு அணு திறன் கூட்டுப் பொருளை உருவாக்கி யுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியின் விளைவாக எச்.ஐ.வி கிருமியை ஒழிக்கும் ஒரு மருந்து தயாரிக்கப்பட்டு மருத்துவமனைப் பரிசோதனைக்கு உட்படுத்தப் படலாம். ஆனால் இதன் முடிவு வெளியாக சிறிது காலம் ஆகலாம்.
மனித உடம்பின் செல்லில் உள்ள இடைவெளிக்குள் செலுத்தப்படும் அணுத்திரள் கூட்டுப்பொருள் எச்.ஐ.வி. கிருமி நுழையாத படிக்கு நீண்ட காலத்திற்கு அங்கேயே இருக்குமென்பதை அறிவியல் அறிஞர்கள் நிரூபிக்க வேண்டும். உலகில் தினமும் 16 ஆயிரம் புதிய எச்.ஐ.வி.கேஸ்கள் வருகின்றன. ஒவ்வொரு நிமிடமும் 5பேர் எச்.ஐ.வி. கிருமிக்கு இரையாகி மடிகின்றனர். இது போன்ற ஆய்வு முடிவுகள் இந்த நோய்க்கு எதிரான நம்பிக்கையை தருகின்றன.
(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)
தொடர்புடைய படைப்புகள்
எய்ட்சுக்கு எதிரான புதிய கண்டுபிடிப்பு...
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.