பித்தநீர் கல்லீரல் செல்களினால் சுரக்கப்படுகிறது. இந்நீர் மஞ்சள் கலந்த வெளிர் நிற பச்சையாக உள்ளது. இஃது ஏனெனில் மஞ்சள் நிறமியான பில்லூபினால்தான். இந்த நிறமிதான் இரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள் உடையும் பொழுது பித்த நீருடன் கலந்து உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. கல்லீரல் நோய்வாய்ப்பட்ட நிலையில் இவ்வுறுப்பு வேலை செய்ய முடியாத பொழுதுதான் இந்நிறமிகள் இரத்தத்தில் கலப்பதால் தோலும் கண் விழியும் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. இவ்வாறு மஞ்சள் நிறமாக மாறும்பொழுதுதான் இது ஆங்கிலத்தில் ஜான்டிஸ் என அழைக்கப்படுகிறது.
பில்லுருபின் என்ற நிறமி ஒரு தேவையற்ற பொருள். சிவப்பு அணு உடையும்பொழுது உண்டாவது. உடல் நல்ல நிலையில் உள்ளபொழுது இவை மலத்துடன் வெளியேற்றப்படும். அப்போது மலம் மஞ்சள் நிறத்தைப் பெறுகிறது. ஆனால் மஞ்சள் காமாலை நோயின் அறிகுறி ஒருவருக்குத் தோன்றும் பொழுது சிறுநீரும், கண்ணீரும்கூட மஞ்சள் நிறமாக மாறக்கூடும்.
மஞ்சள் காமாலையில் கண் ஏன் மஞ்சளாக மாறுகிறது?
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.