நாட்டின் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் ஆதிக்கமே தலைவிரித்தாடுகிறது. திருவாரூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் இதே நிலைதான்!

முன்னாள் துணைவேந்தர் டாக்டா சஞ்சய் - பார்ப்பனர், இப்போதைய பதிவாளர் வி.கே. சிறீதர் - பார்ப்பனர், நிதி அதிகாரி பி.வி.இரவி - பார்ப்பனர், துணைப் பதிவாளர் வெங்கடேசன் - பார்ப்பனர்.

துணைவேந்தரை தேர்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றோரும் பார்ப்பனர்களே!  டாக்டர் ஜி.கே. ஜெயராமன் - கன்னட  பார்ப்பனர், சி.ஆர். கேசவன் - பார்ப்பனர், கோபாலகிருஷ்ணகாந்தி - பார்ப்பனர்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள கோபாலகிருஷ்ண காந்தி, சி.ஆர். கேசவன் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். முன்னாள் துணைவேந்தர் வி.சி. சஞ்சய், மீண்டும் துணை வேந்தராக நுழையும் நோக்கத்தோடு தனக்கு பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து கொண்டுள்ளார்.

Pin It