வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்’ என்ற பெயரில் வந்த மின்னஞ்சல் செய்தியை கீற்றில் பிரசுரித்திருந்தோம். இந்தப் பெயரில் கூட்டத்தை நடத்துபவர்கள் யார் என்பது வெளியே தெரியாத நிலையில், அதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்ட யாரோ ஒரு நலம் விரும்பி(!), கேரளாவில் சிபிஎம் கட்சியினரால் பால் சக்காரியா தாக்கப்பட்ட செய்தியையும் சேர்த்து ‘பால் சக்காரியா, லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான கூட்டம்’ என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தலைப்புக்குப் பொருத்தமான செய்தியாக இருந்ததால் நாங்களும் விசாரிக்காமல் பிரசுரித்துவிட்டோம்.
அது முற்றிலும் தவறான தகவல் என்பதையும், இந்தக் கூட்டத்திற்கும் பால் சக்காரியாவிற்கும் தொடர்பு இல்லை என்பதையும், இது லீனா மணிமேகலைக்காக அ.மார்க்ஸ் நடத்தும் கூட்டம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம். தவறான செய்தியால் சங்கடத்திற்குள்ளான சிபிஎம் தோழர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம். தகவலை சரிப்படுத்த உதவிய தோழர் கவின்மலர், சுகுணா திவாகருக்கு நன்றி.
- கீற்று நந்தன்
எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை
தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:
இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
(எழும்பூர் மியூசியம் எதிரில்)
நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5
அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின் மலர், நிர்மலா கொற்றவை.
எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.
தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
----------------------------------------------------------------------------------------------
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்’ என்ற பெயரில் வந்த மின்னஞ்சல் செய்தியை கீற்றில் பிரசுரித்திருந்தோம். இந்தப் பெயரில் கூட்டத்தை நடத்துபவர்கள் யார் என்பது வெளியே தெரியாத நிலையில், அதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்ட யாரோ ஒரு நலம் விரும்பி(!), கேரளாவில் பால் சக்காரியா தாக்கப்பட்ட செய்தியையும் சேர்த்து ‘பால் சக்காரியா, லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான கூட்டம்’ என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தலைப்புக்குப் பொருத்தமான செய்தியாக இருந்ததால் நாங்களும் விசாரிக்காமல் பிரசுரித்துவிட்டோம்.
அது முற்றிலும் தவறான தகவல் என்பதையும், இந்தக் கூட்டத்திற்கும் பால் சக்காரியாவிற்கும் தொடர்பு இல்லை என்பதையும், இது லீனா மணிமேகலைக்காக அ.மார்க்ஸ் நடத்தும் கூட்டம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம். தவறான செய்தியால் சங்கடத்திற்குள்ளான சிபிஎம் தோழர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம். தவறை சரிப்படுத்த உதவிய தோழர் கவின்மலர், சுகுணா திவாகருக்கு நன்றி.
- கீற்று நந்தன்
எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை
தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:
இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
(எழும்பூர் மியூசியம் எதிரில்)
நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி
பங்கேற்பாளர்கள் :
அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின் மலர், நிர்மலா கொற்றவை.
எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.
தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
----------------------------------------------------------------------------------------------
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
“எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை” என்ற தலைப்பை “பால் சக்காரியா, லீனா மணிமேகலை மீதான எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான கூட்டம்” என்று மாற்றியது யார்?
கீற்று பதில் சொல்ல வேண்டும்...
கீழ்கண்ட பத்தி தான் ஒரிஜினல்
”தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார ்கள். பத்திரிகைகளிலும ், கூட்டங்களிலும், திரைப்படங்களிலு ம் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்ற து. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளி ன் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்ட ுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின ் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிற ார்கள். பெண்ணெழுத்துக்க ு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக ்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தை யும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்”
இதை...
”தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார ்கள். பத்திரிகைகளிலும ், கூட்டங்களிலும், திரைப்படங்களிலு ம் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்ற து. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளி ன் தாக்குதல் இப்போது நேரடித் தாக்குதல், போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்ட ுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வுகளாக கேரளாவில் - பாலியல் உரிமை தொடர்பாக கருத்து தெரிவித்த பால் சக்காரியாவின் மீது சிபிஎம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதும், லீனாமணிமேகலையின ் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததையும் பார்க்கலாம். கருத்து சுதந்திரம், பெண்ணெழுத்துக்க ு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக ்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்து மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்தக் கலாசார அடிப்படைவாதத்தை யும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்”
என்று மாற்றிய பேர்வழி யார்?
கீற்று பதில் சொல்லட்டும்..
'கருத்து சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்' நடத்துவதாக கூட்ட நிகழ்வு குறித்த முதல் மின்னஞ்சல் தங்களிடமிருந்து கடந்த வியாழன் அன்று வந்தது. அடுத்த நாள் லீனாவிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இருந்தது. அதிலும் 'கருத்து சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்' என்றுதான் இருந்தது. சனிக்கிழமை இரவு மூன்றாவதாக ஒரு மின்னஞ்சல் தமிழ் காம்ரேட் என்பவரிடம் இருந்து வந்தது. அதிலும் 'கருத்து சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்' என்றுதான் இருந்தது. கூடுதலாக பால் சக்கரியா குறித்த செய்தியும் இருந்தது. (மூன்றாவதாக வந்த மின்னஞ்சலை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஃபார்வர்ட் செய்துள்ளேன்)
இந்த மூன்று மின்னஞ்சல்களும் கீற்றிற்கு மட்டுமல்ல பலருக்கும் அனுப்பப்பட்டிரு க்கிறது. கடைசியாக வந்த மின்னஞ்சலில் கூடுதல் தகவல் இருந்ததால், அதுதான் அப்டேட்டட் மெயில் என்று பிரசுரித்தோம். மேலும் அதில் பிழையான தகவல் ஏதும் இருந்ததாக எங்களுக்குப் படவில்லை. கட்சியின் மூத்த தலைவர் தவறு செய்தாலும் அதை கண்டித்து நடவடிக்கை எடுப்பவர்கள், பால் சக்காரியா மீதான தாக்குதலைக் கண்டிப்பதில் ஆச்சரியம் இல்லை என்று நினைத்து பிரசுரித்தோம்.
இப்போதுதான் தெரிகிறது, இது கருத்து சுதந்திரத்தில் அக்கறை உள்ளவர்களுக்கான கூட்டம் இல்லை, லீனா மணிமேகலைக்கான கூட்டம் என்று.
எங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 200 மின்னஞ்சல்களாவத ு வருகின்றன. ஒவ்வொன்றின் உண்மைத்தன்மை குறித்தும் ஆராய எங்களுக்கு நேரம் இல்லை என்பதே உண்மை. எங்களுக்கு படைப்புகள் அனுப்புவர்களி ல் 75 சதவீதத்தினர ை நாங்கள் நேரில் பார்த்ததோ, தொலைபேசியில் உரையாடியதோ இல்லை (முகம் அறியாத இந்த 75 சதவீதத்தில் மார்க்சிஸ்ட்கள ும் உண்டு, பெரியாரிஸ்ட்கள ும் உண்டு, ம.க.இ.கவினர ும் உண்டு). கருத்தை மட்டும் பார்த்துவிட்டு பிரசுரிக்கிறோம ். அப்படிப் பார்த்து பிரசுரித்ததுதா ன் இது.
இப்போது எனக்கு சில கேள்விகள்:
1. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள் யார்?
2. தவறான தகவல் கீற்றில் வெளிவந்தது என்று கைப்பேசியில் நீங்கள் தெரிவித்தபோது, கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை இது குறித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பச் சொன்னால் மாற்றி விடுகிறேன் என்று சொன்னேன். ஆனால் இதுவரை அந்த மின்னஞ்சல் வரவில்லை. ஆனால் புதிதாக லோகனாதன் என்பவரிடமிரு ந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது . லோகனாதனின் முகவரி, தொலைபேசியும், பிரசுரத்தில் உள்ள முகவரி, தொலைபேசியும் வேறாக இருக்கின்றன. இப்படி யார் யாரோ மின்னஞ்சல்கள் அனுப்புவதை விட, நிகழ்ச்சி நடத்துபவர்களேயே இதுகுறித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பச் சொல்லுங்களேன்.
3.இதையெல்லாம் தொலைபேசியில் தங்களிடம் தெரிவித்தேன். அப்படியிருந்து ம், 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்று நீங்கள் பின்னூட்டமிட்ட ுள்ளீர்கள். எனக்கு அது தெரியவில்லை. எனக்கு வந்த மின்னஞ்சல் முகவரியை தங்களுக்கு தெரியப்படுத்திய ுள்ளேன். தயவு செய்து நீங்களே கண்டுபிடித்து தெரிந்து கொள்ளுங்கள். முடிந்தால் எனக்கும் தெரியப்படுத்துங ்கள்.
தவறான பதிவை வெளியிட்டுவிட்ட பின், அதை மாற்றவோ எடுக்கவோ சொல்லும்போது ஏற்பாட்டாளர்களை மின்னஞ்சல் அனுப்பச்சொல்லும ் நீங்கள் இந்த வழிமுறையை இந்த அறிவிப்பை வெளியிடும் முன் யோசித்திருக்கலா மே! அனாமதேயமாக யார் என்றே தெரியாதவர்கள் அனுப்பும் மின்னஞ்சலை நம்பி வெளியிட்டதாக சொல்லும் நீங்கள் இதை மாற்றுவதற்கு மட்டும் ஏன் இத்தனை விதிமுறைகளை விதிக்கிறீர்கள்?
கைபேசியில் தெரிவித்தது எனக்கானது மட்டுமே. இதைப் பார்த்தவர்களுக் கு எப்படி தெரியும்? இப்படி ஒரு கேள்வி கேட்பதன் மூலம் மட்டுமே வாசகர்களுக்கு தெரியப்படுத்த முடியும்.
லோகநாதன் “புலம்” வெளியீட்டாளர். அவரிடம் ஒரிஜினல் நோட்டீஸ் இருந்தது. அதனை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
உங்கள் தளத்தில் வந்ததற்கு நீங்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்? நீங்களே சொல்கிறீர்களே! ஏற்கனவே இரண்டு முறை இது குறித்து மின்னஞ்சல் வந்ததாகச் சொல்கிறீர்கள். அப்போதெல்லாம் இதை வெளியிட வேண்டும் என்று தோன்றாத உங்களுக்கு ஒரு 'தமிழ் காம்ரேட்' என்ற மின்னஞசல் முகவரியிலிருந்த ு வந்ததை மட்டும் வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது? பிரித்தாளும் சூழ்ச்சியில் கீற்றின் பங்கு என்ன என்பது தெளிவுபடுத்தப்ப ட வேண்டும்.
"தீவிர அறிவு விவாதம், மற்றும் களப்பணிகள் செய்து அயர்ந்துவிட்ட தமிழ் அறிஞர் கூட்டம், சற்றே இளைப்பாற சில வெட்டி வேலைகளில் ஜாலியாக ஈடுபடுவதாக தோன்றுகிறது. இந்து மக்கள் கட்சி லீலாமணிமேகலையின ் கவிதை தொகுப்பையும், இணையதளத்தையும் தடை செய்ய கோரி போலிஸில் புகார் கொடுத்திருக்கிற தாம். இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்தது; சிலர் பத்திரிகைகளில், இணையத்தில் கருத்து சொன்னார்கள்; கண்டித்தார்கள்; எல்லாம் நல்ல விஷயம்தான். இப்போது அடுத்த கட்டமாக கண்டன ஒன்று கூடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார ்கள். யாரை கண்டித்து கூட்டம்? இந்து மக்கள் கட்சியையா? அப்படி என்றால் ஒரே ஒரு கூட்டம், ஒரே ஒரு விஷயத்துக்கு எப்படி போதுமானதாகும்? தினமும் ஒரு விஷயத்துக்காக கூட்டம் நடத்துவதுதானே நியாயமாக இருக்கும். ஒருவேளை அடையாள வேலை நிறுத்தம் மாதிரி எல்லாவற்றிற்கும ் அடையாளமாக ஒரு நாள் கண்டன ஒன்று கூடல் போலும்.
' பெண்ணெழுத்துக்க ு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக ்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. ' என்கிறார்கள். தமாசாக இருக்கிறது. இப்படியே ஒரே மாதிரி ஸ்டீரியோடைப் வாக்கியங்களை எவ்வளவு காலத்துக்கு இன்னமும் அமைத்துக் கொண்டிருப்பார்க ள் என்று தெரியவில்லை.
இந்து மக்கள் கட்சியின் புகாரை ஏற்று போலிஸோ, அரசாங்கமோ தடை செய்வதற்கு முன்நடவடிக்கையா க, முதன் முதல் படியாக, ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் மேலே சொன்ன அச்சுறுத்தல் என்பதற்கு பொருள் இருக்கிறது. இந்து மக்கள் கட்சி -மும்பையில் எண்ணிக்கையிலடங் கா வண்ணம் நடந்திருப்பதுபோ ல்- ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டிருந்தால ும் இந்த அச்சுறுத்தல் என்று சொல்வதற்கு முகாந்திரம் உண்டு. ஒருவேளை அப்படி எதாவது நடக்காதது இவர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமாகவும் இருந்து, வேறு வழியில்லாமல் புகார் கொடுத்ததையே முகாந்திரம் கொண்டு கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார ்களோ என்னவோ! இப்படி ஏதையாவது கண்டித்து கூட்டம் நடத்தாவிட்டால் ஆழ்மனதில் ஒரு கண்டன ஈகோ நிறைவு கொள்ளாமல் ஆவியாக அலையும் போல.
அல்லது ஆண்குறி, விந்து பீச்சியடித்தல் போன்றவற்றை கச்சாவாக பயன்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளை இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்பு வேறு எப்படி எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறா ர்கள். தமிழகமாக இருக்கும் காரணத்தால் இந்து மக்கள் கட்சி, சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் எடுக்காமல், சட்டத்திற்கு உட்பட்டு ஒரு தடையை கோரும் ஜனநாயக தன்மையை காட்டியிருக்கிற ார்கள். அப்படி இருப்பது பிரச்சனையோ என்னவோ, அவர்களையும் கூட்டம் கண்டனம் என்று மேற்படி செயலில் இறங்கத் தூண்டும் வகையில் ஒன்று கூடல் நடத்துகிறார்கள் . இந்து மக்கள் கட்சியை விடுங்கள் கம்யூனிஸ்டுகளும ், பாமகவும், திராவிட இயக்கங்களும் கட்சியின் அதிகாரபூர்வமாக என்ன நிலைபாடு கொண்டிருக்கிறது என்று கவிதைகளை படிக்க சொல்லிவிட்டு பின் கருத்து சொல்ல கேட்டு பார்க்கலாம்.
எனக்கு லீலாமணிமேகலையின ் கவிதைகளில் பிரச்சனை எதுவும் இல்லை - அவைகளை கவிதை என்றவகையில் என்னால் எந்த விதத்திலும் ரசிக்க முடியவில்லை என்பதை தவிர. மிகவும் கச்சாவான மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த கவிதைகளில் கலகமோ, கவித்துவமோ வெளிபட்டதாக நான் தனிப்பட்டு கருதி அதற்கு வக்காலத்து என்னால் வாங்க முடியாது. ஆனால் அதை எழுதுவதற்கு அவருக்கு இருக்கும் உரிமைக்கு என் ஆதரவு குரலை வெளிப்படுத்த முடியும். அதில் எந்த தயக்கமும் இல்லை. அதே நேரம் அந்த கவிதைகளை விமர்சிக்கவும், எதிர்க்கவும், அந்த கவிதைகளில் மொழிரீதியான அத்து மீறல் நடந்துள்ளதாக கருத்து சொல்லவும் மற்றவர்களுக்கும ் உரிமை உண்டு.( என் கருத்து அதுவல்ல.) இந்து மக்கள் கட்சி மேலே ஒரு படி போய் சட்டரீதியான தடையை கோரியிருக்கிறது . அதை சட்டரீதியாக எதிர்கொள்வதை தவிர பெரிதுபடுத்த இதில் எதுவும் இல்லை. பாய்ஸ் படத்தை தடை செய்ய பெண்கள் அமைப்புகள் கேட்டது போன்றதுதான் இது. தடைசெய்ய கேட்பது என்பதும் ஒருவித எதிர்ப்பை தெரிவிக்கும் வழிதான். அதற்கு அரசின் அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் (அல்லது சட்டவிரோதமாக நடவடிக்கைகள்/தா க்குதல்கள் நடந்தாலோ) அது கருத்து சுதந்திரத்திற்க ான அச்சுறுத்தலாக முடியும்...."
"....இதைவிட இந்த பதிவை என்னை எழுத தூண்டிய ஒரே தீவிர விஷயம் தஸ்லிமா நஸ்ரின் மீதான தொடர்ந்த தாக்குதல்களுக்க ும், அச்சுறுத்தல்களு க்கும் இவர்கள் என்னவகை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார ்கள் என்கிற யதார்த்தம்தான். கண்டன கூட்டம் எல்லாம் வேண்டாம். எங்காவது ஒரு இடத்தில் தங்களின் தீவிர கண்டன குரலை இவர்கள் பதிவு செய்திருக்கிறார ்களா? குறிப்பாக அ.மார்க்ஸ், பிறகு ஷோபாசக்தி, குறைந்த பட்சம் லீலா மணிமேகலையாவது. எல்லா பிரச்சனை குறித்தும் கருத்து சொல்ல இயன்றதில்லை என்றால், இப்போதாவது கருத்து சொல்லும் படி நேரடியாக அறைகூவுகிறேன். இதில் அ.மார்க்ஸ் தஸ்லீமா நஸ்ரின் மீதான தாக்குதலை நியாயப்படுத்துப வர்களுடன் இணைந்து செயல்படுபவர். தமிழ் நாட்டிற்கு வெளியில் நடந்ததை விடுவோம். ஷகீலா பர்தா போடுவதற்கு எதிராக ரத்தம் கொதிக்கும் அறிக்கைகளை விட்டவர்களை எதிர்த்து என்ன செய்திருக்கிறார ்கள்? அ.மார்க்ஸின் இந்த நிலைபாடுகளை சரியானதாக நியாயப்படுத்திய ராஜன்குறை இந்த கூட்டத்தில் என்ன பேசுவார் என்று கேட்க ஆவலாக உள்ளது. (பார்க்க: சத்தியகடிதாசியி ல் ராஜன் குறையின் ஒரு காகமோனா பற்றிய கட்டுரையின் பின்னூட்டத்தில் அ.மார்க்ஸ் குறித்த ரவி ஶ்ரீனிவாசின் கேள்விக்கான ராஜனின் பதில்) என்னை பொறுத்தவரை தஸ்லிமா நஸ்ரினை வாழவிடாமல் இருக்கவிடாமல் இயங்கவிடாமல் இருக்கும் அடிப்படைவாதத்தை அனுமதிக்கும்/அங ்கீகரிக்கும் அரசியல்களை விட, எந்த வித முக்கியத்துவம் இல்லாத இந்த விஷயத்திற்கு கூட்டம் நடத்துவது எல்லாம் நோய்கூறுகள் கொண்ட தமாசுகள் மட்டுமே.
தமிழ் சூழலில் அக்கறை கொண்டதாலும், இவர்கள் மீதும் இவர்களின் அரசியல் மீது நெடுங்காலமாக ஈடுபாடு கொண்டவன் என்ற வகையிலும் இந்த தமாசை பார்க்க போகலாமா வேண்டாமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன ்...."
கருத்துச் சுதந்திரம் நமது உரிமை என்றாலும், பொது வெளியில் இயங்கக் கூடியவர்கள் அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தும் விதத்தில் ஒரு குறைந்தபட்ச தார்மீக பொறுப்புணர்வை பராமரிக்க வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன்.
ஒருவேளை, குறைந்தபட்ச தார்மீக பொறுப்புணர்வுக் கான அளவுகோல் என்னவென்று கேள்வி எழுப்புவோர் இருந்தால், அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்களுக்கு இந்த கேள்வி அல்ல.
ஆம். கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதில ும் ஒரு குறைந்தபட்ச தார்மீக பொறுப்புணர்வு உண்டு என்று நம்புவோருக்கு மட்டுமே இந்த கேள்வி.
இந்த வரிகளை படியுங்கள். இதுதானா பொறுப்புணர்வு? இதுதான் கருத்து சுதந்திரமா?
ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய ் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்
பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்
கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்
-லீனா மணிமேகலை
அப்படியா? யார் உங்களிடம் சொன்னார்கள்?
விந்து பீய்ச்சும் போது மார்க்ஸ் -யோனி மயிர் உபரிமதிப்பு- பிட்டங்கள் லெனினுக்கும் ஸ்டாலினுக்கும்- முலைகள் சேவுக்கும் பிடலுக்கும்- தொடையில புரட்சி - இடையில பொதுவுடமை- விடைப்புல சோவியத்தே ஒடையுது. என்ன கவிதையிது.பிட்ட ுபடததையும் புரட்சியையும் மசாலா மிக்ஸ் பன்னுனமாதிரி. இந்து மக்கள் கட்சிட்ட இருந்து லீனாவ காப்பாத்துறது சரிதான். லீனாட்ட இருந்து கவிதைய யாரு காப்பத்தறது. இந்த கட்டவிழ்ப்பு(!) கவிதை சம்மந்தமா சி.பி.எம் சி.பி.ஐ.என்ன கருத்து வச்சிருக்குனு அறிக்கை விடட்டும். இந்து மக்கள் கட்சியும் லீனாவும் கூட்டா சேர்ந்து நடத்தும் இந்த விளம்பர நாடகத்துக்கு அலிபாபாவும் 40 திருடர்களும்னு தலைப்பு வைச்சிருக்கலாம் . இன்னொரு செய்தி லீனா இங்கிலுசுலதான் பொயட்ரி எழுதுவாகலாம். அத தமிழ்ல செல்மா பொளப்பாகலாம். டெல்லியில விடுதலைப்புலிகள ுக்கு ஆதரவா போராட்டம். போர் முடிஞ்சதும் புலிகளுக்கு எதிரா படம்.( பிரான்ஸ்ல இருந்து வந்து வசனம் எழுதி (இலவசமா) உழைச்சுக்கொடுக் க ஸோபா சக்தி). புலிகள் செயிச்சிருந்தா “மாவீரன் பிரபாகரன்“ எடுத்து இருப்பார். பிரபாகரனுக்கு கொடுத்து வைக்கவில்லை. லீனா சந்தர்ப்பவாதி பிழைப்புவாதி. இப்போது இந்து மக்கள் கட்சியோடு அவர் நடத்தும் நாடகத்தில் கலந்துகொண்டு கருத்துரிமை காக்கப் பாடுபடப்போகிறவர ்கள்தான் பாவம். அன்புக்கு நான் அடிமை என்று அ. மார்க்ஸ் பாடினால் எப்படி இருக்கும். icsa அரங்கில் 15 ல் நேரடிக்காடசியாக காணலாம்
RSS feed for comments to this post