தோழர்களே,

தமிழர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சூழலில் நமது சமூக அரசியல் பண்பாட்டு நிகழ்வுகள்  நடந்து கொண்டு இருக்கின்றன.  நாம் நடத்தும் அல்லது பங்கேற்கும் இந்த நிகழ்வுகள் நம் மீது திணிக்கப்படும் அரசியல் தீர்வுகளை எதிர்கொள்ளவோ, அல்லது நமக்கான அரசியல் வெளியை மேலும் முன்னெடுத்துச் செல்லவோ துணைபுரியுமா என்பதை நாம் ஆராய வேண்டி உள்ளது. ஐ.நா.விற்கான நிபுணர் குழு ஒரு அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறது. போர் நடந்து கொண்டு இருந்தபோதும் அதற்குப் பின்பும் எந்த வகையிலும், தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வந்த, நடத்தப்படும் இனப்படுகொலைகளை கண்டுகொள்ளாத அரசுகள் சார்ந்த ஒரு கூட்டமைப்பு இந்த அறிக்கையின் அடிப்படையில் தமது நகர்வுகளை மேற்கொள்ளும் என சர்வதேசச் சமூகம் நமக்கு அறிவுரை சொல்கிறது. இந்த நகர்வுகளை நாம் எவ்வாறு எதிர்கொள்வது -ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பது - என்பதை விவாதிக்க ஓர் அரங்கத்தை மே பதினேழு இயக்கம் ஒழுங்கமைக்கிறது. தமிழர்கள் அனைவரும் அறியவேண்டிய, விவாதிக்க வேண்டிய இந்த கருத்தரங்கில் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.

.நா அறிக்கையும் ஊடகமும்

டி.எஸ்.எஸ் மணி

.நா அறிக்கையின் சாரம்சங்கள்- சாதகமும், பாதகமும்

பிரியா தம்பி

அருள் எழிலன்

வழக்கறிஞர். பாண்டிமாதேவி.

.நா அறிக்கையும் இந்தியாவும்

தேவசகாயம்

இராசேந்திர சோழன்

நா அறிக்கையும் மனித உரிமைப்போரும்

பேரா. பால் நியூமென்

சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை

            அய்யநாதன்.க

திருமுருகன் காந்தி

 இடம் : செ.தெ. நாயகம் பள்ளி

தேதி :  28 மே 2011, சனிக்கிழமை

நேரம்:  மாலை 4.30 மணி முதல்

- மே பதினேழு இயக்கம் (9444146806 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.