அறியாத வயதில்

அம்மா அப்பம் என்றாள்

பாட்டி சொன்ன கதைகளில்

பந்தாக உருமாறிப் போயிருந்தது

தமிழ் ஆசான்

பெண்ணின் முகம் போல என்றார்.

எல்லாம் பொய் என்று புரிந்தது

என் முதிர்ச்சியில்..

- நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.