வீட்டுக்குள் நுழையும் வரை
மிச்சமிருந்த மௌனம்
ஒரு கண்ணாடிக் குவளையைப் போல்
பாதமருகே விழுந்து நொறுங்கியது

ஜன்னல் திரைச்சீலை அசைத்து
எட்டிப் பார்த்த காற்று
சொல்வதற்கு ஏதுமில்லையென
திரும்பிப் போயிற்று

மேசை மீதிருந்த
அலங்காரப் பூச்சடிக்குள்
செருகிவைத்திருந்த
பிளாஸ்டிக் பூக்களின் இதழ்கள்
நிறமிழந்து மௌனிக்கின்றன
ஒவ்வொரு முறையும்
என் கோபத்தின் உயரம் கண்டு..

நீ
சுலபமாக சொல்லிவிடுகிறாய்
நம்மிருவருக்கும்
இனி
ஒத்து வராதென்று..

- இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.