மாலை இருளின்
அடர்த்தியின்மையால்
கரை ஓரங்களில் ஒதுங்கும்
பாதப்பதிவுகளில்
ஒளிந்து கொள்கிறது
கொஞ்சம் மஞ்சள் ஒளி
பாசி படர்ந்த பாறைகளின்
மோகப்பிளவுகளில் கசியும்
நிரந்தரமான குளிர்ச்சி
உப்புக்காற்றில் உருமாறி
காமத்தின் மர்ம முடிச்சுகளை
மெல்ல அசைத்து
இடைவெளிகளை
முத்தத்தால் நிரப்புகிறது
வேண்டுமட்டும்
நெடிய மௌனத்தடத்தில்
வெறும் வழிப்போக்கனாய்
கடற்கரைகளை கடந்துபோகும்
சாத்தானின் கையிருப்பில்
கரைந்து போய்க்கொண்டிருக்கிறது
அவன் தோட்டத்தில் அறிமுகப்படுத்தி
பிறகு பொதுவுடைமையான காமம்

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.