சுனைத்துவாரத்தின்

உள்ளிருக்கும்

அடர் பாசியை

தூர்த்துக்கொண்டிருந்தானவன்

 

மொழியற்ற வார்த்தைகள்

வெற்றுப்பிதற்றல்களாக உருமாற 

வழிந்தோடும் சுனை நீரை

அள்ளிப்பருகினான்

ஆசை  தீர.

 

வேண்டியமட்டும் தாகமும்

தணிந்தான்.

 

நுரைத்துப்பெருகிய

சுனை நீரின் வாயை அடைத்தவன் 

தன்னை முழுவதுமாக வெளியேற்றும்போது

நிலைப்படுத்தினான்

தனக்கான உரிமையை

 

இனிமேல் காத்திருந்தாக வேண்டும்

சுனையும், சுவை நீரும்

அவனுக்காக மட்டுமே

அடுத்த கோடை வரை

 

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.