வாகன உரசலின் சிரத்தையற்று

தார்ச்சாலையின் மத்தியில்

அழகுப்பதுமையாய் வீற்றிருக்கும்

வெள்ளாட்டுத் தாயொன்று…

 

 குறும்பாட்டு ருசியில்

 ஓவ்வொன்றாய்

 தன்குட்டிகளை இழந்த விரக்தி..

 

அவ்வசிரத்தையின் இறுமாப்பு

வலிமையை காட்டினாலும்

இப்புவியில் கால்பாவாத

இன்னுமொரு உயிரல்லவோ

அதனுடன் காத்துக் கிடக்கிறது.

 

- வீ.சுரேஷ்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It